Jump to content

ரோஹிங்ய மக்களை நாடு கடத்துகிறது சவூதி அரேபியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

49644332_2060553480697640_2361357011997687808_n.jpg?_nc_cat=108&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb3-1.fna&oh=3b9b9dcc1cc0dd7f7a8206139faeb6cd&oe=5C8BD43E

டசின்­க­ணக்­கான ரோஹிங்ய மக்கள் சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தினால் பங்­க­ளா­தே­ஷுக்கு

நாடு கடத்­தப்­பட்டு வரு­கின்­றனர்.

 
ஜித்­தா­வி­லுள்ள ஷுமைசி தடுப்பு முகா­மி­லி­ருந்து நாடு­க­டத்­தப்­ப­டு­வ­தற்­காக கைவி­லங்­கி­டப்­பட்ட ஆண்கள் வரி­சையில் நிற்கும் காணொ­லி­யொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ‘மிடில் ஈஸ்ட் ஐ’ இணையத் தளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.
 
பங்­க­ளா­தே­ஷுக்கு நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்த ரோஹிங்ய ஆண்­க­ளுக்கு கைவி­லங்­கி­டப்­பட்­ட­தாக அந்த இணை­யத்­த­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட குரல் பதிவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  
 
சவூதி அரே­பிய தடுப்பு முகாம்­களில் சுமார் ஆறு மாதங்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததோடு நாடு கடத்­தப்­பட்டு வரு­வ­தாக காணொ­லியைப் பதிவு செய்த ரோஹிங்ய நபர் தெரி­வித்­துள்ளார்.
 
கடந்த ஐந்து அல்­லது ஆறு வரு­டங்­க­ளாக நான் இங்கு இருக்­கின்றேன். தற்­போது என்னை பங்­க­ளா­தே­ஷுக்கு அனுப்­பு­கின்­றார்கள். எனக்­காக பிரார்த்­தி­யுங்கள் என காணொ­­லியில் காணப்­பட்ட நப­ரொ­ருவர் தெரி­வித்தார்.
 
மிடில் ஈஸ்ட் ஐ இணையத் தளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட மற்­று­மொரு காணொ­லியில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற பல­வந்த வெளி­யேற்­றத்­திற்கு பின்­ன­ணி­யாக அமைந்த கார­ணங்கள் விப­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.
 
நள்­ளி­ரவு பன்­னி­ரெண்டு மணி­ய­ளவில் எமது சிறைக் கூடத்­தினுள் அவர்கள் வந்­தார்கள். பங்­க­ளா­தே­ஷுக்கு செல்­வ­தற்கு எமது பொதி­களை தயார் செய்­யு­மாறு அவர்கள் கூறினர் என தனது பெயரை வெளி­யிட விரும்­பாத ரோஹிங்ய கைதி­யொ­ருவர் தெரி­வித்தார்.
 
எனக்கு தற்­போது கைவி­லங்­கி­டப்­பட்­டுள்­ளது. எனது நாடல்­லாத ஒரு நாட்­டுக்கு நான் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்றேன். நான் ரோஹிங்யா, எனது நாடு பங்­க­ளாதேஷ் அல்ல எனவும் அவர் தெரி­வித்தார்.
 
புனித யாத்­தி­ரைக்­கான விசா­வி­லேயே பெரும்­பா­லா­ன­வர்கள் சவூதி ஆரே­பி­யா­வுக்கு வந்­துள்­ளனர், எனினும் தொழில் புரி­வ­தற்­காக அனு­ம­தித்த காலத்தை விட அதிக காலம் தங்­கி­யி­ருந்­துள்­ளனர்.
 
நாம் வாழ்நாள் முழு­வதும் சவூதி அரே­பி­யா­வி­லேயே வாழ்ந்­தி­ருக்க முடியும். ஆனால் உரிய ஆவ­ணங்கள் இல்­லா­ததை சவூதி பொலிஸார் கண்­டு­பி­டித்­ததால் நாம் தடுப்பு முகா­முக்கு அனுப்பி வைக்­கப்­பட்டோம் என ஷுமைசி தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சில கைதிகள் தெரி­வித்­தனர்.
 
ராக்கைன் மாநி­லத்தில் வன்­மு­றைகள் ஆரம்­ப­மா­னதைத் தொடர்ந்து பெரும்­பா­லான ரோஹிங்ய மக்கள் நல்ல வாழ்க்­கை­யினைத் தேடி சவூதி அரே­பி­யா­வினுள் நுழைந்­த­தாக ஜேர்­ம­னியின் பிரங்­போர்­டி­லுள்ள ரோஹிங்ய செயற்­பாட்­டா­ள­ரான நே சான் ல்வின் தெரி­வித்தார்.
 
அப்­போ­தி­ருந்து பங்­க­ளாதேஷ் அகதி முகாம்­களில் உள்­ள­வர்கள் தமது குடும்­பத்­தி­ன­ருக்கு ஆத­ர­வாக இருந்­தனர். அவர்கள் டாக்­காவைச் சென்­ற­டைந்­ததும், அவர்கள் அக­தி­க­ளாக மாறு­வ­தோடு கொக்ஸ் பஸா­ரி­லுள்ள அகதி முகாம்­க­ளுக்கு கொண்டு சென்று விடப்­ப­டு­வார்கள் எனவும் அவர் தெரி­வித்தார்.
 
ரோஹிங்ய அடை­யாளம் ஏற்றுக் கொள்­ளப்­ப­டா­ததால் அவர்கள் சவூதி அரே­பி­யா­வுக்கு வந்­த­போது இந்­தி­யர்கள், பாகிஸ்­தா­னி­யர்கள், பங்­க­ளாதேஷ் நாட்­ட­வர்கள், நேபாள நாட்­ட­வர்கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே விரல் பதி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன எனவும் நே சான் ல்வின் விப­ரித்தார்.
 
சவூதி அரே­பிய சட்­டத்தின் பிர­காரம், வேறொரு நாட்டுப் பிர­ஜை­யாகப் பதிவு செய்­யப்­படும் பட்­சத்தில் சட்­ட­ரீ­தி­யான உதவி என்ற வகையில் எம்மால் எவ்­வித உத­வி­க­ளையும் செய்ய முடி­யாது என நே சான் ல்வின் தெரி­வித்தார்.
 
சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் நான்கு நாடு­களின் தூத­ரக அதி­கா­ரி­களை அழைத்து வந்­தனர். அவர்­களுள் மூன்று நாடு­களின் தூத­ரக அதி­கா­ரிகள் பொறுப்­பேற்க மறுத்த அதே­வேளை பங்­க­ளாதேஷ் அதி­காரி மாத்­தி­ரமே ஏற்­றுக்­கொள்ள இணக்கம் தெரி­வித்தார்.
 
மியன்­மாரைச் சேர்ந்த ரோஹிங்ய சிறு­பான்மை முஸ்­லிம்­களே உலகில் மிகவும் குற்­ற­மி­ழைக்­கப்­பட்­ட­வர்கள் என விப­ரிக்­கப்­ப­டு­கின்­றது.
 
ஆயுதக் குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு மியன்­மாரின் மேற்கு மாநி­லத்தில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக மியன்மார் இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடூரத் தாக்­குதல் நட­வ­டிக்கை கார­ண­மாக சுமார் ஒரு மில்­லியன் மக்கள் பங்­க­ளா­தேஷில் அடைக்­கலம் புகுந்­தனர்.
 
பல தசாப்­தங்­க­ளாக மியன்­மாரில் ரோஹிங்ய மக்­க­ளுக்கு கெதி­ரான குற்றச் செயல்கள் தொடர்ந்து இடம்­பெற்று வந்­தன. 1962 ஆம் ஆண்டு புரட்­சிக்குப் பின்னர் ஆட்­சிக்கு வந்த இரா­ணுவ அர­சாங்கம் 1982 ஆம் ஆண்டு ரோஹிங்ய மக்­களின் குடி­யு­ரி­மை­யினைப் பறித்­தது.
 
2012 ஆம் ஆண்டு தொடக்கம் ராக்கைன் பொளத்­தர்­க­ளுக்கும் ரோஹிங்யர்­க­ளுக்கும் இடையே ஏற்­பட்ட கொலை­வெறி வன்­மு­றை­களைத் தொடர்ந்து இலட்­சக்­க­ணக்­கான சிறு­பான்மை ரோஹிங்ய மக்கள் அழுக்கு நிறைந்த தடுப்பு முகாம்­க­ளுக்குள் வாழ நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர்.
 
பல தசாப்­தங்­க­ளாக அவர்கள் திறந்­த­வெளி முகாம்­களில் அடைக்­கப்­பட்­டி­ருந்­தனர் எனத் தெரி­வித்த நே சான், படு­கொ­லைகள் அங்கு இடம்­பெற்று வந்­தன. அவர்கள் எவ­ரி­டமும் வேறு நாடு­க­ளுக்குச் செல்­வ­தற்­கான கட­வுச்­சீட்­டுக்கள் இருக்­க­வில்லை எனவும் தெரிவித்தார்.
 
அவர் ராக்கைன் மாநிலத்திலுள்ள ஒரு நகரிலிருந்து மற்றுமொரு நகரத்திற்குச் செல்வதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. தற்போது சவூதி அரேபியாவிலிருந்து வெளியெற்றப்படும் இவர்கள் கடத்தல்காரர்களூடாக தமது கடவுச்சீட்டுக்களைப் பெற்றிருந்தனர்.
 
மனித உரிமைக் குழுக்கள் சவூதி அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளும், கடந்த இரண்டு ஆண்டுகளாக சவூதி அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளும் பயனற்றுப்போயுள்ளன. யாரும் உதவுவதற்கு தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli
Link to comment
Share on other sites

ஒரு முஸ்லிம் அகதிகளுக்கே இரக்கம்காட்டாத இஸ்லாமிய நாடுகள் உலகம் முழுவதும் தமது மத தாபனங்களையும் மதபோதனைகளையும் வினியோகிற்பதில் மும்முரமாக இருக்கிறார்கள் உன்னிடம் மனிதம் இல்லையெனின் நீ ஒரு ஜடம்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலோலியூரான் ரவீ..ன் said:

ஒரு முஸ்லிம் அகதிகளுக்கே இரக்கம்காட்டாத இஸ்லாமிய நாடுகள் உலகம் முழுவதும் தமது மத தாபனங்களையும் மதபோதனைகளையும் வினியோகிற்பதில் மும்முரமாக இருக்கிறார்கள் உன்னிடம் மனிதம் இல்லையெனின் நீ ஒரு ஜடம்தான் 

சவூதி அரேபியா ஒழுங்காய் இருந்தால் ஏன் சிரியா அகதிகள் இவ்வளவு அல்லோலப்படப்போகின்றார்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.