Jump to content

ரஜினிகாந்துடன் கூட்டணியா? - பிரதமர் நரேந்திர மோதி அளித்த பதில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
Narendra Modi நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமை Getty Images

மக்களுடன் வைக்கும் கூட்டணிதான் வெற்றிகரமான கூட்டணி என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறி உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக இன்று (வியாழக்கிழமை) உரையாற்றினார் நரேந்திர மோதி. இதில் அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதில் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கேட்ட கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணிக்கான நமது கதவுகள் திறந்தே உள்ளன என பதில் அளித்து உள்ளார்.

'ரஜினிவுடன் கூட்டணி'

ரஜினி, அதிமுக ஏன் திமுகவுடன் கூட பா.ஜ.க கூட்டணி வைக்க உள்ளது என்பது போன்ற செய்திகள் உலவுகின்றவே என்ற கேள்விக்கு மோதி சிரித்தப்படி பதில் அளிக்க தொடங்கினார்.

அவர், "இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பேயி வெற்றிகரமான கூட்டணி அரசியலை முன்னெடுத்தார். அதுவரை காங்கிரஸ், மாநில கட்சிகளின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்தது. அவர்களை மிக மோசமாக கூட நடத்தியது. திமிர்தனத்துடன் நடந்து கொண்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி மாநில கட்சிகளை மதித்தது" என்றார்.

மேலும் அவர், "நாம் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பின்னரும் கூட, கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டுதான் ஆட்சி அமைத்தோம். எப்போதும் நம் கதவுகள் கூட்டணி கட்சிகளுக்காக திறந்தே உள்ளன. இதையெல்லாம் கடந்து மக்களுடனான கூட்டணிதான் நம்பிக்கையான கூட்டணி" என்று பதில் அளித்துள்ளார்.

இறுதிவரை அந்த கேள்விக்கு நேரடியான பதிலை அளிக்கவில்லை.

'நமோ செயலி'

மற்றொரு கேள்விக்கு, "இந்த நூற்றாண்டு தகவல்களின் நூற்றாண்டு. இரண்டு தசாப்தங்களுக்கு முன் தகவலை தெரிந்து கொள்வதற்கும், அதை மக்களிடம் கொண்டு சேர்பதற்கும் மிகவும் சிரமப்பட்டோம். ஆனால், இப்போது சமூக ஊடகங்கள் உள்ளன. மக்கள் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன." என்றார்.

Modi மோதிபடத்தின் காப்புரிமை Getty Images

அவர், "நமோ செயலியை பாருங்கள். அதில் ஒலி, ஒளி, வரைகலை என பல்வேறு சுவாரஸ்யமான வடிவங்களில் தகவல்களை தருகிறோம். அதனை மக்களிடம் கொண்டு சேருங்கள்" என்று கூறினார்.

'தமிழகத்திற்கு செய்தவை'

தமிழகத்திற்கு பல்வேறு நலதிட்டங்களை பா.ஜ.க செயல்படுத்தியதாக மோதி பட்டியலிட்டார்.

அவர், "உள்கட்டமைப்பு, முதலீடு, சமூக நலம் என பல்வேறு விஷயங்களை பா.ஜ.க செயல்படுத்தி உள்ளது. நாம் செய்தது போல, வேறு எந்த கட்சிகளும் தமிழகத்திற்கு செய்யவில்லை" என்றார்

தமிழகத்தில் 47 லட்சம் கழிப்பறைகளை கட்டி உள்ளோம். திறந்து வெளியில் மலம் கழிப்பதை 12 ஆயிரம் கிராமங்களில் முற்றும் முழுவதுமாக ஒழித்துள்ளோம். 3000 கி.மீ நீளத்திற்கு கிராம சாலைகளை தமிழகத்தில் போட்டுள்ளோம். உஜ்வாலா திட்டத்தினால் 27 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். திறன் மேம்பாட்டு பயிற்சியை 4 லட்சம் இளைஞர்களுக்கு அளித்துள்ளோம். 4 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு கிடைத்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 70 ஆயிரம் பேர் மோதிகேர் திட்டத்தினால் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். சாகர் மாலா திட்டத்தின் கீழ் 3 பெரிய துறைமுகங்களை கட்டுகிறோம். தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனையெல்லாம் மக்களிடம் கொண்டு சேருங்கள். அவர்களின் நம்பிக்கையை வளர்த்தெடுங்கள்" என்று கூறினார்.

'அந்நிய சக்திகள்'

இந்திய பாதுகாப்புத் துறை குறித்து பேசிய மோதி, இந்திய பாதுகாப்புத் துறை வலிமையடைவதை அந்நிய சக்திகள் விரும்பவில்லை என்று பா.ஜ.க செயற்பாட்டாளர்கள் மத்தியில் பேசினார்.

Modi மோதிபடத்தின் காப்புரிமை Getty Images

நமது வீரர்களுக்கு ஆதரவு தேவைப்படும்போது, என்னால் அமைதியாக உட்கார்ந்து இருக்க முடியாது. நமது வீரர்களின் கரங்களை நான் வலுப்படுத்துவேன் என்றார்.

காங்கிரஸை கடுமையாக சாடிய அவர், "பொருளாதாரத்தில் மட்டும் இந்தியா தோல்வியடையவில்லை, பாதுகாப்புத் துறையிலும் மோசமாக செயல்பட்டது. தங்களுக்கு ஏதாவது பலன் இருந்தால் மட்டுமே, காங்கிரஸ் ஆயுதங்களை கொள்முதல் செய்தது.பக்கத்து நாடுகள் எல்லாம் விமானபடைக்காக விமானங்களை வாங்கி படை வலிமையை அதிகரித்தபோது, நாம் இருப்பதையும் இழந்தோம்." என்று கூறினார்

https://www.bbc.com/tamil/india-46825540

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.