Jump to content

ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்: இஸ்லாமை துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்படத்தின் காப்புரிமை AFP

பதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங்காக்கில் அவர் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை சட்டபூர்வமான அகதியாக ஜ.நா அறிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏர்போர்ட் ஓட்டல் அறையில் உள்ளே தாழிட்டுக்கொண்டு வெளியே வராமல் இருந்த ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தற்போது தாய்லாந்து அரசின் பாதுகாப்பில் இருக்கிறார். ஐநா அகதிகள் முகமை அவரது விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது.

இஸ்லாமை துறந்தால் தன்னை தனது குடும்பம் கொன்றுவிடும் என அஞ்சுவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

அவரது தந்தை மற்றும் சகோதரர் தாய்லாந்து வந்திருக்கின்றனர். எனினும் அவர்களை பார்க்க மறுத்துவிட்டார் ரஹாஃப்.

இந்நிலையில், ஐநா அகதிகள் முகமை இவரது விவகாரத்தை, அதாவது இவருக்கு மீள்குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஆஸ்திரேலிய அரசிற்கு பரிந்துரைத்தது.

ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்படத்தின் காப்புரிமை EPA/THAI IMMIGRATION BUREAU Image caption ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்

"இந்த விவகாரத்தை எல்லா வழக்குகள் போலவே இதனையும் கருத்தில் எடுத்துக் கொள்வோம்" என ஆஸ்திரேலிய உள்துறை அறிக்கை வெளியிட்டது.

அகதிகள் என்ற அந்தஸ்து பொதுவாக அரசாங்கம்தான் அளிக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் கொடுக்காத அல்லது கொடுக்க விருப்பமில்லாத பட்சத்தில் ஐ.நா வழங்கலாம் என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மொஹம்மத் அல்-குனனுக்கு அகதி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நாடு அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இஸ்லாம் மதத்தை துறப்பது சமய எதிர்ப்பாக அறியப்படுகிறது. இது குற்றமாக கருதப்பட்டு சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படும். தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் இந்த விவகாரத்தின் ஆரம்ப கட்டத்தில் அப்பெண் குவைத்துக்குச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.

முன்னதாக தனது பாஸ்போர்ட் தாய்லாந்து விமான நிலையத்தில் சௌதி அதிகாரியால் பிடிங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு பாஸ்போர்ட் திரும்ப கிடைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய அல்-குனன் தற்போது நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். அந்நிய நாட்டில் தனக்கு தஞ்சம் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து ஒவ்வொரு திருப்பங்கள் குறித்து ட்விட்டரில் அவர் பகிர்ந்து கொண்டார். இதனால் உலகம் முழுவதும் சமூக வலைதள பயனர்கள் இவ்விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வந்தனர். ஒன்றரை நாள்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் அவரது ட்விட்டர் கணக்கை பின்தொடர்ந்துள்ளனர்.

பேங்காக் விமான நிலையம்படத்தின் காப்புரிமை Reuters Image caption பேங்காக் விமான நிலையம்

ஏன் புகலிடம் கோருகிறார்?

''என் வாழ்க்கை அபாய கட்டத்தில் உள்ளது'' என மொஹமத் அல்-குனன் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

''எனது குடும்பம் கொன்றுவிடுவதாக என்னை மிரட்டியது'' என்றார்.

அல் - குனன் அப்பா வடக்கு சௌதி மாகாண நகரமான அல்-ஸுலைமியின் கவர்னராக இருக்கிறார்.

அவரது குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் பேசுகையில், இது குறித்து அக்குடும்பம் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இளம்பெண்ணின் பாதுகாப்பு குறித்தே குடும்பம் கவனம் செலுத்துவதாக கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு ட்வீட் மூலமாக நான்கு நாடுகளில் தஞ்சம் கோரினார். இன்னொரு ட்வீட்டில் கனடா தனக்கு தஞ்சம் வழங்கவேண்டும் என விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

''ஐநாவின் அகதிகள் முகமை அவரது கோரிக்கையை ஏற்று உரிய செயல்முறைகளை முடித்தால், அல் -குனன் மனித நேய அடிப்படையில் விசா தருமாறு எந்தவொரு விண்ணப்பத்தை தந்தாலும் அதை கவனமாக பரிசீலிப்போம்'' என ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் இவரது பதிவு @rahaf84427714: I seek protection in particular from  the following country Canada/United States/ Australia /United kingdom, I ask any if it Representatives to contact me.புகைப்பட காப்புரிமை @rahaf84427714 @rahaf84427714 <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @rahaf84427714: I seek protection in particular from the following country Canada/United States/ Australia /United kingdom, I ask any if it Representatives to contact me." src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/rahaf84427714/status/1082005189874221056~/tamil/global-46807254" width="465" height="249"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @rahaf84427714</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@rahaf84427714</span> </span> </figure>

தாய்லாந்து அதிகாரிகள் அப்பெண்ணை அவரது சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பாதது குறித்து நன்றி தெரிவித்தது ஐநா முகமை.

அவரை மீண்டும் சொந்த நாட்டுக்கு கொண்டுவர சௌதி அரசு முயற்சி எடுத்துவருகிறது எனும் சேதியை தாய்லாந்தில் உள்ள சௌதி அரேபிய தூதரகம் மறுத்துள்ளது.

தாய்லாந்தின் குடிவரவு காவல்துறையின் தலைமை அதிகாரிபடத்தின் காப்புரிமை Reuters Image caption தாய்லாந்தின் குடிவரவு காவல்துறையின் தலைமை அதிகாரி

தாய்லாந்து இந்த விவகாரத்தை எப்படி கையாள்கிறது?

திங்கள் கிழமை மாலையில் தாய்லாந்தின் குடிவரவு காவல்துறையின் தலைமை அதிகாரி சுராசட் ஹக்பர்ன் ''எங்களால் முடிந்தவரை அவரை சிறப்பாக பார்த்துக் கொள்வோம்'' என்றார்.

''தற்போது தாய்லாந்தின் இறையாண்மையை பாதுகாக்கும் அரச நிர்வாகத்தின் பாதுகாப்பின் கீழ் இருக்கிறார். அவரை எந்தவொரு நபரும் அல்லது எந்தவொரு தூதரகமும் எங்கேயாவது செல்லுமாறு கட்டாயப்படுத்தமுடியாது'' எனக் கூறினார்.

''தாய்லாந்து புன்னகைகளின் தேசம். நாங்கள் யாரையும் சாவதற்காக அனுப்பமாட்டோம்''

தாய்லாந்தின் முடிவு குறித்து சௌதி அதிகாரிகளைச் சந்தித்து விளக்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸிடம் பேசிய தாய்லாந்து குடிவரவு அதிகாரிகளின் தலைவர், அந்த இளம் பெண் மற்றும் அவரது தந்தை இடையிலான எந்தவொரு சந்திப்பும் ஐநாவின் ஒப்புதலுடன் நடக்க வேண்டும் என்றார்.

https://www.bbc.com/tamil/global-46807254

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னமே, தாய்லாந்துக்கும், சவூதிக்கும் வாய்க்கால், வரப்புச்  சண்டை.

இப்ப இது வேறயா? 😕

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.