Jump to content

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஐஸ்வர்யா ரவிசங்கர் பிபிசி தமிழ்
 
  •  
     
இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?படத்தின் காப்புரிமை Getty Images

இரவு நேரத்தில் வெளியே செல்வதை பெண்கள் விரும்புகிறீர்களா? அப்படி விரும்புபவர்கள், என்னென்ன காரணங்களுக்காக விரும்புகிறார்கள்? இது பற்றிய அவர்களது குடும்பத்தினரின் கருத்து என்ன? இந்த சமூகம் அதை எப்படி பார்க்கிறது? போன்ற கேள்விகளுக்கு விடையறிய இரவு நேரத்தில் வெளியே செல்ல விரும்பும் பெண் ஒருவரிடம் பிபிசி பேசியது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரம் எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? சில்லென்ற காற்று, சிலிர்ப்பூட்டும் பறவைகளின் ஒலி, எங்கும் நிசப்தம், ஆள்நடமாட்டமே இல்லாத சாலைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் வீதியோர கடைகள், நிலவின் ஒளி, கண்களுக்கு இதமூட்டும் நட்சத்திரங்களின் நடமாட்டம்; சுட்டெரிக்கும் வெயில் இல்லை, எரிச்சலூட்டும் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். யாருக்குதான் பிடிக்காது இப்படிப்பட்ட இரவு நேரத்தின் அழகை ரசிப்பதற்கு?

இரவு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருப்பவர்களை 'நைட் பேர்ட்ஸ்' என்று சொல்லுவார்கள். நானும் அப்படிப்பட்டவள்தான்.

சிறு வயதிலிருந்தே நான் இரவு நேரத்தில்தான் அதிக நேரம் விழித்திருந்து படிப்பேன். பள்ளி பருவத்தில், 'இரவு நேரத்தில் அதிகமா கண்முழிச்சு படிக்காத, காலங்காத்தால படிச்சாதான் மனசுல நிக்கும்' என்று சொன்ன என் பெற்றோர், கல்லூரியில் சேர்ந்த பிறகு, 'இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடனும்' என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?படத்தின் காப்புரிமை Getty Images

நான் ஒரு கல்லூரி மாணவி என்பதால், ஏராளமான சுமைகள், எந்த நேரமும் மன அழுத்தம். எப்போது பார்த்தாலும் ப்ராஜெக்ட், செமினார், பேப்பர் பிரசன்டேசன், இண்டஸ்ட்ரியல் விசிட், குரூப் டிஸ்கஷன், இன்டெர்ன்ஷிப், தேர்வுகள் என்று ஒரு சிறிய உலகத்துக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருந்தேன். இதற்கிடையில் குடும்ப பிரச்சனைகள் வேறு.

 

என்னால் மன அழுத்தத்திலிருந்து மீள முடியவில்லை. என்னுடன் கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான நண்பர்கள், கார் வைத்திருந்தார்கள். ஆனால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த என்னிடம் ஒரு ஸ்கூட்டர் மட்டுமே இருந்தது.

ஒரு நாள், கார் வைத்திருந்த என் தோழி ஒருத்தி, 'நீ ஏன் இரவில் என்னுடன் லாங் டிரைவ் வரக்கூடாது? அது எவ்வளவு புத்துணர்ச்சி கொடுக்கும் தெரியுமா?' என்று என்னிடம் கூறியது எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

மனம் பாரமாக இருக்கும்போதெல்லாம் அவளுடன் சேர்ந்து இரவில் சுற்ற ஆரம்பித்தேன். க்ரூப் ஸ்டடீஸ் என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு, அவளது காரில் நீண்ட தூரம் பயணித்தேன். சிறிது நேரம் அவள் காரை ஓட்ட, நான் மெல்லிசை பாடல்கள் கேட்டபடி, இரவு நேர அழகை ரசித்துக்கொண்டே வருவேன்.

அவள் சோர்வடைந்தவுடன் நான் காரை ஓட்டுவேன். இரண்டு பேரும் சோர்வடைந்துவிட்டால், அண்ணன் கடை சாயா தான்! காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் கதை பேசிக்கொண்டே டீ குடிப்போம்.

இதைவிட புத்துணர்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் உங்களுக்கு நிகராக நாங்களும் ராத்திரியில் வெளியில் சுற்றுவோம் என்று எங்களின் தோள்களை நாங்களே தட்டிக்கொள்வதுபோல் இருக்கும்.

எல்லா நேரத்திலும் அவளையே எதிர்பார்க்க முடியாது என்பதால் சில நேரங்களில் நான் தனியாகவும் சில நேரங்களில் வேறு நண்பர்களுடனும் இரவில் ஸ்கூட்டரில் வெளியே சுற்றினேன்.

இதை செய்யாதே, அதை செய்யாதே என்று நம்மை கட்டுப்படுத்தும்போதுதான், அதை செய்துபார்த்தால் என்ன, அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற எண்ணம் வரும்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?படத்தின் காப்புரிமை Getty Images

என் மன அழுத்தத்தை போக்கும் என்று நான் நினைத்த இந்த விடயத்திலும்கூட பல பிரச்சனைகள் நிறைந்திருந்தன. 'ராத்திரி நேரத்துல ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்ன்னா நடக்கலாம்; ஊர் சுற்ற உனக்கு வேறு நேரமே கிடைக்கலையா?' என்பது என் பெற்றோரின் கருத்து.

'பைக்கை ஒப்பிடும்போது காரில் செல்வது கொஞ்சம் பாதுகாப்பானதுதான்; ஆனா எங்க போனாலும் ராத்திரி எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடு' என்பது என் உறவினர்களின் கருத்து.

இவர்கள் கூட பரவாயில்லை. பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி என்று சொல்வதைப்போல நான் இரவில் வெளியே சென்றால், எதிரில் குடும்பத்தோடு வரும் பெண்கள்கூட, 'இந்த நேரத்தில் உனக்கு இங்கு என்னம்மா வேலை? ஒழுங்கா வீடு போய் சேரு' என்று கேட்பதை என்னவென்று சொல்வது?

ஒரு நாள் இரவு என் தோழி ஒருத்தியின் பர்த்டே பார்ட்டிக்கு சென்றுவிட்டு என் வீட்டருகே குடியிருக்கும் தோழன் ஒருவனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது நள்ளிரவு ஒரு மணி இருக்கும்.

'யார் நீங்க? இந்த இடத்துல ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? உங்க அம்மா அப்பா ஃபோன் நம்பர் குடுங்க' என்றெல்லாம் கேட்டார் ஒரு போலீஸ்காரர்.

ஓர் ஆணும் பெண்ணும் இரவு நேரத்தில் ஒன்றாக வந்தாலே அது தவறான உறவா? இருவரின் வீடும் அருகருகே இருப்பதால் ஒன்றாக வந்தோம், அவ்வளவுதான். உண்மை தெரியாமல் கடினமான சொற்களை பயன்படுத்தி என் மனதை காயப்படுத்திய பலரில் இந்த போலீஸ்காரரும் ஒருவராகிவிட்டார்.

இரவு நேரத்தில் ஒரு பெண் தனியாக சென்றால் அவள் குணமற்றவள்; பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை, கயிற்றை அவிழ்த்துவிட்ட குதிரைபோல் விட்டுவிட்டார்கள் என்றெல்லாம் கூறுவார்கள். நண்பர்களுடன் குழுவாக சென்றால், கொஞ்சமும் பொறுப்பற்றவள்; நடத்தை சரியில்லை என்பார்கள்.

அதிலும் ஒர் ஆணோடு தனியாக சென்றுவிட்டால் அவ்வளவுதான், தவறான உறவு, கொஞ்சம்கூட பயமே இல்லை என்று இல்லாத பேச்சையெல்லாம் பேசுவார்கள்.

இரவில் சென்றால் பாதுகாப்பில்லை என்கிறார்களே, பகலில் சென்றால் மட்டும் ஒரு பெண் நூறு சதவிகிதம் பாதுகாப்போடு வீடு திரும்ப முடிகிறதா? எப்பொழுதுமே இரவில்தான் ஊர் சுற்ற வேண்டும் என்பது என் எண்ணமல்ல.

ஆனால் என் மன அமைதிக்காக, புத்துணர்ச்சிக்காக, இரவு நேர உலகை ரசிப்பதற்காக நான் நினைக்கும்போது செல்ல விரும்புகிறேன். என் சுதந்திரம் என்னிடம்தான் உள்ளது. எனக்கான எல்லை எது என்பதை வகுக்கவும், என்னை தற்காத்துக்கொள்ளவும் எனக்கு தெரியும்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?படத்தின் காப்புரிமை Getty Images

என்னைப் போன்ற எண்ணம் கொண்ட பெண்களின் சார்பில் நான் இந்த சமூகத்திடம் சில வேண்டுகோளை முன்வைக்க ஆசைப்படுகிறேன்.

'ஒரு பெண் என்றைக்கு எந்த பிரச்சனையுமின்றி தனியாக இரவு நேரத்தில் சாலையில் செல்கிறாளோ அன்றுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்' என்று காந்தி சொன்னதாக படித்திருக்கிறேன்.

ஆனால், என்றைக்கு இந்த சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதோ, என்றைக்கு ஆண்கள் பெண்களைப் பார்க்கும் விதமும், என்றைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்களை பார்க்கும் பார்வையும் மாறுகின்றதோ, அன்றுதான் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என்று நான் நினைக்கிறேன்.

பெண்கள் தாங்கள் தாங்களாகவே வாழ்வதைக்காட்டிலும் சிறந்த வாழ்க்கை எதுவுமில்லை. அவரவர்களுக்கென ஆசைகள் இருக்கின்றன. நான் நானாகத்தான் வாழப்போகிறேன், நாளை இல்லாவிட்டாலும் ஒரு நாள் இந்த சமூகம் மாறும் என்ற நம்பிக்கையோடு!

https://www.bbc.com/tamil/india-46770271

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தி கூறியதைப் போல் ஒரு பெண் தனியாக இரவில் சாலையில் எந்தப் பிரச்னையுமின்றி நடந்து செல்லக்கூடிய நாள் வரவேண்டும். அதுவரை,சகோதரி, தக்க பாதுகாப்புடனேயே செல்லுங்கள். இயற்கை ஆணைக் காட்டிலும் பெண்ணை உடலளவில் சற்று பலவீனமாகவே படைத்துத் தொலைத்துள்ளது. ஏனைய விடயங்களில் மானிட சமூகம் முன்னேறும் வேளையில், பெண்ணின் நிலை பின்னடைவதாகத்தான் உலக நிகழ்வுகள் சுட்டுகின்றன. கல்வி நிலையிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய நாடுகளும் விதிவிலக்கில்லை. எனவே நாம் எதிர்பார்க்கும் நாள் வெகுதூரத்தில்தான் இருக்கிறது. நல்லோர் முயற்சியால் காலம் ஒரு நாள் மாறும். நம்பிக்கைதானே வாழ்க்கை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2019 at 9:59 AM, பிழம்பு said:

இரவு நேரத்தில் வெளியே செல்வதை பெண்கள் விரும்புகிறீர்களா? அப்படி விரும்புபவர்கள், என்னென்ன காரணங்களுக்காக விரும்புகிறார்கள்? இது பற்றிய அவர்களது குடும்பத்தினரின் கருத்து என்ன? இந்த சமூகம் அதை எப்படி பார்க்கிறது? போன்ற கேள்விகளுக்கு விடையறிய இரவு நேரத்தில் வெளியே செல்ல விரும்பும் பெண் ஒருவரிடம் பிபிசி பேசியது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.

இதுக்கெல்லாம் தலைவர் பிரபாகரன் மாதிரி தலைவர்கள் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அப்படி ஒரு நிலை ஈழத்தில் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். "மகாத்மா" காந்தியின் வார்த்தைகளை போலல்லாது செயல் வடிவில் நிறைய விடயங்களை செய்து காட்டியவர்கள் அவர்கள்.
தியாகம் உங்களுக்கு "வார்த்தை" .... அவர்களுக்கு அது "வாழ்க்கை" 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.