Jump to content

புலிகளை போற்றும் பட்டங்கள் வல்வை வான்வெளியில் பறந்தன…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை போற்றும் பட்டங்கள் வல்வை வான்வெளியில் பறந்தன…

January 15, 2019

 

 

 

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடையை ஒத்த நிறத்தில் ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்த கூடியவாறான டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வல்வை மண்ணில் பறக்கவிடப்பட்டது.அந்த பட்டம் வானிலே பறந்த போது கூடி இருந்த பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது.

அதன் போது வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் “செய் அல்லது செத்துமடி ” எனும் வாசகத்துடன் அங்கயற்கண்ணி (பெண் கடற்கரும்புலி) என பெயர் பொறிக்கப்பட்ட படகு, சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்ட யுத்த டாங்கி, இராட்ச எறும்பு , தையல் இயந்திரத்தில் தைக்கும் பெண் , சமயலறை, விளையாட்டு மைதானம் போன்ற வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் ஏற்றப்பட்டன.

IMG_5133.jpg?resize=800%2C600

1-4.jpg?resize=800%2C6002.jpg?resize=800%2C6003.jpg?resize=800%2C6004.jpg?resize=800%2C600

IMG_5139.jpg?resize=800%2C600IMG_5211.jpg?resize=800%2C600IMG_5301.jpg?resize=800%2C516

http://globaltamilnews.net/2019/110069/

Link to comment
Share on other sites

திருக்கோயில் கடற்கரையில் ஆர்ப்பரிப்பு! வான் பரப்பை அலங்கரித்த பட்டங்கள்!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை திருக்கோவில் பிரதேசத்தில் பட்டம் விடும் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வு திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையில் நி.பிரசாந்தன் ஆசிரியர் தலைமையில் மக்கள் செயல் கழகம் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இப்பட்டம் விடும் போட்டிக்காக அன்னப்பட்டம், வீட்டுப்பட்டம், மயில்பட்டம், கழுகுப்பட்டம், சக்கரம் மற்றும் முக்கோணப் பட்டங்கள் போன்ற அழகிய பட்டங்கள் பறக்கவிடப்பட்டதுடன் இளைஞர்கள், சிறுவர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் பட்டம் விடும் போட்டியில் கலந்து கொண்டு தங்களின் பட்டங்களை உயரப் பறக்கவிட்டு மகிழ்ச்சி கொண்டாடத்தில் திழைத்திருந்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இப் பட்டம் விடும் போட்டியில் முதலாம் பரிசினை அழகு பட்டத்திற்காக வீட்டுப் பட்டமும், இரண்டாம் பரிசினை உயரப் பறந்த பட்டத்திற்காக கழுகு பட்டமும், மூன்றாம் பரிசினை நீண்ட நேரம் பறந்த பட்டத்திற்கும் ஆறுதல் பரிசாக அன்னம் மற்றும் நட்சத்திரப் பட்டங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இப் பட்டம் விடும் விழாவானது கடந்த வருடம் தைப்பொங்கல் தினத்தில் பிரதேச இளைஞர்களால் முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்ததுடன் தைப்பொங்கல் தினத்தில் மாலை வேளையில் கடற்கரையில் இவ்வாறான விடும் போட்டி இடம்பெறுவதானது பிரதேசத்தில் சிறுவர்கள் உட்பட் பெரியவர்களின் மனதில் மகிழ்சியை ஏற்படுத்தும் விழாவாகவும் பட்டம் விடும் விழா வரவேற்பினை பெற்று வருகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/112495

Link to comment
Share on other sites

வல்லை வானில் வினோத சமையலறை , புஷ்பக விமானம் , இராணுவ பீரங்கி , எறும்பு , ஊஞ்சல் , கல் உடைக்கும் இயந்திரம் , பறக்கும் கமரா (ட்ரோன்) படகும் மீனவர்களும் , நவீன செய்மதி என வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட 84 பட்டங்கள் ஏற்றப்பட்டன.

அதில் முதலாமிடத்தை ம. பிரசாந்த் வடிவமைத்த வினோத சமையலறை பட்டமும் , இரண்டாமிடத்தை த. தயாளன் வடிவமைத்த ராதையும் , புஷ்பக விமானமும் பட்டமும் , மூன்றாமிடத்தை ஸ்ரீ. நிரோசன் வடிவமைத்த விண் பீரங்கி பட்டமும் பெற்றுக்கொண்டன.

Link to comment
Share on other sites

மக்களுக்கு உண்மையாக இருந்து ஒரு அரணாக இருந்தவர்களை எப்படி மறப்பது ... இன்றைய இளையவர்களின் திறனில் அது தெரிகிறது ......

Link to comment
Share on other sites

On 1/16/2019 at 9:42 PM, போல் said:

 

வல்வையில் பட்டமேற்றும் போட்டி ஒவ்வொரு வருடமும் மேன்மேலும் சிறப்புற்று வருகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபாதாசன் said:

மக்களுக்கு உண்மையாக இருந்து ஒரு அரணாக இருந்தவர்களை எப்படி மறப்பது ... இன்றைய இளையவர்களின் திறனில் அது தெரிகிறது ......

60.70 களிலேயே வல்வெட்டித்துறையை வீரம் செறிந்த மண் என கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.