Jump to content

கென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி

கென்யாவின்  தலைநகர் நைரோபியில் இஸ்லாமிய தீவிரவாதிகள்  ஹோட்டலொன்றின் மீது   மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க பிரஜையொருவர் உட்பட 15ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கென்யாவை உலுக்கியுள்ள இந்த தாக்குதலிற்கு அல் சகாப் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

கென்ய தலைநகரில் உள்ள டியுசுட்டி 2 என்ற கட்டிட வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறிப்பிட்ட வளாகத்தில் ஹோட்டல்கள் உட்பட பல வணிகவளாகங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

 மூன்று மணிக்கு இந்த ஹோட்டல் மீது தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.

kenya4.jpg

குறிப்பிட்ட ஹோட்டல் அமைந்திருந்த பகுதியிலிருந்து துப்பாக்கிவேட்டுகளையும் குண்டு சத்தங்களையும் கேட்க முடிந்ததாகவும் பின்னர் அதன் பின்னர் பொலிஸாரும் மருத்துவ பணியாளர்களும் அப்பகுதிக்கு விரைந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஹோட்டல் பணியாளர்கள் மற்றும்  அந்த பகுதியில் உள்ள அலுவலகங்கள் வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள் தப்பியோடத்தொடங்கினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இரண்டு கார்கள் மிகவேகமாக ஹோட்டலை நோக்கி சென்றன அதில் ஒரு காரை ஹோட்டல் வாசலை உடைப்பதற்கு தீவிரவாதிகள் பயன்படுத்தினர் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் ஆயுதாரிகள் ஹோட்டலின் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் ஹோட்டலிற்குள் நுழைந்துள்ளனர்.

 

முதலில் அவர்கள் தாய்லாந்து உணவுவிடுதியில் காணப்பட்ட வங்கிகளையும் உணவகங்களையும் இலக்குவைத்துள்ளனர்

பாரிய சத்தமொன்றையும் மக்கள் அலறுவதையும் கேட்டேன் என அந்த உணவுவிடுதியில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்துள்ளார். நான் அடித்தளத்தின் ஊடாக  வெளியேறினேன் என அவர் தெரிவித்த்துள்ளார்.

நான் உயிருடன் இருக்கின்றேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை பாரிய சத்தம் கேட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் இராணுவசீருடையில் காணப்பட்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்

இதன் பின்னர் படையினருக்கும் தீவிரவாதிகளிறகும் இடையில் பல மணிநேரம் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது

எரிந்துகொண்டுள்ள பல கார்களில் இருந்து கரும்புகைமண்டலம் வெளியாகிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

kenya5.jpg

தற்போது கென்ய படையினர் அந்த ஹோட்டலை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

 

http://www.virakesari.lk/article/48137

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.