Jump to content

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாத கையறு நிலையில் தொழிற்சங்கங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை  பெற்றுக்கொடுக்க முடியாத கையறு நிலையில் தொழிற்சங்கங்கள்

 

கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை, அவர்களது உழைப்பை கம்பனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசாங்கமும், அந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளிமார் சம்மேளனமும் சொகுசாகவே இருக்கின்றன. 

tea.jpg

ஆனால் இவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக தம்மையே உருக்கி உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தொடர்ந்தும் கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியானது. அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. ஒப்பந்தகாலம் நிறைவடைவதற்கு முன்னரே அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தும் கூட இன்று வரையில் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு காணப்படவில்லை. இரு வருடங்களுக்கொரு முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் அந்த காலப்பகுதியில் மேடையேற்றும் நாடகத்தின் தொடர்ச்சியையே நாம் தரிசித்துக்கொண்டிருக்கின்றோம்.  

2015 ஆம் ஆண்டு கைசாத்திடப்பட்டிருக்க வேண்டிய ஒப்பந்தம் இத்தடவையைப் போன்றே இழுத்தடிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் (சுமார் ஒன்றரை வருடம் தாமதமாக) கையெழுத்திடப்பட்டது. 1000 ரூபா அடிப்படை சம்பளம் உறுதியென அப்போதும் கூறிய தொழிற்சங்கங்கள் அதே பொய்யையே இன்றும் ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த  நாடகத்தில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்ரஸ் மற்றும் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் வடிவேல் சுரேஷ் தலைமையிலான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் வகிபாகமே பிரதானமாகக் காணப்படுகின்றது. 

ஆறுமுகன் தொண்டமான் கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக ஒக்டோபர் 25 ஆம் திகதி அறிவித்தார். அதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன பயன் என்பதே எமது கேள்வியாக இருந்தது. 

எனினும் ஜனாதிபதியின் திடீர் திருப்பமான தீர்மானங்களின் காரணமாக அது பிற்போடப்பட்டு 50 நாட்களே நிலவிய அரசாங்கத்தில் அமைச்சராகிக் கொண்டார். தொடர்ந்து வடிவேல் சுரேஷ், ' இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு பொருட்டில்லை. நான் மக்கள் சேவைக்காக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன்' என பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சரானார். இருவருக்கும் அமைச்சு, வாகனம் என அனைத்தும் கிடைத்தது. ஆனால் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கிடைக்கவில்லை. 

இதன் போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பழனி திகாம்பரம் ' ஆட்சிக்கு வந்ததும் 1000 ரூபா நிச்சயம்' எனக் கூறினார். அவர் மீண்டும் அமைச்சரானதும் ' கூட்டு ஒப்பந்த்தில் இருந்து வெளியேறாமல் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது' சுருதியை மாற்றிக் கொண்டார். ' அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் பெற்றுக்கொள்வதென்பது ஒரு போதும் சாத்தியமற்றது. அவ்வாறு வழங்கினால் அல்லது கம்பனிகளுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தால் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடையும்' என ஐக்கிய தேசிய கட்சிக்கே உரிய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை வெளிப்படுத்திய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கருத்துக்கு தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரு உறுப்பினர்களுமே பதிலளிக்காது மௌனம் காத்தது ஏன்?

tea001.jpg

தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் இவ்விடயத்தில் ஆமை வேகத்தில் செயற்பட்டாலும் தமது பெற்றோருக்காக நாடளாவிய ரீதியிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் கொழும்பில் ஒன்று திரண்டு பாரிய ' கருப்பு சட்டை ' போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களுக்கு பக்க பலமாக அமைந்தாலும் தொழிற்சங்கங்களுக்கோ கம்பனிகளுக்கோ பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் மலையகப்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தின் காரணமாக கம்பனிகள் பல மில்லியன் நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தும் விடாப்பிடியாக நின்று 1000 ரூபா சம்பளத்தை வழங்கப்போவதில்லை என்பதில் உறுதியாகவுள்ளன. 

வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், தாமத வேலை என பல்வேறு முறைகளில் தமது உரிமையான ஊதியத்திற்காக போராடிய மக்கள் தோல்வியே கண்டனர். அதாவது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு மக்களை தூண்டிய தொழிற்சங்கங்களே, அதனை கைவிடுமாறும் பணித்தன. ஜனாதிபதி கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வு வழங்குவார் என்பதை அதற்கு காரணமாகக் கூறினர். அனைத்து வகையிலும் போராடிய மலையகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தினையும் மேற்கொண்டிருந்தனர். ஐந்து நாட்களாக அவர்களுடைய போராட்டம் தொடர்ந்தும் அப்போதும் அரசாங்கமும் தொழிற்சங்கங்கங்களும் கண்டும் காணாமல் இருந்தன. 

எவ்வாறிருப்பினும் ஒவ்வொரு தடவையும் கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படும் போதும் ஏமாற்றப்படும் தொழிலாளர்கள் இம்முறையும் ஏமாற்றப்பட்டுள்ளனர். 1000 ரூபாய் உறுதி எனக் கூறிய தொழிற்சங்கங்கள் குறைந்தது 700 ரூபாவையேனும் பெற்றுக்கொடுப்போம் என தற்போது சமாளிப்பதிலிருந்தே 1000 ரூபாய் சாத்தியமில்லையென்பது தெளிவாகின்றது. சந்தா பணத்தை நிறுத்த வேண்டும் என அம்மக்களை தூண்டுபவர்கள் சிறந்தவொரு தொழிற்சங்கத்தில் அங்கத்துவத்தினை பெறுவதற்கு அல்லது புதியதொரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு அவர்களை வழிநடத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றுக்காரர்கள் எனத் தெரிந்தும் வேறு வழியின்றி அவர்களை நாடியிருப்தையாவது தவிர்க்க முடியும். 

 

http://www.virakesari.lk/article/48042

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.