Jump to content

பெண்களின் கன்னித்தன்மையை சீலிடப்பட்ட பாட்டிலுடன் ஒப்பிட்ட பேராசிரியர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
திவ்யா ஆர்யா பிபிசி
 
  •  
போராட்டம் நடத்தும் பெண்கள்படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்பிக்கும் பேராசிரியர் ஒருவருக்கு, பெண்களின் கன்னித்தன்மை பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பது கவலைக்குரியதாகியுள்ளது.

சமூக நன்மதிப்புகள் பற்றி கற்றுத் தருவதைப் போல ஃபேஸ்புக் அவர் எழுதியுள்ளார். பெண்களின் கன்னித்தன்மை பற்றி பையன்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ``கன்னிப் பெண்கள் சீலிட்ட பாட்டில்களைப் போன்றவர்கள். குளிர்பான பாட்டில் ஒன்றையோ அல்லது பிஸ்கட் பாக்கெட்டையோ சீல் உடைந்திருந்தால் நீங்கள் வாங்குவீர்களா?'' என்று பதிவில் அவர் கேட்டுள்ளார்.

இதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. பெண்களை ஏதாவது பொருளுடன் ஒப்பிடுவது, தங்களுக்குப் பிடித்த பொருட்களுடன் அவர்களை ஒப்பிடுவது என்பது பழைய பாணிதான். பெண்கள் மேலும் மேலும் விமர்சனத்துக்கு ஆளாகின்றனர்.

இளம் பெண்கள் மீது ஆசை கொள்வதைப் போல, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் மீது ஆண்கள் ஆசைப்படுகிறார்கள் என்று சில நேரங்களில் விளம்பரங்களில் காட்டப்படுகிறது. சில நேரங்களில் பீர் பாட்டில்களின் வளைவுகள் பெண்களின் உடலுடன் ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றன.

இப்போதும் கூட பொருளுடன் ஒப்பிடுதல், பாலியல் ரீதியாக ஒப்பிடுதல்தான் பிரச்சனை. குளிர்பான பாட்டிலின் அல்லது பிஸ்கட் பாக்கெட்டின் வடிவம் குறித்து இங்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. அதற்கு மாறாக, பாக்கெட் `சீலிடப்பட்டு' இருக்கிறது, அதனால் `சுத்தமானது' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பேராசிரியரின் கருத்தின்படி பிறப்பில் இருந்து ஒரு பெண் சீலிடப்பட்டிருக்கிறாள், சீல் திறக்கப்படும் வரை அப்படியே இருக்கிறாள், கன்னித்தன்மையுடன் உள்ள மனைவி ஒரு `தேவதை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணின் அடக்கம் மற்றும் ஆசை ஒரு பாட்டிலில் சீல் வைக்கப்பட்டதைப் போல என்று சொல்வது சரிதான். அதை உடைத்தால் எந்த ஜின் வெளியே வரும் என்று யாருக்குத் தெரியும்?

கன்னித்தன்மை பரிசோதனை

பதற்றம் அடைய வேண்டாம். திருமணத்துக்கு முன்பு உடலுறவை நான் ஆதரிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இதில் தொடர்புடைய ஆண் மற்றும் பெண்ணின் உரிமை மற்றும் விருப்பத்தைப் பொருத்தது அது.

சமூக மாண்புகள் குறித்த இந்த எச்சரிக்கை இப்போது தளர்வடைந்துவிட்டது என்பதைத்தான் நான் சுட்டிக் காட்டுகிறேன்.

பெண்கள் தங்களுடைய விருப்பங்களை தாராளமாக வெளிப்படுத்தி, பூர்த்தி செய்து கொள்ளக்கூடும் என்ற அச்சத்தை மூடி மறைப்பதாக சமூக மாண்புகள் இருக்கின்றன.

ஆணுடன் பெண்படத்தின் காப்புரிமை Getty Images

அதே சமயத்தில் ஆண்களின் கன்னித்தன்மையை உறுதி செய்வதற்கு எந்த வழிமுறையும் இல்லை. சமூக மாண்புகளின்படி அவர்கள் நடந்து கொள்கிறார்களா என்ற அழுத்தம் அவர்கள் மீது இல்லை.

திருமணத்துக்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ தங்களுடைய சீலை உடைத்துக் கொள்ளும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது.

அவர்களுக்கு எந்தப் பரிந்துரையோ அல்லது எச்சரிக்கையோ பேராசிரியரிடம் இருந்து வரவில்லை.

ஆனால், தங்களுடைய செக்ஸ் விருப்பத்தை பெண்கள் வெளிப்படுத்தத் தொடங்கினால், குறும்புத்தனங்களை அனுமதித்தால் என்ன நடக்கும்.

அவர்களுடைய உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது பற்றி சமூகம் மிகவும் கவலைப்படுகிறது. மகாராஷ்டிராவில் கஞ்சர்பட் என்ற மலைவாழ் சமூகத்தினர், திருமண இரவில் தம்பதியினர் பயன்படுத்தும் படுக்கை விரிப்பை ஆய்வு செய்து `கன்னித்தன்மை சோதனை' நடத்தும் நிலை உள்ளது.

இப்போது சமூகத்தில் சில ஆண்கள் இந்த சம்பிராதயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். திருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டதால் `சுத்தமற்றவராக இல்லை' என்று முத்திரை குத்தும் வகையில் வெளிப்படையாக சோதனை நடத்தும் அழுத்தம் பெண்களுக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை.

சீலிடப்பட்டது

ஆனால், காதலிக்கும் காலத்திலோ அல்லது திருமணப் பேச்சு நடக்கும்போதோ தங்களுடைய கன்னித்தன்மை பற்றி பெண்கள் பேச வேண்டும் என்று பேராசிரியர் கூறுகிறார். இதனால் அவருடைய கணவர் மற்றும் காதலரால் மதிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உடைக்கப்பட்ட சீலை மீண்டும் சீல் செய்ய முடியும் என்று அறிந்து கொள்வது நல்ல விஷயம். பெண் உறுப்பின் வெளிப்புற திசுக்களை தைப்பதற்கு ஹைமெனோபிளாஸ்டி (Hymenoplasty ) சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.

பாலியல் தாக்குதலின் போது ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதற்கு இது உதவுகிறது. ஆனால் பல மேற்கத்திய நாடுகளில், அழகுசார்ந்த விஷயமாக `கன்னித்தன்மையை' மீண்டும் உருவாக்கிக் கொள்வதற்கு இந்த அறுவை சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டிருந்தால், கன்னித்தன்மையை மீண்டும் உருவாக்க முடியாது. ஆனால் ஹைமெனோபிளாஸ்டி முறையில் பெண் உறுப்பின் வெளிப்புறத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உடல் உறவு காரணமாக புணர்ச்சி எதுவும் நடக்கவில்லை என்பதைப் போல தோன்றும்படி செய்ய முடியும்.

பெண்படத்தின் காப்புரிமை Getty Images

கன்னித்தன்மை குறித்து தேவையில்லாமல் சமூகத்தில் முக்கியத்துவம் காட்டப் படுவதால், பெண்கள் திருமணத்துக்கு முன்பு அவஸ்தையான இந்த அறுவை சிகிச்சை வரை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால், அதில் ஒரு ஆணுக்கும் பங்கு உண்டு, இரண்டு பேரும் சீல் உடைத்துக் கொள்கிறார்கள், பாட்டிலில் உள்ள குமிழ்கள் உற்சாக மிகுதியில் வெளியேறும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு எதிராக கேள்விகள் கேட்டால், அதே கேள்விகளை ஆண்களுக்கு எதிராகவும் கேட்க வேண்டும் என்பது வாதமாக இருக்கலாம். ஆனால், ஏன் அத்தனை கேள்விகள் கேட்கப் படுகின்றன?

வயதுக்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்து நாம் ஏன் இவ்வளவு அச்சப்படுகிறோம்? தங்களுடைய பாட்டில்களில் உள்ள ஜின்கள் பற்றி அவர்களை கையாளட்டும்.

அவமானம் மற்றும் சமூக மதிப்புகள் என்ற சுமை ஏதும் இருக்க வேண்டாமே. தூய்மை என்பது கன்னித்தன்மையில் கிடையாது. ஆனால் பாசம் மற்றும் திருமண உறவில் உண்மையானவராக நடந்து கொள்வதில்தான் இருக்கிறது.

தண்ணீரை தாராளமாக ஓட அனுமதிக்கும் போதுதான் அது அமைதியாகவும், சுத்தமாகவும் இருக்கிறது- பாட்டில் அடைத்து சீல் செய்திருக்கும் போது அல்ல.

https://www.bbc.com/tamil/india-46905790

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசிக்குள யாரப்பா புகுந்தது?

தரம் கீழ போகுதே. சஙகரண்ணா, புதைகுழியில் பிரள்வார் வேதனையில்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

பிபிசிக்குள யாரப்பா புகுந்தது?

தரம் கீழ போகுதே. சஙகரண்ணா, புதைகுழியில் பிரள்வார் வேதனையில்..

 

பிபிசி யின் தரம் தாழ்ந்து போகின்றது என்பதை விட வல்லரசு கனவில் இருக்கும் இந்தியாவின் பேராசிரியர்களின் தரம் கீழே செல்கின்றது என்பது தான் முக்கிய விடயம். பா.ஜ.க எனும் வகுப்புவாத மதவாத கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் 'அறிவியல்' கீழ்த்தரமான அளவுக்கு போய்க் கொண்டு இருக்கு. அண்மையில் அறிவியல் மாநாட்டில் பேராசிரியர்களால் முன் வைக்கப்பட்ட  மோட்டுத்தனமான விளக்கங்களுக்கு அடுத்ததாக இந்த பேராசிரியரின் கருத்து வந்து இருக்கு.

இந்தியாவின் பெருமை உலகளவில் கீழ் இறங்குவது சந்தோசத்தைதான் தருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:
திவ்யா ஆர்யா பிபிசி
போராட்டம் நடத்தும் பெண்கள்படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்பிக்கும் பேராசிரியர் ஒருவருக்கு, பெண்களின் கன்னித்தன்மை பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பது கவலைக்குரியதாகியுள்ளது.

தலைப்பை.... பார்த்தவுடன், நிச்சயம்  இது இந்தியாவில் உள்ள பேராசிரியராக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு....
தலைப்பை திறந்து... வாசித்தவை, மேல் மேற்கோள் காட்டிய இரண்டு வரி மட்டுமே...
உலகத்தில்.. வேறு எந்த நாட்டிலும், இல்லாத அறிவாளிகள்... 
ஏன்..  இந்தியாவில் மட்டுமே இருக்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

பிபிசிக்குள யாரப்பா புகுந்தது?

தரம் கீழ போகுதே. சஙகரண்ணா, புதைகுழியில் பிரள்வார் வேதனையில்..

 

5 hours ago, தமிழ் சிறி said:

தலைப்பை.... பார்த்தவுடன், நிச்சயம்  இது இந்தியாவில் உள்ள பேராசிரியராக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு....
தலைப்பை திறந்து... வாசித்தவை, மேல் மேற்கோள் காட்டிய இரண்டு வரி மட்டுமே...
உலகத்தில்.. வேறு எந்த நாட்டிலும், இல்லாத அறிவாளிகள்... 
ஏன்..  இந்தியாவில் மட்டுமே இருக்கின்றார்கள்?

 நாதஸ்வரமும் தினமொரு குறளுமாக  பெருமையாய் இருந்த தமிழ் பிபிசி கேவலங்கெட்ட செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்குது????? 
இதெல்லாம் பிபிசி மேலிடத்திற்கு தெரியுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் போன்றவர்களால் எவருக்குமே பயனில்லை!

காள மேகப் புலவர்  கூறியது  போல  இவரது தாயார் போடடாளே ....வேலயற்றுப் போய் !!!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.