Jump to content

மோசமான நடத்தை காரணமாக நாடுகடத்தப்படும் பிரித்தானிய குடும்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

8546608-0-image-a-32_1547553812032.jpg

மோசமான நடத்தை காரணமாக நாடுகடத்தப்படும் பிரித்தானிய குடும்பம்!

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குடும்பம் ஒன்று  மோசமான நடத்தை காரணமாக நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

பொது இடத்தில் குப்பை போட்டமை, உணவு உண்டதன் பின்னர் உணவகத்தில் பணம் செலுத்தாமை, திருட்டு ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆக்லந்து நகர மேயர் ஃபில் கொஃப் (Phil Goff) பொலிஸாரிடம் கோரியிருந்தார்.

இந்தநிலையிலேயே பண்புகள் தொடர்பான விவகாரத்தினை மீறிய குறித்த பிரித்தானிய குடும்பத்தினை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் குடிநுழைவுத் துறை உதவித் தலைமை நிர்வாகி பீட்டர் டெவோய் (Peter Devoy) குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரித்தானிய குடும்பத்தினர் இன்று(வியாழக்கிழமை) அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://athavannews.com/மோசமான-நடத்தை-காரணமாக-நா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரனிடம் திருட்டு ,பொய், களவு எதுவுமே கிடையாது என்றுதான் நான் நினைக்கிறன்.செய்தியை நம்பாமலிருக்கவும் முடியவில்லை.......!  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

வெள்ளைக்காரனிடம் திருட்டு ,பொய், களவு எதுவுமே கிடையாது என்றுதான் நான் நினைக்கிறன்.செய்தியை நம்பாமலிருக்கவும் முடியவில்லை.......!  🙂

உங்கடை கதையை பாத்தால் களவெடுக்க முழுக்க கறுவல் எண்ட மாதிரியெல்லோ கிடக்கு....:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.