Jump to content

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேச சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் கூட்டமைப்பு தலைவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1547174834691.jpg

சு. கவின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்

 வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதையை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:-

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே கிழக்கு மாகாணத்தை எப்போதும் அணுகி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் குறித்து இவர்கள் கிஞ்சித்தும் சிந்திப்பவர்களாக இல்லை. சம்பந்தன் ஐயாவின் இருப்பிடமாக திருகோணமலை இருப்பினும்கூட அவரின் இருதயத்தில் வடக்குக்கு மாத்திரம் இடம் இருக்கின்றது என்பதை அவருடைய செயற்பாடுகள், செயலின்மைகள் ஆகியன மூலமாக மிக நீண்ட காலமாகவே அவதானித்து வந்திருக்க முடிகின்றது. தேர்தல் காலங்களில் மாத்திரம் கிழக்கு மாகாணத்துக்கு வந்து கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற பிற்பாடு இம்மக்களை கறிவேப்பிலைகளாக ஒதுக்கி தள்ளுகின்ற நடைமுறையைதான் இவர்களின் அரசியல் வழிமுறை கொண்டிருக்கின்றது. இதுவே ஆளுனர்கள் நியமனம் சம்பந்தப்பட்ட விடயத்திலும் நடந்தேறி உள்ளது.

வட மாகாண ஆளுனர் நியமனம் தொடர்பாக மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கறை செலுத்தி உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலையீடு காரணமாகவும்தான் வட மாகாண ஆளுனரை ஜனாதிபதி நியமிப்பதில் தாமதம் நேர்ந்து உள்ளது. இது தொடர்பாக சுமந்திரன் எம். பி போன்றவர்களின் கருத்துகள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளில் வெளியாகி உள்ளன. ஆனால்  கிழக்கு மாகாண ஆளுனர் நியமனம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைகள் அழுத்தம் கொடுத்ததாக தெரியவே இல்லை. இந்த இரட்டை வேடத்தை கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஆகவேதான் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் எவருக்கும் கிடையாது என்று அடித்து கூறுகின்றேன்.

எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுனர் பதவிகளுக்கு மிக பொருத்தமானவர்களையே அடையாளம் கண்டு நியமித்து உள்ளார் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நியமனம் பெற்று உள்ள முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களுக்குமான ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதியாக ஆளுனர் ஹிஸ்புல்லா செயற்படுவார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் எல்லா விடயங்களிலும் இன சமத்துவத்தை பேணி நடக்க வேண்டும் என்பது கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
Tharmi

http://www.aljazeeralanka.com/2019/01/blog-post_11.html

Link to comment
Share on other sites

Quote

ஆளுனராக நியமனம் பெற்று உள்ள முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களுக்குமான ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதியாக ஆளுனர் ஹிஸ்புல்லா செயற்படுவார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் எல்லா விடயங்களிலும் இன சமத்துவத்தை பேணி நடக்க வேண்டும் என்பது கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

கிஸ்புல்லாவின்  இனவாத பேச்சுக்களை கேட்காதது போல் என்னமா நடிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை பிடிச்சு தொங்காம, சந்திரிகா பக்கம் போங்கப்பா.

மகிந்தவை நம்பி, உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா எண்டு, அந்தாள் அல்லாடிக் கொண்டு நிக்குது.

பேசாம இருந்திருக்கலாம்..... இப்ப மக்கள் ஆதரவும் இல்லாமல், ஒரு அரசியல் கட்சி ஆதரவும் இல்லாமல் தோல்வியில் முடியப் போகுது அந்தாள் அரசியல் வாழ்வு. 

Link to comment
Share on other sites

 கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Iraivan said:

 கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்   🤣

அது சரி, கிருஸ்ணரிண்ட தாடி ஏன் இப்படி நிக்குது? ஆவேசம் வருற அளவுக்கு ஆடு கடிச்சிட்டுதோ?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் வேற ஊருக்குள்ள இருந்து ஊழையிட்டுக்கொண்டு திரியுது  ஆட்சிக்கு மாறி மாறி கூவி திரியுது  ஆனால் சொல்லுறதிலயும் நியாயம் இருக்கு 

கூட்டமைப்பு  கிழக்கு மக்களை வைத்து நல்லா செய்யுது tw_cold_sweat:

Link to comment
Share on other sites

காரைதீவு கிருஸ்ணமூர்த்தியார் கதைத்துக்கொண்டிருப்பதற்கு முன்பிருந்தே, மற்றப்பக்கத்தால் காக்கா காரைதீவை கொத்ததொடங்கீட்டுது!  இருக்கிறதை எண்டாலும் நல்லவர் கிஸ்புல்லாவிடமிருந்து காப்பாற்றட்டும்!

தமிழர் கூத்தமைப்பு கிழக்கை கைவிட்டது என்பது உண்மையே! அத்தோடு இன்னொன்றையும் சேருங்கள், கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் கை விட்டு விட்டார்கள்! இன்று வரை வடக்கிற்கு என்று கூத்தமைப்பினர் செய்தவைகளை ஏதாவது????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nellaiyan said:

காரைதீவு கிருஸ்ணமூர்த்தியார் கதைத்துக்கொண்டிருப்பதற்கு முன்பிருந்தே, மற்றப்பக்கத்தால் காக்கா காரைதீவை கொத்ததொடங்கீட்டுது!  இருக்கிறதை எண்டாலும் நல்லவர் கிஸ்புல்லாவிடமிருந்து காப்பாற்றட்டும்!

தமிழர் கூத்தமைப்பு கிழக்கை கைவிட்டது என்பது உண்மையே! அத்தோடு இன்னொன்றையும் சேருங்கள், கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் கை விட்டு விட்டார்கள்! இன்று வரை வடக்கிற்கு என்று கூத்தமைப்பினர் செய்தவைகளை ஏதாவது????????

அப்படி ஒன்றும் பெரிசா இல்லையே  ஆனால் காரைதீவை கைப்பற்ற முடியாது ஐயா நானும் அந்த ஊரான் தான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி ஒன்றும் பெரிசா இல்லையே  ஆனால் காரைதீவை கைப்பற்ற முடியாது ஐயா நானும் அந்த ஊரான் தான் :)

அப்படி சொல்லேலாது.

எங்கண்ட முனிவர் ஒருத்தர், இப்ப ஆசிரமத்தை விட்டுட்டு வந்து, தனிய நிக்கிறார் கொஞ்ச நாளில, தனியல்லா எண்டு நிக்கப்போறார்... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அப்படி சொல்லேலாது.

எங்கண்ட முனிவர் ஒருத்தர், இப்ப ஆசிரமத்தை விட்டுட்டு வந்து, தனிய நிக்கிறார் கொஞ்ச நாளில, தனியல்லா எண்டு நிக்கப்போறார்... 😜

ஏன்யா இப்படி :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன்யா இப்படி :):)

அல்லாண்ட அருள் அப்படி. 

ஆளுக்கு 10 இலட்சம் கிடைக்குதாமே.   :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.