Jump to content

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தது உண்மையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தது உண்மையா? #BBCFactCheck

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 
ஜஸ்டின் ட்ரூடோGetty Images ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகம் முழுவதுமுள்ள தமிழ் மொழி பேசும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக கூறி சமூக ஊடகங்களிலும், சில செய்தித் தொலைக்காட்சிகளிலும் அவர் பேசும் காணொளிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மலேசியா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், மியான்மர், அமெரிக்காவுக்கு அடுத்து கனடாவில் அதிகளவில் வசித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்களை விட, இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது அங்கிருந்து அகதிகளாக சென்ற ஈழத் தமிழர்களே கனடாவில் பெருமளவில் வசித்து வருகின்றனர். 

அடிப்படையில் பல்வேறு நாடுகளையும், மொழிகளையும், கலாசாரத்தையும் கொண்டவர்கள் வசிக்கும் நாடாக விளங்கும் "கனடாவை சேர்ந்த தமிழர்கள், அந்நாட்டிற்கு செய்த பங்களிப்பையும், தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை போற்றும் வகையிலும், எதிர்கால கனேடிய சந்ததியினருக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதும் 'தமிழ் பாரம்பரிய மாதமாக' கொண்டாடப்படும் என்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 

பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோTwitter பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோ

அதைத்தொடர்ந்து, கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் டொராண்டோ மட்டுமின்றி கனடா முழுவதும் அந்நாட்டு அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் தமிழ் பாரம்பரிய மாதம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், உண்மையிலேயே இந்தாண்டு ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தாரா என்பதை பிபிசி தமிழ் ஆராய்ந்தது. 

தனது சமூக ஊடக பக்கங்களின் மூலமாக இதுபோன்ற வாழ்த்துக்களை தெரிவிப்பதையே கடந்த காலங்களில் ஜஸ்டின் வழக்கமாக கொண்டுள்ளார். எனவே, அவரது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை ஆராய்ந்ததில் இந்தாண்டு இன்றைய தேதிவரை அவர் பொங்கல் குறித்து எவ்வித பதிவுகளையும் இடவில்லை என்பது தெளிவாகிறது.

அப்படியென்றால், தற்போது இணையத்திலும், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளிலும் வலம் வந்துகொண்டிருக்கும் காணொளிகள் எங்கிருந்து வந்தன என்ற கோணத்தில் ஆராய்ந்தபோது, ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்துக்கள் கூறியதாக இருவேறு காணொளிகள் பரப்பப்பட்டு வருவது தெரியவந்தது.

இந்த இருவேறு காணொளிகளிலும், வேறுபட்ட விடயங்கள் குறித்து பேசும் அவர் இறுதியில் தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். அதாவது, முதலாவது காணொளியில், தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை கொண்டாடுவதற்குரிய அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதையும், கனடாவின் 150வது ஆண்டு விழாவையும் மையாக கொண்டு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் ஒருசேர பேசுகிறார். இந்த காணொளி அவரது சமூக ஊடக பக்கங்களில் 2017ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காணொளி:

இரண்டாவது காணொளியில், பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்தும், கனேடிய தமிழர்கள் அந்நாட்டிற்கு அளித்து வரும் பங்களிப்பை போற்றும் வகையிலும் அவரது பேச்சு அமைந்துள்ளது. இந்த காணொளி ஜஸ்டினின் சமூக ஊடக பக்கங்களில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது. 

2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காணொளி:

எனவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து கூறியதாக பரப்பப்பட்டு வரும் இரண்டு காணொளிகளும் அடிப்படையில் உண்மையானதாக இருந்தாலும், அது இந்தாண்டு வெளியிடப்படவில்லை என்பதால், எதிர்வரும் பொங்கலுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்ததாக பகிரப்படும் செய்தி போலியானது என்பது உறுதியாகிறது.

 

 

https://www.bbc.com/tamil/india-46848956

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூரியூப்பில எதையாவது போட்டு ஆக்களை பார்க்க வைத்து, பார்வையாளர் தொகை 2000 தாண்டினால் விளம்பர வருமானம் வரும். மாதம் 100 டாலர் வந்தாலே இந்தியாவில் பெரிய பணம். 

இதனால் பல போலி வீடியோக்கள் வருகின்றன.

ஆச்சரியப்பட வைக்கும் விசயம் பிபிசி தமிழ் இதை ஆராய்வது தான். வேற வேலை இல்லை போல கிடக்குது.

Link to comment
Share on other sites

பிபிசி பல காலமாகவே(போர்க்காலம் உட்பட) நாசுக்காகவும் , நேரடியாகவும் தமிழர்களை குழப்பியும், தமிழர்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறது. ஜஸ்டின் ருடோவில் இருந்து போல் மாட்டின் வரை தமிழர் பெருநாட் களில் இருந்து யூத பெருநாட் கள் வரை வாழ்த்தி விட்டு போகிறார்கள். இதில் பிபிசியின் ஆராட்சி  எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

உதாரணமாக தமிழ் நாட்டின் ஒரு தொகுதியில் இம்மாதம் தேர்த்தல் நடக்கவிருப்பதாகவும் அதில் பங்கு பற்றும் கட்சிகள் வேட்பாளர்கள் பற்றி ஒரு பதிவை பிபிசி இட்டது. அதில் மிகதந்திரமாக நாம்தமிழர் கட்சியின் வேட்பாளரையும் கட்சியையும் தவற விட்டது வேணுமென்றே தவிர வேறென்னவாக இருக்கும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

யூரியூப்பில எதையாவது போட்டு ஆக்களை பார்க்க வைத்து, பார்வையாளர் தொகை 2000 தாண்டினால் விளம்பர வருமானம் வரும். மாதம் 100 டாலர் வந்தாலே இந்தியாவில் பெரிய பணம். 

இதனால் பல போலி வீடியோக்கள் வருகின்றன.

ஆச்சரியப்பட வைக்கும் விசயம் பிபிசி தமிழ் இதை ஆராய்வது தான். வேற வேலை இல்லை போல கிடக்குது.

7 hours ago, nunavilan said:

பிபிசி பல காலமாகவே(போர்க்காலம் உட்பட) நாசுக்காகவும் , நேரடியாகவும் தமிழர்களை குழப்பியும், தமிழர்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறது. ஜஸ்டின் ருடோவில் இருந்து போல் மாட்டின் வரை தமிழர் பெருநாட் களில் இருந்து யூத பெருநாட் கள் வரை வாழ்த்தி விட்டு போகிறார்கள். இதில் பிபிசியின் ஆராட்சி  எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

உதாரணமாக தமிழ் நாட்டின் ஒரு தொகுதியில் இம்மாதம் தேர்த்தல் நடக்கவிருப்பதாகவும் அதில் பங்கு பற்றும் கட்சிகள் வேட்பாளர்கள் பற்றி ஒரு பதிவை பிபிசி இட்டது. அதில் மிகதந்திரமாக நாம்தமிழர் கட்சியின் வேட்பாளரையும் கட்சியையும் தவற விட்டது வேணுமென்றே தவிர வேறென்னவாக இருக்கும்??

என்றைக்கு  தமிழ்  பிபிசி கைமாறி சென்றதோ அன்றிலிருந்து  அங்கு தமிழ்மணமேயில்லை.

பழைய  தமிழ் பிபிசியை கேட்டு வாழ்ந்தவர்களுக்கு அதன் சொர்க்கம் ஆனந்தம் தெரியும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

யூரியூப்பில எதையாவது போட்டு ஆக்களை பார்க்க வைத்து, பார்வையாளர் தொகை 2000 தாண்டினால் விளம்பர வருமானம் வரும். மாதம் 100 டாலர் வந்தாலே இந்தியாவில் பெரிய பணம். 

இதனால் பல போலி வீடியோக்கள் வருகின்றன.

ஆச்சரியப்பட வைக்கும் விசயம் பிபிசி தமிழ் இதை ஆராய்வது தான். வேற வேலை இல்லை போல கிடக்குது.

பிரபல ஓட்டக்காரர் உசைன் போல்டை இவர் பச்சை தமிழர் என்று சொல்லி செயார் பண்ண சொல்லி ஒரு கூட்டமே செயார் பண்ணி திரியுது  

நீங்கள் உன்மையான மான தன்மானத்தமிழனாக இருந்தால் செயார் பண்ணுங்கள் என்று சொல்லி :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.