Jump to content

அழகியல் மீதான வன்முறை – டராண்டினோவின் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை – கோ. கமலக்கண்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழகியல் மீதான வன்முறை – டராண்டினோவின் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை – கோ. கமலக்கண்ணன்

1

படைப்புதிறனை உளவியல் துறையில் ‘விரிசிந்தனையின் வழியே புதியதாகவும் பயனுள்ளதாகவும் எதையேனும் உருவாக்கும் இயல்பு’ என்று கில்ஃபோர்ட் வரையறுக்கிறார். சினிமாவில் புதியது எப்படி உருவாக்கப்பட முடியும், புதியது என்பது கதைகளின் வழியே, கதை மாந்தர்களின் வழியே, இயக்கத்தைக் கொண்டு உணர்வுகளைக் கடத்துவதன் வழியே, தொழில்நுட்பங்களின் நிரல் நிரை மாற்றங்களைக் கொண்டு உருவாகும் எண்ணிலா பார்வையின் வழியே, நிலங்களின் வழியே என ஈறேயில்லாத வாய்ப்புகளைக் கொண்டு புதுமை செய்ய முடியும். சிறந்த திரைப்படங்களாகக் கருதப்படும் எவற்றிலும் உள்ள அழகியலும் யதார்த்தக் கூறுகளும் கூட ஒரு வித புதுமையைத் தருமேயாயின் மட்டுமே அது படைப்புத்திறன் என்று கருதத்தக்கது.

இரண்டாம் கூறு பயன்பாடு. ஜுரத்திற்குப் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரை ஒரு தொலைக்காட்சி அளவிற்குப் பெரியதாக இருந்தால் அதை நோயாளியை விழுங்க வைத்து மருத்துவம் செய்ய முடியாமல் போய்விடும். அது போலவே எத்தனை புதிய களம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் பயனின்றி ஒரு நல்ல திரைப்படமாக அது மாறிவிடாது. திரைப்படத்தின் முதன்மைப் பயன் பார்வையாளனை ஊடுருவி, அக எதிரொளிகளை உருவாக்கி உணர்வுகளைக் கடத்தும் போதே, மெல்ல வேறொருவராக்கி அவருள் சற்றேனும் தங்கிக் கொள்ளும் தன்மையே திரைப்படத்தின் பயன். காலத்தின் துலாக்கோலில் இவ்விரண்டும் கொண்ட திரைப்படங்களே படைப்புகளாகவும், இவற்றில் ஏதோவொன்று இல்லாதிருப்பினும் அவை வெற்றுக் கூச்சல்களே எனவும் கொள்ளப்படும். அந்த பயன்பாட்டை உணரச் செய்யவே அழகியலும் யதார்த்தமும் தேவைப்படும். அவை கூடுதல் தடிகள்.

Mullbrand-agencia-marketing-digital-comu

“க்வெண்டின் டராண்டினோ ஒரு பிறவிக் கலைஞன். நம் காலத்தின் மாபெரும் கதைசொல்லி” – இதெல்லாம் அவரது தர வகைப்பாட்டின் அடிப்படையில் முன் வைத்து பொருத்திப் பார்த்து செய்யப்பட்ட முடிவுகளா அல்லது சரவெடியைத் தூக்கிப் போட்டு ஆட்டம் போடும் கொண்டாட்ட மனநிலையிலிருந்து சொல்லப்பட்ட முடிவுகளா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அவரது ஆளுமை பற்றி ரசிகப்பட்டாளத்திடம் வைக்கப்படும் கேள்விகள் எதுவும் தர்க்கரீதியான பதில்களைப் பெறப்போவதில்லை. டராண்டினோ என்னும் திரைமேதை (!) எப்படி உருவாக்கப்படுகிறார் என்ற கேள்விக்கும் எவரும் பதில் தரப்போவதில்லை. விமர்சனங்களும் அவர்மீது அள்ளி வீசப்படும் புகழுரைகளாகவே எஞ்சப்போகின்றன.

ஏன் டராண்டினோ சிறந்த இயக்குநர்? இந்த எளிமையான கேள்விக்கு நேரடியான பதிலும் எவரிடமிருந்தும் வரப்போவதில்லை. அதிகபட்சம் போனால், அவருக்கு ‘லாஜிக் இல்லா மேஜிக் நிபுணர்’ என்ற உரிமம் உண்டு, அதனால் அவர் எதையும் கதையாகச் சொல்லலாம் என்றோ, வெகுசன சினிமாவில் புரட்சி செய்தவர் என்றோ,  பதில் வரலாம். இது தன் மதக்கடவுள்கள் மீதும் கோட்பாடுகள் மீதும் கொண்ட்டிருக்கும் கண்கட்டிய பற்றின்பால் பேசும் அடியவரது மனநிலை மட்டுமே!

சினிமா பற்றிய தரமான ரசனையும், தொடர்ந்து தன் படிநிலைகளை முன்னகர்த்திக் கொள்ள முனையும் ரசிகன் இதே எளிமையான கேள்வியை தன் முன் வைத்து கவனிக்கும் போது, டராண்டினோ சாதாரண இயக்குநர் என்ற நிலையிலிருந்து மோசமான இயக்குநராக காலப்போக்கில் உருவெடுத்திருக்கிறார் என்பது புரியும். அதையும் விட கொடூரமானது அவரைச் சிறந்த நடிகர் / எழுத்தாளர் என்று முன்முடிவு கட்டி மதிப்பிடத் துவங்குவது.

இருப்பினும், ஒரு நேர்மையான விமர்சனத்தை முன்னெடுக்க வேண்டிய கடமையுணர்வில் பிசகுதல் கூடாதென்பதும் அத்தியாவசியமானதாய்ப் படுகிறது. அவருக்கிருக்கும் கோடான கோடி(!) ரசிகர்களின் பரபரப்பைப் பார்க்கும்போது, இதைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அதிக ரசிகர்கள் கொண்டிருப்பதாலேயே ஒருவர் உலகின் மகத்தான கலைஞராகி விடுகிறாரா என்ன? அசட்டைகளாலும், கேலிகளாலும் முன்னகரும் கலைஞர்களின் பீடம் அவர்களுக்குத் தரப்படாமல் போவதற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அதிலும் கடவுளர்களின் மிகை மதிப்பீட்டு கோட்பாடு தான் உள்ளாடுகிறது.

2

90களில் உருவாகி வந்த – உலகளாவிய முதன்மைப் படைப்பாளர்களைக் கணக்கில் கொள்ளாமல் விட்டு விட்டு – முக்கிய, வணிக வெற்றியும், சற்றே பெயரையும் பெற்றிருக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் என பரவலாக அறியப்படும் ஸ்பைக் லீ, ஜொனாதன் டெம்மி, டிம் பர்டன், சாம் மெண்டிஸ், வெஸ் ஆண்டர்சன், கோயன் சகோதரர்கள், கை ரிச்சி, ஓலிவர் ஸ்டோன், என நீளும் இப்பட்டியலில் எவருக்கும் டராண்டினோவின் ரசிகத்தொகையில் கால்வாசி கூட இல்லை. (ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமரூன் ஆகியோர் அதீத பிரபலமாக இருந்தாலும், அவர்களைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஒரு பட்டாளம் இல்லை).

படங்களின் தரங்களையும் அவற்றின் படைப்புத் திறனையும் வைத்துப் பார்த்தால், மேற்சொன்ன இயக்குநர்கள் அனைவரும் டராண்டினோவை விட ஏதோ ஒரு பரிமாணத்தில் முன்னிற்க கூடியவர்கள்தான். அவர்கள் கையாண்ட களங்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக இருந்திருக்கிறது. அவர்கள் மனித உணர்வுகளுக்கு சற்றேனும் மரியாதை செய்யும் படங்களையும், தருணங்களையும் தந்திருக்கிறார்கள்.  ஆம், ஸ்பைக் லீ கூடத்தான். படிப்படியாக ஏதேதோ சொல்லி மெல்ல புதிய கதைக் களங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், டராண்டினோ இன்னும் ஜிங்க் சா சிங் சா என நிறங்களைக் கடைவிரித்துக் கொண்டிருக்கிறார்.

3

முதலிரண்டு “தாறு மாறு தக்காளி சோறு படங்களான” (மன்னிக்கவும் இது ரசிகருடைய குரலில் சொல்லப்பட்டது) ரிசர்வாயர் டாக்ஸையும் பல்ப் ஃபிக்‌ஷனையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், டராண்டினோவின் படங்களிலேயே ஓரளவு நல்ல பக்குவத்துடன், நுட்பமான கதையாடலுடன், சிறுபிள்ளைத்தனமற்ற கதாபாத்திரங்களுடன் (அதிலும் ஒன்றிரண்டை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது) இருக்கும் ஒரே திரைப்படம் ‘ஜாக்கி ப்ரெளன்’ மட்டுமே. ஜாக்கி ப்ரெளனில் உருவாகி வந்திருக்கும் இயங்குதன்மையும், நிதானமாய் கதைசொல்லும் இயல்பும் மெல்ல பெருக்கப்பட்டு வெவ்வேறு அமேரிக்க வாழ்வின் நிஜங்களைப் பற்றித் தன் அடுத்தடுத்த படங்களில் முனைந்திருந்தால் டராண்டினோ வேறொங்கோ சென்றிருப்பார். ஆனால், அவர் ரசிகர்களின் கதை சொல்லியாயிற்றே. பின்னோக்கி நடந்தார். கதாபாத்திரங்களைப் பட்டியல் போட்டு கான்ட்ராஸ்ட் பொத்தான்களை அழுத்தத் தொடங்கினார். எழுத்தை ஒரு கணிதமாக்கி அதில் புலமை பெற்றார். இன்னும் சொல்லப்போனால், ஜாக்கி ப்ரெளன் படம் மட்டும்தான் டராண்டினோவின் மூளையிலிருந்து நேரடியாக உதிக்காத கதை. அதாவது, தன் சினிமா பயணத்தில் ஒரே ஒரு படத்தை மட்டுமே அவர் மற்றொருவருடைய (எல்மோர்ட் லியோனர்ட்) நாவலிலிருந்து தழுவி எடுத்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பு இது.

quentin-tarantino-1108x0-c-default-300x2

அதற்கடுத்து ’ப்ளாக் மாம்பா’ பரவச நாட்டியமிடும் ‘கில் பில்’, பெண்ணியத்தின் ஆழத்தை அலசும் ‘டெத் ப்ரூஃப்’, வரலாற்று புனைவு ‘இங்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ அதாவது, ஆங்கிலத்தில் எழுத்துப் பிழையுடன் கூடிய Inglorious Basterds (எங்கள் படமே பிழையானதுதான் என்பதன் குறியீடோ!), மேற்கத்திய வகைமை படங்களுக்கான நையாண்டி சித்திரம் ‘ஜாங்கோ அன்செயிண்ட்’ என தொடர்ந்து காவியங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். இதற்கெல்லாம் உச்சம் வைக்கும் விதமாக ‘தி ஹேட்ஃபுல் எய்ட்’. அதாவது, டராண்டினோவிற்குத்தான் கதையே தேவையில்லையே, அதனால் தனது எட்டாவது படத்திற்கு இப்படி ஒரு பெயர் வைக்கிறார். அதை வைத்ததுமே, செவ்வியல் படமான, தன் முதல் படத்திற்கு கூட இந்த பெயர் பொருந்துகிறதே என்று மெல்லிய புன்னகை அவருக்கு உருவாகிறது. அங்கிருந்து திரைக்கதை எழுதத் தொடங்குகிறார். அதில் குனியும் போது விசம் வைப்பது, குளிரில் கிச்சுகிச்சு மூட்டுவது, நாளை சாகப்போகும் கிழவனை வம்புக்கிழுத்து கொல்வது போன்ற திரையுலகம் காணாத காட்சிகளைக் கொண்டு நிரப்புகிறார். அந்தத் திரைக்கதை கூட இணையத்தில் கசிந்து விடுகிறது. அதையும் தாண்டி தன் ரசிகர்களை நம்பி இந்த படம் வெளியாகிறது. அவருக்கு இன்னுமொரு மகுடமாகிவிடுகிறது.

4

தன் இருபதுகளில் சினிமா கனவுகள் மீதான தன் பீறிடும் காதலை முன்வைப்பவர்கள் எவருக்கும் டராண்டினோ ஒரு தேவதூதனாக தோற்றமளிப்பது இயல்பே. காரணம், இருபதுகளில் எவருக்கும் உருவாகும் துறுதுறுப்பு. இளமையிலிருந்து அடுத்த நிலைக்குத் தாவிக்குதித்து விட உருவாகும் தவிப்பு. அதைக் கனவாக்கி உண்மை என்று சொல்லி, வழங்கப்படும் உளமயக்கு – சட்டைப் பட்டன் மாத்திரைகள் – டராண்டினோவிடம் கிடைக்கும்.

குழந்தைகளிடம் விளையாடும் போது, முகத்தை மறைத்து திடீரென காட்டிக் கோணல் மானலாகச் சிரித்தல் போதும். அவற்றைத் தன்பால் ஈர்த்துவிட முடியும். நீண்ட நேர கட்டமைப்பு அதற்குப் பிறகு முகத்திலறையும் நுட்பம் இதுதான் தந்திரம். இதில், திடுக்கிட்டு விழுபவர்கள் முதிரா இளைஞர்கள். பெரும்பாலான கடி சோக்குகள், டி.ஆரின் எதுகை மோனை கவிதைகள், பேய்க்கதைகள் அனைத்திற்கும் அடிநாதம் இதே உத்திதான். அதையே சினிமாவில் கையாண்டு வெற்றிகரமாகச் சில பத்தாண்டுகள் பிழைப்பு நடத்தி வருபவர்களில் முதன்மையானவர் டராண்டினோ. எதிர்பாராத திருப்பம் எங்கு வரும் என்று பரபரப்புடன் அமர்ந்து பார்க்கும் எவருக்கும் அது பிடிக்கும். ஆனால், அமைதியாக மானுடத்தின் கதையினை, நேர்மையின் பிராணச் சிக்கல்களை, உளவியல் நுணுக்கங்களை சொல்லி, பார்வையாளனுடன் உரையாடுவதென்பதே படைப்பாளருக்கு உண்மையான அழகு.

leonardo-dijango-300x172.jpg

கெட்ட வார்த்தைகளைப் படத்தில் பயன்படுத்துவதென்பது தவறானது அதற்கு சென்சார் வேண்டும் என்று கதறும் கலா கொலையர்களைப் போலவே, ‘F’, ‘N” வார்த்தைகளால் அபிஷேகம் செய்து அனுப்புவேன் என்று சொல்வதும் சினிமாவின் மீதான தாக்குதலே. அதைப் புரட்சி என்ற முத்திரையிட்டு அழைக்கும் ரசிகர்களிடம் பேசுவதில் ஆயாசமே மிஞ்சுகிறது. இதிலும், இளமையின் பீறிடும், முரளும் முரட்டுத்தனத்திற்கு வழங்கப்படும் தீனியே தூக்கலாக இருக்கிறது. இளைஞர்கள் டராண்டினோவின் படங்களைப் பார்த்துக் கெட்டுப் போகக்கூடாது என்று அறிவுரை வழங்கும் குரல் கேட்குமாயின், இது அவ்வாறான கூற்றில்லை என்பதை தெளிதாக்குகிறேன். காதைத் தீட்டிக் கொள்பவர்களுக்கு சொல்கிறேன் ‘ஆகவே கொலை செய்க’.

5

திரைப்படம் என்பது விழியூடகம் என்பது அரிச்சுவடி மாணவனும் அறிந்ததே. அத்தனை சிறந்த படைப்பாளிகளும் அதைத் தன் மாணவப் பருவத்திலிருந்து புரிந்தே வைத்திருந்திருக்கிறார்கள். அதையே முன்னகர்த்திச் செல்லவும் தலைப்பட்டார்கள். அவர்களது கடைசிப் புள்ளியிலிருந்து முன்னகர்ந்து செல்ல வேண்டியதே அடுத்த தலைமுறையின் இலக்காக இருக்க வேண்டும். குப்ரிக் விட்ட இடத்தில் பி.டி. ஆண்டர்சனும், புனுவல் முடித்த ஓட்டத்தை யோர்கோஸ் லாந்திமோஸ் தொடர்வதும் நடக்கவேயியலாத ஒன்றில்லை. அப்படித்தான் இந்த விழியூடகம் மேலும் மேலும் சாத்தியத்தை விரித்து வரவேண்டும்.

ஆனால், டராண்டினோ உலக சினிமா ரசிகனாக இருந்து (மாணவப் பருவத்தைத் தவிர்த்துத் தாவி) நேரடியாக படைப்பாளரானவர். அவர், தனக்கென ஒரு தனி பாணியையே, ஒரு மொழியையே, தன் சினிமாக்களை தொடர்வண்டியாக்கி அனைத்திற்கும் சென்று வர ஒரு வழியையும் ஏற்படுத்தி அதில் பாத்திரங்களை உலவ விடுகிறார். அதில் அவருக்குச் சகலமும் சாத்தியமாகிறது.

tarantino-300x157.jpg

வட்டமான காமிரா நகர்வுகளுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் காட்சிகளுக்கான வசனகர்த்தாவாக மிளிர்கிறார். அவரது, ஒற்றை வரிகளும் பரவசத்தைத் தருவதாக இருக்கின்றன. அதைவிட, எதிர்பாராத தருணத்தில், அவர் கெளரவத் தோற்றம் ஒன்று செய்து அதில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசி அவர் எழுதிய ‘ரிசர்வாயர் டாக்ஸ் முதல் உணவகக் காட்சி’, ‘இங்க்ளோரியஸ் பாஸ்டர்ஸ்-இன் யூத வேட்டையாளன் அறிமுகக் காட்சி’ ஆகிய உச்சங்களைத் தானே கடந்து போகிறார். உதாரணம் : ஜாங்கோ அன்செய்ண்ட்-இல் வரும் கெளரவத் தோற்றம்.

பி.கு. : ’யூத வேட்டையாளன் அறிமுகக் காட்சி’ தன் படங்களிலேயே மிகச்சிறப்பாக எழுதப்பட்ட (வசனம்) காட்சி என்று குவெண்டினே சொல்லியிருக்கிறார்.

6

கதையென்பது ஒரு வரியில் சுருக்கிச் சொல்லப்பட முடிவதாகவும், அப்படிச் சொல்லப்பட்ட ஒற்றை வரி எவரது கவனத்தையும் ஈர்க்கத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்பது எளிய சினிமாக்காரர்களும், வணிகர்களும் சேர்ந்து பெற்றெடுத்த தத்துவங்களுள் ஒன்று, மூவங்க திரைக்கதை போல! சரி, போகட்டும்! அதை அடிப்படை அளவுகோலாக வைத்துப் பார்த்தால் கூட, தான் எடுத்த எல்லா படங்களிலும் ஒரே வரிக்கதையையா சொல்வது?

உதாரணமாக, கில் பில் திரைப்படத்தைப் பார்ப்போம். தன்னைக் கொன்ற கொலைகார நண்பர்களைச் சாவின் தருவாயிலிருந்து மீண்டு வந்து பழிவாங்கும் பெண் என்பது படத்தின் ஒருவரி. ஆனால், அதற்கு திரைக்கதை எழுதத் துவங்கும் எழுத்தாளர் ஒரு பட்டியல் போடுகிறார், யார் யாரைக் கொல்ல வேண்டுமென்று. அதை நாயகியின் கையிலேயே கொடுத்து ஒவ்வொன்றாக அடித்து வைத்துக் கொள்ள வைக்கிறார் (நெற்றியில் சுட்டதால் அம்னீசியா பக்க விளைவாக வந்திருக்கும் போல). பட்டியலை முடிக்க வேண்டும், அதற்காக உலகின் மூலைகளுக்கெல்லாம் பயணம் போகிறாள் அந்தப் பெண். சவப்பெட்டியை உடைத்துக் கொண்டு வருகிறாள், மார்ஷியல் கலைகளில் பெடலெடுக்கிறாள், இன்னும் இன்னும். சஸ்பென்சன் ஆஃப் டிஸ்பிலீஃபிற்கே சஸ்பென்ஸ் கொடுப்பவர் கு.ட. ஆயிற்றே.

74190af4-7d22-4083-b249-59b72315646e-300

ஆளவந்தான் அனிமேசன் காட்சி, க்ரேசி 88-ஐக் கொன்று குவிக்கும் காட்சி, கைகால்கள் வெட்டப்படுதல், கண்களைப் பிடுங்குதல் என்று அரைமணி நேரமாக உருவாக்கப்படும் குருதிக்குளம், தலையைச் சீவி மூளையை முன்வைத்தல் போன்ற காட்சிகளால் பக்கங்கள் நிரப்பப்படுகிறது. நம் மனம் குதூகலிக்கிறது. இதுவல்லவோ வன்முறையின் அழகியல்! சரி, நல்ல படம்தான். ஆனால், உலகறிந்த உன்னத இயக்குநர் சொல்லும் கதையா இது? மனதை நிலை கொள்ள வைக்கும் சதைப்பற்று எங்கேயேனும் உள்ளதா? இந்த வெற்றுச் சண்டைக் காட்சிகளைக் கொண்டு உருவகப்படுத்தப்பட்ட வாழ்வியலில் ஏதேனும் தெரிகிறதா? எனக்கு டராண்டினோ ஆதர்ஷம் என்பதால், குருஷேத்திரப் போரையும், உலகப் போரையும், ஆர்ச் டியுக் ஃப்ரான்ஸிஸ் பெர்டினாண்டையும் ‘ப்ளாக் மாம்பா’ வின் மீது பொருத்திப் பார்த்து மகிழ்வடைவதும் இட்டுக்கட்டுவதும் இயலாத காரியமொன்றுமில்லை. ஆனால், அதற்கான இடம் பிரதியில் இருக்கிறதா என்றால் பெருஞ்சுழியே பதிலென எஞ்சுகிறது.

7

’ஜாங்கோ அன்செயிண்ட்’ திரைப்படத்தைக் கவனிப்போம். ஒரு பொறுப்புமிக்க அல்லது குறைந்தபட்சம் தன் இயக்கும் திறனை பயன்படுத்தத் துடிக்கும் எந்த கலைஞனும் தான் சொல்ல வேண்டிய கதையையே சொல்ல முனைவான். ஆனால், டராண்டினோ ஏற்கனவே உலகம் மெச்சிய ‘இத்தாலிய வெஸ்டர்ன்’ என்னும் வகைமையை எடுத்துக் கொண்டு அதற்கு மரியாதை செய்கிறேன் பார் என்று ஒரு படமெடுக்கிறார். உலகைக் காக்கும் ஹீரோக்கள் சேர்ந்து செய்யும் தலைவலி சண்டைகளைப் பார்க்கும் போது, உலகை முதலில் இவர்களிடமிருந்து யாரேனும் காப்பாற்றுங்களேன் என்று சொல்லத் தோன்றும். அப்படி ‘இத்தாலிய வெஸ்டர்ன்’ஐ மரியாதை செய்ய கிளம்பி அதைத் துவம்சம் செய்கிறார் இயக்குநர்.

0a65931bda47488ef673d20c5feabdf1-235x300

தேவன் அசுரனைக் காத்து அவனைக் கண்டு வியந்து தன் தோழனாக்கிக் கொள்ளும் கதை. குறிபார்த்துச் சுடும் தன்மைதான் அவ்வியப்பிற்குக் காரணம். ஏற்கனவே குறிபார்த்து துல்லியமாக சுடும் ஒருவனுக்கு தன் மாயாஜாலத்தன துப்பாக்கிச் சுடும் பயிற்சியைத் தொடர்ந்து வழங்கி இன்னும் அவனைத் தீட்டுகிறார். இதிலொன்றும் குறையில்லை. துப்பாக்கி கிடைத்ததும் சுட்டுக் கொண்டே இருப்பதும், கெளபாய் உடைகளும் மட்டுமே வெஸ்டர்ன் வகைமைக்குப் போதும் என்று நினைத்து விட்டதுதான் பரிதாபம். இல்லை, ரத்தமும் சதையுமாக ஒரு கதை இருக்கிறது என்று சொல்பவர்கள், ஜாங்கோவில் ’எத்தனை குண்டுகள் உமிழப்பட்டன’ என்று கணக்கிட்டு ஆவணப்படுத்த தயாராயிருப்பவர்கள். அதன் பயனென்ன?

வெஸ்டர்ன் திரைப்படங்களின் முக்கிய அம்சமே நிலக்காட்சிகள்தான். ஒன்றாகவே இருக்கும் நிலக்காட்சிகளின் பன்மை முகம். இதைக் கொண்டு வருவதில் தான் கதையின் சாறு வெஸ்டர்ன் பானத்திற்குள் பொருந்தும். ஆனால், தன் ஆஸ்தான ஒளிப்பதிவாளரைக் கொண்டு ஆலிவர் ஸ்டோன் ஏற்கனவே செய்த ’யு-டர்ன்’ படத்தின் நிலக்காட்சிகளை விஞ்சும் அளவிற்குக் கூட எதையும் செய்து வைக்கவில்லை, இந்த வரலாற்றுப் பெருங்காவியத்தில். பெயருக்கு ஷெரிஃப்பும், மேடையில் வைக்கும் அழகு பொம்மையாக கேண்டியும், கேண்டிலேண்டும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

django-300x169.jpg

ஜாங்கோவின் அசாத்திய பிறப்பிலேயே நிறைந்திருக்கும் துப்பாக்கிச் சுடும் பண்பை வியந்து வியந்து ஆயாசமுற்றது போய், கடைசி அரைமணி நேரங்களில் அவன் செய்யும் வீராவேச விவேக பராக்கிரமங்கள் முற்றிலும் வேறொரு வகை குடைச்சல். அதிலும், குறிப்பாக சுரங்கத்திற்கு அள்ளிச் செல்லப்படும் வழியில் தன் காவலர்களுக்கே கையூட்டு தருவதாய் இலாவகமாய் (!) ஏமாற்றித் தப்பித்து அனைவரையும் கொன்று, அவர்களது வெடிமருந்து பைகளைக் கைப்பற்றி, அவர்களது குதிரையிலேயே வந்த வழி திரும்பி, பின் குருதியாட்டம் ஒன்று ஆடி, மாளிகையை மண்மேடாக்கி குதிரையுடனும், தன் மனைவியுடனும் ஸ்டைலாக நாட்டியமாடி முற்று வைப்பதெல்லாம் ரஜினிகாந்தையே திக்கு முக்காட வைக்குமளவிற்கு நிகழ்த்தப்படும் காட்சிகள்.

இதையெல்லாம் பாராட்டியதால், நமக்குக் கிடைத்தது இன்னொரு வெஸ்டர்ன் படமும், இந்தப் படத்தை ஒட்டி வெளியிடப்பட்ட காமிக்ஸும் தான். இன்னொரு முறை இப்படி ஒரு அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிட வேண்டாமென டராண்டினோ ரசிகர்களை எத்தனை முறையும் வணங்கலாம். ஹோவர்ட் ஹாக்ஸூம், ஜான் ஃபோர்டும் செய்தவற்றைத் தாண்டி இன்றைய உளவியல், மானுட சிடுக்குகளையும் பேசி சில வெஸ்டர்ன் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், டராண்டினோ செய்திருப்பது, ஒரு கெளபாய் ஆடையணிந்த, குண்டுகளால் துளைத்துக் கொண்டேயிருக்கும், மீசை வைத்த குழந்தைகள் நிறைந்த பகடித்தனமான படம்.

1957 இல் வெளியான ‘எ கிங் இன் தி நியூயார்க்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. சார்லி சாப்ளின் ஒரு தியேட்டரில் இருப்பார். ஒரு வெஸ்டர்ன் திரைப்படத்தில் இரண்டு கெளபாய்கள் மாறி மாறி கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருப்பார்கள். டென்னிஸ் கோர்ட்டில் பந்து பறப்பதைப் பார்ப்பது போல, தனக்கேயுரிய டைமிங்குடன் சாப்ளின் இங்குமங்கும் பார்ப்பார். ஒரு டஜன் திருப்புதல்களுக்குப் பிறகு ஒன்றும் புரியாமல் தலையிலடித்துக் கொள்வார். அப்போதே அப்படிச்  சொன்னவர், இன்று வந்த ஜாங்கோவைப் பார்த்தால் தரையில் புரண்டு கண்ணீர் விடுவார்.

8

தொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்படும் அடையாளத்தன்மை, விசித்திரமான பெயர்களின் வகைமை, குண்டுவெடிப்புகள், இருள் நகைச்சுவை என்ற பெயரில் துடிக்கும் ஒழுங்கின்மை, ஆழமான ஆய்வுகளின்றி மேலோட்டமாக உருவாக்கப்படும் வரலாற்றுக் கதைகள், பாரொடித்தன்மை என ஒரே வகை, உப்பு பெறாத உத்திகளை சுழற்சிமுறையில் கையாண்டு அதை நூறு பக்கத் திரைக்கதையாக எழுதும் திறமையும், அதைக் கொண்டே முதன்மையான இயக்குநர்/ எழுத்தாளர்/ படைப்பாளர் என பெயர் வாங்கும் பேறும், ஆஸ்கார் இருக்கும் வரை டராண்டினோவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆஸ்கார் விருதுகளின் தற்போதைய நிறம் கூட மெல்ல மெல்ல மாறிவருகிறது. இன்னும், மாறாமல் பின்னோக்கியே நடக்கும் இயக்குநர்களில் ஒருவராக க்யூ.டி. இருக்கிறார். இனி வரும் காலங்களில், அவரது கெளரவத் தோற்றங்களைத் தொகுத்துப் பார்த்து பரிசீலனை செய்து, ‘ஹாலிவுட்டின் கே.எஸ்.ரவிகுமார்’ என்று புதியதாய் ஒரு விருது உருவாக்கித் தர ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கிறேன்.

 

http://tamizhini.co.in/2019/01/13/அழகியல்-மீதான-வன்முறை-டர/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டராண்டினோவின் திரைப்படங்கள் எல்லாவற்றையும் பார்த்துள்ளேன். அதிலும் pulp fiction பத்துத் தடவைகளுக்கு மேல் பார்த்தேன்.

கமலக்கண்ணன் டராண்டினோவை இப்படிக் காய்ச்சி இருக்கவேண்டாம்!😡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.