Jump to content

மென்வலுவூடான அரசியல் உரிமையை பெறுவது எப்படி என்கிறார் சாணக்கியர்!


Recommended Posts

மென்வலுவூடான அரசியல் உரிமையை பெறுவது எப்படி என்கிறார் சாணக்கியர்!

 

மென்வலுவின் ஊடாக அரசியல் உரிமையைப் பெறுவது எவ்வாறு? புதிய அரசமைப்பு உருவாக்கவிடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறானதொரு மென்வலுவைப் பிரயோகிக்கின்றது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பெருந்திரளான கற்றறிந்த சமூகத்தினர், அரசியல் ஆர்வலர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மீது சிவில் சமூகப் பிரதிநிதிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சலனமின்றி விளக்கமளிக்கையிலேயே அவர் இவை தொடர்பிலும் கருத்துரைத்திருக்கின்றார்.

அவரது விளக்கம் வருமாறு:-

2-17.jpg

மென்வலு என்பது கத்தியின்றி, இரத்தமின்றி, சத்தமின்றி ஆற்றப்படுவது. மென்வலுவினாலே அரசியல் உருத்துக்களை எப்போது வெல்லலாம் என்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. எங்களுடைய கோரிக்கை நியாயமானதாக இருக்கவேண்டும். அது நியாயமானது என்று உலகம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இன்றைக்கு இலங்கைவாழ் தமிழ் மக்கள் உள்ளகமாகத் தமது சுயநிர்ணய உரிமையை நடப்பிப்பதற்கு உரித்துடையவர்கள் என்பதை உலகம் ஏற்றிருக்கின்றது. அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. அந்த நியாயமான கோரிக்கையை நாங்கள் ஜனநாயக வழியிலே பெற முயற்சிக்கின்றோம் என்பது காண்பிக்கப்படவேண்டும். ஜனநாயக வழியிலே அது கிடைக்காது என்று அழுத்தம் திருத்தமாக ஊடகவியலாளர் வித்தியாதரன் சொல்லிச் சென்றிருக்கின்றார்.

மென்வலுவை உபயோகித்து நாங்கள் இதைப் பெறுவதாக இருந்தால் ஆயுத பலத்தைக் காட்டவே கூடாது. அது மிகவும் முக்கியமான ஒரு நிபந்தனை. வன்முறை பிரயோகிக்கவே கூடாது. இரண்டையும் பாவித்துப் பெறுவது என்பது அது ஒரு காலகட்டம். ஓர் அழுத்தத்தைப் பிரயோகித்து பெறக்கூடிய உயரிய தீர்வைப் பெறுவது என்பது. அது ஒரு காலகட்டம். அதற்கான காலகட்டமும் இருந்தது. அப்படியான சந்தர்ப்பங்களும் வந்தன. அதை யார் தவறவிட்டார்கள் என்பது எங்கள் எல்லாருக்கும் தெரியும்.

மென்வலு ஊடக சிங்கள மக்கள் மனம் மாறவேண்டும். அவர்கள் எம்மை முதலில் நம்பவேண்டும். நாமும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் செயலாற்றவேண்டும். அவர்களாகவே எமது உரிமை வழங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கின்ற நிலைமையை ஏற்படுத்தவேண்டும்.

நான் கடந்த வருடம் 30 சிங்களக் கிராமங்களுக்குச் சென்று புதிய அரசமைப்பு தொடர்பாக சிங்களத்தில் பிரசாரம் செய்துள்ளேன். அதில் நான் அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றேன். நாடு பிளவுபடாது. உங்களுடைய உரிமைகள் எவற்றையும் நாம் பிடுங்கி எடுக்கவில்லை. எங்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளைத்தான் கோருகின்றோம். மத்தியில் ஜனாதிபதியிடம் குவிந்துள்ள உரிமையை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும். அவ்வளவே. சிங்கள மக்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

நாம் மட்டுமல்லர். வடக்கு – கிழக்கு தவிர்ந்த 7 மாகாணங்களின் முதலமைச்சர்கள்கூட நிறைவேற்று அதிகாரமுறைமை ஒழிக்கப்படவேண்டும், அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்படவேண்டும். ஆளுநர் என்ற ஒரு பதவி இருக்கவே கூடாது என்று ஒப்புதல் அளித்திருக்கின்றார்கள். அவ்வாறு ஒப்புதல் அளித்த முன்னாள் முதலமைச்சர் இறுதியில் ஜனாதிபதியால் ஆளுநராக நியமிக்கப்பட்டு பதவிகூட வகித்தார். அதுவேறு.

கலாநிதி சிவகுமார் சொன்னார், பிராந்தியங்களின் ஒன்றியம். அதைவிட சிறந்த தீர்வு இருந்திருக்குமா என்று? இல்லை. அதைவிட சிறந்த தீர்வு கிடையாது. ஆனால் அது நாடாளுமன்றத்துக்கு ஒரு நகல் வரைவாக – ஒரு சட்டமூலமாகக் கொண்டுவரப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை எதிர்த்தது. சிங்கள அரசை நாங்கள் குறைசொல்லலாமா? நாங்கள் சொல்கின்றோம் ஐக்கிய தேசியக் கட்சி நாடளுமன்றத்தில் அதை எதிர்த்தது என்று. அது உண்மை. முதலில் எங்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்கவேண்டாமா? நாங்கள் அதற்கு ஆதரவு கொடுத்தோமா என்று? நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கு ஒருவர் தவறாமல் வடக்கு – கிழக்கில் எல்லாருமே கின்றோம் அதைவிட சிறந்த தீர்வு கிடையாது என்று.

ஒஸ்லோ உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையில் சமஷ்டி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதிலிருந்து முதலில் விலகியவர்கள் யாவர்? இலங்கை அரசாங்கமா? இல்லையே!

இவ்வாறு எமது தீர்வைப் பெறுவதற்கு சிறப்பான சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால், அவற்றை நாங்களே தவறவிட்டுள்ளோம். நான் யாரையும் குறைகூறவில்லை. அந்தநேர சூழ்நிலை அவ்வாறே. இனி அவ்வாறான ஒரு தவறு இடம்பெறக்கூடாது.. – என்றார்.

http://www.newsuthanthiran.com/2019/01/13/மென்வலுவூடான-அரசியல்-உரி/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.