Jump to content

ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னத் முதல் இறைச்சி வரை - ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது?

1547356697-2982.jpg

ஐரோப்பாவின் இஸ்லாமியர்களும், யூதர்களும் இதற்கு முன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளைக் கொல்வதைப் பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. கோஷெர் மற்றும் ஹலால் மாமிசத்துக்கு உரிய நம்பிக்கைகள இது பாதிக்கிறது.

விலங்குகள் உரிமை இயக்கத்தினர் நீண்டகாலமாகவே இந்தச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் சுதந்திரத்துக்கான செயல் திட்டம் என்ற பெயரில் இது யூதர்களுக்கு விரோதமானது, இஸ்லாமியர்களுக்கு விரோதமானது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனியில் நாஜி ஆட்சிக் காலத்தில் விலங்குகளை உணர்வற்ற நிலைக்கு கொண்டு செல்லாமல் வெட்டக் கூடாது என்று தடை விதித்து 1933ல் இதேபோன்ற விவாதத்தை உருவாக்கினார் அடால்ஃப் ஹிட்லர்.
விலங்குகள் உரிமையும் மத சுதந்திரமும்

விலங்குகளை மாமிசத்துக்காக கொல்வதற்கு முன்னதாக அவற்றை உணர்வற்ற நிலைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய சட்டம் கூறுகிறது. இவ்வாறு செய்வதால் இறக்கும்போது அவை துயரப்படாமல் அல்லது வலியை உணராமல் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

விலங்குகளை கொல்வதற்கு முன்னால், அவற்றை அசைவற்ற நிலைக்கு அல்லது சுயநினைவற்ற நிலைக்கு கொண்டு செல்லும் நடைமுறைதான் , உணர்வற்ற நிலை எனப்படுகிறது.

ஆனால் மத வழக்கப்படி கொல்வதற்கு, ஒரே ஒரே முறை தொண்டையில் துல்லியமாக வெட்டிக் கொலை செய்வதைக் கட்டாயமாக்கும் நடைமுறைக்கு அந்த நாடுகள் விலக்கு அளிக்கலாம்.

விலங்குகள் இறக்கும்போது தேவையில்லாமல் துன்பத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்களுடை மத வழக்கத்தின்படி செய்வது வலி ஏற்படுத்தாத நடைமுறை என்று மதத் தலைவர்கள் கூறுகின்றனர்.

உடனடியாக மரணம் ஏற்படுகிறது என்றும் விலங்குகள் துயரப்படுவதைத் தடுக்கும் வகையில் பல நூற்றாண்டுகளாக இந்த உத்தி கையாளப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இரு தரப்பு வாதங்களுக்கு இடையில் சமன்பாட்டை ஏற்படுத்தும் வகையில், நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், சைப்ரஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள், மத சம்பிரதாய அடிப்படையிலான இறைச்சிக்கூடங்களுக்கு கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளன.

ஆஸ்திரியா, கிரீஸ் போன்ற நாடுகள், விலங்குகள் வெட்டப்பட்டதும் உணர்வற்ற நிலைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளன. பெல்ஜியத்தின் மூன்று பகுதிகளில் - பிளாண்டர்ஸ் மற்றும் வலோனியா - என்ற இரண்டு பகுதிகள், டென்மார்க், ஸ்வீடன், ஸ்லோவேனியா, நார்வே, ஐஸ்லாந்து நாடுகளுடன் இணைந்து, வெட்டுவதற்கு முன்னதாக உணர்வற்ற நிலைக்கு உட்படுத்த விலக்கு அளிக்காமல் உள்ளன.

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது மட்டும் மத சம்பிரதாய அடிப்படையில் ஐரோப்பாவின் யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களை ஒன்று சேர்க்கவில்லை. வேறு சில வட்டங்களிலும் இது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
 
சுன்னத் செய்வதும் குழந்தைகள் உரிமையும்

கடந்த ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் மருத்துவக் காரணங்களுக்காக அல்லாமல் சுன்னத் செய்வதற்குத் தடை செய்யும் மசோதா முன்மொழியப்பட்டு, கடும் எதிர்ப்பு காரணமாக ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் கைவிடப்பட்டது. யூதர்களும், இஸ்லாமியர்களும் சுன்னத் செய்து கொள்கிறார்கள்.

நான்கு வயது இஸ்லாமிய சிறுவனின் உடலில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்துவது, அவனுடைய மத நம்பிக்கைகளை முடிவு செய்யும் குழந்தைகள் உரிமையைப் பாதிக்கும் செயல் என்று நீதிமன்றம் கூறியதையடுத்து 2012ல் ஜெர்மனியில் சிறிது காலம் சுன்னத் தடை செய்யப்பட்டிருந்தது.

"மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத அளவுக்கு உடல் அமைப்பில் கடுமையான மாற்றம் செய்வதை பெற்றோருடைய உரிமைகளோ அல்லது மத சுதந்திரமோ நியாயப்படுத்த முடியாது," என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

அந்தத் தீர்ப்பு ஆறு மாதங்களில் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் தங்களுடைய நம்பிக்கைகளின்படியான செயல்பாட்டுக்குத் தடை விதிப்பதாக இருந்திருக்கும் என்று இஸ்லாமியர்களும், யூதர்களும் வாதங்களை முன்வைத்தனர்.
அரசியல் செயல் திட்டம்'

வலதுசாரி தேசியவாத கட்சிகள் இதுபோன்ற முயற்சிகளைப் பொதுவாக ஆதரிக்கின்றன என்ற உண்மை, இந்த சர்ச்சைகளுக்கு உள்ள அரசியல் கண்ணோட்டத்தைச் சேர்க்கிறது.

விலங்குகள் நல உரிமை மற்றும் குழந்தைகள் நல உரிமை ஆர்வலர்களின் ஆதரவைக் கருத்தில் கொண்டு, குடியேற்றத்துக்கு எதிரான நாட்டங்களுக்கு உதவும் வகையில் அரசியல்வாதிகள் வெற்றிகளைப் பெற முடியும்.

பெல்ஜியம் நாட்டில், பிளாண்டர்ஸ் பிராந்தியத்தில் தேசியவாத சார்புடைய விலங்குகள் நலத் துறை அமைச்சர் பென் வெயிட்ஸ்-ன் முயற்சியால் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

2017-ல் இந்த மசோதா பிராந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது,``பெருமைக்குரிய விலங்குகள் நல அமைச்சர், ஃபிளெமிஷ் (டச்சு மொழியின் ஃபிளெமிஷ் வட்டார வழக்கைப் பேசுபவர்) ஆக இருப்பதில் பெருமை'' என்று வெயிட்ஸ் ட்விட்டரில் பதிவு செய்தார்.

பெல்ஜியத்தில் 2014-ல் நடந்த நாஜிக்களுடன் இணைந்து செயல்பட்டவர் ஒருவரின் 90வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டபோது அவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

ஆண்ட்வெர்ப் பகுதியைச் சேர்ந்த ரப்பி யாக்கோவ் டேவிட் ஸ்ச்மஹல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ``ஜெர்மனியில் இந்தச் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட, இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய அதே சூழ்நிலைகளை இது கொண்டு வந்திருக்கிறது'' என்று கூறினார்:
 
களங்கம் ஏற்படுத்தும் முயற்சியா?

விலங்குகளைப் பாதுகாப்பதைவிட, சில மதக் குழுக்களுக்கு எதிராக களங்கம் ஏற்படுத்தும் மறைமுகமான முயற்சிதான் இந்தத் தடை உத்தரவு நடவடிக்கை என்று இஸ்லாமிய அமைப்புகளின் வழக்கறிஞர் ஜூஸ் ரோயட்ஸ், டைம்ஸ் இதழுக்குக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால், பெல்ஜிய விலங்குகள் உரிமைக் குழுவான Global Action in the Interest of Animals அமைப்பு, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ட்விட்டரில் மறுத்துள்ளது.

மத சம்பிரதாயப்படி விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்யும் வகையில் பெல்ஜியத்தின் சட்டம் உள்ளது என்பதையும் அந்தக் குழு நிராகரித்துள்ளது.

தொண்டையை அறுக்கும் போது - அந்த விலங்கு கொல்லப்படாமல் - மயக்கநிலைக்கு கொண்டு செல்லப்பட்டால் - அது ஏற்புடையது என்று கருதப்படும் மத சம்பிரதாயப்படி விலங்குகளைக் கொல்லும் நிகழ்வுகள் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விளக்கத்தை இஸ்லாமிய மற்றும் யூத மதத் தலைவர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஐரோப்பிய சட்டங்கள் மற்றும் மாண்புகளுடன் உரசலைக் கொண்ட மத சம்பிரதாயங்களில் விரிவான கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் வெற்றிபெற்று வரும் ஆர்வலர்களுக்கு இடையில், இந்த விவாதங்கள் சற்று குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன .

https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/similarities-between-jewish-and-european-muslims-119011300011_1.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.