Jump to content

சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 16 புதன்கிழமை, மு.ப. 06:35

கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன.   

கடந்த காலத்தைப் போலல்லாது, இம்முறை அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. நாட்டு மக்கள் விரும்பினால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, அவர் கடந்த வாரம் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார்.   

 கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய உரையாடல்களில் கோட்டாபயவின் பெயர் உச்சரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதற்காகவே, ‘வியத்கம’ என்கிற அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனாலும், தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளியிடுவது சார்ந்து, கோட்டாபய ஒரு படி பின்னோக்கியே இருந்து வந்திருக்கின்றார். ஆனால், தற்போது, அந்தக் கட்டத்திலிருந்து முன்னோக்கி வந்திருக்கிறார். அதுவும் தன்னுடைய முடிவுக்கு, மஹிந்த, மைத்திரியின் ஆதரவு இருப்பதாகவும் கூறியிருக்கின்றார். இது, ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’யின் தோல்வியால் உருவான கட்டம்.   

 மஹிந்தவைப் பொறுத்தளவில், நாமலின் அரசியல் எதிர்காலம் குறித்த கவலையே பிரதானமானது. தன்னுடைய காலத்துக்குப் பின்னர், நாமல் தலைமையில் தன்னுடைய பிள்ளைகள் ஆட்சி அதிகார அரங்கில் கோலோச்ச வேண்டும் என்பதே அவரது எண்ணம். அதற்கான பாதையைச் செப்பனிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவே, அவர் தன்னுடைய நிலையையும் மீறி, அதிகம் முட்டி மோதுகின்றார்.   

தன்னுடைய ஆட்சிக்காலத்தில், தன்னுடைய சகோதரர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிகளவு இடத்தை மஹிந்த வழங்கியிருந்தார். அதனாலேயே, அவர் தோல்வியடைந்தார் என்கிற உணர்நிலை, தென்இலங்கையில் இன்னமும் இருக்கின்றது. தற்போதும், சகோதரர்களையும் உறவினர்களையும் அவர் விலத்தி வைத்துவிடவில்லை. ஆனால், உடன்பிறப்புகளைவிட, தன்னுடைய பிள்ளைகள் மீதான கரிசனையை அவர் வெளிப்படுத்துகிறார்.   

கடந்த காலத்தில், சகோதரர்களுக்கு நல்லதொரு சகோதரனாக இருந்த அவர், இப்போது, பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக கரிசனை கொள்கிறார். அதுதான், அவரை, தன்னை வீழ்த்திய மைத்திரியோடு இணக்கப்பாட்டுக்குச் செல்லவும் வைத்தது.   

 கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னராக, மைத்திரி - மஹிந்தவுக்கு இடையிலான பேச்சுகள் நெருக்கமாக ஆரம்பிக்கப்பட்டாலும், அந்தப் பேச்சுகளில் உரையாடப்பட்ட விடயங்கள் மிகமிக இரகசியமாகவே பேணப்பட்டன.   

இரண்டு தரப்பிலும், வேறு யாருக்கும் விவரங்கள் பகிரப்பட்டிருக்கவில்லை. மைத்திரிக்கு நெருக்கமாக இயங்கிய துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர போன்றோர் கூட, ஒக்டோபர் 26ஆம் திகதி, மஹிந்த பிரதமராக நியமிக்கப்படும் வரையில், அந்த விடயத்தை அறிந்திருக்கவில்லை.   

வேண்டாத ஒரு தருணத்தில், தாங்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறோம் என்கிற தோரணையில், அவர்கள் அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதை, காணொளிகளில் கண்டோம்.   

 ராஜபக்‌ஷக்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டதும், ஊழல் மோசடி விசாரணைகளின் வழியில் முற்றாக முடக்கப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும், ரணிலின் அரசியல் கணக்கின் அடிப்படையில், ராஜபக்‌ஷக்கள் மீதான வழக்கு விசாரணைகள் வேகப்படுத்தப்படவில்லை. அத்தோடு, சுதந்திரக் கட்சிக்கு எதிராக ராஜபக்‌ஷக்களை தனித்தரப்பாகக் குறிப்பிட்டளவு வளர்த்து விட வேண்டும் என்பதிலும் அவர் குறியாக இருந்தார். அதனாலும், மைத்திரி- ரணில் இடையிலான இடைவெளி அதிகரிக்கக் காரணமானது. இரண்டு பலவீனமான தரப்புகளைத் தனக்கு எதிராகப் பேண வேண்டும் என்கிற ரணிலின் நினைப்பு சரியானதுதான். ஆனால், அதனைச் சரியான இடைவெளிகளுடன் பேணுவதில் கோட்டை விட்டதன் காரணமாகவே, ஒக்டோபர் சதிப்புரட்சிக்கான வாய்ப்பு உருவானது.   

சதிப்புரட்சியிலிருந்து மீண்டு, ரணில் பிரதமராகிவிட்டாலும், அதிலிருந்து முழுமையான பலாபலனை, அவரால் எடுத்துக்கொள்ள முடியாமால் போய்விட்டது. கூட்டணிக்கட்சிகளினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் சதிப்புரட்சிக்கு எதிராக வகிபாகம் என்பது, பாரியளவிலானது.

அது, அவருக்கான ஆதரவு என்கிற ஒற்றைப்புள்ளியில் சாத்தியமான ஒன்றல்ல. மாறாக, ஜனநாயகத்துக்கான காப்பு, எதேச்சதிகாரத்துக்கு எதிரான போர்க்குணத்தின் போக்கில் எழுந்து வந்தவை.   

சதிப்புரட்சியில் மைத்திரி - மஹிந்த தரப்பு வெற்றிபெற்றிருந்தால், ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபயவை முன்னிறுத்தும் காட்சிகள் மீள எழுந்திருக்காது. மாறாக, மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்திக் கொண்டு, மஹிந்த தன்னுடைய ராஜாங்கத்தை மீண்டும் அமைத்திருப்பார். அது மஹிந்தவுக்கு இருப்பதிலேயே மிகவும் இணக்கமான வழி.   

ஏனெனில், தன்னையோ, தன்னுடைய மகனையோ தவிர்ந்த இன்னொரு ராஜபக்‌ஷவை அரியணையில் ஏற்றிவிட்டு, அதனை மீளப்பெறுவது என்பது அவ்வளவுக்கு இலகுவான ஒன்றல்ல என்பது அவருக்குத் தெரியும். அப்படியான சூழலில்தான், ரணிலுக்கு எப்படி வெற்றிபெறுவதற்கும் ஆட்சி நடத்துவதற்கும் பொம்மையாக மைத்திரி தேவைப்பட்டாரோ, அதேபோன்றதொரு காரணத்துக்காக மஹிந்தவுக்கும் மைத்திரி தேவைப்பாட்டார். அதற்காகவே, சதிப்புரட்சிக்கான கட்டத்துக்கு மஹிந்த இணங்கினார்.   

ஆனால், சதிப்புரட்சியில் வெற்றிபெறவோ, ஆட்சியைத் தக்கவைக்கவோ முடியவில்லை. அது, முடியாமல் போனாலும், எப்படியாவது தேர்தலொன்றுக்குச் சென்றுவிட வேண்டும் என்கிற அவர்களின் நினைப்பிலும், உயர்நீதிமன்றம் தீயை வைத்துவிட்டது. அவ்வாறான கட்டங்கள், மஹிந்த மீதான மதிப்பைத் தென் இலங்கையில் பெருமளவு குறைத்துவிட்டது.   

மைத்திரி மீதான எதிர்பார்ப்பு, மதிப்பு என்பன ஏற்கெனவே படுபாதாளத்துக்குச் சென்றுவிட்ட நிலையில், சதிப்புரட்சிக்குப் பின்னரான அவரை, நாட்டு மக்கள் கவனத்திலேயே கொள்வதில்லை.

கிட்டத்தட்ட கோமாளியாகக் காணும் கட்டத்துக்கு வந்துவிட்டார். அப்படியான ஒருவரை முன்னிறுத்திக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வதற்கு மஹிந்தவோ, அவரது அணியினரோ தற்போது தயாராக இல்லை.   

அதனால்தான், சதிப்புரட்சிக் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை முன்னிறுத்துவது சார்ந்து ஓரளவுக்கு தலையாட்டிய, பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்கள், அந்தத் தோல்வியின் பின்னர், அவரை முற்றுமுழுதாக வெட்டிவிடத் துணிந்துவிட்டார்கள்.   

அப்படியான கட்டத்தில்தான், தவிர்க்க முடியாமல் கோட்டாபயவை முன்னிறுத்த வேண்டியும் ஏற்பட்டிருக்கின்றது. என்றைக்கும் இல்லாத அளவுக்கு பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள், கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது சார்ந்து, தற்போது பேசத்தொடங்கிவிட்டார்கள். அது, மஹிந்தவின் மீதான அழுத்தமொன்றை விடுக்கும் அளவுக்கும் உருவாகியிருக்கின்றது.   

இந்த இடத்தில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது குறித்து கோட்டாபய வெளிப்படையாக அறிவிக்கும் கட்டத்துக்கு வந்திருப்பது சார்ந்து இன்னொரு விடயத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அதாவது, இன்றுவரை அமெரிக்கக் குடியுரிமையோடு இருக்கும் அவர், அதிலிருந்து விடுபட்டாலே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.   

அப்படியானால், அவர் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடும் கட்டத்துக்கு வந்துவிட்டாரா? அந்த முடிவை எடுப்பதற்கு, ஜனாதிபதித் தேர்தலில் தன்னால் நிச்சயமாக வெற்றிபெற முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு வர வேண்டும். இல்லையென்றால், எதிர்காலத்தில் அவர் சர்வதேச ரீதியில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி ஏற்படலாம்.   

இன்று வரையிலும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்களில் இருந்து கோட்டாபயவை பாதுகாத்து வரும் காரணிகளில் அமெரிக்கக் குடியுரிமை பிரதானமானது. ஏனெனில், மனித உரிமை மீறல் குற்றங்களுக்காகத் தன்னுடைய பிரஜை ஒருவரை, சர்வதேச ரீதியில் தண்டிப்பதற்கு அமெரிக்கா ஒருபோதும் அனுமதித்தது இல்லை. அதனால்தான், கோட்டாபய வெளிநாடுகளுக்குப் பயமின்றிச் சென்றுவர முடிகின்றது. 

அப்படியான கட்டத்தில், அவர் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுவாராக இருந்தால், அமெரிக்கா என்கிற பெரும் பாதுகாப்பை அவர் இழங்க வேண்டி ஏற்படும். அத்தோடு, தன்னுடைய பிரஜை அல்லாத ஒருவரைத் தண்டிப்பது சார்ந்து, அமெரிக்கா இன்னும் இன்னும் கரிசனையை வெளிப்படுத்தும். 

அப்படியான கட்டத்தில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் மாத்திரமே, அவருக்கு நாட்டின் தலைவர் என்கிற ரீதியில் சர்வதேச தண்டனைச் சட்டங்களிலிருந்து பாதுகாப்பு (immunity) கிடைக்கும்.   

அவ்வாறானதொரு நிலையில், தென் இலங்கையின் வாக்குகளை மாத்திரம் கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் வென்றுவிடலாம் என்கிற கட்டத்துக்கு கோட்டாபய எவ்வாறு வந்தார் என்கிற கேள்வி எழுகின்றது.   

வீழ்ச்சிப் பாதையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி, சதிப்புரட்சிக்குப் பின்னர் குறிப்பிட்டளவு மக்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.   

அத்தோடு, சஜித்துக்கு என்றைக்கும் இல்லாதளவுக்கு அந்தக் கட்சிக்குள் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ரணிலேகூட அந்தக் கட்டத்துக்கு வந்திருக்கின்றார். அப்படியான நிலையில், தென் இலங்கையில் சஜித்துக்கு இருக்கும் ஆதரவுத்தளத்தை மீறியும் தமிழ்,  முஸ்லிம் மக்களின் வாக்குகளை மீறியும் வெற்றிபெற்றுவிடலாம் என்று கோட்டாபய நினைக்கிறாரா? அப்படியானால், அது அசாத்தியமான ஒன்றுதான்.  

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சதிப்புரட்சியின்-தோல்வியில்-கோட்டாபயவின்-எழுச்சி/91-228061

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.