Jump to content

புத்தகம் …………………..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகம் …………………..
உங்கட மகனை நான் அனுப்புகிறேன்.
அவற்ர புத்தகத்தையும், 50000 ரூபா காசை அட்வான்சாகவும் தாங்கோ.
ஓம் தம்பி சொன்ன மாதிரி செய்யிறன். எம்மவரின் புலம்பெயர்வு காலத்தில்
சாதாரணமாகப் பேசப்பட்ட வசனங்களில் ஒன்று.
ஏஜென்ஸிமாருக்கும் எமக்குமான உரையாடல்களில் இச் சொற்கள் சர்வசாதாரணமாகவே வரும்
அது என்ன புத்தகம்.

பாடப்புத்தகம், பாஸ்போட் ( கடவுச் சீட்டு -Passport ), மோட்டார் வாகனப்
பதிவுப் புத்தகம். ஆகியவை எம்மால் புத்தகமென கூறப்படும் புத்தகங்களாகும்.
எம்மவருக்கும் புத்தகம் எனப்படும் பாஸ்போட்டுக்கும் இரத்தமும் சதையுமான
உறவு ஒன்று உள்ளது.
பலாலி விமான நிலையம் ஊடாக நாம் வெகு சுதந்திரமாக இந்தியாவுக்குப் போய்
வந்த ஒரு காலம் இருந்தது. 1974 ஆம் ஆண்டு எனது அப்பாவை பலாலி விமான
நிலையம் வரை சென்று இந்தியா பயணமாக வழியனுப்பி வந்தது ஞாபகத்திற்கு
வருகிறது.
அப்போது பாஸ்போட் இல்லாமல் அவசர காலப் பத்திரம் என்ற ஒரு முறை
பயன்படுத்தும் ஆவணம் மூலமாக பயணத்தை மேற்கொண்டோரும் உள்ளனர்.
நாளாந்தம் காலை 10 மணிக்கு பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின்
திருச்சி விமான நிலையத்திற்கு விமானமொன்று புறப்படும்.
அதில் யாழ்ப்பாணத்தில் வெட்டப்பட்ட கிடாய் ஆட்டின் இறைச்சியை விமான நிலைய
ஊழியர்கள் மூலமாகத் தமது உறவுகளுக்கு கிரமமாகக் கொடுத்து விட்டோரும்
உள்ளனர்.
கொடிகாமத்திற்கு அங்கால கறுப்பா சிவப்பா எனத் தெரியாமல் தமது ஊருக்குள்
முடங்கி வாழ்ந்த காலமொன்றும் இருந்தது.
1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் வந்தது. மத்திய கிழக்கு
நாடுகளுக்கு இலங்கையர்கள் தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற கைநிறைய
உழைக்கும் நிலை வந்தது.
அப்போது பாஸ்போட் எடுப்பதற்கான ஆள்களின் தொகை சடுதியாகப் பல மடங்கு அதிகரித்தது.
அதனால் அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு என மட்டும் குறித்துப்
பாஸ்போட்டை வழங்கும் முறையைக் கொண்டு வந்தது.
மத்திய கிழக்கு எனப்பட்ட மேற்காசிய அரபு நாடுகளில் உழைத்த பணம் நாட்டின்
நாலா பகுதிகளிலும் புதுப் பணக்காரக் குடும்பங்களை உருவாக்கியது.
காலச் சக்கரம் உருண்டது. போர் மேகங்கள் கருக்கொள்ள தப்பிக் கொள்வதற்காக
வெளிநாடுகளுக்கு எம்மவர் போகத் தொடங்கும் நிலைமை 1980 களின் ஆரம்பத்தில்
வந்தது.
அப்போது பாஸ்போட்டின் தேவை எழுந்தது. கச்சேரி எனப்பட்ட மாவட்டச்
செயலகங்கள் ஊடாக மட்டும் பாஸ்போட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை இருந்தது.
அப்படி விண்ணப்பித்தால் 3 மாத கால அளவில் பாஸ்போட் வந்தது.
நேரடியாகக் கொழும்பு சென்று குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினுள்
உள்ளால் அலுவல் பார்த்து ஓரிரு நாள்களில் பாஸ்போட் எடுக்கும் வழக்கமும்
இருந்தது.
புளத்சிங்கள தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக வந்த ரொனிடி மெல்
வரவு செலவுத் திட்டத்தின் நிதிப் பற்றாக்குறைக்கு நிதி பெறும் வழிகளில்
ஒன்றாக ஒரே நாளில் பாஸ்போட் பெறும் முறை ஒன்றை 1980 களின் ஆரம்பத்தில்
கொண்டு வந்தார்.
பாஸ்போட் அலுவலகத்தில் அவரைப் பிடித்து இவரைப் பிடித்து இலஞ்சம் கொடுத்து
பாஸ்போட்டை ஓரிரு நாள்களில் பெறுகின்றனர்.
அதை ஏன் அரசாங்கத்திற்கு வருமானமாக மாற்றக் கூடாதென நினைத்து இந்தப்
பிரேரணையைக் கொண்டு வந்தார்.
இத் திட்டம் பெரும் முன்னோடித் திட்டமாகப் பார்க்கப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்காக வழங்கப்பட்ட பாஸ்போட்டை சகல
நாடுகளுக்கும் செல்வதற்கான நடைமுறையாக பொன்ட் சைன் எனப்பட்ட பிணை
நிற்கும் நடைமுறை ஒன்றை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி இருந்தது.
இதன் படி குறிப்பிட்ட மட்டத்திற்கு மேலாக மாதச் சம்பளம் பெறும் ஒருவர்
தமது நியமனக் கடிதம், சம்பள விபரப் பட்டியல் ஆகியவற்றைக் கொண்டு குடிவரவு
குடியகல்வுத் திணைக்களத்திற்கு செல்லல் வேண்டும்.
அங்கு வைத்து உரிய படிவத்தை நிரப்பி சகல நாடுகளுக்கும் செல்வதற்கான
பாஸ்போட் தேவைப்படுபவருக்கான பிணை எனப்பட்ட பொன்ட் சைன் ( Bond Sign)
வைத்தல் வேண்டும்.
அந்தப் பாஸ்போட்டில் பொன்ட் வைத்தவருக்கு என மாவட்டக் குறியீட்டு ஆங்கில
எழுத்துடன் ஓர் இலக்கம் ஒதுக்கப்படும். அது பாஸ்போட்டில் குறிக்கப்படும்.
ஒருவருக்கு மாவட்டக் குறியீட்டுடன் ஒரு இலக்கம் ஒதுக்கப்பட்டால் வேறு
ஒருவருக்கு அது வழங்கப்பட மாட்டாது.
உதாரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் பொன்ட் சைன் வைத்தால் அவருக்கு
JF 00121 என இலக்கம் ஒதுக்கப்படும்.
அது போல அரசுக்கு வருமான வரி கட்டுபவர்களும் பொன்ட் சைன் செய்ய முடியும்.
அவருக்கும் இதே போன்ற நிபந்தனைகளும் உண்டு. அரச உத்தியோகத்தரின் சம்பள
அளவுக்கும், வருமான வரி கட்டுபவர்களின் வருமான அளவுக்கும் ஏற்ப பொன்ட்
சைன் வைக்கக் கூடிய தகுதி எண்ணிக்கை கூடும்.
பெரும்பாலும் ஒருவர் இரண்டு மூன்று பேருக்கு மேல் சைன் வைக்க விரும்புவதில்லை.
ஏனெனில் வெளிநாட்டுக்குச் செல்பவர் திரும்பி வராவிட்டால் பொன்ட் சைன்
வைத்தவர் தான் அதறகுரிய பிணைப் பணத்தைக் கட்ட வேண்டும்.
இதனால் பொன்ட் சைன் வைப்பவர்கள் தமக்கென ஒரு தொகைப் பணத்தை வாங்கிக்
கொண்டு பிணை வைத்தார்கள்.
நிதி அமைச்சரான ரொனி டிமெல் பின்னாளில் வரவு செலவுத் திட்டப் பிரேரணை
மூலமாக சகல நாடுகளுக்குமான கடவுச் சீட்டைப் பெறுவதற்கான பொன்ட் சைன்
முறையை நீக்கி விட்டார்.
அதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கான பாஸ்போட்டுக்கு ஒரு கட்டணமும், சகல
நாடுகளுக்குமான பாஸ்போட்டுக்கு ஒரு கட்டணமும் அறவிடும் நடைமுறையைக்
கொண்டு வந்தார்.
இது இலங்கையர் யாவருக்கும் சிறந்த ஓர் முறையாக இருந்தது.
முன்பு பம்பலப்பிட்டியில் பாஸ்போட் பெறும் அலுவலகம் இருந்த போது காலை 6
மணிக்கே சனக் கூட்டம் அலைமோதும். சமாதான நீதிவான்கள் மக்களுக்கு
இலவசமாகச் சேவை செய்ய வேண்டுமெனக் கூறுவார்கள்.
ஆனால் அங்கும் தற்போது பாஸ்போட் அலுவலகம் உள்ள புஞ்சிபொரளையிலும்
பகிரங்கமாக விலைபேசி சமாதான நீதிவான்களின் கையொப்பம் விற்கப்படுவதனைக்
காணலாம்.
போர்க் காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் புலம் பெயர்வுப்
பயணத்திற்குச் சென்ற போது பாஸ்போட்டின் கீழ் 100, 500, 1000 என
காலத்திற்கு ஏற்ப தாள் காசு வைத்து உரிய சோதனைகளின் போது கொடுத்தால் தான்
நகர முடிந்தது.
வல்லரசுப் பனிப் போர்க் காலம் இருந்த போது கிழக்கு ஜேர்மனி, மேற்கு
ஜேர்மனி முரண்பாடுகள் தீவிரமாக இருந்தது.
மேற்கு ஜேர்மனி கிழக்கு ஜேர்மனிய மக்களை வசியப்படுத்தி பேர்லின் எல்லைச்
சுவரேறிக் குதிக்க வைத்தது.
அதற்குப் பழிவாங்க கிழக்கு ஜேர்மனி இலங்கை போன்ற போர் மேகம் சூழ்ந்த
நாடுகளிலிருந்து ஆள்களை தனது நாடு ஊடாக மேற்கு ஜேர்மனி போக வழிவிட்டது.
எம்மவர் பல ஆயிரம் பேர் மேற்கு ஐரோப்பா போக கிழக்கு ஜேர்மனி தாராள உபயம் தந்தது.
ஒருவரது பாஸ்போட்டை இன்னொருவர் உடமையாக வைத்திருப்பது சட்டப்படி குற்றம்.
ஆனால் ஏஜென்ஸிமார் பலரது பாஸ்போட்டை தமது உடமையாக வைத்திருப்பது சர்வ
சாதாரணமாக இருந்தது.
பாஸ்போட்டில் தலைமாற்றி இன்னொருவரை அனுப்புவதனை ஹெல்மட் என அழைத்தார்கள்.
புலம் பெயர்ந்த பல இலட்சம் பேர் இன்று பிரித்தானியா, ஜேர்மனி,
சுவிற்சலாந்து, சுவீடன்,கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என தாம்
வாழ்ந்த நாடுகளின் பிரசையாகி அந்த நாடுகளின் பாஸ்போட்டுடன் சிறிலங்கா
விசா பெற்று வருவது சாதாரண ஒன்றாகி விட்டது.
கொழும்பு, கண்டி,அநுராதபுரம் ஆகிய இடங்களில் மட்டுமிருந்த பாஸ்போட்
வழங்கும் அலுவலகங்கள் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்பாக மாகாணத்திற்கு ஒரு
அலுவலகம் என அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டு விட்டது.
வட மாகாணத்திற்குரிய அலுவலகம் வவுனியாவில் உள்ளது.
நேற்றைய தினம் 01.01.2019 ஆம் திகதி முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்காக
பாஸ்போட் வழங்கும் முறை நீக்கப்பட்டு சகல நாடுகளுக்கான ( All Countries )
பாஸ்போட் மட்டுமே வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
அதனால் பாஸ்போட் ( Passport ) நினைவலைகள் பல வந்து இங்கு
எழுத்துருவாக்கம் பெற்றுள்ளது.

வேதநாயகம் தபேந்திரன்
நன்றி- எதிரொலி 02.01.2019 புதன்கிழமை

Link to comment
Share on other sites

கன காலத்துக்கு பிறகு ஊரவனை காண்பதில் சந்தோசம். எப்படி சுகங்கள்?

உங்கள் பதிவு கதைக்கும் கட்டுரைக்கும் இடையில் இருப்பது போலத் தோன்றுவதால் கதை கதையாம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன் (நீங்கள் உலகச் செய்தி பக்கம் பதிவை இட்டு இருந்தீர்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி  ஆம் பல பணி நிமிர்த்தம் நீண்ட நாள் வரவில்லை அத்துடன் வந்த பொது வரவேற்பு நான் எதிர்பார்த்தது போல் இல்லை. பழையவர்கள் தங்குளுக்குள் பேசுமளவுக்கு புதியவர்களை வரவேற்று கருத்திடல் திருப்திகரமாக தோன்றவில்லை. அத்துடன் ரகுநாதனுக்குப் பின் அகே பாடசாலையின் அதிபர் பொறுப்பினை ஏற்று அதில் கொஞ்சம் ஈடுபாடாகி விடடேன். இப்போது கொஞ்சம் நேரம் கிடைத்து ள்ளது. மேலும் வெளிச்சம் எனும் நிகழ்ச்சியை மீண்டும் இணைய வழியாக தொடக்கி நடாத்தலாம் என்று எண்ணியுள்ளேன் . எனது அனுமதி இன்றி தரிசம தொலைக்காடசி எனது நிகழ்ச்சியை தொடர்கிறது தற்போது ஐபிசி புதிய வெளிச்சம் என்ற பெயரில் தொடர்கிறார்கள். நானும் இன்னுமொரு பெயரில் திடங்கலாமென்று நினைக்கிறன் . யாழ் உறவுகளின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் , குறைந்தது நிழலி என்ற தனி மனிதனாவது!. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.