Jump to content

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Screenshot_2019-01-10-23-20-14-48.png
வவுனியாவில் தம் தலைவனின் படத்தை முதல்நாள், முதல் காட்சி பார்க்க நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்று இரு தமிழ்ப் படத் தீவிரவாத குழுக்களிற்குள்ளே நடந்த உரிமைப் போராட்டத்தில் ஒரு தமிழ்ப்படத் தீவிரவாதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கிறாராம். இந்தப் போராட்டத்தினால் வவுனியா - கண்டி வீதி போக்குவரத்தும் தடைப்பட்டதாம். தீவிரவாதிகளின் சண்டித்தனத்தினால் படம் பார்க்காமல் திரும்பிய அகிம்சை வழி ரசிகர்கள் தம் வாழ்வின் பொன்னான சந்தர்ப்பத்தை இழந்து விட்டோம் என்று கதறி அழுத கண்ணீரினால் வவுனியாவின் குளங்கள் எல்லாம் நிறைந்து கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதாம்.
 
இந்தக் கொடுமை நமது மண்ணில் தான் நடந்திருக்கிறது. செயங்கொண்டார் பாடிய, கலிங்கத்து பரணியில் போர் நடந்த இரவுகளில் பேய்கள் பிணம் தின்று குருதியும், நிணமும் குடிக்கும் கற்பனைக்காட்சிகளை விட பயங்கரமான கொலைகளும், வன்முறைகளும் நடந்த நம் தேசத்து மண்ணில் தான் இது நடந்திருக்கிறது. இலங்கை இராணுவம் என்னும் கொலைக்காரர்களின்  வன்முறைகளிற்குள் சிக்கி, சிதறி நமது மக்கள் அவலக்குரல் எழுப்பி மரணித்த மண்ணில் தான் இந்த ரசிகர்கள் என்னும் வீணர்கள் கும்பல்கள் ஒரு மூன்றாந்தர தமிழ்ப் படத்திற்காக அடிபட்ட அவலம் நடந்திருக்கிறது.
 
மன்னாரில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட மரணக்குழிகளில் இருந்து இருநூற்று எண்பத்து மூன்று மனிதர்களின்  உடல்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. அவற்றில் இருபத்தொரு பிஞ்சுக் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. துள்ளித் திரிந்த குழந்தைகளைக் கூட துரத்திச் சென்று கொன்ற கொலையாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தக் குழந்தைகள் போல கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எமது குழந்தைகளின் மரணங்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை நோக்கி எடுக்கப்படும் போராட்டங்களில் மிகக் குறைவானவர்களே கலந்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு பேர் கூடிச் சண்டையிடும் கேவலமான கூட்டமாக நமது இளைஞர்களில் ஒரு பகுதியினர் உருவாகியிருக்கிறார்கள்.
 
பச்சிளம்பிள்ளைகள் பாலிற்கு அழுகையில் கல்லிற்கு பால் ஊற்றுகிறார்கள் என்று தமிழ்நாட்டு பகுத்தறிவாளர்கள், கடவுள் என்னும் கற்சிலைக்கு பால் ஊற்றுபவர்களை பார்த்து கோபத்தோடு அன்று கேட்டார்கள். பாலும் இன்றி, பால் தந்த தாயும் இன்றி பல ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாக நெல்லிக்காய் மூட்டை சிதறியது போல தமிழ்மண் எங்கும் சிதறிப்போயிருக்கிறார்கள். இந்தச் சின்னஞ் சிறார்களின் வாழ்விற்கான வேலைத் திட்டங்களில் நெஞ்சு நிறைய அன்புடன் உழைப்பதற்கு மிகச் சில மனிதர்களே இருக்கிறார்கள். ஆனால் எது விதமான கலைத்துவமோ, யதார்த்தமோ அறவே இல்லாத  தமிழ் படங்களில் வந்து போகிற கோமாளிகளிற்காக தமது பணத்தையும், நேரத்தையும் ஒரு பெருங் கூட்டமே வீணடிக்கிறது.
 
“ஜய, ஜய சங்கர” என்ற கதையினை எழுதி பிராமணியத்திற்கும், பின்பு காங்கிரஸ் களவாணிகளிற்கும் தலை சாய்ப்பதற்கு முன்பு முற்போக்கு, இடதுசாரி கொள்கைகளை தூக்கிப் பிடித்து ஜெயகாந்தன் எழுதிய கதை "சினிமாவிற்கு போன சித்தாளு". அன்றைய காலகட்டத்து தமிழ்ச் சினிமா உழைக்கும் மக்களது வாழ்க்கையை எப்படி சீரழித்தது என்பதன் இலக்கிய ஆவணமாக இந்தக் கதை அமைந்திருக்கிறது. அரசியலிலும், சினிமாவிலும் உச்சத்தில் இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனை அம்பலப்படுத்தி இந்தக் கதையை ஜெயகாந்தன் எழுதியிருந்தார்.
 
 
 
இலங்கையின் வவுனியாவில் போக்குவரத்தை தடை செய்யும் அளவிற்கு அடிபட்ட கூட்டம் "சினிமாவிற்கு போன சித்தாளு" காலகட்டத்து சமுதாயத்து பகுத்தறிவற்ற தன்மையையும், பாமரத்தன்மையையும் நாம் எள்ளளவும் கடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கிறது. தமிழகத்தில் இதே படத்திற்கு பாலபிசேகம் செய்ய கட் அவுட்டில் ஏறிய ஒருவர் கீழே விழுந்து மரணம் அடைந்திருக்கிறார். அரை அடிக்கு உடம்பு முழுக்க பவுடரை பூசிக்கொண்டு அசடு வழிய ஓடித் திரியும் வேதாளங்களின் படங்களிற்காக உயிரை விடும் கொடுமையை என்னவென்று சொல்ல. சாராயங்கள், போதைப்பொருட்கள், நீலப்படங்கள் போன்றே பொழுதுபோக்கு என்ற பெயரில் கொட்டப்படும் குப்பைகள் எவ்வாறு சமுதாயத்தை சீரழிக்கின்றன என்பதற்கு இந்த அவலங்களை விட வேறு சான்றுகள் எதுவும் தேவை இல்லை.
 
விஜயகுமாரன்
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எழுத்தாளர் செ. கார்கி விட மென்மையாகவே எழுதியுள்ளார் .. ☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.