Jump to content

ஒரே நேர்க்கோட்டில்... அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தà¯à®°à¯à®à¯à®à®°à¯à®à¯ நிலà¯:

இந்தியா முழுதும், ஒரே நேர்க்கோட்டில்... அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்!

சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது.

கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

பஞ்சபூத ஸ்தலம்:

நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்

ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்

காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

ஆயிரம் ஆண்டுகள் பழைமை: சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத்: இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

ஆயிரம் மைல்கள்: கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.

தீர்க்கரேகை நிலை:

1) கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)

2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)

3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)

4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)

5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)

6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)

7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)

😎 ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174)

கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/2016/kedarnath-rameswaram-ancient-siva-temples-on-straight-line/articlecontent-pf69355-011892.html

Link to comment
Share on other sites

சூரியன் பூமிய சுத்தல பூமி தான் சூரியன சுத்துது...

எப்படி கண்டு பிடிச்சோம் பாத்திங்களா...

முட்டா பய...

முடியுமா நம்ம கிட்ட, ஊருக்குள்ள நாங்களே பல பேருக்கு யோசன சொல்றவங்க... யாருகிட்ட...

Link to comment
Share on other sites

சுவாரஸ்யமான தகவல். விண்ணியலும் கணிதவியலும் கொண்டு இவ்வாறாக ஆலயங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிர்மாணித்துள்ளமை பெருமை.கலந்த வியப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் எல்லாம் கிட்டத்தட்ட நேர் கோட்டுக்கு வருமெல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகுலேஸ்வரம், கேதீச்சரம், முன்னேஸ்வரம் கிட்டதட்ட நேர்கோடு தானே?

Link to comment
Share on other sites

22 minutes ago, ஏராளன் said:

நகுலேஸ்வரம், கேதீச்சரம், முன்னேஸ்வரம் கிட்டதட்ட நேர்கோடு தானே?

இம் மூன்று தலங்களின் தீர்க்காம்சமும் 79 க்கும 80 க்கும் இடையில்தான் வருகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே கோட்டை அப்பிடியே மேல நீட்டினா இமயமலையிலை இருக்கிற கைலாசத்தை தொடும். சைவர்களின் நம்பிக்கையின்படி கைலாசமலை  முக்கியமானதாகும். இங்குதான் சிவன்  தோன்றியதாக  சைவசமயத்தவர்கள் நம்புகிறார்கள். மேலும் ஆராய்ந்து பார்த்தால் கோட்டின் தெற்கு திசையில் தான் பண்டைய காலத்தின் குமரிக்கண்டம் இருந்தது. அங்கும் பல சிவாலயங்கள் அதே கோட்டில் அமையுமாறு கட்டப்பட்டு பின்னர் அழிந்திருக்கலாம். இன்று கைலாச மலை சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபேத் நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது. அது இந்தியாவில் உள்ளதாக பலர் நம்புவது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vanangaamudi said:

 இங்குதான் சிவன்  தோன்றியதாக  சைவசமயத்தவர்கள் நம்புகிறார்கள். 

??

சிவலோகத்தில் இருந்து பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து உயிர்களுக்கும் அருள் புரியும் சிவபெருமானும் பார்வதி தேவியும் இவுலகத்தின் மிக உயர்ந்த மலையாகிய கைலாய மலையில் வீ ற்றிருந்தே பூலோகத்தில் வாழும் எமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அருள் புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. சிவனுக்கு தொண்டாற்றும், சிவகணங்களும், முனிவர்களும், சிவலோகத்தில் அவரது பாதாரவிந்தங்களில் வாழும் பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

22 hours ago, Nathamuni said:

??

சிவலோகத்தில் இருந்து பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து உயிர்களுக்கும் அருள் புரியும் சிவபெருமானும் பார்வதி தேவியும் இவுலகத்தின் மிக உயர்ந்த மலையாகிய கைலாய மலையில் வீ ற்றிருந்தே பூலோகத்தில் வாழும் எமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அருள் புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. சிவனுக்கு தொண்டாற்றும், சிவகணங்களும், முனிவர்களும், சிவலோகத்தில் அவரது பாதாரவிந்தங்களில் வாழும் பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளார்கள்.

 

சிவனுக்கு நாம் ஏன் தொண்டாற்ற வேண்டும். மனிதன் மனிதனாக மற்றயவர்களுக்கு  தீங்கு இழைக்காமல் முடிந்தால் மற்றயவர்களுக்கு உதவி செய்து  சட்டங்களை மதித்து இவ்வுலகில் சந்தோசமாக வாழ்ந்தாலே போதுமானது தானே.தனக்கு தொண்டாற்றியர்களுக்கு மட்டும் help பண்ணுவானாயின் சிவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் என்ன வித்தியாசம். 

Link to comment
Share on other sites

கட்டுரையில் குறிப்பிட்ட நேர்கோடு இதுதானா ?

tamilnadu-temple.png

 

On 1/19/2019 at 5:04 AM, சண்டமாருதன் said:

இம் மூன்று தலங்களின் தீர்க்காம்சமும் 79 க்கும 80 க்கும் இடையில்தான் வருகின்றது. 

79 இற்கும் 80 இற்கும் இடையிலான தூரம் கிட்டத்தட்ட 80 கிலோமீற்றர்கள்.

இந்த 3 தலங்களும் கிட்டத்தட்ட நேர்கோடுதான்.

Link to comment
Share on other sites

On 1/19/2019 at 2:57 AM, vanangaamudi said:

அதே கோட்டை அப்பிடியே மேல நீட்டினா இமயமலையிலை இருக்கிற கைலாசத்தை தொடும். சைவர்களின் நம்பிக்கையின்படி கைலாசமலை  முக்கியமானதாகும். இங்குதான் சிவன்  தோன்றியதாக  சைவசமயத்தவர்கள் நம்புகிறார்கள். மேலும் ஆராய்ந்து பார்த்தால் கோட்டின் தெற்கு திசையில் தான் பண்டைய காலத்தின் குமரிக்கண்டம் இருந்தது. அங்கும் பல சிவாலயங்கள் அதே கோட்டில் அமையுமாறு கட்டப்பட்டு பின்னர் அழிந்திருக்கலாம். இன்று கைலாச மலை சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபேத் நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது. அது இந்தியாவில் உள்ளதாக பலர் நம்புவது தவறு.

தமிழர்களுக்கான அதிராகம் மிக்க அரசும் அதன் கையில் தொல்லியல் ஆய்வும் வந்தால் எமது நம்பிக்கைகள் சார்ந்த ஏராளமான விசயங்கள் தலைகீழாக மாறும். தமிழர்களுக்கான ஒரு வரலாற்று வழித்தடம் ஆய்வு அடிப்படையில் ஏற்படும். அதுவரை நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிவதை வைத்து சிந்திக்கவேண்டியதுதான். நம்பிக்கைகள் ஏதோ ஒரு இடத்தில் உண்மைத் தன்மையை அடையும். அது எந்த இடம் என்பது தெரியவில்லை. 

தற்போதுள்ள இந்த ஆலயங்கள் ஒரு குறிப்பிட்ட அரசாட்சிக் காலத்தில் அதாவது சேரசோழ பாண்டியர் போன்ற மன்னர்கள் காலத்தில் தோன்றியிருக்க வாய்பில்லை மாறாக அதற்கு முற்பட்ட காலங்களில் கட்டடக் கலையில் படிப்படியாக அறிவை வளர்த்த சமூகம் இருந்திருக்கவேண்டும். உயரமான கோபுரங்களை கட்டுவதற்கு ஒரு தேவையும் இருந்திருக்கவேண்டும். கோபுரங்கள் அடிப்படையில் கடவுள் சமயங்களுக்காக கட்டப்பட்டதா இல்லை பின்னர் வந்த மன்னர் சமூகம் அதை கோயில்களாக மாற்றியதா என்பது சந்தேகத்துக்குரியது. கடல்நீர் உட்புகுதல், நீரால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தற்காக்கவே இவைகள் தோன்றிருக்கலாம். விதைதானியங்களை கோபுர உச்சியில் சேமித்துக் காப்பாற்றுவதே இதில் பிரதான கூறாக இருந்திருக்கலாம். மேலும் இன்று கடலால் மூழ்கடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட சமூகமே உயரமான கட்டடங்களை உருவாக்குவதற்கும் உயரமான மலைகளை நோக்கி நகர்ந்ததாகவும் இருக்கலாம். இச் சமூகத்தை வழிநடத்தியதில் தென்னாடுடைய சிவன் பிரதானமானவராக இருக்கலாம். 

நாகரநாகரீகம் தென்னகத்தில் இருந்து மொகஞ்சதாரோ கரப்பா நோக்கி நகர்ந்ததா இல்லை அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்ததா என்பதை கீழடி போன்ற பல இடங்களை தோண்டினால் தான் புரியும், ஆனால் விடமாட்டார்கள். எல்லாவற்றையும் இழுத்து மூடி ஆர்வமுள்ள தொல்லியல் ஆய்வாளர்களை இடமாற்றம் பணிமாற்றம் செய்வதிலேயே இந்திய அரசு முனைப்புடன் செயற்படுகின்றது. 

சங்ககால மதுரை தற்போதையை மதுரை அல்ல மாறாக  கீழடி என்பதுதான் சிலப்பதிகாரத்து இலக்கிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது. மேலும் காவிரிப் பும்பட்டிணம் புலம்பெயர் மக்கள் கூடிவாழ்ந்த இடம் என்பது என்னுமொரு பாடல். அவை வணிக ரீதியாக வாழ்ந்த மக்களாக இல்லை கடல் நீர் புகுந்த இடங்களில் இருந்து பெயர்ந்து வந்த மக்களா என்பது ஆய்வுக்குரியது.

புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்

 

 

 

 

Link to comment
Share on other sites

திரு பாலகிருஷ்ணன் அவர்களின் அருமையான பேச்சு அருமையானது. 

4 hours ago, சண்டமாருதன் said:

நாகரநாகரீகம் தென்னகத்தில் இருந்து மொகஞ்சதாரோ கரப்பா நோக்கி நகர்ந்ததா இல்லை அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்ததா என்பதை கீழடி போன்ற பல இடங்களை தோண்டினால் தான் புரியும், ஆனால் விடமாட்டார்கள். எல்லாவற்றையும் இழுத்து மூடி ஆர்வமுள்ள தொல்லியல் ஆய்வாளர்களை இடமாற்றம் பணிமாற்றம் செய்வதிலேயே இந்திய அரசு முனைப்புடன் செயற்படுகின்றது. 

 

மத்திய அரசு மட்டுமல்ல பொதுமக்களும் இதற்குப் பொறுப்பானவர்கள். நாம் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளது. அதற்கான ஆர்வம் மக்களிடமிருந்து வர வேண்டும். பொய்யான கதைகளிலும் மூட நம்பிக்கையிலும் மூழ்கியிருக்கும் சமுதாயம் எந்த ஒரு விடயத்தையும் ஆய்ந்து உண்மையை அறிந்துகொள்ள முற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.