Jump to content

தனிமையில் தவித்த 'சிங்கிள்' தவளைக்கு 'ஜோடி' கிடைத்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
ஜூலியட்படத்தின் காப்புரிமை Robin Moore, Global Wildlife Conservation Image caption ஜூலியட் - செஹுன்கஸ் தவளை

தவளைகளின் பல்வேறு இனங்கள் உள்ளன. டெல்மட்டோபிட்டே குடும்பத்தைச் சேர்ந்த செஹுன்கஸ் தவளையொன்று இந்த இனத்தை சேர்ந்த கடைசி தவளை என நம்பப்படுவதால் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தற்போது தனிமையிலிருந்து அதற்கு விலக்கு கிடைக்கவுள்ளது.

ரோமியோ என அறியப்படும் அத்தவளை, பொலிவியாவில் உள்ள நீர் வாழ் உயிரின கண்காட்சியகத்தில் பத்து ஆண்டுகளை தனிமையில் கழித்துள்ளது.

தொலைதூர பொலிவியன் மழைக் காடுகளில் ஒரு குழு பயணம் மேற்கொண்டு இந்த தவளைக்கு ஜோடியை தேடியது. தற்போது ரோமியோவுக்கு ஒரு ஜூலியட்டை கண்டறிந்துள்ளது.

ஒரு ஓடையில் ஐந்து செஹுன்கஸ் தவளைகளை பிடித்தது அக்குழு. தவளை கலப்பு செய்யும் லட்சியத்துடனும் நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய அத்தவளைகளை மீண்டும் காட்டிலேயே விடுவதற்காகவும் இந்த தேடுதல் வேட்டையை நடத்தியது இக்குழு.

தவளைகள் தேடும் பணிபடத்தின் காப்புரிமை Stephane Knoll, Museo de Historia Natural Alcide d Image caption தவளைகள் தேடும் பணி

கோச்சபாம்பா நகரத்தின் கண்காட்சியகத்தில் விலங்கியலில் ஒரு பிரிவான நீர் நில வாழ்வன மற்றும் ஊர்வன குறித்த படிப்பான ஹெர்பட்டாலஜி துறையின் தலைவராக இருப்பவரும் இந்த தேடல் பயணத்தின் தலைவராக இருப்பவருமான தெரீசா கமாச்சோ படானி பிபிசியிடம் பேசினார்.

தவளைகளிலும் எதிர்பாலின ஈர்ப்பு உண்டு என அவர் நம்புகிறார். '' ரோமியோ உண்மையில் மிகவும் அமைதியாகவும் தளர்வாகவும் இருக்கிறது. அது பெரிதாக நகரவே இல்லை. அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். மேலும் உணவு உட்கொள்ள ஆர்வமாக இருக்கிறான். ஆனால் அவர் சற்று மந்தமான மற்றும் கூச்சமுடைய வகையைச் சேர்ந்தவன்'' என்கிறார் தெரீசா கமாச்சோ படானி.

ரோமியோ - செஹுன்கஸ் தவளைபடத்தின் காப்புரிமை Robin Moore, Global Wildlife Conservation Image caption ரோமியோ

ஜூலியட் ரோமியோவிடமிருந்து முற்றிலும் வித்தியசமான குணம் கொண்டவள் எனச் சொல்லும் தெரீசா ''அவள் உண்மையாகவே மிகவும் நல்ல ஆற்றலோடு இருக்கிறாள். நன்றாக நீந்தும் அவள், நிறைய உணவு உட்கொள்கிறாள். சில சமயங்களில் தப்பிக்கவும் முயல்கிறாள்'' என ஜூலியட் குறித்து விவரித்தார்.

ஐந்து தவளைகள் அப்பயணக்குழுவால் கண்டறியப்பட்டது. இதில் மூன்று ஆண் தவளைகள் மற்றும் இரண்டு பெண்கள் தவளைகள்.கடந்த தசாப்தத்தில் முதல் முறையாக காட்டில் காணப்பட்ட செஹுன்கஸ் தவளைகள் இவை. இதற்கு முந்தைய தேடுதல் நடவடிக்கையில் இவ்வகை தவளைகள் கிடைக்கவில்லை.

ரோமியோவை பொருத்தவரை பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரியியலாளர்களுக்கு கிடைத்தது. அப்போது செஹுன்கஸ் இன தவளைகள் அழிந்து வந்த ஒன்றாக இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். ரோமியட்டும் அழிந்துபோய்விடாமல் இருப்பதற்காக அவர்கள் பாதுகாத்து வந்தனர். ஆனால் இவ்வளவு காலம் ரோமியட் தனிமையிலேயே இருக்க நேரிடும் என அவர்கள் நினைக்கவில்லை.

கடந்த ஆண்டு ரோமியோவுக்கு டேட்டிங்கிற்காக அது குறித்த விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டது.இதனால் அத்தவளை சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

தற்போது கண்காட்சியகத்தின் பாதுகாப்பு மையத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இத்தவளைகள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

Presentational grey line

செஹுன்கஸ் தண்ணீர் தவளைகள் - சில உண்மைகள்

1. இவ்வகை தண்ணீர் தவளைகள் (Telmatobius yuracare) பொலிவியாவின் மழைக்காடுகளின் குளங்கள், சிறு ஓடைகள் மற்றும் நதிகளில் இருக்கும். அழிந்து வந்த இந்த இனத்தின் ஒரு தவளை மட்டும் சிறு ஓடையில் இருந்து எடுக்கப்பட்டது.

2. பொலிவியா, பெரு மற்றும் ஈக்வடார் நாடுகளில் இவ்வகை தவளைகள் வேகமாக அழிந்துவருகின்றன.

3. பல்வகையான அபாயங்களை இவை எதிர்கொள்கின்றன. பருவநிலை மாற்றம், வாழ்விடம் அழிப்பு மற்றும் நன்னீர் மீன்கள் படையின் அறிமுகம் உள்ளிட்டவற்றால் இவை அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன.

Presentational grey line தேடுதல் வேட்டையில் சிக்கிய மேலும் சில தவளைகள்படத்தின் காப்புரிமை Stephane Knoll, Museo de Historia Natural Alcide d Image caption தேடுதல் வேட்டையில் சிக்கிய மேலும் சில தவளைகள்

பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கும் உலகளாவிய வனஉயிர் பாதுகாப்பு அமைப்பின் கிறிஸ்ஜோர்டான், விலங்குகளை சிறைபிடிப்பதில் ஆபத்து உள்ளது என்கிறார். காட்டில் இருக்கும் வெகு சில தவளைகளே நீண்ட காலமாக சாத்தியமான தவளைகள் எண்ணிக்கையை பராமரிக்கின்றன என்றார்.

கைட்ரிடோமைக்கோசிஸ் எனும் தொற்று உலகம் முழுவதும் நீர்நில வாழ்வனவற்றை அழித்து வருகிறது. தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள தவளைகளுக்கு தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பதற்காக சிகிச்சையளிக்கப்டுகின்றன.

தெரீசாவுடன் ஜூலியட்படத்தின் காப்புரிமை Robin Moore, Global Wildlife Conservation Image caption தெரீசாவுடன் ஜூலியட்

இந்த சிகிச்சை முடிந்ததும் ஜூலியட்டை ரோமியோ சந்திக்கும். இவை இணைந்து இனப்பெருக்கம் செய்வதற்கு முயற்சி செய்யப்படும். பின்னர் இவ்விரண்டு தவளைகளும் அதன் இயற்கை வாழ்விடங்களுக்கு அனுப்பப்படும்.

பொலிவியாவில் தவளைகள் முதலான 22% நீர் நில வாழ் உயிரினங்கள் அழிவுக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. வாழ்விட இழப்பு, மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்கள்.

நீர் நில வாழ்வானவற்றின் நிலை மீது கவனம் பெற ரோமியோவின் கதை முக்கியமானது என்கிறார் தெரீசா கமாச்சோ படானி.

https://www.bbc.com/tamil/global-46893812

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா......தனி மையில் தவித்த தவளையும்  ஜோடியோடு  சேர்ந்துட்டுது......!    😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:

ச்சா......தனி மையில் தவித்த தவளையும்  ஜோடியோடு  சேர்ந்துட்டுது......!    😊

லொள்😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையெல்லாம் மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டிய நிலையில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது..நேரம் விரயமாக்காமலே இருந்து விடத் தோன்றுகிறது😇.
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.   எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.   சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.   அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.   இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.   திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.   மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.   'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.   காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.   தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.   (தொடரும்..........)    
    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.