Jump to content

இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….

January 10, 2019

LTTE-NEW.png?resize=800%2C480

பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தி தாக்கியதுடன், அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர். இவை உள்ளிட்ட 37 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டிருந்தன. கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2019/109546/

Link to comment
Share on other sites

35 minutes ago, கிருபன் said:

 

185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன் அர்த்தம் இவர்கள் 5 வருடங்களில் விடுவிக்கப்படுவர் என்பதா? அவ்வாறெனில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

இதன் அர்த்தம் இவர்கள் 5 வருடங்களில் விடுவிக்கப்படுவர் என்பதா? அவ்வாறெனில் சந்தோசம்.

இந்த மொழிபெயர்ப்புகளை எல்லாம் நம்பாதீங்கோ தல ...

யாரோ ஒருவர் தனது அமைச்சு விபரங்களை ஆராய (அமைச்சர்) சந்திரிகா முல்லைத்தீவு வந்தார் என்று சொன்னாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருடத்திற்கு மேல் தண்டனை இருக்காது. ஆனால் 2012 இல் கைது செய்யப்பட்டமையால் ஐந்து வருடங்கள் தாண்டியிருக்குமே. அதனால் இப்போதே வெளியில் விட்டால் என்ன?🤔

 

The Attorney General had indicted the two suspects each separately on 37 counts and the suspects pled guilty to all 37 charges today.

The Judge ordered five years of rigorous imprisonment for each count, a total of 185 years for each suspect to be served in five years. 

The two LTTE suspects arrested in 2012 in Kilinochchi had revealed that the rebels had fired missiles towards the aircraft from Wilpattu jungles. The Police had recovered parts of the missiles used in the attack.

 

http://www.colombopage.com/archive_19A/Jan10_1547138342CH.php

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருவருக்கு 185 வருட கடூழியச் சிறை

Editorial / 2019 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை, மு.ப. 09:23

பாதுகாப்புத் தரப்பினர் பயணித்த அன்டனோவ் 32 ரக பயணிகள் விமானம் மீது, ஏவுகணைத் தாக்குதல் நடத்தி, அதில் பயணித்த 32 படையினரைக் கொலை செய்தார்கள் என்ற குற்றத்துக்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏவுகணைப் பிரிவு முக்கியஸ்தர்கள் இருவருக்கு, ஐந்து வருடங்கள் அனுபவிக்கும் வகையில், 185 வருடகால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன், நேற்று (10) தீர்ப்பு வழங்கினார்.   

கடந்த 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் தாக்குதலானது, பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானையிலுள்ள விமானப் படைக்குச் சொந்தமான விமான நிலையத்தை நோக்கி, படையினரை ஏற்றிக்கொண்டுப் பயணித்த விமானம் மீதே, வில்பத்து சரணாலயப் பகுதியில் வைத்து, இந்த ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.   

இது தொடர்பில், மேற்படி இருவரும், கடந்த 2010ஆம் ஆண்டில், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்டெல்லா ரக ஏவுகணைத் தாக்கி மற்றும் அதற்குப் பொருத்தப்படும் ஸ்டெல்லா ரக ஏவுகணைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், மேற்படி இருவரும், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நேற்றைய தினம், தீர்ப்பு வழங்கப்பட்டது.   

மேற்படி குற்றவாளிகள் இருவரும், சுமார் 8 வருடகாலம், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் காலப்பகுதியையும் கருத்திற்கொண்டே, அவர்கள் இருவருக்கும், ஐந்து வருடங்கள் மாத்திரமே அனுபவிக்கக்கூடிய வகையில், 185 வருடகால கடூழியச் சிறைத் தண்டனையை விதிப்பதாக, நீதிபதி தீர்ப்பளித்தார்.    

 

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/புலிகள்-இருவருக்கு-185-வருட-கடூழியச்-சிறை/175-227848

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா?

ஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா?

Link to comment
Share on other sites

8 hours ago, colomban said:

இங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா?

ஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா?

Quote

அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர். 

பாதுகாப்பு படையினர் எத்தனை கிளஸ்ரர் குண்டுகளை போட்டு எத்தனை தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற கணக்கும் உள்ளதே. அதற்கென்ன பதில் உங்களிடமுண்டு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

இங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா?

ஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா?

 

1 hour ago, nunavilan said:

பாதுகாப்பு படையினர் எத்தனை கிளஸ்ரர் குண்டுகளை போட்டு எத்தனை தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற கணக்கும் உள்ளதே. அதற்கென்ன பதில் உங்களிடமுண்டு??

கொழும்பான்...  கேட் ட  கேள்விக்கு,  நுணாவிலானிடமிருந்து... வந்த பதில் அருமை.
அவருக்கு... இராணுவத்திடமிருந்த  அக்கறையை... 
அப்பாவி தமிழ் மக்கள் மீது, காட்டத்  தோன்றவில்லை, என்பது கவலையான விடயம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

 

கொழும்பான்...  கேட் ட  கேள்விக்கு,  நுணாவிலானிடமிருந்து... வந்த பதில் அருமை.
அவருக்கு... இராணுவத்திடமிருந்த  அக்கறையை... 
அப்பாவி தமிழ் மக்கள் மீது, காட்டத்  தோன்றவில்லை, என்பது கவலையான விடயம்.  

தமிழர்களை இந்த நாட்டு பிரஜையாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையே அப்படீருக்க எப்படி கவலை வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்களை இந்த நாட்டு பிரஜையாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையே அப்படீருக்க எப்படி கவலை வரும் 

தமிழர்களை.... சிங்கள நாட்டு பிரஜைகளாக   என்றுமே..   ஏற்றுக் கொள்ள மாட் டார்கள்,
என்று தெரிந்துதானே...  பல வடிவ, போராட்டங்களை  தமிழர்கள் நடத்தினார்கள்.
அது கூட... அவருக்கு,  மறந்து விட்டதா?  

இராணுவம்  செத்தது என்றது தான்... பலருக்கு, இப்ப கவலையாக இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவரும் இராணுவம் பயணித்த விமானத்தைச் சுட்டது உண்மையானால் அது யுத்த காலத்தில் நடந்தது என்று புனர்வாழ்வோடு விடுதலை செய்திருக்கவேண்டும்.

சரணடைந்தவர்களை படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினரும், உத்தரவு கொடுத்தவர்களும்  தேசியவீரர்களாக இருக்கும் நாட்டில் ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க தமிழ் அரசியல்தலைமைகள் உதவாமல் இருப்பதும் இழிவானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

பாதுகாப்பு படையினர் எத்தனை கிளஸ்ரர் குண்டுகளை போட்டு எத்தனை தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற கணக்கும் உள்ளதே. அதற்கென்ன பதில் உங்களிடமுண்டு??

 

நான் ஒர் உதாரணத்துக்கு எழுதியதை தூக்கிப்பிடித்து கொண்டு இரணுவத்திற்கு இறந்ததிற்கு கவலப்ப்டுகின்றேன் என எழுதியுள்ளீர்கள்.

இருபக்க அடிபாடுகளில் இறந்த்து அப்பாவி மக்களே அதை முதலில் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 

Link to comment
Share on other sites

மேற்கூறிய தாக்குதலில் இறந்தவர்கள்  விமானப்படையினர் மட்டுமே. விமானப்படையின் தாக்குதலில் இறந்தவர்கள் மக்கள் மட்டுமே. தூக்கிப்பிடிக்க என்ன உள்ளது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2019 at 9:32 PM, கிருபன் said:

இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….

 

12 hours ago, colomban said:

இங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா?

ஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா?

 

21 minutes ago, colomban said:

நான் ஒர் உதாரணத்துக்கு எழுதியதை தூக்கிப்பிடித்து கொண்டு இரணுவத்திற்கு இறந்ததிற்கு கவலப்ப்டுகின்றேன் என எழுதியுள்ளீர்கள்.

இருபக்க அடிபாடுகளில் இறந்த்து அப்பாவி மக்களே அதை முதலில் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 

கொழும்பான்.... தயவு செய்து  மீண்டும் ஒரு முறை தலைப்பு செய்தியை... பார்த்து விட்டு,
நீங்கள் எழுதிய கருத்தை... வாசித்துப் பாருங்கள்.
அதனை... வாசிக்கும், எல்லோருக்கும்... நீங்கள் இராணுவத்துக்கு, வக்காலத்து... வாங்கும் தொனியே... மேலோங்கி நிற்பதை உணர்வீர்கள்.

நீங்கள்... சொல்ல வந்த விடயத்தை, உங்கள் எழுத்தில்... கொண்டு வர முடியவில்லை என்று நினைக்கின்றேன்.

ஏனென்றால்....  உங்கள் இரண்டாவது பதிவிலும்,
//இருபக்க அடிபாடுகளில் இறந்தது அப்பாவி மக்களே//.....    என்று நீங்கள்  எழுதும் போது....
ஈழ விடுதலைப்  போரில்....  அதிகம்  கொல்லப் பட்ட அப்பாவி மக்கள், யார் என்பதை... உங்கள் எழுத்தில் வாசிக்க, ஆவலாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபக்க அடிபாடுகள் என்று தமிழ்-முஸ்லிம் அடிபாடுகளை கொழும்பான் குறிப்பிடுகின்றார் போலுள்ளது. இடையில் விமானத்தில் பயணித்த அப்பாவி படையினர் கொல்லப்பட்டுள்ளதால் விமானத்தைச் சுட்டுவிழுத்திய இருவரும் தலா 185 வருடங்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்லவந்தாரோ தெரியவில்லை🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொழும்பான் இறந்த விமானப்படை வீரர்கள் மேல் கவலைப்பட்டு எழுதியதாகத் தெரியவில்லை. மாறாக, 185 வருடங்களை இறந்த 37 படையினரால் பிரித்து 5 ஆண்டுகளா என்று கேட்டதாகவே படுகிறது. அநியாயத்திற்கு கொழும்பானைச்  சாட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ragunathan said:

எனக்கு கொழும்பான் இறந்த விமானப்படை வீரர்கள் மேல் கவலைப்பட்டு எழுதியதாகத் தெரியவில்லை. மாறாக, 185 வருடங்களை இறந்த 37 படையினரால் பிரித்து 5 ஆண்டுகளா என்று கேட்டதாகவே படுகிறது. அநியாயத்திற்கு கொழும்பானைச்  சாட வேண்டாம்.

 

நன்றி கடவுளே....  நன்றி..இதைத்தானே சொல்லவந்தேன்.
கையெடுத்து கும்புடுகிறேன் நீங்களாவது என்னை புரிந்து கொண்டதற்கு. ஆங்கிலத்தில் each count என்று இருக்கு.  எனவே இது 5ஆ அல்லது 185 ஆ என தெளிவுவாகவே விளங்கிகொள்ளவே இப்படி எழுதினேன்.

தானே எதோ நினத்து சிங்கள ஆமிக்கு கவலப்படுகின்றேன் என கேட்கின்றீர்கள்?. 

10 hours ago, கிருபன் said:

விமானத்தைச் சுட்டுவிழுத்திய இருவரும் தலா 185 வருடங்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்லவந்தாரோ தெரியவில்லை🤔

இதைத்தானே சொல்லவந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, colomban said:

 

நன்றி கடவுளே....  நன்றி..இதைத்தானே சொல்லவந்தேன்.
கையெடுத்து கும்புடுகிறேன் நீங்களாவது என்னை புரிந்து கொண்டதற்கு. ஆங்கிலத்தில் each count என்று இருக்கு.  எனவே இது 5ஆ அல்லது 185 ஆ என தெளிவுவாகவே விளங்கிகொள்ளவே இப்படி எழுதினேன்.

தானே எதோ நினத்து சிங்கள ஆமிக்கு கவலப்படுகின்றேன் என கேட்கின்றீர்கள்?. 

185 வருடம் சிறைத்தண்டனை கொடுப்பது சரியென்று நினைத்தால் இராணுவத்திற்காக கவலைப்படுவதாகத்தானே அர்த்தம்.

யுத்தம் முடிந்து 10 வருடங்கள் ஆகிவிட்டமையால் அவர்கள் ஏற்கனவே சிறையிருந்த காலத்தைக் கணக்கில் வைத்து உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கவேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நடந்தது யுத்தத்தில்.

அந்த தனி நபர்கள் திட்டமிட்டது அல்ல.

சொறி சிங்களத்தின் வழமையான அநீதி.

Link to comment
Share on other sites

இவர்களை மனிதாபிமான அடிப்படையில், வெளியில் விடுவதுதான் நல்லது.

இவர்களைவிட, கருணா இலங்கை இராணுவத்திற்கு மோசமான உயிர் அழிவுகளை ஏற்படுத்தினார்.

கருணா எல்லாம் உல்லாசமாகத் திரிய, இவர்கள் மட்டும் உள்ளே சிறைவாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

இவர்களை மனிதாபிமான அடிப்படையில், வெளியில் விடுவதுதான் நல்லது.

இவர்களைவிட, கருணா இலங்கை இராணுவத்திற்கு மோசமான உயிர் அழிவுகளை ஏற்படுத்தினார்.

கருணா எல்லாம் உல்லாசமாகத் திரிய, இவர்கள் மட்டும் உள்ளே சிறைவாசம்.

கர்ணாவும் அரசாங்கத்தின் காய்தான் நேரம் கிடைக்கும் போது உள்ளே வைத்திடும்  

22 hours ago, தமிழ் சிறி said:

இராணுவம்  செத்தது என்றது தான்... பலருக்கு, இப்ப கவலையாக இருக்கு. 

ம்ம் என்ன செய்வது இன்னும் நாள் ம்ம்ம் இல்லை இனி புலிகள் குற்றவாளிகள் என்று குற்றம் சொல்ல வெளிக்கிட்டார்கள் 

Link to comment
Share on other sites

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

ம்ம் என்ன செய்வது இன்னும் நாள் ம்ம்ம் இல்லை இனி புலிகள் குற்றவாளிகள் என்று குற்றம் சொல்ல வெளிக்கிட்டார்கள் 

இராணுவம் மட்டுமல்ல, புலிகளும் குற்றவாளிகள் என்று ஐ.நாவே சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

இராணுவம் மட்டுமல்ல, புலிகளும் குற்றவாளிகள் என்று ஐ.நாவே சொல்கிறது.

சுமந்திரனும் மாவை அப்பும் சொல்கிறார்கள் குற்றம் புலிகள் குற்ற வாளிகள் என

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சுமந்திரனும் மாவை அப்பும் சொல்கிறார்கள் குற்றம் புலிகள் குற்ற வாளிகள் என

சுமந்திரன் சொன்னால், ஐ.நா சொன்னது போலத்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.