Jump to content

3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

à®à®±à¯à®à®¾à® à®à¯à®£à¯à®à®¾à®à¯à®à®®à¯

3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்.

பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் விற்பனை அதிகம் ஆகும்.

அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன.

தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இந்த பொங்கல் பண்டிகையின் போது தீபாவளி பண்டிகையை விட கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை சிறப்பித்து கொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், பொழுபோக்குகாக திரைப்படங்களுக்கு செல்பவர்களை விட, டாஸ்மாக் கடைகளுக்கு செல்பவர்களே அதிகமாக உள்ளது தெரிகிறது.

இந்தாண்டு புத்தாண்டின் போது எதிர்பார்க்கப்பட்டதை விட விற்பனை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.750 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்தது. இருப்பினும், கடந்தாண்டை காட்டிலும் இந்த பொங்கலுக்கு மது விற்பனை அதிகரித்துள்ளது.

பொங்கல் தினத்தன்று 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், காணும் பொங்கல் தினமான 17-ந்தேதி மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் 500 கோடியை தாண்டியிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், பலர் கடந்த வெள்ளிக்கிழமை அன்றே தங்களின் சொந்த ஊர்களுக்கு படை எடுத்தனர். திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய நாட்களிலேயே குடிமகன்கள் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டனர். இதுவும் விற்பனை அதிகரிக்க ஒரு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/pongal-liquor-sales-3-days-exceeding-rs-500-crore-339051.html

மிகவும்  கவலையான செய்தி. 
வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக மட்டுமே, இணைத்துள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக எதற்கு நீங்கள் கவைப்படுகின்றீர்கள். விற்பனை இன்னும் அதிகரித்தால்தான்  சீனாவின் கடனை அடைக்க ஸ்ரீலங்காவுக்கு உதவ முடியும்......!  😕

Link to comment
Share on other sites

எதிர் காலத்தில் தமிழ் நாட்டடில் இப்படி பொங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

Ãberquellen Bier : Stock-Foto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எதிர் காலத்தில் தமிழ் நாட்டடில் இப்படி பொங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

Ãberquellen Bier : Stock-Foto

புலம்பெயர்ந்த நாங்கள் எல்லோரும்  வாழும் நாடுகளில் நுரை பொங்கும் மதுபானகடைகள் நிறையவே உள்ளது.

கனடாவை தவிர ஏனைய புலம்பெயர் நாடுகளில் மதுபானங்கள் எங்கும் எப்போதும் வாங்கலாமென நினைக்கின்றேன்.

ஜேர்மனியில் அப்படித்தான்.ஆனால் இப்படியான நாடுகளில் மக்கள் மதுபான கடைகளுக்கெதிராக எதுவுமே சொல்வதில்லை.

ஏனெனில் மது மற்றும் புகைத்தல்  விடயமாக  பூரண சுகாதார அறிவுறுத்தல்களை அரசு வழங்கிக்கொண்டேயிருக்கும். மதுபானங்களின் தரம் அரச கட்டுப்பாட்டில் இருக்கும்.உடல் நலக்கேடான மதுபானஙளுக்கு தடை விதிப்பார்கள்.

இதற்குமேல் அவர் குடிச்சு சீரழிஞ்சால் அது அவரின் சொந்தப்பிரச்சனை.

நிற்க..
தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபானங்களை விட நுரை பொங்கும் பியர்கள் அதிக கேடு விளைவிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த நாங்கள் எல்லோரும்  வாழும் நாடுகளில் நுரை பொங்கும் மதுபானகடைகள் நிறையவே உள்ளது.

கனடாவை தவிர ஏனைய புலம்பெயர் நாடுகளில் மதுபானங்கள் எங்கும் எப்போதும் வாங்கலாமென நினைக்கின்றேன்.

ஜேர்மனியில் அப்படித்தான்.ஆனால் இப்படியான நாடுகளில் மக்கள் மதுபான கடைகளுக்கெதிராக எதுவுமே சொல்வதில்லை.

ஏனெனில் மது மற்றும் புகைத்தல்  விடயமாக  பூரண சுகாதார அறிவுறுத்தல்களை அரசு வழங்கிக்கொண்டேயிருக்கும். மதுபானங்களின் தரம் அரச கட்டுப்பாட்டில் இருக்கும்.உடல் நலக்கேடான மதுபானஙளுக்கு தடை விதிப்பார்கள்.

இதற்குமேல் அவர் குடிச்சு சீரழிஞ்சால் அது அவரின் சொந்தப்பிரச்சனை.

நிற்க..
தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபானங்களை விட நுரை பொங்கும் பியர்கள் அதிக கேடு விளைவிப்பதில்லை.

பிரான்சிலும் இவை தாராளமாக கிடைக்கும். அவர்கள் சந்தோஷத்துக்கு அருந்துகின்றார்கள்.நாங்கள் சண்டைக்காகவே முழுங்குகின்றோம்......!  😕

Link to comment
Share on other sites

On 1/20/2019 at 4:28 AM, குமாரசாமி said:

கனடாவை தவிர ஏனைய புலம்பெயர் நாடுகளில் மதுபானங்கள் எங்கும் எப்போதும் வாங்கலாமென நினைக்கின்றேன்.

ஆமா நோர்டிக் நாடுகளும் உங்களுக்கு அருகிலேதான் இருக்குதே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/18/2019 at 10:09 AM, தமிழ் சிறி said:

அரசுக்குதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன

 

இந்தாங்க சார் பில் .!.🙂

ம் .. என்னடா இதுல கருவேப்பிலை , கொத்தமல்லி, பால் பொக்கற் பேர் எல்லாம் எழுதியிருக்கு .? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா நோர்டிக் நாடுகளும் உங்களுக்கு அருகிலேதான் இருக்குதே 

அந்தப்பக்கம் நான் போனதுமில்லை....வந்ததுமில்லை கண்டியளோ....தெரியாத விசயத்தை தெரிஞ்ச மாதிரி எழுதிப்போட்டு.....பிறகு அடி,கடி வாங்கேலாது பாருங்கோ...
அது சரி உந்தப்பக்கம் என்னமாதிரி? ஜேர்மனியை மாதிரி நினைச்ச நேரத்திலை எங்கையும் எப்பவும் வாங்கலாமோ? 😅

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.