Jump to content

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. திமிறி எழும் காளைகளை அடக்கி வரும் காளையர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாதà¯à®à®¾à®ªà¯à®ªà¯ பணி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. திமிறி எழும் காளைகளை அடக்கி வரும் காளையர்கள்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த போட்டிக்காகவே கடந்த 15 நாட்களாக காளைகள், மாடிபிடி வீரர்கள் பதிவு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவறை மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி இன்று பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக துவங்கியது.

மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

à®à®²à¯à®à¯à®à®°à¯ நà®à®°à®¾à®à®©à¯

636 காளைகள்:   இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 691 காளைகள், 594 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்று, இரண்டாம் சுற்று என சுற்றுக்கணக்கில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறும் காளைகளை அடைக்க வீரர்கள் படு உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

முன்னதாக, இவர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர்தான் மைதானத்துக்குள் இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இது வேறு எப்போதும் இல்லாத முதன் முதலாக செய்யப்படும் புதிய அம்சம் ஆகும்.

à®à®°à®µà®¾à®°à®®à¯

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாதவாறு மைதானத்தை சுற்றிலும்1095 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதைதவிர 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு, 5 அவசர உதவி ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவை தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளது.

போட்டியின் இறுதியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பைக், தங்க நாணயம், கட்டில், பீரோ, என பல பரிசுபொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாது பிற ஊர்களிலிருந்தும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். பாய்ந்துவரும் காளைகளை அடக்கும் காளையர்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வருவதால், அவனியாபுரமே அமர்க்களமாக உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/jallikkattu-even-madurai-avaniyapuram-338915.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. திமிறி எழும் காளைகளை அடக்கி வரும் காளையர்கள்

இந்த காளையை அடக்க முடியுமா?  :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜல்லிக்கட்டு  காணொளிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வீடியோ .

மதுரை: ஜல்லிக்கட்டில், ஒரு காளை மாட்டின் உரிமையாளர் பெயரை கேட்டதுமே, அத்தனை மாடுபிடி வீரர்களும், ஆளைவிடுங்கப்பா சாமி என ஒதுங்கிக் கொண்ட சுவாரஸ்ய நிகழ்வை பார்த்துள்ளீர்களா. இல்லையென்றால் இங்கே பாருங்கள்.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. இதில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டினரும் திரளாக பார்வையாளர்களாக பங்கேற்று ரசித்தனர். வீடியோ எடுத்து ஷேர் செய்து மகிழ்ந்தனர்.

சில காளைகள் காளையர்களால் அடக்கப்பட்டால், சில காளைகள் காளையர்களை பந்தாடி ஓடின. இப்படியாக, காளைகளுக்கும், காளையர்களுக்கும் நடுவே காலை முதலே, கடும் போட்டி நிலவியது. முன்னதாக அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் சிறப்பாக நடந்தேறியுள்ளன.

ஜல்லிக்கட்டு சிங்கம்

இதேபோலத்தான் மல்லம்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசலை திறந்ததும் வெளியே வந்தது அந்த காளை. கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். அது காளையில்லை. சிங்கம்! அப்படித்தான் சொல்ல வேண்டும். ஏன்னா, அந்த பெயரை கேட்டதுமே அரங்கமே அதிர்ந்தது. மாடுபிடி வீரர்கள் அத்தனை பேரும், புலியை பார்த்த மான்கள் போல ஓட்டம்பிடித்தனர்.

யார் அங்கே ?

தடுப்புகளின் மீது ஏறி நின்று கொண்டு, வாடிவாசலை நோக்கியபடி, இமை கொட்டாமல், அச்சத்தோடு பார்த்தபடியே இருந்தனர். கம்பீரமாக வெளியே வந்தது அந்த காளை. வந்ததும் பிற காளைகளை போல அது நேராக ஓடவில்லை. இங்கு யாரோ என்னை அடக்கனும்னு வந்தீங்களாமே.. யாருவே அது ? என்று மைண்ட் வாய்ஸ்சில் கேட்டபடி அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்ததே பார்க்கலாம். மாடுபிடி வீரர்களின் இதய துடிப்பு 18 பட்டிக்கும் லப்-டப் என்று கேட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

bull-tamers-ran-away-after-seeing-a-bull

ஓடாதீங்கப்பா

மேடையில் அமர்ந்தபடி மைக்கில் கமெண்டரி கொடுத்தவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஏம்ப்பா.. மாட்டக் கண்டா ஓடுறீங்களேப்பா.. மாடு பார்வையே சரியில்ல.. ஒரு பய கிரவுண்ட்ல இல்லை.. என்று ரன்னிங் கமெண்டரி கொடுத்தார். அவர் என்னதான், கிண்டல் செய்தாலும், மாடுபிடி வீரர்கள், தடுப்பை விட்டு இறங்குவதாக இல்லை.

மாடுதான் அவர்களை பிடித்தது

இதை பார்த்த வர்ணனையாளர், மாட்டை பிடித்தால் சைக்கிள் என்று அறிவித்தார். ம்ஹூம்.. பலனில்லை. ஆடி காரே கொடுத்தாலும் சரி, ஒருத்தரும், அசையமாட்டோம் என்பதை போல காணப்பட்டனர். ஆனால், காளை விடுவதாக இல்லை. என்னையா அடக்க வந்தீங்க என்று கேட்பதைபோல முறைத்து பார்த்ததோடு, தடுப்பின் மீது ஏறி நின்ற ஒரு வீரரின் பின்பக்கத்தை கொம்பால் குத்தி தூக்கிப்போட்டது.

பேரைக்கேட்டதும் அதிர்ந்த களம்

இது மாடு இல்லைப்பா.. பாயும் புலி என்ற முடிவுக்கு வந்த போட்டி ஏற்பாட்டாளர்கள், மாட்டின் உரிமையாளரே மாட்டை பிடித்துக்கொண்டு சென்றுவிடுங்கப்பா. உங்கள் காளை ஜெயித்துவிட்டது. களத்தைவிட்டும் போக மாட்டேங்குது என கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர். இதன்பிறகு காளை களத்தை விட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிறகே, காளையர்கள் களத்திற்குள் வந்தனர்.

அப்பேர்ப்பட்ட அந்த காளையின் உரிமையாளர் பெயர், மாத்தூர் பாலச்சந்திரன். இவரது பெயரை வர்ணனையாளர் கூறியதும்தான், காளையர்கள் தெறித்து ஓடிவிட்டனர்.

https://tamil.oneindia.com/news/madurai/bull-tamers-ran-away-after-seeing-bull-jallikattu-viral-video/articlecontent-pf348332-339024.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பேரைக்கேட்டதும் அதிர்ந்த களம்

இது மாடு இல்லைப்பா.. பாயும் புலி என்ற முடிவுக்கு வந்த போட்டி ஏற்பாட்டாளர்கள், மாட்டின் உரிமையாளரே மாட்டை பிடித்துக்கொண்டு சென்றுவிடுங்கப்பா. உங்கள் காளை ஜெயித்துவிட்டது. களத்தைவிட்டும் போக மாட்டேங்குது என கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர். இதன்பிறகு காளை களத்தை விட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிறகே, காளையர்கள் களத்திற்குள் வந்தனர்.

அப்பேர்ப்பட்ட அந்த காளையின் உரிமையாளர் பெயர், மாத்தூர் பாலச்சந்திரன். இவரது பெயரை வர்ணனையாளர் கூறியதும்தான், காளையர்கள் தெறித்து ஓடிவிட்டனர்.

அந்த மாடும்.... துறு துறு என்று, 360 பாகையில்  திரும்பிய படியே... நின்ற விதம், மிக அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அப்பேர்ப்பட்ட அந்த காளையின் உரிமையாளர் பெயர், மாத்தூர் பாலச்சந்திரன். இவரது பெயரை வர்ணனையாளர் கூறியதும்தான், காளையர்கள் தெறித்து ஓடிவிட்டனர்.

பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.

10 hours ago, தமிழ் சிறி said:

அந்த மாடும்.... துறு துறு என்று, 360 பாகையில்  திரும்பிய படியே... நின்ற விதம், மிக அழகு.

அதுதானே தெம்பிருந்தா யாராவது வாங்கடா பார்ப்பம் என்று சுழன்று கொண்டு நிற்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.

அதுதானே தெம்பிருந்தா யாராவது வாங்கடா பார்ப்பம் என்று சுழன்று கொண்டு நிற்குது.

ஈழப் பிரியன்  இந்த முறை, சில இடங்களில்  நடந்த ஜல்லிக் கட்டில் வென்றவர்களுக்கும், 
மாட்டு உரிமையாளர்களுக்கும்.... கார்  கூட, பரிசாக வழங்கினார்களாம்.
அப்படி ஒரு,  கார்... இந்த மாட்டின் மூலம்,  அதனை பயிற்றுவித்த  உரிமையாளருக்கு  கிடைத்திருந்தால் சந்தோசம்.
ஆனால்... அதனைப் பற்றிய,  செய்திகள் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

edappaty-720x450.png

கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு ஆரம்பம்

கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்மென்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், வேண்டுகோளுக்கமைய விராலிமலையில் பாரிய ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2000 மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கின்னஸ்-சாதனைக்கான-விரால/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களின்  மாடுபிடி வீரர்கள்.. பயிற்சியின் போது..    

 

 

Image may contain: 13 people, people smiling, text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.