Jump to content

யாழ்.அளவெட்டியின் இளம் விவசாயி மேலதிக பயிற்சிக்காக இந்தியா செல்கிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
January 11, 2019

agriculture.jpg?zoom=1.2100000262260437&

யாழ்.அளவெட்டியை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ள புலமை பரிசில் இந்தியாவுக்கு செல்கின்றார் என யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , அளவெட்டியை சேர்ந்த 27 வயதுடைய  மனோகரன் கோகுலன்  எனும் இளம் விவசாயி மத்திய அரசின் புலமைபரிசினை பெற்று விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற இந்தியா செல்கின்றார்.

வர்த்தக ரீதியில் மரக்கறி பயிர்செய்கை , பழ பயிர்செய்கை என்பவற்றை மேற்கொண்டு வடமாகாணத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டவர். இவர் இந்தியா சென்று விவசாய உற்பத்திகளின் நவீன உத்திகளை கற்றுகொள்ள உள்ளார்.

இளைஞர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு முன்னேறலாம் என்பதற்கு கோகுலன் முன்னுதாரணமாக உள்ளார் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2019/109623/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை பசேல் என மேலே படத்தில் இருப்பது இவரிண்ட காணியா தெரியவில்லை .. நல்லா வடிவா யூரியா , பூச்சிமருந்து தெளிக்க சொல்லி கொடுப்பீனம் .. ஐயோ பாவம்  .. 😔

Tamil_DailyNews_5696483850480.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலை மூடி அதுக்கு மேலை மாடிவீடுகள் எப்படி கட்டலாம் எண்டு படிப்பிக்காவிட்டால் சந்தோசம். tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வயலை மூடி அதுக்கு மேலை மாடிவீடுகள் எப்படி கட்டலாம் எண்டு படிப்பிக்காவிட்டால் சந்தோசம். tw_glasses:

எங்களுக்கு வீடு கார் பங்களாதான் வேணும் சோறு வேணாமுங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.