Jump to content

தமிழ் ஆளுநர் முன் பாரிய பொறுப்பு


Recommended Posts

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த காலத்திலும் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட நிலையிலும் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை.
 
ஆனால் இம்முறை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தமிழர் ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
 
இந்நியமனம் ஜனாதிபதி மைத்திரிக்கு சர்வதேசத்தின் பார்வையில் நன்மதிப்பைக் கொடுக்கக்கூடியதாகும்.
 
அதேநேரம் ஆளுநர் தொடர்பில், தமிழர்களின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் என்ற கருத்து நிலையும் ஏற்படவே செய்யும்.
 
இவை ஒருபுறமிருக்க, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனின் முன் பாரிய பொறுப்புக்களும் சவால்களும் உள்ளன என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.
 
அதாவது சிங்களவர் ஒருவர் வடக்கின் ஆளுநராக இருக்கின்றபோது அவர் அரசிடம் முன்வைக்கின்ற கோரிக்கைகளை அரசாங்கம் பார்க்கின்ற பார்வைக்கும்,
 
தமிழர் ஒருவர் ஆளுநராக இருந்து கொண்டு அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகளை அரசாங்கம் பார்க்கின்ற பார்வைக்குமிடையில் நிறையவே வித்தியாசம் இருக்கும்.
அதேநேரம் தமிழர் ஒருவர் ஆளுநராக வரவேண்டும் என்று தமிழ்த் தரப்புகள் ஒரு சம்பிரதாயத்துக்குக் கேட்க; அது நிஜமாகிப் போன நிலையில்,
புதிய ஆளுநர் ஜனாதிபதியின் பக்கமா? அல்லது குறித்த தமிழ் அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுகிறாரா? என்ற கோணங்களில் தமிழ் அரசியல் தரப்புகளின் விழிகள் படம் பிடிக்கவே செய்யும்.
 
இதற்கு மேலாக, வடக்கின் ஆளுநராகத் தமிழர் ஒருவர் பதவியேற்றிருக்கும் இவ்வேளையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண அரசின் ஆட்சிக்காலமும் முடிவுற்ற நிலையில் உள்ளது.
 
எனவே வடக்கு மாகாணத்தின் அத்தனை செயற்பாடுகளிலும் இயங்கு நிலைகளிலும் புதிய ஆளுநர் நேரடிப் பொறுப்பை உடையவராக இருப்பார்.
 
இது ஆளுநரின் சுமுகமான பணி நிலைக்குப் பாரிய சுமையாக இருக்கும் என்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும்.
 
தவிர, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியை பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன்; வடபுலத்து மக்களின் கஷ்ரங்களை நேரில் சென்று அறிந்து அந்த மக்களின் விமோசனத்துக்கு தன்னால் முடிந்தளவு உதவியும் ஒத்தாசையும் நல்கவேண்டும்.
 
அதேநேரம் ஆளுநராக வந்திருப்பவர் ஒரு தமிழர் என்பதால்; விழுந்த பாட்டில் குறி சுடலாம் என்று நினையாமல், அனைத்துத் தரப்பினரும் அவருக்குத் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி, வடக்கின் ஆளுநர் ஒரு தமிழராக இருப்பதுதான் பொருத்தம் என்பதை தென் பகுதிக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும்.
 
இந்தத் தார்மீகப் பொறுப்பை அனைத்துத் தமிழ் அரசியல் தரப்புகளும் நிர்வாகக் கட்டமைப்புகளும் செய்தாக வேண்டும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த சுரேன் ராகவன்?

01.jpg?resize=800%2C481

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக இவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சுரேன் ராகவன்?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரான கலாநிதி சுரேன் ராகவன் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றார்.

2005ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் MA பட்டம் பெற்ற இவர், 2008ஆம் ஆண்டு PhD முடித்தார். பின்னர் 2008 – 2011களில் பிரிட்டன் அரசின் புலமைப்பரிசிலும் இவருக்கு வழங்கப்பட்டது.

கனடா – ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதை வென்ற இவர், நேரடி அரசியலில் பெரும் அனுபவசாலியாவார். இவர் தற்போது ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக உள்ளார்.

அத்தோடு இவர் ஓர் தீவிர பௌத்த சிந்தனைவாதியாவார். பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://puthusudar.lk

Link to comment
Share on other sites

தலைப்பை எழுதிய மகானுக்கு புண்ணாக்கு மூட்டை பரிசளிக்க வேண்டும்! 

... அன்று எதிர்கட்சி தலைவர் அப்பா அமிர்! .. பின் வெளிவிவகார அமைச்சர் கதிர்! இன்று வட ஆளுனர் இராகவா!

... தைப்பொங்கலுக்கு முன், வட மாகாண ஆளுனரால்  ...  காணி எல்லாம் விடுவிக்கப்படப் போகுதாம்? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எல்லோரும் வீடுகளுக்கு வந்து விடுவார்களாம்?  சிறையில் உள்ளவர்களும் வந்து விடுவார்களாம்?  ... மேலும் ... தீர்வும் வரப்போகுதாம்!

ஆ... ஓ...ஆ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இந்திய வம்சாவளியாமே உண்மையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.