Jump to content

தமிழ் மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் ஒற்றுமையின்மையே - வடக்கு ஆளுநர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் ஒற்றுமையின்மையே - வடக்கு ஆளுநர்

 

தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருப்பது ஒற்றுமையின்மையே என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் சுரேன் இராகவன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது இதனை தெரிவித்தார்.

northj.jpg

கேள்வி:- பல்வேறு தரப்பினரிடத்திலிருந்தும் வடமாகாண ஆளுநர் பதவிக்கான பரிந்துரைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் தாங்கள் அப்பதவிக்கு எவ்வாறு நியமிக்கப்பட்டீர்கள்?

பதில்:- நான் இலங்கை தமிழன் என்பதால் அகதிவாழ்க்கை எனக்கு புதிதல்ல. நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நான் உயர்கல்வியை நிறைவு செய்த பின்னர் பட்டப்படிப்புக்களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைவு செய்திருந்தேன். எனினும், இலங்கை குறித்த எனது கரிசனைகள் ஒருபோதும் குறைவடைந்திருக்கவில்லை. நாட்டுக்கு என்னாலான பங்களிப்புக்களை தொடர்ச்சியாக நல்கிவந்திருந்தேன்.

அவ்வாறான நிலையில் தான் 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டில் அமைதியான ஆட்சி மாற்றம் நடைபெற்றிருந்தது. அத்தகைய ஆட்சிமாற்றமொன்று நிகழவில்லையாயின் இலங்கை மிகமோசமான சர்வாதிகார ஆட்சிப்பிடிக்குள் சென்றிருக்கும். ஆட்சியாளர்கள் யார் என்பதை விடவும் ஆட்சி முறைமையானது மோசமாக இருந்ததால் அந்த மாற்றம் தேவைப்பட்டிருந்தது.

அடிப்படை ஜனநாயகத்தினை விரும்பிய என்னைப்போன்ற புத்திஜீவிகள் இணைந்து மேற்கொண்ட அதற்கான முயற்சிகளை எடுத்தபோது அச்செயற்பாடுகளில் நானும் பங்கேற்றிருந்தேன். அந்த ஆட்சிமாற்றம் நிகழ்ந்த பின்னர் புத்திஜீவிகள் தரப்புடன் இணைந்து எனது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்துகொண்டிருந்த காலப்பகுதியில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னைச் சந்திருந்த தருணத்தில் வடக்கு ஆளுநர் பதவியை பொறுப்பெடுக்க முடியுமா? என்று கேட்டிருந்தார்.

அச்சமயத்தில் நான் அரசியல்வாதியல்ல என்று பதிலளித்தேன். அதன்போது ஜனாதிபதி இலங்கையில் இருக்கக்கூடிய மாகாணங்களில் வடமாகாணமானது புத்திஜீவிகளைக் கொண்ட மாகாணமாகும். தற்போதைய நிலையில் அம்மாகாணத்தின் நிலைமகளை உணர்ந்து அம்மாகாணத்திற்கான ஒரு திசையை ஏற்படுத்தும் கருவியாக தாங்கள் செயற்பட வேண்டும் என்று கோரினார். அதனையடுத்து நான் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு இணங்கியிருந்தேன்.

கேள்வி:- வடக்கில் எவ்வாறான மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றீர்கள்?

பதில்:- நான் பதவியேற்று ஐந்து நாட்களே ஆகின்றன. எனது பணிகளை முன்னெடுப்பதற்கு வடமாகாண நிருவாக உத்தியோகத்தர்கள் உதவியாக இருக்கின்றார்கள். வடமாகாணத்தினைப் பொறுத்தவரையில் மொழியை அடிப்படையாகக் கொண்ட கலாசாரத்தினைக் கொண்டிருக்கிறது. நாம் தமிழர்கள் என்று கூறும்போது அதில் எமக்கு உரிமையும் பெருமையும் இருக்கின்றது. போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகளாகின்றபோதும் கூட பெயர்ப்பலகைகள் சரியாக எழுதப்படவில்லை. தமிழ்மொழியிலும் தவறுகள் உள்ளன. ஆகவே அடுத்த மூன்று மாதங்களுக்குள் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான அனைத்திலும் மும்மொழியினை அமுலாக்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

 அரச நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் மற்றும் ஆவணங்கள் எல்லாம் அவ்வாறு அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவுள்ளது. அதற்காக கொழும்பு யாழ். பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனுடன் இரணைமடு குளம் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளேன். அக்குழு எதிர்வரும் 21 தினங்களில் அறிக்கையை எனக்கு கையளிக்க வேண்டும் என்று பணிப்புரை விடுத்திருக்கின்றேன். இவ்வாறு அவசிய தேவைகளை மையப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளேன்.

கேள்வி:- தற்போதைய நிலையில் வடக்கு மாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையொன்று இல்லாத நிலையில் வினைத்திறனான நிருவாகத்தினை முன்னெடுப்பதற்கு என்ன செய்யவுள்ளீர்கள்?

பதில்:- முதலமைச்சர் அமைச்சர்கள் இல்லாதுவிட்டாலும் மாகாண நிருவாகத்தினை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு அவ்வாறு தான் உள்ளது. தேவையான உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். ஆகவே அந்த உத்தியோகத்தர்களுக்கு வழிகாட்டக்கூடிய நல்ல தலைமைத்துவம் தான் தேவையாக இருக்கின்றது. அதனை வழங்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

ஜனநாயக ரீதியில் விவாதித்து தீர்மானங்களை எடுப்பது சிறந்ததாக இருந்தாலும் கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக காணப்பட்ட பிளவுகளும் பிரச்சினைகளும் தான் வடமாகாண சபையை வினைத்திறனாக முன்னெடுக்க முடியாது போனமைக்கான காரணமாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் அரசியல்ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட சபை இல்லாத நிலையில் வடக்கு புத்திஜீவிகளையும் இணைத்துக்கொண்டு எமது உத்தியோகத்தர்களின் உதவியுடன் வடக்கின் தேவைகளுக்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க முடியும் என்ற கருதுகின்றேன்.

கேள்வி:- 2007இல் பதில் ஆளுநராக பதவியேற்ற மொஹான் விஜேவிக்கிரம முதல் ரெஜினோல்ட் குரே வரையில் வடக்கின் ஆளுநராக இருந்தவர்கள் மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்தவர்கள் என்ற பொதுப்படையான சிந்;தனை மக்கள்  மத்தியில் இருக்கின்ற நிலையில் அந்தமக்களின் மனதை வெல்வது உங்களுக்கு சவாலாகின்றதல்லவா?

பதில்:- நீங்கள் குறிப்பிட்ட விடயம் உண்மையிலேயே சவாலாகவே உள்ளது. ஆளுநர் ஜனாதிபதியால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார். அரச தலைவரின் கொள்கை திட்டங்களுடன் ஓரளவாவது இணங்கிச் செல்பவரே அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றார் என்பது யதார்த்தம். இருப்பினும் தெரிவு செய்யப்படுபவரின் செயற்பாடுகள் அரசியல் தலைமை கொள்கை போன்றவற்றின் அடிப்படையில் அல்லாது மக்களினை மையமாகக் கொண்டதாக அமைய வேண்டும்.

அரசியலமைப்பு மாற்றம் என்பது ஒரு நீண்ட பயணமாகின்றது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் தற்போது அழிந்த நிலையில் இருக்கின்றார்கள். நீண்ட பயணம் நிறைவடைகின்ற வரையில் அவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும். அவர்களின் கனவுகள் நனவாக வேண்டும். ஆகவே வாழ்வாதாரம்ரூபவ் வாழும் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகிய இரண்டு விடயங்களும் ஒரேநதியின் இரு கரைகளாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கேள்வி:- வடக்கு மாகாணத்தில் ஆளுநருடன் அதிகாரம் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக காணப்பட்டிருந்த நிலையில் நீங்கள் அத்தகைய நிலைமைகளை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?

பதில்:- அரசியலமைப்பின் பிரகாரம் அதிகார எல்லைகள் தெளிவாக கூறப்பட்டுள்ளன அவ்வாறான நிலையில் ஆளுநரோரூபவ் முதல்வரே தமக்கு தேவையான வகையில் அதனை  யன்படுத்துவது துஷ்பிரயோகமாகும். தற்போது தெரிவு செய்யப்பட்ட சபையொன்று இல்லாத நிலையில் முதலமைச்சர் அமைச்சரவை ஆகியவற்றின் பொறுப்புக்களும் என்தோளில் சுமக்க வேண்டியுள்ளது. ஆகவேரூபவ் பொறுமையாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர பிறிதொரு தரப்பினை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பமாக நான் கருதவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கு ஆழப்பெரும் வாய்ப்பும் பொறுப்புமாகும்.

கேள்வி:- வடக்கில் உள்ள அரசியல் தரப்பினரிடையே காணப்படும் பிளவுகள் தங்களின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்குமென்று கருதுகின்றீர்களா?

பதில்;:- தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருப்பது ஒற்றுமையின்மை. கடலில் எவ்வளவு மண்ணிருக்குமோ அந்தளவுக்கு தமிழர்கள் பிரிந்திருக்கின்றார்கள் என்பது தான் எனது ஊகம். ஆனால்ரூபவ் நெருக்கடிகள்ரூபவ் பிரச்சினைகள் வருகின்றபோது ஒட்டுமொத்த சமூகமுமே முகங்கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. மக்களின்  அடிப்படை விடயங்களை மையப்படுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது அரசியல் தலைமைகள் கட்சிகள் ஒற்றுமையாக ஒன்றிணைவார்கள் என்று கருதுகின்றேன். அவ்வாறான விடங்களில் கூட ஒற்றுமையாக வராது போவார்களாயின் அது தமிழ்மக்களுக்கு எதிராக செய்யும் மிகப்பெரும் குற்றமாகவே பார்க்க வேண்டி ஏற்படும்.

கேள்வி:- வடக்கு அரசியல் தரப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளீர்களா?

பதில்:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்ரூபவ் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்ரூபவ் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்ரூபவ் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளேன். எதிர்காலத்தில் ஏனைய அரசியல் தலைவர்களானரூபவ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்ரூபவ் சுரெஷ்பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களையும் சந்திக்க தயாராகவே உள்ளேன். நான் அரசியல்வாதியுமில்லை. எனக்கு அரசியல் கனவும் இல்லை. ஆகவே எனது பயணத்தில் எவ்விதமான குறுக்கீடுகளும் ஏற்படாது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றேன்.

கேள்வி:- சம்பந்தன் விக்கினேஸ்வரன் ஆகியோருடனான சந்திப்புக்கள் எவ்வாறு அமைந்திருந்தன?

பதில்:- இலங்கையின் மூத்த அரசியல் வாதியான சம்பந்தன் எனக்கு ஆசீர்வதித்தது வடக்கு மக்களுக்கான பணியை முன்னெடுப்பதற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும். விக்கினேஸ்வரனுடன் இருபது நிமிட சந்திப்பு இரண்டு மணிநேரம் வரையில் நடைபெற்றது. அவருடனான கலந்துரையாடலில் தமிழ் மக்களின் உணர்வு ரீதியான விடயங்களை முன்வைத்திருந்தார். பிரிவினைவாதத்திற்கு இடமிருக்கின்றதா? பிரிந்து போவது அவசியம் தானா? என்பதுள்ள சமகால அரசியல் போக்குகள் பற்றியெல்லாம் கலந்துரையாடி நண்பர்களாகியே விடைபெற்றிருந்தேன். இருதலைவர்களும் வேறுபட்டிருப்பது துரதிஷ்டவசமாகும். இருப்பினும் இரு தலைவர்களும் தங்களது வழியில் தமிழ் மக்களுக்காக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி:- இராணுவ வெளியேற்றம் காணாமல்போனவர்கள் சம்பந்தமாக சகல தரப்புக்களும் அழுத்தமளித்து வருகின்ற நிலையில் அதுகுறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்;:- இராணுவம் 96சதவீதமான காணிகளை மக்களிடத்தில் வழங்கி விட்டார்கள். இலங்கை ஒரு போர் நடந்த நாடு என்ற வகையில் எஞ்சியுள்ள காணிகளில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமின்றி விடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். போர் நடந்த நாடொன்றில் இருக்கும் இராணுவம் சாதாரணமாக இருக்க முடியாது. எனினும் போரின் பின்னராக குறிப்பாக கடந்த மூன்று வருடங்களிலே கெடுபிடிகளின்றியே இராணுவம் இருக்கின்றது.

நான் இராணுவத்திற்கு வெள்ளைபூச வரவில்லை. இருப்பினும் கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்தின்போது இராணுவம் செய்த மனிதாபிமான பணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இராணுவம் மனிதாபிமான ரீதியில் முன்னேறியுள்ளதோடு முகாமிற்குள்ளேயே இருக்கின்றது அடுத்ததாக காணாமல்போனவர்கள் குறித்து சர்வதேச விசாரணையொன்று வலியுறுத்தப்படுகின்றது. தமது காணாமல்போன உறவுகள் தொடர்பில் நீதி நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். ஆனால்ரூபவ் அதற்கு காலம் எடுக்கும். போர் நிறைவடைந்து பத்து வருடங்களாகின்ற நிலையில் அந்த விடயங்கள் சம்பந்தமாக எனது அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

கேள்வி:- வடக்கு மக்களின் கோரிக்கைகளின் நியாயத்தினை தெற்கிற்கு தெளிவுபடுத்துவதற்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தினை எப்படி பயன்படுத்தப்போகின்றீர்கள்?

பதில்:- வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் கட்டப்படும் பாலத்தின் அடிக்கல்லாக இருக்கவே விரும்புகின்றேன். தமிழ் மக்களின் அடிப்படையான பிரச்சினைகளை தெற்கிலுள்ள மக்களுக்கு தெரியப்படுத்தி புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். முதற்கட்டமாக தெற்கு ஊடகவியலாளர்களை வடக்கிற்கு அழைத்து அவர்களாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு வசதிகளை மேற்கொள்வதுடன்ரூபவ் வடக்கு தெற்கு புத்திஜீவிகள் கலைஞர்களை ஒன்றிணைத்து செயற்றிட்டமொன்றினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன்.

கேள்வி:- வடக்கில் வாழ்வாதாரம்ரூபவ் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தீர்க்கப்படக்கூடிய விடயங்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னடுப்பதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்:- வேலைவாய்ப்பின்மையால் இளையோர் சமுதாயம் குழுக்களாக செயற்படுதல் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் போன்ற நிலைமைகள் காணப்படுகின்றன. அவற்றை மாற்றுவதற்காகவும் முதலீடுகளை ஏற்படுத்துவதற்காகவும் யாழில் பொருளாதார மையம் என்ற கட்டமைப்பினை உருவாக்கி அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

கேள்வி:- வடக்கு அபிவிருத்திக்கு புலம்பெயர்ந்தவர்கள் பங்களிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும்ரூபவ் முதலீடுகளை செய்வதற்கு மத்திய அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருக்கின்றது என்ற குற்றச்சாட்டு கடந்தகாலங்களில் நிலவியிருந்த நிலையில் உங்கள் காலத்தின் போது அதற்கான வழியொன்று ஏற்படுத்தப்படுமா?

பதில்:- வடக்கு மக்களை மையப்படுத்திய நூற்றுக்கணக்கான செயற்றிட்டங்கள் எம்மிடத்தில் உள்ளன. வர்த்தக மற்றும் சேவைத்துறை சார்ந்து அவை காணப்படுகின்றன. முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்ற புலம்பெயர்ந்தவர்கள் என்னுடன் நேரடியாகவே கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும். உண்மையானரூபவ் நேர்மையானவர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளேன்.

கேள்வி:- 2015இல் மாற்றத்திற்காக செயற்பட்ட உங்களை வடக்கு ஆளுநராக நியமித்து கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தான் எடுத்த தீர்மானத்தினால் அதிருப்தி அடைந்த தமிழ் மக்களின் மனநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரி முன்னெடுத்த முயற்சியாக உங்களின் நியமனத்தினை பார்க்க முடியுமா?

பதில்;:- தமிழ் மக்களுக்கு அதிருப்தி உள்ளமை உண்மையாக இருக்கலாம். போர் நிறைவடைந்து பத்துவருடங்களாகின்றபோதும் அந்த மக்களின் நிலைமைகள் முழுமையான முன்னேற்றத்தினை காணவில்லை. ஆவர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் செய்வதற்கு பதிலாக என்னை நியமிப்பது என்றால் நான் விஷ்வருமனாக இருக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரையில் அரசுக்கும் வடக்கு மக்களுக்கும் இடையிலான தொடர்பினை ஏற்படுத்தும் பணியை செவ்வனே செய்வதையே இலக்காகக் கொண்டிருக்கின்றேன்.

 

http://www.virakesari.lk/article/48013

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.