Jump to content

லசந்த: உறங்காத விழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லசந்த: உறங்காத விழிகள்

on January 8, 2019

IMG_0085.jpg?zoom=2&resize=1200,550&ssl=

பட மூலம், Selvaraja Rajasegar

2019 ஜனவரி 08ஆம் திகதி மறக்க முடியாததொரு வியாழக்கிழமை. “சண்டே லீடர்” பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அத்திடிய பிரதேசத்தில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டது அன்று காலை வேளையில். பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இருந்த நேரத்தில்தான் விடயம் எம் காதுகளுக்கு எட்டியது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்புக்காக நாம் தயாராக இருந்தோம். அவ்வேளையில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அநுர யாப்பா திணைக்களத்தின் கீழ் தளத்தில் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். பத்து முப்பது மணிக்கு கேட்போர் கூடத்துக்கு வருகை தரும் அமைச்சர் அன்றைய தினம் அமைச்சரவை ஊடக சந்திப்பிற்காக ஒரு தளத்தை ஏறி வருவதற்கு சுமார் 1 1/2 மணித்தியாளத்திற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டார். அவர் வருகை தந்த உடனே எவரும் எதையும் கேட்பதற்கு முன்னதாகவே, எதையுமே நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று கூறினார்.

லசந்தவின் கொலையானது அரசாங்கத்தால் முகம் கொடுக்க முடியாத அளவிற்கு பாரதூரமான ஒரு சம்பவமாகியது. அனைவரும் திகைத்து நின்றனர். அனைவரது முகங்களிலும் பெரும் கவலையும் கோபமும் வெளியாகியது. ராஜபக்‌ஷ அரசாங்கமானது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாததொரு இருண்ட யுகத்திற்கு நாட்டை தள்ளிவிடப்போகிறது என அனைவரினது முகங்களிலும் சொல்லாமல் சொன்ன கதையாக இருந்தது. பிரச்சினை என்னவெனில் லசந்த படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் கழிந்தபோதும் அத்தீய உருவத்தின் இருள் சூழ்ந்த நிழல் இன்றும் சமூகத்தைச் சூழ்ந்து இருப்பதேயாகும். அந்த இழிநிலையில் இன்றும் சமூகம் தங்கியிருப்பதே. நாம் எவ்வளவு தூரம் ஆற்றலற்றவர்களாக, துஷ்டர்களாக, பின்தங்கியவர்களாக இருக்கின்றோம் என்றால் இன்றைய ஜனவரி 08ஆம் திகதியிலும் கூட நாம் இருப்பது லசந்த கொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகிருந்த அதே காலகட்டத்தை ஒத்த இடத்திலாகும். 10 வருடங்கள் கழிந்துள்ள போதும் அந்தக் கொடூரமான கொலையின் உண்மையை வெளிக்கொண்டுவர முடியாத நிலை இதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது. உண்மையாக அத்தீய செயலுக்கு எமது மனச்சாட்சியிடமிருந்து கூட மன்னிப்பு கிடைக்கமாட்டாது.

2009 ஜனவரி 08 காலை லசந்தவுடன் தொடர்பு கொண்டிருந்த ஐந்து தொலைபேசி இலக்கங்களை அடையாளம் காண்பதற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த போதும், ஜேசுதாசன் என்பவருடைய அடையாள அட்டை இலக்கத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைப் பற்றிய விபரங்களை மட்டுமே அவர்களால் கண்டறிய முடிந்தது. அதுவும் ஜேசுதாசனை விசாரணை செய்த போதுதான். இராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பியவன்ச என்பவர் தமது அடையாள அட்டை இலக்கத்தில் தொலைபேசி ஒன்றினை கொள்வனவு செய்ததாக யேசுதாசன் அதன் போது தெரிவித்திருந்தார். பியவன்ஸ பற்றிய விசாரணையின் போது மருதானையின் திரிபொலிமார்கட் கட்டடத்தில் நடாத்திச் செல்லப்பட்ட விசேட புலனாய்வு செயற்பாட்டு பிரிவு தொடர்பான தகவல்கள் அறியக்கிடைத்துள்ளன. பியவன்ச என்ற நபர் அவ்விடத்தில் கடமை புரிந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஜேசுதாசன் 2012இல் மரணமடைகின்றார். அதுவரையிலும் பியவன்சவிடம் வாக்குமூலமொன்றினைப் பெறுவதற்கு லசந்த கொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் குழுவானது நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமையிலேயே நீதிமன்றமானது இவ் விசாரணை நடவடிக்கைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு கட்டளை இட்டிருந்தது. அதுவும் 2016 ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறைவேறியது.

பியவன்சவிடம் இது தொடர்பாக விசாரணை செய்வதற்கான தேவைப்பாடு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு இருப்பதாக தெரிவித்தாலும் இராணுவம் அதற்கு இசைவான ஒத்துழைப்பினை வழங்கவில்லை. நீதிமன்றமானது மீண்டும் மீண்டும் கட்டளையிட்டதன் அடிப்படையில் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் இராணுவத்தினரால் பியவன்ச குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன் நிறுத்தப்பட்டார். ஆனாலும், அவர் மட்டுமல்லாது, உயர் அதிகாரிகள் இருவருடனேயே நிறுத்தப்பட்டார்.

லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் ஒன்றிணைந்த செயற்பாட்டு தலைமையகத்தின் கிழக்கு பிரதேசத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய இராணுவ பிரதானி ஒருவரால் அது தொடர்பிலான தகவலொன்று வழங்கப்பட்டதாக அப்போது பரவலாக பேசப்பட்டது. லசந்த விக்ரமதுங்க கூரிய ஆயுதமொன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தகவலொன்று தமக்குக் கிடைத்துள்ளதாக இராணுவத்தின் உயர் அதிகாரியால் வினவப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் வேண்டுகோள் ஒன்றினை விடுத்ததாக செய்திகள் இருந்தன. இராணுவ அதிகாரி இந்தத் தகவலை காலை 9.00 மணியளவில் தெரிவித்ததாகவும் பேசப்பட்டது. லசந்த படுகொலை செய்யப்பட்டது அன்று காலை 10.30 மணிக்கேயாகும். ஒன்றிணைந்த செயற்பாட்டு தலைமையகத்தில் இந்தத் தகவலைப் பெற்றுக் கொண்ட அதிகாரியால் லசந்த கொலை விசாரணை இடம்பெற்ற போது மேற்படி தகவல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் தெளிவுபடுத்தியதாகவும் அறியக் கிடைத்துள்ளது. ஆயினும், இந்த எந்தவொரு விடயத்தின் பின்னாலும் செல்லாத அல்லது சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை தவறவிட்டிருக்கும் ஒரு விசாரணையாகவே லசந்த படுகொலை விசாரணையானது இன்று காணப்படுகின்றது.

2016 செப். 27ஆம் திகதி லசந்தவின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. முறையானதொரு நீதிமன்ற செயற்பாட்டுக்காகவே அது இடம்பெற்றது. லசந்தவின் உடலை விசாரணை செய்த வைத்தியர் மொஹான் சில்வாவின் அறிக்கையும், விக்ரமதுங்கவின் மரண விசாரணைக்குரிய அறிக்கையும், அரச பகுப்பாய்வு அறிக்கையும் ஒன்றுக்கொன்று முரணான விடயங்களையே சுட்டிக் காட்டின. இவ்வாறு சுட்டிக் காட்டிய வேறுபாடுகள் காரணமாகவே உடல் மீண்டும் விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு மரண விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றின் முன்னிலையில் விடயங்களை தெரிவித்திருந்தனர். லசந்தவை கொலை செய்வதற்குப் பயன்படுத்திய ஆயுதமானது வெளிநாடுகளில் பன்றிகளையும் ஆடுகளையும் அறுப்பதற்காக பயன்படுத்தும் ஆயுதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. லசந்தவின் கழுத்துப் பகுதியில் கூரிய வெட்டுக் காயம் ஒன்று காணக்கூடியதாக இருந்தமை அவ் விசேட ஆயுதத்தால் தாக்கியமையினால் ஆகும்.

ஆயினும், இவ் அனைத்தினதும் இறுதியில் லசந்தவின் படுகொலையானது கொலையாளி இல்லாத ஒரு கொலையாகவே காணப்படுகின்றது. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஜனாதிபதியினது இராணுவப் போற்றல் கூட அதற்கு காரணமாக அமைந்தது. லசந்தவின் படுகொலையானது தற்போது பத்திரிகையில் மாத்திரம் எழுதப்படுகின்ற, எப்போதாவது அரசியல்வாதிகள் ஓரிருவரால் மீண்டும் உச்சரிக்கப்படுகின்ற வசனம் மாத்திரமேயாகும். இக்கொலை இடம்பெறுகின்ற போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டபாய ராஜபக்‌ஷவாகும். சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகவிருந்தார். இவ்விருவரிடமும் இன்றுவரையில் லசந்தவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. நல்லாட்சி அரசானது லசந்தவின் உயிரில்லா உடலின் மீதேறியே உருவாக்கம் பெற்றது. லசந்தவின் எழும்புக் கூட்டைக் கூட சிறிது காலம் அரசியல் தேவைப்பாடுகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், தற்போது மைத்ரிபால சிறிசேன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரையிலான எவரும் லசந்த பற்றி வாய் திறப்பதே இல்லை.

ஜனவரி 08ஆம் திகதி காலை பொரளை மயானத்திற்கு லசந்தவை நினைவுகூருவதற்காக வருகைதரும் பிரபல்யமான சிலர் உள்ளனர். ரவி கருணாநாயக்க அவர்களுள் ஒருவர். லசந்தவின் படுகொலை தொடர்பில் துளியளவேணும் ரவி இதுவரையில் செய்யவில்லை. ரவி கருணாநாயக்க ஒன்றை மட்டும் செய்தார். 2015 ஜனவரி 08இற்கு பிறகு லசந்தவின் தலைமையில் செயற்பட்ட பத்திரிகை இரண்டையும் லாவகமாக தம்வசப்படுத்திக் கொண்டதை மட்டுமே செய்தார். அவர் இரு பத்திரிகைகளினதும் சட்டரீதியற்ற உரித்துடையோன் ஆனார். நல்லாட்சி அரசும் லசந்த படுகொலை விசாரணையை தளர்த்தி விடுகின்றபோது லசந்தவைப் பற்றியதொரு செய்தியை வெளியிடுவதற்கு ரவி தரப்பைச் சார்ந்த இரு பத்திரிகைகளினதும் முகாமையாளர்கள் இடமளிக்கவில்லை. மிகக் கடினமான சூழலில் இந்தச் செய்தியினை பிரசுரித்தது ஆசிரிய குழுவின் பெரும் தேவையின் அடிப்படையிலாகும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 08ஆம் திகதி லசந்தவை நினைவு கூறுவதற்கு பொரளை மயானத்திற்கு வருகைதரும் நண்பர் ரவி கருணாநாயக்க லசந்தவிற்காக அர்ப்பணித்தது இவ்வாறுதான்.

லசந்த ஓர் ஊடகவியலாளராக மிகவும் கடினமான செயற்பாட்டினை மேற்கொண்ட முழுமையான ஒரு தொழில்வாதியாவார். அவருக்குச் செய்திகளை தேடிச் செல்வதில் நித்திரையின்றிய, களைப்பின்றிய கண்களும் தேகமும் பலமாக அமைந்தன. லசந்தவிற்கு என்னவகையிலான அநீதிகள் இடம்பெற்றாலும் அவர் ஊடகத்துறைக்காக அர்ப்பணிப்பு செய்த பணி என்றென்றும் முன்மாதியான ஒரு விடயமாக சதாகாலம் நிலைத்திருக்கும்.

ஆசிரியர் குறிப்பு: தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 “දස වසරකට පෙර උදුරා දැමුණු නිදි නැති ඇස ලසන්ත” என்ற தலைப்பில் விமலநாத் வீர ரத்ன எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

 

https://maatram.org/?p=7463

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.