Jump to content

காலத்தின் தேவை கருதி France வாழ் புங்குடுதீவு மக்களுக்கு France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் விடுத்த அழைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான France வாழ் புங்குடுதீவு மக்களே

வணக்கம்

அண்மையில் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்
காலத்தின் தேவை கருதி ஒரு அவசர வேண்டுகோளை France வாழ் புங்குடுதீவு மக்களை நோக்கி விடுத்திருந்தது.

அவ்வேண்டுகோள் France வாழ் புங்குடுதீவு மக்களை சென்றடைய அவர்கள் சார்ந்த விழாக்கள் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஊடாக முயற்ச்சித்தது. அதனைத்தொடர்ந்து எம்மிடம் பதிவிலுள்ள 300 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களின் விலாசங்கள் மீண்டும் தொலைபேசி அழைப்பினுடாக சரி பார்க்கப்பட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 27-01-2019 இல் ஒரு விசேச கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு அதன் நிகழ்சி நிரலும் இதனுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் France வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் உள்வாங்குவதும் அவர்களின் ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் சேர்த்து ஊரின் தேவைகளை பூர்த்தி செய்வதும் ஒன்றியத்தை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதுமாகும்.

இந்த கூட்டத்துக்கு France வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளமுடியும் கருத்துக்களை தரமுடியும். எனவே நிர்வாகம் உறுப்பினர்கள் வர்த்தகர்கள் சந்தாக்காரர்கள் என்றில்லாமல் அனைவரையும் அழைக்கின்றோம். கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் ஊரிலிருந்து தமது கருத்துக்களை சொல்ல முயல்வோரும் தமது உறவுகளை இக்கூட்டத்துக்கு அனுப்பி கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வைப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். இதுவரை வெளியில் நின்று எம்மை விமர்சித்தோர்களுக்கும் இக்கூட்டம் நேரத்தை ஒதுக்கி காத்திருக்கிறது

உலகெங்கும் புங்குடுதீவு மக்கள் பரவி கல்வி வர்த்தகம் பொருளாதாரம் கலை பண்பாடுகள் ஒற்றுமை ஒன்றியங்களின் வளர்ச்சி அதனூடாக தாயகத்துக்கான உதவிகள் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்கின்ற போதும் நாம் புங்குடுதீவைச்சேர்ந்தவர்கள் என பெருமை பேசும் அதேநேரம் எமது ஊரை சென்று பார்க்கின்ற போது அது முற்றுமுழுதாக இவற்றை மறுதலித்து தாய் நிலத்தை கைவிட்டவர்கள் எனும் பழியையே எம் கண் முன் காட்டி நிற்கிறது. இதனால் ஊர் சென்று திரும்புகின்ற எமது ஏனைய கிராமத்து மக்கள் கூட எம்மை ஒரு மண்ணை மறந்த நன்றி கெட்டவர்களாக பார்ப்பதும் அதனூடாக எம்மை கேலிக்குள்ளாக்குவதும் தான் தொடர்கிறது. இதை ஒவ்வொரு புங்குடுதீவு மக்களும் ஏற்றுக்கொண்டாலும் அமைப்புக்களில் வந்து ஒரு சில மணித்துளிகளைக்கூட ஒதுக்க விரும்பாதவர்களாக இருப்பதையும் அதை தொடர்வதையும் நாம் பராமுகமாக கடந்து செல்லமுடியாது. அவ்வாறு கடந்து செல்வது ஊருக்கு மீளமுடியாத பெரும் அழிவையும் தவறான முன்னுதாரணத்தையும் எமக்கு மட்டுமல்ல அடுத்த சந்ததிக்கும் விதைத்த பழியைத்தரும்.

எனவே எம்மண்ணை காக்க வளம் படுத்த
எம்மிடமுள்ள பலத்தை சரியாகப்பயன்படுத்தி இந்த சந்ததி முன்னுதாரணமாக செய்வதனூடகத்தான் அடுத்த சந்ததியையும் ஓட்டத்தை தொடர வழி அமைக்க முடியும். எனவே எமது பொறுப்பை உணர்ந்து இந்த அவசர வேண்டுகோளை மிகவும் கரிசனையோடு பரிசீலித்து கூட்டத்தில் கலந்து கொள்வீர்கள் என்ற அவாவுடன் உங்களது வருகைக்காக காத்திருக்கின்றோம்.

நன்றி
நிர்வாகம்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - France

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் 27-01-2019 அன்று நடாத்தப்பட்ட அவசரப்பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அவசர அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளையும் அரவணைப்பையும் நல்கிய அனைத்து உறவுகளுக்கும் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. வழமை போலவே எமக்கு தொடர்ந்து தோள் தரும் குறிக்கப்பட்ட உறவுகளே கலந்து கொண்ட போதும் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டியதும் வராதவர்களுக்கும் எமது திட்டங்களில் சந்தர்ப்பங்கள் வழங்கப்படணும் என்பதும் பிரதானமாக பேசப்பட்டது

அந்தவகையிலே கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்படி பிரதான நிர்வாகிகளின் சிற்றுரைகளை அடுத்து ஊருக்கு சென்று நிலைமைகளை அவதானித்து வந்த அனைவரதும் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவற்றினடிப்படையில்
புங்குடுதீவிலுள்ள 12 வட்டாரங்களிலுமுள்ள பாவிக்கப்படாது மூடுண்டு போயிருக்கும் அத்தனை ஒழுங்கைகளையும் பயமின்றி மக்கள் சென்றுவரக்கூடிய வகையில் துப்பரவு செய்வதென்றும் அதனூடு கிடைக்கும் இலை குழை குப்பை மரங்களின் வெட்டப்பட்ட பகுதிகளை எமது பசளை உற்பத்தி தொழிற்சாலைக்கு பாவிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பெருமளவு தேவைப்படும் நிதிக்காக வெளிநாடுகளிலுள்ள அனைத்து ஒன்றியங்களையும் நாடுவதென்றும் அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டாலும் கூட திட்டத்தை France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தனியே செய்ய வேண்டும் என்றும் அதற்கான நிதியை நாடி France வாழ் புங்குடுதீவு மக்களை நாடி செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் இரண்டாவதாக 30 பேருக்கு வேலை வாய்ப்பை வளங்கும் நோக்கோடு அரிசிமா ஒடியல்மா மிளகாயத்தூள் மற்றும் அது போன்ற மக்கள் அன்றாடம் பாவிக்கும் பொருட்களை அரைத்து பைக்கற் செய்து விற்பதற்காகவும் அத்துடன் சேர்த்து ஆட்டுப்பண்ணை ஒன்றையும் கோழிப்பண்ணை ஒன்றையும் இணைத்து செய்யும் 30 லட்சம் ரூபா (3 மில்லியன்) திட்டம் ஒன்று ஊரிலுள்ள மக்களால் ஊருக்கு சென்று வந்தவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒன்றியத்திடம் கோரப்பட்டபோது அதை அங்கு வருகை தந்திருந்த ஆசிரியர் தம்பிராசா சங்கரராசா அவர்களும் மற்றும் தர்மலிங்கம் பாஸ்கரன் அவர்களும் சேர்ந்து அத்திட்டத்தை முழுமையாக பொறுப்பெடுத்துக்கொண்டனர்.

இவற்றை நடைமுறைப்படுத்தும் குழுவும் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது
1- திரு. சதாசிவம் வைகுந்தராசன் அவர்கள்
2- திரு. இராசலிங்கம் தமிழ்மாறன் அவர்கள்
3- ஆசிரியர் தம்பிராசா சங்கரராசா அவர்கள்

அடுத்ததாக தனிப்பட்ட வர்த்தகர்கள் ஊரில் தொழில் வாய்ப்புக்களை வளங்கவேண்டும் எமது மண்ணிலே தமது முதலீடுகளை செய்ய முன் வரவேண்டும் என்ற ஒன்றியத்தின் கோரிக்கைக்கமைய கபே பாரத் ஏகாம்பரம் மதிவதனன் அவர்களால் பெருங்காட்டிலிருந்து இறுப்பிட்டிக்கும் குறிகாட்டுவானுக்கும் வீதிகள் பிரியும் சந்தியில் தான் கேட்கும் இடத்தை எவராவது தருமிடத்து ஐரோப்பிய தரத்தில் ஒரு உணவகமொன்றை 2020 - 2021 காலப்பகுதியில் ஆரம்பித்து அங்குள்ளவர்களுக்கு பயிற்சியும் வேலை வாய்ப்பும் தர சம்மதித்தார்.

இவ்வாறாக ஒன்றியத்தின் நிர்வாகிகளின் பல எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தபடி அதே நேரம் வரமுடியாதவர்களையும் நோக்கி அடுத்த அடுத்த திட்டங்களை நகர்த்துவது என்ற முடிவோடு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
வரம்புயர வாழ்வுயரும்.

நன்றி
நிர்வாகம்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - France

 

L’image contient peut-être : 13 personnes, personnes souriantes, personnes debout
L’image contient peut-être : 22 personnes, dont Sasi Waran, Sritharan Aerembu, Nagula Nathan et Jeya Kana, personnes souriantes
 
 
1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு சுடுகாடாய் கிடக்கிறது. புங்குடுதீவு நுழைவாயிலில்.. புத்தரும்... கடற்படையும் நிற்கின்றனர்.  புங்குடுதீவு - நயினாதீவு பாதை இரு மருங்கிலும்.. பொலித்தீன் குப்பைகள் குவித்து வருகின்றன. இதனால்.. கடலும் சுற்றுச் சூழலும் மாசாகிறது. தினமும் நூற்றுக்கணக்கான சிங்களச் சுற்றுலாப் பயணிகளும்.. வெளிநாட்டு பயணிகளும்.. இந்தப் பாதையால்.. நயினாதீவு நோக்கி போவது தான் இதன் முக்கிய தாக்கம். இவர்கள் பல கிலோ கணக்கான குப்பைகளை தெருநீட்டுக்கு சகட்டு மேனிக்கி..கொட்டி விட்டுவிடுகின்றனர். 

அங்கு வாழும் மக்களில் பலர் இன்னும் வறுமைக் கோட்டில் உள்ளனர்.  தெரு ஓரத்தில் பனங்கிழங்கு அவித்து விற்றுப் பிழைக்கிறார்கள். ஆலய முகப்பொன்று மட்டும்.. புதுப்பொலிவோடு.. தெரு முகப்பில் உள்ளது. 

பல வீடுகள் உடைந்தும்.. பெரு மரங்கள் நடு வீட்டுக்குள் விருட்சமாகி நிற்கும் காட்சிகளை காணலாம், 

இடையில்.. இரணைதீவில் இருந்து நயினாதீவுக்கு நன்னீர் கொண்டு வரும் திட்டமாம் என்று.. பெரும் குழாய்கள் பொருத்தும் வேலை கடலை அண்டி நடக்கிறது. 

இந்த நிலையில்.. புலம்பெயர் புங்குடுதீவு வாழ் மக்கள்.. தங்களின் நன்கொடைகளுக்கு முகவரி இடும் வேலைகளை தான் செய்கின்றனரே தவிர.. நீண்ட கால ஒழுங்கில்.. அங்கு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு என்ன செய்யப்படுகிறது அவர்களின் வாழ்க்கை முன்னேற என்று தெரியவில்லை.

மேலும்.. புங்குடுதீவு வாழ் புலம்பெயர் சமூகம்.. முகப்பில் புத்தர் வந்து குந்தி இருப்பதை இட்டு மூச்சும் விடுவதில்லை. சகித்துப் போவதைத் தெரிந்து கொண்டிருப்பார்கள் போலும். 

மிக விரைவில்.. புங்குடுதீவு.. நயினாதீவு.. நாகதீப ஆனது போல.. புங்குடுதீப ஆகி நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

புங்குடுதீவு சுடுகாடாய் கிடக்கிறது. புங்குடுதீவு நுழைவாயிலில்.. புத்தரும்... கடற்படையும் நிற்கின்றனர்.  புங்குடுதீவு - நயினாதீவு பாதை இரு மருங்கிலும்.. பொலித்தீன் குப்பைகள் குவித்து வருகின்றன. இதனால்.. கடலும் சுற்றுச் சூழலும் மாசாகிறது. தினமும் நூற்றுக்கணக்கான சிங்களச் சுற்றுலாப் பயணிகளும்.. வெளிநாட்டு பயணிகளும்.. இந்தப் பாதையால்.. நயினாதீவு நோக்கி போவது தான் இதன் முக்கிய தாக்கம். இவர்கள் பல கிலோ கணக்கான குப்பைகளை தெருநீட்டுக்கு சகட்டு மேனிக்கி..கொட்டி விட்டுவிடுகின்றனர். 

அங்கு வாழும் மக்களில் பலர் இன்னும் வறுமைக் கோட்டில் உள்ளனர்.  தெரு ஓரத்தில் பனங்கிழங்கு அவித்து விற்றுப் பிழைக்கிறார்கள். ஆலய முகப்பொன்று மட்டும்.. புதுப்பொலிவோடு.. தெரு முகப்பில் உள்ளது. 

பல வீடுகள் உடைந்தும்.. பெரு மரங்கள் நடு வீட்டுக்குள் விருட்சமாகி நிற்கும் காட்சிகளை காணலாம், 

இடையில்.. இரணைதீவில் இருந்து நயினாதீவுக்கு நன்னீர் கொண்டு வரும் திட்டமாம் என்று.. பெரும் குழாய்கள் பொருத்தும் வேலை கடலை அண்டி நடக்கிறது. 

இந்த நிலையில்.. புலம்பெயர் புங்குடுதீவு வாழ் மக்கள்.. தங்களின் நன்கொடைகளுக்கு முகவரி இடும் வேலைகளை தான் செய்கின்றனரே தவிர.. நீண்ட கால ஒழுங்கில்.. அங்கு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு என்ன செய்யப்படுகிறது அவர்களின் வாழ்க்கை முன்னேற என்று தெரியவில்லை.

மேலும்.. புங்குடுதீவு வாழ் புலம்பெயர் சமூகம்.. முகப்பில் புத்தர் வந்து குந்தி இருப்பதை இட்டு மூச்சும் விடுவதில்லை. சகித்துப் போவதைத் தெரிந்து கொண்டிருப்பார்கள் போலும். 

மிக விரைவில்.. புங்குடுதீவு.. நயினாதீவு.. நாகதீப ஆனது போல.. புங்குடுதீப ஆகி நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 🙄

நன்றி தம்பி

ஈழத்தில்  அழிந்து போன தீவுகளின்  கிராமங்களின்   எண்ணிக்கை  கணக்கிலடங்காது

பொருளாதாரத்தை  ஓடி  ஓடும்

நகர  வாழ்வை  மையப்படுத்தி  வாழும்  வாழ்வை  தேடும்

இன்றைய  உலக  சூழலில்

ஒரு  தீவை  காத்தல்  என்பது  அவ்வளவு  இலகுவானதல்ல

அத்துடன் ஈழத்துக்கொரு  இந்தியா போல

எங்களுக்கொரு  நயினாதீவு

எங்களால்  முடிந்தவரை போராடுகின்றோம்

உயர  பாடுபடுகின்றோம்

அதுவும் புங்குடுதீவு  மக்களால் மட்டுமே இந்தளவாவது  முடிகிறது

பார்க்கலாம்

நன்றி  சென்று  பார்த்து கரிசனையுடன்  கருத்திட்டமைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

நன்றி தம்பி

ஈழத்தில்  அழிந்து போன தீவுகளின்  கிராமங்களின்   எண்ணிக்கை  கணக்கிலடங்காது

பொருளாதாரத்தை  ஓடி  ஓடும்

நகர  வாழ்வை  மையப்படுத்தி  வாழும்  வாழ்வை  தேடும்

இன்றைய  உலக  சூழலில்

ஒரு  தீவை  காத்தல்  என்பது  அவ்வளவு  இலகுவானதல்ல

அத்துடன் ஈழத்துக்கொரு  இந்தியா போல

எங்களுக்கொரு  நயினாதீவு

எங்களால்  முடிந்தவரை போராடுகின்றோம்

உயர  பாடுபடுகின்றோம்

அதுவும் புங்குடுதீவு  மக்களால் மட்டுமே இந்தளவாவது  முடிகிறது

பார்க்கலாம்

நன்றி  சென்று  பார்த்து கரிசனையுடன்  கருத்திட்டமைக்கு

புரிதலுக்கு நன்றி விசுகு அண்ணா.

எங்கள் மக்கள் பனங்கிழக்கை அவித்துவிட்டு சில நூறு ரூபாய்களுக்காக.. வீதியில் காய்ந்து கிடக்க.. சிங்களக் கடற்படை திட்டுமிட்ட மீன் பிடியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. சீருடை அணிந்த நிலையில்.. கடலில் கரை வலை போடுவதைக் காண முடிகிறது. 

இதில் வேடிக்கை என்னவென்றால்..  சுற்றுலா வரும் எம்மவர்கள்.. இறங்குதுறைகளில் கூலிங் கிளாஸோடு நின்று எம் மக்களை மேற்ப்பார்வை செய்யும் சிங்களக் கடற்படையை சிரிக்க வைப்பதில்.. அதிக கவனம் எடுப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதில் சரி தவறுக்கு அப்பால்.. ஏழ்மையோடு வாழும் எம் மக்களின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க.. ஏன் இவ்வளவு பிரயத்தனம் எடுக்கவில்லை என்பது தான் ஆதங்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

புரிதலுக்கு நன்றி விசுகு அண்ணா.

எங்கள் மக்கள் பனங்கிழக்கை அவித்துவிட்டு சில நூறு ரூபாய்களுக்காக.. வீதியில் காய்ந்து கிடக்க.. சிங்களக் கடற்படை திட்டுமிட்ட மீன் பிடியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. சீருடை அணிந்த நிலையில்.. கடலில் கரை வலை போடுவதைக் காண முடிகிறது. 

இதில் வேடிக்கை என்னவென்றால்..  சுற்றுலா வரும் எம்மவர்கள்.. இறங்குதுறைகளில் கூலிங் கிளாஸோடு நின்று எம் மக்களை மேற்ப்பார்வை செய்யும் சிங்களக் கடற்படையை சிரிக்க வைப்பதில்.. அதிக கவனம் எடுப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதில் தவறு சரிக்கு அப்பால்.. ஏழ்மையோடு வாழும் எம் மக்களின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க.. ஏன் இவ்வளவு பிரயத்தனம் எடுக்கவில்லை என்பது தான் ஆதங்கம். 

உங்களுக்கு  சொல்லணுமா?

எமது இனத்தின்  சாபக்கேடு

ஒரு வீதமே உணர்வோடு

மற்றதெல்லாம் அங்கயும் இங்கேயும்

செய்பவனை  தட்டி  விடுவதில் மட்டுமே ஒற்றுமை

பிரான்சில்  மட்டும் 5 ஆயிரத்துக்கு அதிகமான  எமது  ஊரவர்  உள்ளனர்

அவசர கூவலுக்கு  கூட 50 பேர் தான் வந்தார்கள்

ஊரின்  நிலை  எல்லோருக்கும் தெரியும்

ஊரை விடுத்து  தனித்தனியாக  தம்மை  மட.டுமே உயர்த்த  முனைபவர்களே ஏராளம்  ஏராளம்...

முகநூலில் மட்டும்  ஈழம் பிடிப்பது  மட்டுமல்ல

ஊர் பிடிப்பதும்  நடக்கிறது

பார்க்கலாம் 

எம்மால்  எந்தளவுக்கு தூக்க முடியுமோ  அதுவரை.......??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2019 at 4:50 AM, விசுகு said:

உங்களுக்கு  சொல்லணுமா?

எமது இனத்தின்  சாபக்கேடு

ஒரு வீதமே உணர்வோடு

மற்றதெல்லாம் அங்கயும் இங்கேயும்

செய்பவனை  தட்டி  விடுவதில் மட்டுமே ஒற்றுமை

பிரான்சில்  மட்டும் 5 ஆயிரத்துக்கு அதிகமான  எமது  ஊரவர்  உள்ளனர்

அவசர கூவலுக்கு  கூட 50 பேர் தான் வந்தார்கள்

ஊரின்  நிலை  எல்லோருக்கும் தெரியும்

ஊரை விடுத்து  தனித்தனியாக  தம்மை  மட.டுமே உயர்த்த  முனைபவர்களே ஏராளம்  ஏராளம்...

முகநூலில் மட்டும்  ஈழம் பிடிப்பது  மட்டுமல்ல

ஊர் பிடிப்பதும்  நடக்கிறது

பார்க்கலாம் 

எம்மால்  எந்தளவுக்கு தூக்க முடியுமோ  அதுவரை.......??

 

வரப்புயர நீர் உயரும் , நீர் உயர நெல் உயரும்  ,நெல் உயர குடி உயரும் , குடி உயர கோ உயரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.