Jump to content

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில்


Recommended Posts

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில்

 

sri-lankan-parliament-300x199.jpgபுதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை நாளை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10.30 மணியளவில் அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது.

புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது சபையில் சமர்ப்பிப்பார்.

அரசியல் கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருக்கும்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளிநாடு சென்றுள்ளதால், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், அரசியலமைப்புச் சபையின் கூட்டம் இடம்பெறும்.

நாளை பிற்பகல் 12.30 மணிவரை அரசியலமைப்பு சபையின் கூட்டம் இடம்பெறும்.

இதன்போது, நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக, கட்சித் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

பேராசிரியர் சூரி ரத்னபால தலைமையிலான 10 பேர் கொண்ட நிபுணர் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

பேராசிரியர் ஒஸ்ரின் புள்ளே, பேராசிரியர் நவரத்ன பண்டார, கலாநிதி என்.செல்வக்குமரன், பேராசிரியர் கமீன குணரத்ன, பேராசிரியர் கபில பெரேரா, சுரேன் பெர்னான்டோ, நிரன் அங்கெரெல், அசோக குணவர்த்தன, சமிந்ரி சமரமடு ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2019/01/10/news/35806

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

பேராசிரியர் ஒஸ்ரின் புள்ளே, பேராசிரியர் நவரத்ன பண்டார, கலாநிதி என்.செல்வக்குமரன், பேராசிரியர் கமீன குணரத்ன, பேராசிரியர் கபில பெரேரா, சுரேன் பெர்னான்டோ, நிரன் அங்கெரெல், அசோக குணவர்த்தன, சமிந்ரி சமரமடு ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதில உருப்படியான தமிழர் ஒருத்தரையும் காணேல! .செல்வக்குமரன் ஒராள் காணாது!

நிபுணர் குழுவின் அறிக்கை என்டு காலத்தை கடத்த போகினம்.

இதைத் சுமந்திரன் அரசியல் தீர்வு என்டு சொல்லி மக்களை ஏமாற்ற நினைச்சாரோ?

Link to comment
Share on other sites

2 hours ago, Rajesh said:

இதில உருப்படியான தமிழர் ஒருத்தரையும் காணேல! .செல்வக்குமரன் ஒராள் காணாது!

நிபுணர் குழுவின் அறிக்கை என்டு காலத்தை கடத்த போகினம்.

இதைத் சுமந்திரன் அரசியல் தீர்வு என்டு சொல்லி மக்களை ஏமாற்ற நினைச்சாரோ?

தடல்புடலாக  ஒரு ஆணைக்குழுவை உருவாக்கி அதில் எல்லோரையும் சாட்சியம் அளிக்க வைத்து  கடைசியில் புஸ்வாணம் ஆனது   நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்புச் சபை நாளை காலை 10.00 மணிக்கு பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது. 

parliment.jpg

இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்ட - தீர்வுக்கான சகல ஆவணங்களும் இரண்டு தொகுதிகளாக அரசமைப்புப் பேரவை உறுப்பினர்களான சகல எம்.பிக்களுக்கும் நாளைய தினம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/47894

நாளை வேண்டாம் என்றது எதிரணி : நாளை கட்டாயம் கூடும் என திட்டவட்டமாக அறிவித்தார் பிரதி சபாநாயகர் 

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பு  சபையை நாளைய தினம் கூட்டுவதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய போதிலும் அதனை நிராகரித்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ, ஏற்கனவே அறிவித்தபடி அரசியலமைப்பு சபை நாளை வெள்ளிக்கிழமை கூடுமென்பதை உறுதிப்படுத்தினார்.

parliment.jpg

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போது அரசிலமைப்பு சபை நாளை   வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு  கூடுமென பிரதி சபாநாயகர் அறிவித்தார். 

கட்சி தலைவர் கூட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட  பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாளை காலை  அரசியல் அமைப்பு சபை கூடும் என குறிப்பிட்டார். 

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்ச்சி உறுப்பினர் விமல் வீரவன்ச எம்.பி:- அரசியல் அமைப்பு சபை கூடுவது என்றால் மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும். 

ஆனால் மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்காது இன்று  கூறுகின்றீர்கள் நாளை அரசியல் அமைப்பு சபை கூடுமென. ஆகவே இது பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும் எனவே இன்று கூறி நாளை  அரசியலமைப்பு சபையை கூடட முடியாது என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர்,நேற்று  கூடிய கட்சி தலைவர் கூட்டத்தின் பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாளை  அரசியல் அமைப்பு சபை கூடும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனையே நான் கூறுகிறேன் என்றார். 

http://www.virakesari.lk/article/47887

Link to comment
Share on other sites

 

9 hours ago, nunavilan said:

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில்

பேராசிரியர் ஒஸ்ரின் புள்ளே, பேராசிரியர் நவரத்ன பண்டார, கலாநிதி என்.செல்வக்குமரன், பேராசிரியர் கமீன குணரத்ன, பேராசிரியர் கபில பெரேரா, சுரேன் பெர்னான்டோ, நிரன் அங்கெரெல், அசோக குணவர்த்தன, சமிந்ரி சமரமடு ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பிள்ளைக்கு நிலாவைக் காட்டி சோறுட்டுவதுபோல் தமிழருக்கு இந்த தமிழ் நிபுணரைக் காட்டி சிங்களம் தனக்குச் சார்பான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளும்.  

Link to comment
Share on other sites

On 1/10/2019 at 9:10 PM, nunavilan said:

தடல்புடலாக  ஒரு ஆணைக்குழுவை உருவாக்கி அதில் எல்லோரையும் சாட்சியம் அளிக்க வைத்து  கடைசியில் புஸ்வாணம் ஆனது   நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

அதே கதி தான் இதுக்கும்!
வாலறுந்த நரிக் கதை மாதிரி.

Link to comment
Share on other sites

On 1/10/2019 at 4:52 PM, Paanch said:

 

பிள்ளைக்கு நிலாவைக் காட்டி சோறுட்டுவதுபோல் தமிழருக்கு இந்த தமிழ் நிபுணரைக் காட்டி சிங்களம் தனக்குச் சார்பான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளும்.  


தமிழ் நிபுணர்கள் ஒருபோதும், இலங்கை அரசின் புதிய அரசிலமைப்பை உதாசீனம் செய்யமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

17 hours ago, thulasie said:


தமிழ் நிபுணர்கள் ஒருபோதும், இலங்கை அரசின் புதிய அரசிலமைப்பை உதாசீனம் செய்யமாட்டார்கள்.

ஒரு தாய், தான் பெற்றெடுத்த அனைத்துக் குழந்தைகளிடமும், எந்த வேறுபாடுமின்றி அன்பைப் பொழிந்து வாழவைப்பாள். தன்துன்பம் நோக்கமாட்டாள்.

தமிழ் நிபுணர்களையும் தாய்க்கு ஒப்பிடலாம்போல் தெரிகிறது! அவர்களின் தாய் தமிழல்லவா. 

தமிழ்! மொழிகளுக்கெல்லாம் தாய்.!! 

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

ஒரு தாய், தான் பெற்றெடுத்த அனைத்துக் குழந்தைகளிடமும், எந்த வேறுபாடுமின்றி அன்பைப் பொழிந்து வாழவைப்பாள். தன்துன்பம் நோக்கமாட்டாள்.

தமிழ் நிபுணர்களையும் தாய்க்கு ஒப்பிடலாம்போல் தெரிகிறது! அவர்களின் தாய் தமிழல்லவா. 

தமிழ்! மொழிகளுக்கெல்லாம் தாய்.!! 

தமிழ் நிபுணர்களின் தாய் தமிழ்.

தமிழ் நிபுணர்களின் தாய் நாடு, சிங்கள இலங்கை.

சிங்கள இலங்கையின் புதிய அரசியலமைப்பை, தமிழ் நிபுணர்களின் தாய் மனங்கள் ஒருபோதும் நிராகரிக்காது.

Link to comment
Share on other sites

20 hours ago, thulasie said:

தமிழ் நிபுணர்களின் தாய் தமிழ்.

தமிழ் நிபுணர்களின் தாய் நாடு, சிங்கள இலங்கை.

சிங்கள இலங்கையின் புதிய அரசியலமைப்பை, தமிழ் நிபுணர்களின் தாய் மனங்கள் ஒருபோதும் நிராகரிக்காது.

இலங்கைத் தமிழர்களின் தாய்நாடு இலங்கைதான். பெரும்பான்மை என்ற பொறிக்குள் சிக்கி தமிழர்கள் உரிமையின்றி இருப்பதால் தமிழர்களின் தாய்நாடு சிறீ லங்கா என்று ஆகிவிடாது. 

Link to comment
Share on other sites

7 minutes ago, Paanch said:

இலங்கைத் தமிழர்களின் தாய்நாடு இலங்கைதான். பெரும்பான்மை என்ற பொறிக்குள் சிக்கி தமிழர்கள் உரிமையின்றி இருப்பதால் தமிழர்களின் தாய்நாடு சிறீ லங்கா என்று ஆகிவிடாது. 


 

 

அதனால்தான்,   தற்போது, 'ஒருமித்த நாடு' என்று சொல்லுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, thulasie said:

அதனால்தான்,   தற்போது, 'ஒருமித்த நாடு' என்று சொல்லுகிறார்கள்.

எங்களின்ற சுத்துமாத்து கொம்பனியும் சொல்லுது ஒரு நாடு  தான் என்று :grin:

Link to comment
Share on other sites

Just now, தனிக்காட்டு ராஜா said:

எங்களின்ற சுத்துமாத்து கொம்பனியும் சொல்லுது ஒரு நாடு  தான் என்று :grin:


பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவர்தான் இப்போதைக்கு தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, thulasie said:


பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவர்தான் இப்போதைக்கு தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்.

கொஞ்சம் பொறுங்கோ தலையை அறுக்கிறன் வலியை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதைப்போல என்ன அப்படித்தானே :27_sunglasses:

Link to comment
Share on other sites

5 minutes ago, thulasie said:


பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவர்தான் இப்போதைக்கு தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்.

இதுவும் கடந்துபோகும். மாற்றம் ஒன்றே மாறாதது. :rolleyes:

Link to comment
Share on other sites

13 minutes ago, Paanch said:

இதுவும் கடந்துபோகும். மாற்றம் ஒன்றே மாறாதது. :rolleyes:



 

மாற்றமும் நிலைப்பதில்லை.

அதுவும் கடந்து போகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.