Jump to content

லசந்த: உறங்காத விழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லசந்த: உறங்காத விழிகள்

on January 8, 2019

IMG_0085.jpg?zoom=2&resize=1200,550&ssl=

பட மூலம், Selvaraja Rajasegar

2019 ஜனவரி 08ஆம் திகதி மறக்க முடியாததொரு வியாழக்கிழமை. “சண்டே லீடர்” பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அத்திடிய பிரதேசத்தில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டது அன்று காலை வேளையில். பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இருந்த நேரத்தில்தான் விடயம் எம் காதுகளுக்கு எட்டியது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்புக்காக நாம் தயாராக இருந்தோம். அவ்வேளையில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அநுர யாப்பா திணைக்களத்தின் கீழ் தளத்தில் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். பத்து முப்பது மணிக்கு கேட்போர் கூடத்துக்கு வருகை தரும் அமைச்சர் அன்றைய தினம் அமைச்சரவை ஊடக சந்திப்பிற்காக ஒரு தளத்தை ஏறி வருவதற்கு சுமார் 1 1/2 மணித்தியாளத்திற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டார். அவர் வருகை தந்த உடனே எவரும் எதையும் கேட்பதற்கு முன்னதாகவே, எதையுமே நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று கூறினார்.

லசந்தவின் கொலையானது அரசாங்கத்தால் முகம் கொடுக்க முடியாத அளவிற்கு பாரதூரமான ஒரு சம்பவமாகியது. அனைவரும் திகைத்து நின்றனர். அனைவரது முகங்களிலும் பெரும் கவலையும் கோபமும் வெளியாகியது. ராஜபக்‌ஷ அரசாங்கமானது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாததொரு இருண்ட யுகத்திற்கு நாட்டை தள்ளிவிடப்போகிறது என அனைவரினது முகங்களிலும் சொல்லாமல் சொன்ன கதையாக இருந்தது. பிரச்சினை என்னவெனில் லசந்த படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் கழிந்தபோதும் அத்தீய உருவத்தின் இருள் சூழ்ந்த நிழல் இன்றும் சமூகத்தைச் சூழ்ந்து இருப்பதேயாகும். அந்த இழிநிலையில் இன்றும் சமூகம் தங்கியிருப்பதே. நாம் எவ்வளவு தூரம் ஆற்றலற்றவர்களாக, துஷ்டர்களாக, பின்தங்கியவர்களாக இருக்கின்றோம் என்றால் இன்றைய ஜனவரி 08ஆம் திகதியிலும் கூட நாம் இருப்பது லசந்த கொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகிருந்த அதே காலகட்டத்தை ஒத்த இடத்திலாகும். 10 வருடங்கள் கழிந்துள்ள போதும் அந்தக் கொடூரமான கொலையின் உண்மையை வெளிக்கொண்டுவர முடியாத நிலை இதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது. உண்மையாக அத்தீய செயலுக்கு எமது மனச்சாட்சியிடமிருந்து கூட மன்னிப்பு கிடைக்கமாட்டாது.

2009 ஜனவரி 08 காலை லசந்தவுடன் தொடர்பு கொண்டிருந்த ஐந்து தொலைபேசி இலக்கங்களை அடையாளம் காண்பதற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த போதும், ஜேசுதாசன் என்பவருடைய அடையாள அட்டை இலக்கத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைப் பற்றிய விபரங்களை மட்டுமே அவர்களால் கண்டறிய முடிந்தது. அதுவும் ஜேசுதாசனை விசாரணை செய்த போதுதான். இராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பியவன்ச என்பவர் தமது அடையாள அட்டை இலக்கத்தில் தொலைபேசி ஒன்றினை கொள்வனவு செய்ததாக யேசுதாசன் அதன் போது தெரிவித்திருந்தார். பியவன்ஸ பற்றிய விசாரணையின் போது மருதானையின் திரிபொலிமார்கட் கட்டடத்தில் நடாத்திச் செல்லப்பட்ட விசேட புலனாய்வு செயற்பாட்டு பிரிவு தொடர்பான தகவல்கள் அறியக்கிடைத்துள்ளன. பியவன்ச என்ற நபர் அவ்விடத்தில் கடமை புரிந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஜேசுதாசன் 2012இல் மரணமடைகின்றார். அதுவரையிலும் பியவன்சவிடம் வாக்குமூலமொன்றினைப் பெறுவதற்கு லசந்த கொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் குழுவானது நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமையிலேயே நீதிமன்றமானது இவ் விசாரணை நடவடிக்கைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு கட்டளை இட்டிருந்தது. அதுவும் 2016 ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறைவேறியது.

பியவன்சவிடம் இது தொடர்பாக விசாரணை செய்வதற்கான தேவைப்பாடு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு இருப்பதாக தெரிவித்தாலும் இராணுவம் அதற்கு இசைவான ஒத்துழைப்பினை வழங்கவில்லை. நீதிமன்றமானது மீண்டும் மீண்டும் கட்டளையிட்டதன் அடிப்படையில் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் இராணுவத்தினரால் பியவன்ச குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன் நிறுத்தப்பட்டார். ஆனாலும், அவர் மட்டுமல்லாது, உயர் அதிகாரிகள் இருவருடனேயே நிறுத்தப்பட்டார்.

லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் ஒன்றிணைந்த செயற்பாட்டு தலைமையகத்தின் கிழக்கு பிரதேசத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய இராணுவ பிரதானி ஒருவரால் அது தொடர்பிலான தகவலொன்று வழங்கப்பட்டதாக அப்போது பரவலாக பேசப்பட்டது. லசந்த விக்ரமதுங்க கூரிய ஆயுதமொன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தகவலொன்று தமக்குக் கிடைத்துள்ளதாக இராணுவத்தின் உயர் அதிகாரியால் வினவப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் வேண்டுகோள் ஒன்றினை விடுத்ததாக செய்திகள் இருந்தன. இராணுவ அதிகாரி இந்தத் தகவலை காலை 9.00 மணியளவில் தெரிவித்ததாகவும் பேசப்பட்டது. லசந்த படுகொலை செய்யப்பட்டது அன்று காலை 10.30 மணிக்கேயாகும். ஒன்றிணைந்த செயற்பாட்டு தலைமையகத்தில் இந்தத் தகவலைப் பெற்றுக் கொண்ட அதிகாரியால் லசந்த கொலை விசாரணை இடம்பெற்ற போது மேற்படி தகவல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் தெளிவுபடுத்தியதாகவும் அறியக் கிடைத்துள்ளது. ஆயினும், இந்த எந்தவொரு விடயத்தின் பின்னாலும் செல்லாத அல்லது சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை தவறவிட்டிருக்கும் ஒரு விசாரணையாகவே லசந்த படுகொலை விசாரணையானது இன்று காணப்படுகின்றது.

2016 செப். 27ஆம் திகதி லசந்தவின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. முறையானதொரு நீதிமன்ற செயற்பாட்டுக்காகவே அது இடம்பெற்றது. லசந்தவின் உடலை விசாரணை செய்த வைத்தியர் மொஹான் சில்வாவின் அறிக்கையும், விக்ரமதுங்கவின் மரண விசாரணைக்குரிய அறிக்கையும், அரச பகுப்பாய்வு அறிக்கையும் ஒன்றுக்கொன்று முரணான விடயங்களையே சுட்டிக் காட்டின. இவ்வாறு சுட்டிக் காட்டிய வேறுபாடுகள் காரணமாகவே உடல் மீண்டும் விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு மரண விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றின் முன்னிலையில் விடயங்களை தெரிவித்திருந்தனர். லசந்தவை கொலை செய்வதற்குப் பயன்படுத்திய ஆயுதமானது வெளிநாடுகளில் பன்றிகளையும் ஆடுகளையும் அறுப்பதற்காக பயன்படுத்தும் ஆயுதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. லசந்தவின் கழுத்துப் பகுதியில் கூரிய வெட்டுக் காயம் ஒன்று காணக்கூடியதாக இருந்தமை அவ் விசேட ஆயுதத்தால் தாக்கியமையினால் ஆகும்.

ஆயினும், இவ் அனைத்தினதும் இறுதியில் லசந்தவின் படுகொலையானது கொலையாளி இல்லாத ஒரு கொலையாகவே காணப்படுகின்றது. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஜனாதிபதியினது இராணுவப் போற்றல் கூட அதற்கு காரணமாக அமைந்தது. லசந்தவின் படுகொலையானது தற்போது பத்திரிகையில் மாத்திரம் எழுதப்படுகின்ற, எப்போதாவது அரசியல்வாதிகள் ஓரிருவரால் மீண்டும் உச்சரிக்கப்படுகின்ற வசனம் மாத்திரமேயாகும். இக்கொலை இடம்பெறுகின்ற போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டபாய ராஜபக்‌ஷவாகும். சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகவிருந்தார். இவ்விருவரிடமும் இன்றுவரையில் லசந்தவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. நல்லாட்சி அரசானது லசந்தவின் உயிரில்லா உடலின் மீதேறியே உருவாக்கம் பெற்றது. லசந்தவின் எழும்புக் கூட்டைக் கூட சிறிது காலம் அரசியல் தேவைப்பாடுகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், தற்போது மைத்ரிபால சிறிசேன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரையிலான எவரும் லசந்த பற்றி வாய் திறப்பதே இல்லை.

ஜனவரி 08ஆம் திகதி காலை பொரளை மயானத்திற்கு லசந்தவை நினைவுகூருவதற்காக வருகைதரும் பிரபல்யமான சிலர் உள்ளனர். ரவி கருணாநாயக்க அவர்களுள் ஒருவர். லசந்தவின் படுகொலை தொடர்பில் துளியளவேணும் ரவி இதுவரையில் செய்யவில்லை. ரவி கருணாநாயக்க ஒன்றை மட்டும் செய்தார். 2015 ஜனவரி 08இற்கு பிறகு லசந்தவின் தலைமையில் செயற்பட்ட பத்திரிகை இரண்டையும் லாவகமாக தம்வசப்படுத்திக் கொண்டதை மட்டுமே செய்தார். அவர் இரு பத்திரிகைகளினதும் சட்டரீதியற்ற உரித்துடையோன் ஆனார். நல்லாட்சி அரசும் லசந்த படுகொலை விசாரணையை தளர்த்தி விடுகின்றபோது லசந்தவைப் பற்றியதொரு செய்தியை வெளியிடுவதற்கு ரவி தரப்பைச் சார்ந்த இரு பத்திரிகைகளினதும் முகாமையாளர்கள் இடமளிக்கவில்லை. மிகக் கடினமான சூழலில் இந்தச் செய்தியினை பிரசுரித்தது ஆசிரிய குழுவின் பெரும் தேவையின் அடிப்படையிலாகும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 08ஆம் திகதி லசந்தவை நினைவு கூறுவதற்கு பொரளை மயானத்திற்கு வருகைதரும் நண்பர் ரவி கருணாநாயக்க லசந்தவிற்காக அர்ப்பணித்தது இவ்வாறுதான்.

லசந்த ஓர் ஊடகவியலாளராக மிகவும் கடினமான செயற்பாட்டினை மேற்கொண்ட முழுமையான ஒரு தொழில்வாதியாவார். அவருக்குச் செய்திகளை தேடிச் செல்வதில் நித்திரையின்றிய, களைப்பின்றிய கண்களும் தேகமும் பலமாக அமைந்தன. லசந்தவிற்கு என்னவகையிலான அநீதிகள் இடம்பெற்றாலும் அவர் ஊடகத்துறைக்காக அர்ப்பணிப்பு செய்த பணி என்றென்றும் முன்மாதியான ஒரு விடயமாக சதாகாலம் நிலைத்திருக்கும்.

ஆசிரியர் குறிப்பு: தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 “දස වසරකට පෙර උදුරා දැමුණු නිදි නැති ඇස ලසන්ත” என்ற தலைப்பில் விமலநாத் வீர ரத்ன எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

 

https://maatram.org/?p=7463

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுக்குர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.