Jump to content

இளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள் 


Recommended Posts

இளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள் 

செ.கார்கி
 

 
 


AZXSDCVFGBNHJYHJM.jpg

 

 

 

 

 

 

 

 

சமூகப் பிரச்சினைகளை நோக்கி இளைஞர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என பல முற்போக்கு இயக்கங்கள் பெரும் பிரயத்தனம் செய்துகொண்டு இருக்கின்றன.

முழு நேர ஊழியர்களையும், பகுதி நேர ஊழியர்களையும் நியமித்து தொடர்ச்சியாக மாணவர்களை சந்திப்பது அவர்கள் மத்தியில் அரசியல் உரையாடலுக்கான களம் அமைத்துக் கொடுப்பது என தன்னலமற்ற பணியை செய்து வருகின்றனர். 

ஆனால் எவ்வளவுதான் முற்போக்கு இயக்கங்கள் முயன்றாலும் பெரும்பான்மையான இளைஞர்களை சமூக மாற்றத்தை நோக்கிய அரசியல் பாதையில் வென்றெடுக்க முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மையாகவே உள்ளது.

காரணம் இன்றைய மாணவர்கள் இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள் அரசியல் அற்ற தக்கை மனிதர்களாய் விட்டேத்தியான வாழ்க்கை வாழ்பவர்களாய் தான் இருக்கின்றனர். 

அற்பத்தனமாகவும் குறுகிய மனம் படைத்தவர்களாகவும் எவன் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்று வாழும் சுயநலவாதிகளாகவும்தான் இருக்கின்றார்கள்.

ajith cutout fallingஇளைஞர்களை வென்றெடுத்து சமூக மாற்றத்தை நோக்கிய பெரும் போராட்டத்தில் அவர்களை அணிதிரட்டிச் செல்ல வேண்டும் என யாராவது முயன்றால் அவர்கள் கூடிய விரைவில் அரசியலும் வேண்டாம் ஒரு கருமமும் வேண்டாம் என தூக்கிப் போட்டுவிட்டு பிழைப்புவாத வாழ்க்கைக்கே மீண்டும் சென்றுவிடுவார்கள். 

அந்த அளவிற்கு இன்றைய இளைஞர்களின் மூளை செல்லரித்துப் போய் கிடக்கின்றது. இது போன்ற ஓர் இளைஞர் கும்பலை நீங்கள் உலகில் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. 

அந்த அளவிற்கு சீரழிந்து, பெரும் குற்றக்கும்பலுக்குரிய எல்லாவித குணங்களையும் கொண்டிருக்கின்றார்கள். இப்படி தமிழ்நாட்டு இளைஞர்களை மாற்றியதில் ரஜினி கமல் அஜித், விஜய், சூர்யா போன்ற சினிமா நடிகர்கள் தான் முன்னணியில் நிற்கின்றார்கள்.

இன்றைய இளைஞர்களின் ஆன்மீக வழிகாட்டிகள் இவர்கள்தான். இவர்கள் பேசும் பஞ்ச் வசனங்களும், வேசித்தனமான பாடல்களுக்கு ஆடும் ஆபாசமான உடல் நெளிவுகளும், அபத்தமான சண்டைக் காட்சிகளும் தான் இன்றைய இளைஞர்களின் முழு நேர பேசு பொருள்.

ஸ்டெர்லைட் தமிழ்நாட்டை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி தமிழர்களை சோத்துக்கு கையேந்தவைக்க மத்திய பாசிச கார்ப்ரேட் அடிவருடிகள் செய்யும் சதிகள் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை, தமிழ்நாட்டில் துறைகள் தோறும் ஊழலால் புழுத்து நாறுவதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை, வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றியோ, கல்விக் கொள்ளை பற்றியோ அரசு மருத்துவமனைகள் தரமற்று சீரழிக்கப்படுவதைப் பற்றியோ, மணற்கொள்ளை பற்றியோ, விவசாயிகள் பிரச்சினை பற்றியோ கவலைப்படாத அல்லது கவலைப்படத் தயாராக இல்லாத இன்னும் சொல்லப் போனால் எதற்காக உயிர்வாழ்கின்றோம் என்பதே தெரியாத ஒரு கூட்டத்தை இந்த சினிமா கழிசடைகள் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

மக்கள் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படாத இந்த கேடு கெட்ட இளைஞர் கும்பல் எப்ப ?தல? படம் ரீலிஸ் ஆகும், எப்ப தளபதி படம் ரீலிஸ் ஆகும், எப்ப சூப்பர் ஸ்டார் படம் ரீலிஸாகும், தலைவர் இந்தப் படத்தை முடிச்சுட்டு அரசியலுக்கு வருவாரா என தினம் தினம் இதைப் பற்றியே பேசி பொழுதைக் கழிக்கும் தறுதலைகளாய் மாறிக்கொண்டு இருக்கின்றார்கள். 

பொண்டாட்டி தாலி அறுத்து கட் அவுட்டு வைப்பது, வீட்டில் அப்பன் சம்பாதித்த காசை பிடுங்கிக் கொண்டு போய் பேனர் வைப்பது, தோரணம் கட்டுவது என ஆரம்பித்து, சினிமாக் கழிசடைகளை கடவுளுக்கு நிகராக நினைத்து பால் அபிசேகமும் பீர் அபிசேகமும் செய்வதுவரை நடக்கின்றது.

இன்னும் சில முற்றிப்போன முண்டங்கள் ?விஜய் கடவுளுக்கும்?, ?அஜித் கடவுளுக்கும்? மாலை எல்லாம் போட்டுக் கொண்டார்கள். இப்போது அது இன்னும் பரிணாம வளர்ச்சி அடைந்து அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் ஓர் இளைஞன் அப்பன் தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி இருக்கின்றான். இப்போது அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். தீ வைத்த கழிசடையை காவல்துறை கைது செய்துள்ளது. அந்தக் கழிசடையின் பெயர் அஜித்குமாராம்!. 

அதே போல வேலூரில் அலங்கார் திரையரங்கில் இரண்டு ?தலை? கோஷ்டிகளுக்கு இடையே டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட சண்டை கத்திக் குத்தில் முடிந்திருக்கின்றது.

இதே போல விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் உள்ள ஸ்ரீனிவாசா திரையரங்கில் தல ரசிகர்கள் 20 அடி கட்அவுட்டருக்கு பாலபிசேகம் செய்யும்போது அது பாரம் தாங்காம‌ல் சரிந்து விழுந்ததில் 6 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றார்கள். தல ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினி ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது, தாங்களும் ஒரு தேர்ந்த கழிசடைக் கும்பல்தான் என்பதைக் காட்டியிருக்கின்றார்கள். ரஜினியின் கட் அவுட்டர்களுக்கு பால் அபிசேகம் செய்வது, காவடி தூக்குவது, கோயில்களில் படம் வெற்றிபெற பிராத்தனை செய்வது, திரையரங்கின் முன் திருமணம் செய்வது என தங்கள் தலைவரின் மேல் இருக்கும் பக்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இரண்டு நாட்களாக எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மத்தியில் இதே பேச்சாகவே உள்ளது. அங்கே பாராளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மோடி அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது அசிங்கம் செய்து வைத்திருக்கின்றார், இங்கே ஒரு கும்பல் நாக்கில் சூடம் ஏற்றி அஜித் படம் வெற்றிபெற வழிபாடு செய்துகொண்டு இருக்கின்றது. 

ஆட்சியாளர்கள் இருக்கும் கோவணத்தையும் உருவிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அதைப் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாத கேடு கெட்ட முட்டாள் கூட்டம் அம்மணமாக நின்றுகொண்டு தியேட்டரில் விசில் அடித்துக் கொண்டு இருக்கின்றது. 

இளைஞர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கின்றார்களே, இவர்களை ?அப்படி எல்லாம் செய்ய வேண்டாம், நானும் உங்களைப் போல சாதாரண மனிதன் தான். எனக்கும் மலம் வரும், சிறுநீர் வரும், வயிற்றுக்கு சோறுதான் தின்கின்றேன், எனவே என்னை கடவுள் போல நினைத்து வழிபடுவதை நிறுத்துங்கள்? என எவனாவது ஒரு யோக்கியன் வாய் திறக்கின்றானா எனப் பாருங்கள்.

இந்த முட்டாள் கூட்டத்தை கேவலத்தில் இருந்து கழிசடைக்குக் கொண்டுபோவதில்தான் ஒரே குறிக்கோளாக இருக்கின்றார்கள். பல கோடிகளை சம்பளமாக பெற்றுக்கொண்டு ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழும் இந்தக் கழிசடைகளை, உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் பிரித்துப் பார்க்கத் திராணியற்ற, பிம்ப வழிபாட்டில் மூழ்கிப்போன முட்டாள் கூட்டம் கடவுளைப் போல நினைத்து வழிபடுவதால்தான் கொழுப்பேறிய இந்தப் பன்னாடைகளுக்கு எல்லாம் அரசியலுக்கு வரப் போகின்றேன் என சொல்லும் தைரியம் வருகின்றது.

?எங்க தலைவர் அது செஞ்சாரு,? ?எங்க தலைவர் இது செஞ்சாரு? என எப்போதே எங்கோ அவன் போட்ட பிச்சையை பெருமையாகப் பேசிக்கொண்டு இருக்கும் மூளை மழுங்கிய முட்டாள் இளைஞர்களுக்கு எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இன்றி, எந்தவித ஊதியமும் இன்றி மக்கள் நலன் ஒன்றே பெரியது என தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து, போராட்டமே மகிழ்ச்சி என வாழும் நூற்றுக்கணக்கான தோழர்களைப் பற்றி எதுவும் தெரியாது. 

அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி, சிறைபட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, காயம் ஆறுவதற்கு முன்பே களத்தில் வந்து நின்ற தீரர்களைப் பற்றி இவர்களுக்குத் தெரியாது அல்லது தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை.

அரசியல்வாதிகள் யோக்கியவாதிகளாய் இருந்தால் இது போன்ற கலாச்சாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் அவர்களோ தன்னுடைய கட் அவுட்டர்களைப் பார்த்து தானே மகிழ்ச்சி அடையும் சுய மோகிகளாய், தன்னையே கடவுளாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் அற்ப சிந்தனை படைத்த பேர்வழிகளாய் இருக்கும்போது இதை எல்லாம் தடுப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. 

என்ன செய்வது இந்த போன்ற மனிதர்கள் மத்தியில்தான் நாம் வாழ்கின்றோம் இங்கே தான் பணி செய்தாக வேண்டும். நோய் இருக்கும் இடத்தில் தானே மருத்துவர்களுக்கு வேலை.

http://www.elukathir.lk/NewsMain.php?san=22956

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை படித்தபின் என் பார்வையில தமிழ் ராக்கர்ஸ் நவீன கதாநாயகன் .

 

இன்னும் கொஞ்சகாலத்துக்கு தலைகுளை என்று அடிபடுவினம் 5G எனும் ஐந்தாவது உலகம் பிறக்கும்போது நிலைமை வேறாகிவிடும் . யார் கண்டது இப்படி சட்ற்றலை சட்டிகள் ஒரேயடியா குப்பைக்கு போகும் என்று நெட்பிளிக்ஸ் உதயமாகும் போதே எதிர்வு கூற அதை நம்பியவர்கள் சிலரே .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலும் இந்த கலாச்சாரம் கொஞ்சம்,கொஞ்சமாய் பரவுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

ஊரிலும் இந்த கலாச்சாரம் கொஞ்சம்,கொஞ்சமாய் பரவுது 

தமிழ்நாட்டை விட தேவலாம் .. அங்கு ஏதோ கேட்டை திறந்தவுடன் இடம்பிடிக்க ஓடுகிறார்கள் ..😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.