Jump to content

ஒவ்வொரு தமிழ் மகனும் மனச்சாட்சியோடு செயற்படட்டும்


Recommended Posts

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. யுத்தம் முடிந்த கையோடு இலங்கை அரசு குறித்து பலவாறான விமர்சனங்கள் எழுந்தன.
 
அதில் குறிப்பாக வன்னி யுத்தத்தின் கொடூரம் தமிழ் இனஅழிப்பாக இருப்பதாக மனித நேய அமைப்புக்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்தன.தவிர யுத்தத்தின் கொடூரங்களை வெளிப்படுத்துகின்ற கண்கண்டசாட்சியமாக சனல் 4 காணொளிகள் அமைந்திருந்தன. கூடவே புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழினத்துக்கு நேர்ந்த அவலத்தை சர்வதேச வீதிகளில் இறங்கி உரக்கக் கூறினர்.
 
இதன் விளைவாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கைத் தமிழர்களின் விடயத்தை நோக்கி தனது பார்வையை திசை திருப்பி இருந்தது.
 
எனினும் தென்பகுதிப் புத்திஜீவிகளும் அரசியல் விற்பன்னர்களும் தமிழ் மக்களுக்குச் சார்பாக சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள கருத்தியலை முறியடிக்க ஆட்சி மாற்றமேவழி எனத் தீர்மானித்தனர்.
 
மகிந்த ராஜபக்­ தரப்பை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கி, புதிய ஆட்சியை அமைப்பதனூடாக சர்வதேசத்தின் கொந்தளிப்பை கட்டுப்படுத்த முடியும் என்ற அவர்களின் உன்னத தயாரிப்பு நடைமுறையாகியபோது அவர்கள் இலக்கை அடைந்தனர்.
இந்த இலக்கை அடைவதற்கு தமிழ் அரசியல் தலைமையும் வகிபங்காற்றியமைதான் எங்களிடம் இருந்த இராஜதந்திரப் பலவீனம் என்பதை நாம் இங்கு கூறித்தானாக வேண்டும்.
 
இனப்பிரச்சினை தொடர்பில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு நிபந்தனைகளை விதித்து அதை நிறைவேற்றப் பணித்தபோதிலும் அவை எதுவும் கருத்தில் எடுக்கப்படவில்லை.
 
மாறாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற கால அவகாசம் போதாது என்ற கருத்து இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டது. இங்குதான் தமிழ் அரசியல் தலைமை மீண்டுமொரு வரலாற்றுத் தவறை இழைக்கிறது.
ஆம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பதை தமிழ் அரசியல் தலைமை முன்மொழி யும் அளவில் நிலைமை எமக்குப் பாதகமாகியது.
இந்தக் காலக் கடத்தல்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காத நிலைமைகளை உரு வாக்கியது என்பதே உண்மை.
 
வன்னி யுத்தம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் வடுக்களையும் வேதனைகளையும் தமிழ் மக்கள் சுமந்து கொண்டுள்ளனரே தவிர, எங்களுக்கு நேர்ந்தகதியை சர்வதேசம் மறந்து போகும் அளவிலான ஒரு சூழ் நிலையை காலத்தின் நீண்ட அசைவு உருவாக்கி விட்டது.
 
இதுதான் இன்றைய நிலைமை என்ற கட்டத்தில் தமது எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுகளை தமிழ் மக்கள் எடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
 
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்ற கையோடு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என நம்மவர்கள் கூறினர். ஆயினும், இதுவரை அதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தெரியவில்லை.
இதுவே நிலைமை எனும்போது எங்களுக்கான உரிமை, எங்களின் வாழ்வு, எங்களின் இலக்கின் எதிர்காலம் பற்றி தமிழ் மக்கள் அதிகமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
 
இந்தச் சிந்தனை அரசியல் என்ற பக்கச் சார்பற்று ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிப் படி செயற்படுவதாய் இருக்கும்போது காலம் கடந்தேனும் உரிமையை வலியுறுத்தி அந்த இலக்கை அடையும் பாதையில் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.
 
எதற்கும் இதுவரை நடந்தது சரியா? என்ற ஆய்வினூடு மனச்சாட்சியை முன்னிறுத்தி தீர்மானம் எடுப்பதுதான் தமிழ் மக்களின் முக்கியமான கடமையாகும்.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.