Jump to content

தமிழீழக் கனவோடு, இருக்கக் கூடாது - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. நான் சொல்வது, வெளியே போகும் போது, கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான் உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ளும் புதிய அரசமைப்பு நிறைவேறலாம்.  அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றனவெனவும் அவர் கூறினார்.  “தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு, ஜனநாயக வழிமுறைகள் ஊடாக தீர்வும் தமிழ்த் தலைமையின் வகிபாகமும்” எனும் கருப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு நிகழ்வொன்று,யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று முன்தினம் (12) மாலை நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனநாயகம் ஊடாக எமது மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறமுடியாது என்று,  சிலர் கூறியிருந்தார்கள். ஜனநாயகம் இல்லாமல் வேறு எந்த வழியில் தீர்வைப் பெறமுடியுமென அவர்கள் நினைக்கின்றார்கள் தெரியவில்லை என்று கூறியதோடு, நாம் எல்லோரும், ஒரு தேசத்தில் இருக்கின்றோம். ஆனால், தேசம் என்ற சொல்லுக்கு, எந்த வரவிலக்கணமும் இல்லை. ஆகவே, இங்கு மக்கள் தான் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். ஆகவே, மக்களுக்கு எந்த வகையில் தீர்வைப் பெற்றுகொடுக்க வேண்டுமென்று ஆராய்ந்தால், அது ஜனநாயகத்தின் ஊடாக முடியுமென்றுக் கூறினார்.
 
ஒவ்வொரு காலத்துக்கும், ஒவ்வொரு தேவை இருந்தது. ஆயுதப் போராட்டம், அஹிம்சைப் போராட்டம் என்று பல வழிகள் ஊடாகத் தீர்வைப் பெறுவதற்கு, அந்தந்த காலங்களில் சந்தர்ப்பங்கள் தோன்றினவெனச் சுட்டிக்காட்டிய அவர், அதைத் தான் இப்போதும் பயன்படுத்துவோம் என்றால், அது முடியாத காரியமெனச் சுட்டிக்காட்டியதோடு, நாம் கடந்து வந்த காலங்களில் பெற்ற அனுபவங்களை வைத்துக்கொண்டு, பன்னாட்டின்  ஊடாக எமது தீர்வுகளை, பதில்களைப் பெற்றுகொள்வதற்கு  சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் அதனை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறினார்.
 
பன்னாடுகள் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. அதனை நாம் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் ஊடாகத் தீர்வைப் பெறவேண்டுமெனக் கூறிய சுமந்திரன் எம்.பி, ஊடகங்கள், இன்று மிக மோசமான அரசியலைச் செய்துகொண்டு இருப்பதாகவும் அவை, உணர்ச்சிகளை எழுப்பிவிட்டுச் செல்வதாகக் குற்றஞ்சாட்டியதோடு, புதிய அரசமைப்பில் என்ன விடயம் உள்ளதென்று தெரிந்துகொண்டு, அதை ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டுமென்றார்.
 
புதிய அரசமைப்பில், மாகாணங்களை இணைக்கும்  பொறிமுறை உண்டெனச் சொல்லப்பட்டது. அதனை ஒரு பத்திரிகை தவிர, வேறு எவரும் பிரசுரிக்கவில்லை. இந்த  “ஏக்கிய இராச்சிய” என்ற பதம், “ஒருமித்த நாடு” என்று தான்  பொருள்படுமெனக் கூறிக் கூறியே தான் சலித்துவிட்டதாகத் தெரிவித்த சுமந்திரன், ஆனால் அந்தப் பதம், “ஒற்றை ஆட்சி”யைத் தான் குறிக்கிறதென்று, ஒரு பரவல் கருத்து உள்ளதாகவும் புதிய அரசமைப்பில், “ஏக்கிய ராச்சிய” (ஒருமித்த நாடு) என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
 
“நாம் உண்மையைப் பேச வேண்டும். சிங்கள மக்களது மனங்களை வெல்ல வேண்டும். எங்களுக்கு உரியதைத் தான் நாம் கேட்க்கிறோம். நாடு பிரியமாட்டாது. மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாதென்று அவர்கள் தெரிந்துகொள்ளும் அளவுக்கு, நாம் நடந்துகொள்ள வேண்டும். நாடு பிளவுபடுவதை அவர்கள் விரும்பவில்லை.
 
“அரசியலில் எதுவும் நடக்கலாம். இது தான் நடக்கும் என்று சாத்திரம் சொல்வதைப் போன்று சொல்ல முடியாது. புதிய அரசமைப்பு வராதென்றுச் சொன்னார்கள். ஆனால், அதன் ஆரம்பம் நடந்துவிட்டது. புதிய அரசமைப்பு வந்தால், தமிழ் மக்களுக்கும் தீர்வு கிடைக்கும். அரசமைப்பு வரலாம், அதற்கான  சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.
 
“நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் பலம் எம்மிடம் உள்ளது. அதனை நாம் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளக் கூடாது. நாட்டில் இன்னமும் முழுமையாக ஆட்சி அமைக்கப்படைவில்லை. நேற்று முன்தினம் கூட  பிரதியமைச்சர்கள் சிலர் பதிவிப் பிரமாணம் செய்துகொண்டனர். தேசிய அரசாங்கமாக மாறும் நிலைப்பாடு அங்கு உள்ளது. புதிய அரசமைப்பு நிறைவேற, நாம் முயற்சிக்க முடியும். படிப்படியாகத் தான் முன்னேற முடியும். ஆனால் யாழ்ப்பாணத்தில், வைத்தால் குடுமி; எடுத்தால் மொட்டை என்ற நிலையுள்ளது. பன்னாடுகள் அனைத்தும் ஆதரவு தந்துள்ள நிலையில், எமது  சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, நல்ல தீர்வைப் பெற்றுகொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 
“இது விடயத்தில், மென் வலு கடைபிடிக்கப்பட வேண்டும். ஆயுதம் ஏந்தும் சூழல் வேண்டாம். எங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இங்கிருந்து எல்லோரும் புலம்பெயர்ந்தால், இங்கு வெறுமை தான் உண்டாகும்” என, சுமந்திரன் எம்.பி மேலும் கூறினார். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
January 14, 2019

Sumanthiran-2.jpg?zoom=1.210000026226043
புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. இப்படி நான் சொல்வதனால், வெளியே போகும் போது, கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான் உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு, ஜனநாயக வழிமுறைகள் ஊடாக தீர்வும் தமிழ்த் தலைமையின் வகிபாகமும்” எனும் கருப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு நிகழ்வொன்று,யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று முன்தினம் (12.01.19) மாலை நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ளும் புதிய அரசமைப்பு நிறைவேறலாம். அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றனவெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனநாயகம் ஊடாக எமது மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறமுடியாது என்று, சிலர் கூறியிருந்தார்கள். ஜனநாயகம் இல்லாமல் வேறு எந்த வழியில் தீர்வைப் பெறமுடியுமென அவர்கள் நினைக்கின்றார்கள் தெரியவில்லை என்று கூறியதோடு, நாம் எல்லோரும், ஒரு தேசத்தில் இருக்கின்றோம். ஆனால், தேசம் என்ற சொல்லுக்கு, எந்த வரவிலக்கணமும் இல்லை. ஆகவே, இங்கு மக்கள் தான் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். ஆகவே, மக்களுக்கு எந்த வகையில் தீர்வைப் பெற்றுகொடுக்க வேண்டுமென்று ஆராய்ந்தால், அது ஜனநாயகத்தின் ஊடாக முடியுமென்றும் கூறினார்.

ஒவ்வொரு காலத்துக்கும், ஒவ்வொரு தேவை இருந்தது. ஆயுதப் போராட்டம், அஹிம்சைப் போராட்டம் என்று பல வழிகள் ஊடாகத் தீர்வைப் பெறுவதற்கு, அந்தந்த காலங்களில் சந்தர்ப்பங்கள் தோன்றினவெனச் சுட்டிக்காட்டிய அவர், அதைத் தான் இப்போதும் பயன்படுத்துவோம் என்றால், அது முடியாத காரியமெனச் சுட்டிக்காட்டியதோடு, நாம் கடந்து வந்த காலங்களில் பெற்ற அனுபவங்களை வைத்துக்கொண்டு, பன்னாட்டின் ஊடாக எமது தீர்வுகளை, பதில்களைப் பெற்றுகொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் அதனை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறினார்.

பன்னாடுகள் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. அதனை நாம் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் ஊடாகத் தீர்வைப் பெறவேண்டுமெனக் கூறிய சுமந்திரன், ஊடகங்கள் இன்று மிக மோசமான அரசியலைச் செய்துகொண்டு இருப்பதாகவும் அவை, உணர்ச்சிகளை எழுப்பிவிட்டுச் செல்வதாகக் குற்றஞ்சாட்டியதோடு, புதிய அரசமைப்பில் என்ன விடயம் உள்ளதென்று தெரிந்துகொண்டு, அதை ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

புதிய அரசமைப்பில், மாகாணங்களை இணைக்கும் பொறிமுறை உண்டெனச் சொல்லப்பட்டது. அதனை ஒரு பத்திரிகை தவிர, வேறு எவரும் பிரசுரிக்கவில்லை. இந்த “ஏக்கிய இராச்சிய” என்ற பதம், “ஒருமித்த நாடு” என்று தான் பொருள்படுமெனக் கூறிக் கூறியே தான் சலித்துவிட்டதாகத் தெரிவித்த சுமந்திரன், ஆனால் அந்தப் பதம், “ஒற்றை ஆட்சி”யைத் தான் குறிக்கிறதென்று, ஒரு பரவல் கருத்து உள்ளதாகவும் புதிய அரசமைப்பில், “ஏக்கிய ராச்சிய” (ஒருமித்த நாடு) என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

“நாம் உண்மையைப் பேச வேண்டும். சிங்கள மக்களது மனங்களை வெல்ல வேண்டும். எங்களுக்கு உரியதைத் தான் நாம் கேட்க்கிறோம். நாடு பிரியமாட்டாது. மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாதென்று அவர்கள் தெரிந்துகொள்ளும் அளவுக்கு, நாம் நடந்துகொள்ள வேண்டும். நாடு பிளவுபடுவதை அவர்கள் விரும்பவில்லை.
“அரசியலில் எதுவும் நடக்கலாம். இது தான் நடக்கும் என்று சாத்திரம் சொல்வதைப் போன்று சொல்ல முடியாது. புதிய அரசமைப்பு வராதென்றுச் சொன்னார்கள். ஆனால், அதன் ஆரம்பம் நடந்துவிட்டது. புதிய அரசமைப்பு வந்தால், தமிழ் மக்களுக்கும் தீர்வு கிடைக்கும். அரசமைப்பு வரலாம், அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.

“நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் பலம் எம்மிடம் உள்ளது. அதனை நாம் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளக் கூடாது. நாட்டில் இன்னமும் முழுமையாக ஆட்சி அமைக்கப்படைவில்லை. நேற்று முன்தினம் கூட பிரதியமைச்சர்கள் சிலர் பதிவிப் பிரமாணம் செய்துகொண்டனர். தேசிய அரசாங்கமாக மாறும் நிலைப்பாடு அங்கு உள்ளது. புதிய அரசமைப்பு நிறைவேற, நாம் முயற்சிக்க முடியும். படிப்படியாகத் தான் முன்னேற முடியும். ஆனால் யாழ்ப்பாணத்தில், வைத்தால் குடுமி; எடுத்தால் மொட்டை என்ற நிலையுள்ளது. பன்னாடுகள் அனைத்தும் ஆதரவு தந்துள்ள நிலையில், எமது சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, நல்ல தீர்வைப் பெற்றுகொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

“இது விடயத்தில், மென் வலு கடைபிடிக்கப்பட வேண்டும். ஆயுதம் ஏந்தும் சூழல் வேண்டாம். எங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இங்கிருந்து எல்லோரும் புலம்பெயர்ந்தால், இங்கு வெறுமை தான் உண்டாகும்” என, சுமந்திரன் எம்.பி மேலும் கூறினார்.

http://globaltamilnews.net/2019/109903/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.