Jump to content

பேட்ட திரை விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நடிகர் ரஜினிகாந்த்
நடிகை சிம்ரன்
இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ்
இசை அனிருத் ரவிச்சந்தர்
ஓளிப்பதிவு திரு
 
 
ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் பாபி சிம்ஹா. கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அராத்து பண்ணுகிறார். இந்த கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூரியையே மிரள வைக்கிறார். 
 
இவ்வாறாக பேட்ட ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபி, சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணுகிறார். இதற்கிடையே நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றுகிறார்.
 
201901101102043478_1_Petta%20Review4._L_
 
இவ்வாறாக தனது பேட்டயை விட்டுவிட்டு, வார்டனாக வரும் ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றினாரா? ரஜினி ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? அதன் பின்னணியில் என்ன? நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
சூப்பர் ஸ்டார் என்பது வெறும் வார்த்தை இல்லை என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார் ரஜினி. பயமறியா சிங்கமாக, படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்து ரசிக்க வைத்துச் செல்கிறார். பழைய ரஜினியை பார்க்க ஆசைப்படுவோருக்கு இந்த படம் ஒரு மெகா விருந்து என்று தான் சொல்ல வேண்டும். கிராமத்து கெட்-அப், இளமையான தோற்றம் என மாஸ் காட்டிச் செல்கிறார்.
 
201901101102043478_2_Petta%20Review1._L_
 
நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் நண்பனாக சசிகுமார் மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார். சிம்ரன், திரிஷா ரஜினி ஜோடியாக முதல்முறை திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் கொஞ்சும் பேச்சில் ரசிகர்களின் இதங்களை கொள்ளை அடிக்கிறார். மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம். படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்.
 
கல்லூரியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் காட்சி, ரஜினியிடம் அடங்கும் காட்சி என பாபி சிம்ஹா சிறப்பாக நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அழகாக வந்து செல்கிறார். கதையின் ஓட்டத்திற்கு சனத் ரெட்டி முக்கிய காரணமாக வருகிறார். முனிஸ்காந்த், நரேன், ராமசந்திரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.
 
201901101102043478_3_Petta-Review8._L_st
 
தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை கார்த்திக் சுப்புராஜ் அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார். ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கு பாராட்டுக்கள். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை கார்த்திக் சுப்புராஜ் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார். ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். எனினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். சிறப்பான முயற்சி.
 
201901101102043478_4_Petta-Review7._L_st
 
அனிருத் இசையில் பாடல்கள் வேற லெவல். பின்னணி இசையின் மூலம் ரஜினியிசத்தை உணர வைக்கிறார். திருவின் ஒளிப்பதிவு அபாரம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்ட - சினிமா விமர்சனம்

முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்
 
 
பேட்ட - சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமை Twitter
   
திரைப்படம் பேட்ட
   
நடிகர்கள் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், மகேந்திரன், முனீஸ்காந்த், பாபி சிம்ஹா, நரேன்
   
இசை அனிருத்
   
இயக்கம் கார்த்திக் சுப்புராஜ்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஏப்ரலுக்குள் ரஜினி நடித்து வெளிவரும் மூன்றாவது திரைப்படம் இது. 90களின் ரஜினியை மீண்டும் ரசிகர்களுக்குக் காட்ட நினைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பழைய பகையை நாயகன் நீண்டகாலத்திற்குப் பிறகு ஒழித்துக்கட்டுவதுதான் படத்தின் 'ஒன் - லைன்'.

 

ஒரு மலைவாசஸ்தலத்தில் இருக்கும் கல்லூரியின் வார்டனாக வருகிறார் காளி (ரஜினி). அந்தக் கல்லூரி விடுதியில் நடக்கும் அநியாயங்களை சரிசெய்வதோடு, அங்கே ரவுடித்தனம் செய்பவர்களையும் அடக்குகிறார் மனிதர். அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஒரு காதல் ஜோடியை பிரிக்க மூன்றாமாண்டு மாணவன் ஒருவன் முயற்சி செய்ய காதல் ஜோடியை பாதுகாக்க ஆரம்பிக்கிறார் காளி. ஆனால், திடீரென வடநாட்டு கும்பல் ஒன்று காளியையும் அந்த இளைஞனையும் கொல்ல முயல்கிறது. சம்பந்தமில்லாமல் வடநாட்டிலிருந்து வரும் கும்பல் ஏன் காளியைக் கொல்ல முயல்கிறது, காளிக்கும் அந்த கல்லூரி இளைஞனுக்கும் என்ன தொடர்பு என்பது மீதிக் கதை.

சந்தேகமேயில்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் படம்தான். சீரியஸாக ஏதோ செய்யப்போகும் எந்த பாவனையுமின்றி தன் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ, அதைச் செய்திருக்கிறார் ரஜினி. படத்தின் துவக்ககாட்சியிலிருந்து படத்தின் க்ளைமாக்ஸ் வரை அவரது நடிப்பும் மேனரிசமும் ரசிகர்களை வெகுவாகக் கவரக்கூடும்.

 
பேட்ட - சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமை SUN PICTURES

கதாநாயகிகளாகவரும் சிம்ரனுக்கும், த்ரிஷாவுக்கும் அதிக காட்சிகள் இல்லை. இதில் சிம்ரன், தான் வரும் ஒரே காட்சியில் ஜொலிக்கிறார்.

பிரதான வில்லனாக வரும் நவாஸுதீன் சித்திக் மிகப் பிரமாதமான நடிகர். ஆனால், இந்தப் படத்தில் ஒரு வழக்கமான ரஜினி பட வில்லன். அதிலும், "என்னடா இன்னும் அவனை கொல்லலையா?" என்று கேட்கும் பழைய பாணி வில்லன். பல படங்களில் சிறிய பாத்திரங்களில்கூட அசரவைத்திருக்கும் நவாஸுதீன் இதில் சற்று ஏமாற்றமளிக்கிறார்.

படத்தின் முற்பாதியில் அதிகம் தலைகாட்டும் பாபி சிம்ஹாவும் பிற்பாதியில் அதிக நேரம் வரும் விஜய் சேதுபதியும் கொடுத்த பாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை எல்லாப் பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப் படத்தில் அப்படியில்லை.

இந்தப் படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதியைவிட சிறப்பானது. படத்தின் துவக்கத்தில் கதவைத் திறந்துகொண்டு நுழையும் ரஜினி, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அதிரடியாகப் பாய்கிறார். இடைவேளைவரை இந்தப் பாய்ச்சல் தொடர்கிறது. ரஜினி நடித்து சமீபத்தில் வந்த திரைப்படங்களில் இந்த அதிரடியும் பாய்ச்சலும் 'மிஸ்' ஆகியிருந்த நிலையில், இந்த காட்சிகள் அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்திற்குள்ளாக்கக்கூடும். ரஜினிக்கும் சிம்ரனுக்கும் இடையிலான காட்சியில், இருவருமே போட்டிபோட்டுக்கொண்டு மனம் கவர்கிறார்கள்.

பேட்ட - சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமை SUN PICTURES

ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் கதை ஃப்ளாஷ்பேக், உத்தரப்பிரதேசம் என்று நகர்ந்ததும் சற்று தொய்வடைய ஆரம்பிக்கிறது. க்ளைமேக்ஸ் நெருங்கும்போது மீண்டும் சூடுபிடிக்கிறது திரைக்கதை. முடிவில் வரும் சிறிய திருப்பமும் நல்ல சர்ப்ரைஸ்.

இசையமைப்பாளர் அனிருத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க படம். பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகிவிட்டன. ஆனால், பின்னணி இசையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கிறார் அனிருத். தவிர, படம் நெடுக பழைய பாடல்களை ஒலிக்கவிடுவதும் சிறப்பு.

திருவின் ஒலிப்பதிவும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணங்களும் படத்திற்கு கூடுதல் அழகைக் கொடுக்கின்றன.

இரண்டாம் பாதியில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் இந்தப் படத்தின் மூலம் பழைய பாணிக்கு திரும்பியிருக்கிறார் ரஜினி. வரவேற்கத்தக்க திருப்பம்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-46819403

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் ஹிந்தியில் ஷாருக்கான்,சுனில்செட்டி,சுஸ்மிதா சென் நடித்த படமா?...படத்தின் பெயர் மறந்து போய் விட்டது...ஆனால் சுனில் அந்தப் படத்தில் சூப்பர் நடிப்பு...அதே வேடம் தான் விஜய் சேதுபதிக்கு என்றால் சொல்லி வேலையில்லை 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.