Jump to content

மன்னாரில் “சிவ சேனை” பெயரில் சுவரொட்டிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

50059409_2058482517571403_4768667000081743872_n.jpg?_nc_cat=110&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=11b1c3446961ff4918c23b611e2f899e&oe=5CCB1C2D

 

மன்னார் நகர மத்திய பகுதியில் அதிகம் மக்கள் நடமாடும் பகுதிகளில் இனம் தெரியாத
சிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் சிவசேனை என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

 
மும்மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழும் நகரங்களில் மன்னார் மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
 இவ் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு மன்னார் நகரின் மத்திய பகுதிகளில் மன்னார் பொது விளையாட்டரங்கு என சில பகுதிகளில் "சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்" என மத ரீதியான அடையாளப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள் தொடர்பாகவோ ஒட்டியவர்கள் தொடர்பாகவோ இதுவரை எந்த தகவல்கலும் கிடைக்கவில்லை.
ஆனாலும் மன்னார் மாவட்டம் அனைத்து மதத்தினருக்கும் உரிய பூமி எனவும் எந்த தனி நபர்களும் எங்கள் மத ஒற்றுமையை இவ்வாறான சுவரொட்டிகள் மூலம் சீர்குழைக்க முடியாது என பொது மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறான மத வாத செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

இந்த சிவ சேனை குரூப்பை விரட்டுவது நல்லம், இவர்களது குறிக்கோள் எப்படியாவது சைவ மக்களுக்கும் கத்தொலிக்க மக்களுக்கும் பகையை மூட்டுவது தான்.

Link to comment
Share on other sites

6 hours ago, colomban said:

மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்

இதில் தவறில்லை!

மதம் மாற்றுவார்கள் தான் மத நல்லிணக்கத்துக்கு குந்தகமாக உள்ளனர்.

இன்னொருவரை மதம் மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை.

சட்டத்தின் படியும் அது ஒரு குற்றம்.

தமது மதத்தவரை பாதுகாக்கும் உரிமை சிவசேனைக்கு உண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

இதில் தவறில்லை!

மதம் மாற்றுவார்கள் தான் மத நல்லிணக்கத்துக்கு குந்தகமாக உள்ளனர்.

இன்னொருவரை மதம் மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை.

சட்டத்தின் படியும் அது ஒரு குற்றம்.

தமது மதத்தவரை பாதுகாக்கும் உரிமை சிவசேனைக்கு உண்டு!

உண்மையாகவா? ஒருவன் நிஜமாக மற்றக் கடவுளை நம்பி மாறினானா அல்லது நம்பாமல் மாறினானா என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? மூளையை CAT scan செய்வீர்களோ? அவன் பணத்திற்கோ, கட்டிய துணைக்காகவோ, ஏன் சும்மா fun க்கோ கூட மாறினாலும் கேட்க அடுத்தனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடுத்தது என்ன சட்டம்? நாளைக்கு நான் மத்தியானம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் "உணவு மாற்றத் தடைச் சட்டமா"?

எனக்குப் புரியாத விடயம் இது தான்: நீங்களெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று பிளக்கும் பெரிய கொடி தாங்கிய தேசிய வாதிகள்! அதெப்படி இன்னொருவர் பிற்பற்றும் அல்லது பின்பற்றாத மத நம்பிக்கை சுதந்திரமாக உங்களுக்குத் தெரியவில்லை? விளக்குங்கள் முடிந்தால்?

Link to comment
Share on other sites

10 hours ago, Rajesh said:

இதில் தவறில்லை!

மதம் மாற்றுவார்கள் தான் மத நல்லிணக்கத்துக்கு குந்தகமாக உள்ளனர்.

இன்னொருவரை மதம் மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை.

சட்டத்தின் படியும் அது ஒரு குற்றம்.

தமது மதத்தவரை பாதுகாக்கும் உரிமை சிவசேனைக்கு உண்டு!

இன்னொருவரை வலிந்து மதம் மாற்ற நினைப்பது கொடிய மனநோய்! 

இவர்களுக்கு உரிய முறையில் "வைத்தியம்" பார்க்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உண்மையாகவா? ஒருவன் நிஜமாக மற்றக் கடவுளை நம்பி மாறினானா அல்லது நம்பாமல் மாறினானா என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? மூளையை CAT scan செய்வீர்களோ? அவன் பணத்திற்கோ, கட்டிய துணைக்காகவோ, ஏன் சும்மா fun க்கோ கூட மாறினாலும் கேட்க அடுத்தனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடுத்தது என்ன சட்டம்? நாளைக்கு நான் மத்தியானம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் "உணவு மாற்றத் தடைச் சட்டமா"?

எனக்குப் புரியாத விடயம் இது தான்: நீங்களெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று பிளக்கும் பெரிய கொடி தாங்கிய தேசிய வாதிகள்! அதெப்படி இன்னொருவர் பிற்பற்றும் அல்லது பின்பற்றாத மத நம்பிக்கை சுதந்திரமாக உங்களுக்குத் தெரியவில்லை? விளக்குங்கள் முடிந்தால்?

கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

அன்னியர்களின் படையெடுப்புகளால் எம்மவர்கள் மதரீதீயாக துன்புறுத்தப்பட்டனர், நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆசைவார்த்தைக்கு இரையாக்கப்பட்டனர். இவையெல்லாம் வரலாறுகளாக உள்ளன. பாடசாலை புத்தகங்களிலும் இருந்தது.

 இலங்கையில் சைவர்கள் கோவிலுக்கு போகவிட்டால் ஐயர் வீடு தேடி வரமாட்டார். ஞாயிற்றுக்கிழமை பூஜைக்கு அவர் இவர் வரவில்லையெனில் பாதர் வீடுதேடி வருவார். என் கண்ணால் பார்த்தது. 

வெள்ளிக்கிழமைகளில் அநேக கிறிஸ்தவர்கள் மீன் சாப்பிடுவார்கள் ஏன் டாக்டர்?

மத சுதந்திரம் வேறு. மத மாற்ற தூண்டுதல் வேறு. படித்துவிட்டு வாருங்கள். சுதந்திரத்தை  பற்றி அலசி ஆராய்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

உண்மையாகவா? ஒருவன் நிஜமாக மற்றக் கடவுளை நம்பி மாறினானா அல்லது நம்பாமல் மாறினானா என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? மூளையை CAT scan செய்வீர்களோ? அவன் பணத்திற்கோ, கட்டிய துணைக்காகவோ, ஏன் சும்மா fun க்கோ கூட மாறினாலும் கேட்க அடுத்தனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடுத்தது என்ன சட்டம்? நாளைக்கு நான் மத்தியானம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் "உணவு மாற்றத் தடைச் சட்டமா"?

எனக்குப் புரியாத விடயம் இது தான்: நீங்களெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று பிளக்கும் பெரிய கொடி தாங்கிய தேசிய வாதிகள்! அதெப்படி இன்னொருவர் பிற்பற்றும் அல்லது பின்பற்றாத மத நம்பிக்கை சுதந்திரமாக உங்களுக்குத் தெரியவில்லை? விளக்குங்கள் முடிந்தால்?

சுயமாக  மதம் மாறுவதற்கும்  இயலாமையை பயன்படுத்தி இலவச உதவிகளை காட்டி மதம் மாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதில் மதம்  மாற்றிகள் இரண்டாவது ரகம். இவர்கள் எமது தாயகத்தில் இருந்து மிக முக்கியமாக அகற்றப்பட வேண்டியவர்களே!

முடிந்தால்  இந்த உலகிலிருந்தே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

உண்மையாகவா? ஒருவன் நிஜமாக மற்றக் கடவுளை நம்பி மாறினானா அல்லது நம்பாமல் மாறினானா என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? மூளையை CAT scan செய்வீர்களோ? அவன் பணத்திற்கோ, கட்டிய துணைக்காகவோ, ஏன் சும்மா fun க்கோ கூட மாறினாலும் கேட்க அடுத்தனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடுத்தது என்ன சட்டம்? நாளைக்கு நான் மத்தியானம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் "உணவு மாற்றத் தடைச் சட்டமா"?

எனக்குப் புரியாத விடயம் இது தான்: நீங்களெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று பிளக்கும் பெரிய கொடி தாங்கிய தேசிய வாதிகள்! அதெப்படி இன்னொருவர் பிற்பற்றும் அல்லது பின்பற்றாத மத நம்பிக்கை சுதந்திரமாக உங்களுக்குத் தெரியவில்லை? விளக்குங்கள் முடிந்தால்?

ஜஸ்டின்,

ஒருவர் ஒரு மதத்தில் இருந்து, இன்னொரு மதம் பற்றி நன்றாக அறிந்துகொண்டு, தனது மததைக் காட்டிலும் புதிய மதம் சிறந்தது என்கின்ற தெளிவுடன், எந்த அழுத்தமும் இல்லாமல் புதிய மதத்திற்கு மாறுவது அவரது சுதந்திரம். இதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது.

ஆனால், இன்று மத்திய கிழக்கிலும், ஆசிய நாடுகளிலும் நடைபெறும் மதமாற்றம் என்பது இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அழுத்தத்தினால் மட்டுமே நடக்கிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாம் அல்லாத சிறுபான்மை மதங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன. யஸீடீக்கள் மற்றும் அசிரியர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். அல்லது கட்டாய இஸ்லாமிய மதத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர். இவ்வாறான விடயங்கள் பாக்கிஸ்த்தானிலும் நடக்கின்றன. சிறுபான்மை கிறீஸ்த்தவர்களும், இந்துக்களும் இலக்குவைக்கப்படுக் கொல்லப்படுவதுடன், கட்டாய மதமாற்றமும் நடக்கிறது. இந்தியாவில், வறுமைப்பட்ட இந்துக்கள் முஸ்லீம்களின் சலுகைகளாலும், அவ்வாறே வறுமைப்பட்ட முஸ்லீம்கள், இந்துக்களின் அழுத்தத்தினாலும் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதில், எவருமே இன்னொரு மதத்தை தாமாகவே தேர்ந்தெடுத்து, தெளிவாக உணர்ந்துகொண்டு சேராமல், ஏதோ ஒரு வகையில் அழுத்தங்களுக்கு உற்பட்டே மாற்றப்பட்டிருக்கின்றனர் அல்லது மாறியிருக்கின்றனர். இதை எப்படி அவர்களது சுதந்திரம் என்றோ, மற்றையவர்களுக்கு இதில் என்ன வேலை என்றோ சொல்ல முடியும்?

அண்மையில், மட்டக்களப்பில் 15 வயது தமிழ்ச் சிறுமியை ஆசை வார்த்தைகள் காட்டி இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற இரு இஸ்லாம் ஆசிரியர்கள் ஊக்குவித்திருக்கிறார்கள். 15 - 16 வயதுச் சிறுமிக்கு ஒரு மதம் பற்றிய தெளிவு எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இம்மாற்றத்தை அவள் சுதந்திரமாக, எதுவித அழுத்தமும் இன்றி செய்திருப்பாள் என்று உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா?

அழுத்தங்களும், சலுகைகளும், பண உதவிகளும் ஒருவரின் மதமாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறும்பொழுது, அவரது சுதந்திரம் என்பது அடிப்பட்டுப் போய்விடுகிறது. 

தனது மதமும், கலாசாரமும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று ஒருவர் விரும்புவது தவறாகாது. ஆனால், சிவசேனை இந்தியாவில் நடப்பது போன்று முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்ட இந்துக்களை மீண்டும் வலுக்கட்டாயமாக இந்துமதத்திற்கு மாற்ற நினைத்தால், அதுவும் கட்டாய மதமாற்றமே. 

மனிதன் தான் தனக்குத் தேவையான மதத்தைத் தெரிவு செய்ய வேண்டும், மதம் அதனைத் தீர்மானிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் வாளின் முனையினால் பரப்பப்பட்ட ஓர் மதம்.
வழுக்கட்டாயமாகவே பலர் மதம் மாற்ற‌ப்பட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

அன்னியர்களின் படையெடுப்புகளால் எம்மவர்கள் மதரீதீயாக துன்புறுத்தப்பட்டனர், நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆசைவார்த்தைக்கு இரையாக்கப்பட்டனர். இவையெல்லாம் வரலாறுகளாக உள்ளன. பாடசாலை புத்தகங்களிலும் இருந்தது.

 இலங்கையில் சைவர்கள் கோவிலுக்கு போகவிட்டால் ஐயர் வீடு தேடி வரமாட்டார். ஞாயிற்றுக்கிழமை பூஜைக்கு அவர் இவர் வரவில்லையெனில் பாதர் வீடுதேடி வருவார். என் கண்ணால் பார்த்தது. 

வெள்ளிக்கிழமைகளில் அநேக கிறிஸ்தவர்கள் மீன் சாப்பிடுவார்கள் ஏன் டாக்டர்?

மத சுதந்திரம் வேறு. மத மாற்ற தூண்டுதல் வேறு. படித்துவிட்டு வாருங்கள். சுதந்திரத்தை  பற்றி அலசி ஆராய்வோம்.

கு.சா, எனக்கு நீங்கள் படிப்பிக்க அதிகம் இல்லை! மதம் என்பது நான் ஒரு காரணத்திற்காக மாறினாலும் ஒரு காரணமும் இல்லாமல் மாறினாலும் கேட்க அதிகாரம் யாருக்கும் இல்லை! என் சாப்பாடு, உடை, யாருடன் நான் உறவு வைத்துக் கொள்வேன் என்பது போன்றே இதுவும்! வன் முறை தவறு! மைனரை மாற்றுவது தவறும், குற்றமும்! தங்கள் மதத்தின் இயல்புகளைப் பற்றி எழுத, பேச யாருக்கும் உரிமை உண்டு! மற்றவர் விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம்! விரும்பா விட்டால் தாண்டிப் போகலாம்!

இதில் அடக்கி வாசிக்க எதுவும் இல்லை! நினைப்பதைச் சொல்லவே யாழ் களம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

ஜஸ்டின்,

ஒருவர் ஒரு மதத்தில் இருந்து, இன்னொரு மதம் பற்றி நன்றாக அறிந்துகொண்டு, தனது மததைக் காட்டிலும் புதிய மதம் சிறந்தது என்கின்ற தெளிவுடன், எந்த அழுத்தமும் இல்லாமல் புதிய மதத்திற்கு மாறுவது அவரது சுதந்திரம். இதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது.

ஆனால், இன்று மத்திய கிழக்கிலும், ஆசிய நாடுகளிலும் நடைபெறும் மதமாற்றம் என்பது இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அழுத்தத்தினால் மட்டுமே நடக்கிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாம் அல்லாத சிறுபான்மை மதங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன. யஸீடீக்கள் மற்றும் அசிரியர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். அல்லது கட்டாய இஸ்லாமிய மதத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர். இவ்வாறான விடயங்கள் பாக்கிஸ்த்தானிலும் நடக்கின்றன. சிறுபான்மை கிறீஸ்த்தவர்களும், இந்துக்களும் இலக்குவைக்கப்படுக் கொல்லப்படுவதுடன், கட்டாய மதமாற்றமும் நடக்கிறது. இந்தியாவில், வறுமைப்பட்ட இந்துக்கள் முஸ்லீம்களின் சலுகைகளாலும், அவ்வாறே வறுமைப்பட்ட முஸ்லீம்கள், இந்துக்களின் அழுத்தத்தினாலும் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதில், எவருமே இன்னொரு மதத்தை தாமாகவே தேர்ந்தெடுத்து, தெளிவாக உணர்ந்துகொண்டு சேராமல், ஏதோ ஒரு வகையில் அழுத்தங்களுக்கு உற்பட்டே மாற்றப்பட்டிருக்கின்றனர் அல்லது மாறியிருக்கின்றனர். இதை எப்படி அவர்களது சுதந்திரம் என்றோ, மற்றையவர்களுக்கு இதில் என்ன வேலை என்றோ சொல்ல முடியும்?

அண்மையில், மட்டக்களப்பில் 15 வயது தமிழ்ச் சிறுமியை ஆசை வார்த்தைகள் காட்டி இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற இரு இஸ்லாம் ஆசிரியர்கள் ஊக்குவித்திருக்கிறார்கள். 15 - 16 வயதுச் சிறுமிக்கு ஒரு மதம் பற்றிய தெளிவு எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இம்மாற்றத்தை அவள் சுதந்திரமாக, எதுவித அழுத்தமும் இன்றி செய்திருப்பாள் என்று உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா?

அழுத்தங்களும், சலுகைகளும், பண உதவிகளும் ஒருவரின் மதமாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறும்பொழுது, அவரது சுதந்திரம் என்பது அடிப்பட்டுப் போய்விடுகிறது. 

தனது மதமும், கலாசாரமும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று ஒருவர் விரும்புவது தவறாகாது. ஆனால், சிவசேனை இந்தியாவில் நடப்பது போன்று முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்ட இந்துக்களை மீண்டும் வலுக்கட்டாயமாக இந்துமதத்திற்கு மாற்ற நினைத்தால், அதுவும் கட்டாய மதமாற்றமே. 

மனிதன் தான் தனக்குத் தேவையான மதத்தைத் தெரிவு செய்ய வேண்டும், மதம் அதனைத் தீர்மானிக்க முடியாது.

நான் மேலே சொன்ன பதிலே இங்கும் பொருந்தும் ரகு! வாள் முனை, துவக்கு முனையில் மாற்றுவது குற்றம்! மேலே 15- 16 வயதுப் பிள்ளையை மாற்றியதை சிறுவர் கடத்தல் என்று தான் கையாள வேண்டும்- குற்றமே! ஆனால், ஒரு மதத்தை ஒருவர் வீதியில் நின்று போதிப்பது தவறு என்பதும், அதன் பால் ஈர்க்கப் பட்டோ அல்லது தாம் இருக்கிற மதத்தினால் தமக்குக் கிடைக்காத உரிமைகளுக்காகவும் மாறுவது தவறு என்பதும், ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல! ஒருவன் வாழும் கொஞ்ச நாட்களில் அவனை அவனுக்காக வாழ விடுங்கள், ஒரு மதத்தைக் காக்க, கலாச்சாரத்தைக் காக்க என்று மற்றவனை எடை போடும் வேலை விடுதலைக்கு உழைப்பதாகச் சொல்லும் ஆட்களுக்கு உகந்த வேலையல்ல!

3 hours ago, Eppothum Thamizhan said:

சுயமாக  மதம் மாறுவதற்கும்  இயலாமையை பயன்படுத்தி இலவச உதவிகளை காட்டி மதம் மாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதில் மதம்  மாற்றிகள் இரண்டாவது ரகம். இவர்கள் எமது தாயகத்தில் இருந்து மிக முக்கியமாக அகற்றப்பட வேண்டியவர்களே!

முடிந்தால்  இந்த உலகிலிருந்தே..

என்ன வித்தியாசம்? என் கேள்வியே சட்டம் இருக்கிறது என்றீர்கள், எப்படி சட்டம் மீறப்பட்டதை நிரூபிப்பீர்கள்? என்பது தான். அமல் படுத்த முடியாத சட்டம் துஷ்பிரயோகமாகவே மாறும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தானாக விரும்பி ஒரு மதத்தைத் தெரிவு செய்வதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது. இதில் வேறு கருத்தில்லை. 

ஆனால், இன்று வீதியில் நின்று போதிப்பதாலோ அல்லது பிரசங்கம் செய்வதாலோதான் மதமாற்றம் நிகழ்கிறது என்கிறீர்களா? இல்லையே? வீடுவீடாகச் சென்று சலுகைகள் அழுத்தங்கள் என்று கொடுக்கப்படுகின்றனவே? உங்களின் மதம் தவறானது, மோட்சத்திற்குப் போகமாட்டீர்கள், எங்களின் மதத்திற்கு வாருங்கள் என்று பயங்காட்டல் நடக்கின்றதே? 

நான் இருக்கும் மதத்தில் எனக்கு உரிமைகள் இல்லையென்றால், நான் மதம் மாறுவதுதான் தீர்வா? இந்துக்களாக இருந்த பலர் முன்னர் கிறீஸ்த்தவர்களாக மதம் மாறினார்கள். இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சாதிக்கொடுமை ஒரு காரணம் என்று கொள்ளலாமா? ஆனால், கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

ஒருவன் தனது இனத்திற்காக, மொழிக்காக, மதத்திற்காக, கலாசாரத்திற்காக போராடுவதென்பது அவை காக்கப்படவேண்டும் என்று விரும்புவதோ பிழையென்றால், நாம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். இல்லாதொழிக்கப்படும் உரிமைகளை மீண்டும் கேட்கக் கூடாது, எமது அடையாளங்களை இழந்து சிங்கள் மொழியுடனும், பெளத்த மதத்துடனும் கலந்து ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாம் அவற்றைச் செய்யவில்லை, மாறாக அவற்றைக் காக்க வேண்டுமென்று போராடுகிறோம். இனம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் மதம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?   

இன்று சுதந்திரமாக, பிறர் அழுத்தமின்றி மதம் மாறுவோர் என்று எவருமில்லை. திருமணத்திற்காக, பணத்திற்காக, தமது இருப்பிற்காத்தான் இது நடக்கிறது. மதம் மாறாவிட்டால் பெண்வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ தம்மை திருமணம் முடிக்க விடமாட்டார்கள் என்கிற அழுத்தம், மதம் மாறாவிட்டால் எமக்கு வசதிகள் வாய்ப்புகள் கிடைக்காதென்கிற அழுத்தம், பணமில்லாவிட்டால் வாழ முடியாதென்கிற அழுத்தம் என்பனவே மதத்தை மாறப்பண்ணுகின்றன. வெளித்தூண்டல் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை, மதம் உற்பட. 

மனிதன் வாழப்போவது கொஞ்சக்காலம்தான், அதற்குள்ளும் பலர் அவனை மதம் மாற்றப் பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

ஆனால், கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

எனக்கு தெரிந்து ஊர்/கிராம தேவாலயங்களில் பின் வரிசை சாதி குறைந்தவர்களுக்குத்தான். அவர்கள் அறிவார்ந்த, நாகரீக மத கிறிஸ்தவர்களாக இருந்தும் இன்றுவரை சாதி மாறி மணம் முடித்ததாக சரித்திரம் இல்லை. இது புலம் பெயர்ந்தும் தொடர்கின்றது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

மனிதன் வாழ்வதற்கு மதம் என்பது தேவையற்றது. மனிதனின்  பலவீனமே மதத்தை உருவாக்கியது. உலகின் முதலில்  உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே மதம் ஆகும். எல்லா  மதங்களுமே முட்டாளத்தனத்தை தான் மக்களுக்கு போதிக்கின்றன. ஒரு முட்டாள்த்தனத்தில்  இருந்து விலகி மற்றய முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்வது தான்  மத மாற்றம். 

ஒன்றிணைந்த யூகோஸலாவிய குடியரசின் முன்னாள் அதிபர் மார்ஷல் டிட்டோவின் மதம் தொடரபான கொள்கை சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

எந்த மதத்தையும் பின்பற்றும் வணங்கும் உரிமை எலோருக்கும் உண்டு. அது மக்களுடைய தனிப்பட்ட உரிமை.  ஆனால் அதை உங்கள் வீட்டுக்குள் அல்லது மத ஸ்தாபனங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் . வெளியே பொது இடத்திற்கு வந்தால் மதம் பற்றிய பேச்சோ மத சின்னங்களோ இருக்கக் கூடாது. பொது இடங்களில்( பாடசாலைகள், வேலைத்தலங்கள் உட்பட)  மனிதர்களாக நாட்டின் பிரஜைகளாக  உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்”. 

இதை பற்றி யாழ்கள உறுப்பினர்கள்என்னநினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். 

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

எனக்கு தெரிந்து ஊர்/கிராம தேவாலயங்களில் பின் வரிசை சாதி குறைந்தவர்களுக்குத்தான். அவர்கள் அறிவார்ந்த, நாகரீக மத கிறிஸ்தவர்களாக இருந்தும் இன்றுவரை சாதி மாறி மணம் முடித்ததாக சரித்திரம் இல்லை. இது புலம் பெயர்ந்தும் தொடர்கின்றது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும்.

வருணாசிரம்ம் என்னும் மனிதரை தரவரிசைப் படுத்தும் சாதி  அடுக்கு பிரிவினை இந்து மதத்தினாலேயே உருவாக்கப்பட்டது. அதை கிருஷனரே பகவத்கீதையில் கூறுகிறார்  இந்து மதம் இல்லாத நாடுகளில் சாதி அடுக்கு இல்லை.(மத இனப் பிரிவுகள் இருக்கலாம் அது ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற சாதி அடுக்கு அல்ல)

ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற மனிதரை தரவரிசைப்படுத்தும் சாதி அடுக்கு என்பது இந்து மதத்தினால் அது உள்ள  மற்றைய மத மக்களுக்கு வழங்கப்பட்ட நோய் ஆகும். அந்த நோயின் மூலக்கூறு உள்ள இந்து மதத்தில் இருந்து அது அகற்றப்பட்டால் மற்றைய சிறு பகுதி மக்களிடம் இருந்தும் அது மறைந்துவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எனக்கு தெரிந்து ஊர்/கிராம தேவாலயங்களில் பின் வரிசை சாதி குறைந்தவர்களுக்குத்தான். அவர்கள் அறிவார்ந்த, நாகரீக மத கிறிஸ்தவர்களாக இருந்தும் இன்றுவரை சாதி மாறி மணம் முடித்ததாக சரித்திரம் இல்லை. இது புலம் பெயர்ந்தும் தொடர்கின்றது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும்.

2 minutes ago, tulpen said:

வருணாசிரம்ம் என்னும் மனிதரை தரவரிசைப் படுத்தும் சாதி  அடுக்கு பிரிவினை இந்து மதத்தினாலேயே உருவாக்கப்பட்டது. அதை கிருஷனரே பகவத்கீதையில் கூறுகிறார்  இந்து மதம் இல்லாத நாடுகளில் சாதி அடுக்கு இல்லை.(மத இனப் பிரிவுகள் இருக்கலாம் அது ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற சாதி அடுக்கு அல்ல)

ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற மனிதரை தரவரிசைப்படுத்தும் சாதி அடுக்கு என்பது இந்து மதத்தினால் அது உள்ள  மற்றைய மத மக்களுக்கு வழங்கப்பட்ட நோய் ஆகும். அந்த நோயின் மூலக்கூறு உள்ள இந்து மதத்தில் இருந்து அது அகற்றப்பட்டால் மற்றைய சிறு பகுதி மக்களிடம் இருந்தும் அது மறைந்துவிடும். 

ஆக இதற்கும் சைவ/இந்துமதங்கள் தான் காரணம். மற்றவர்களில் குற்றம் சொல்லி தப்பித்துக்கொள்வது மனித இயல்புகளில் ஒன்றுதானே.

இந்து மத வாசனையே இல்லாத ஆபிரிக்க நாடுகளில் கொடுமையான சாதிப்பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் அறியவில்லையென நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

ஆக இதற்கும் சைவ/இந்துமதங்கள் தான் காரணம். மற்றவர்களில் குற்றம் சொல்லி தப்பித்துக்கொள்வது மனித இயல்புகளில் ஒன்றுதானே.

இந்து மத வாசனையே இல்லாத ஆபிரிக்க நாடுகளில் கொடுமையான சாதிப்பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் அறியவில்லையென நினைக்கின்றேன்.

 

ஆம் சரிதான் இந்து மதம் போல் அயோக்கியத்தனமாக  மக்களைப் பிரிக்கும்  கொடுமை நீங்கள் கூறியதைப் போல் ஆபிரிக்க நாடுகளில் உள்ளது என்றால் அதுவும் களையப்பவேண்டியது என்று அர்த்தமே தவிர இந்து மதத்தில் அந்தக் கொடுமை இல்லை என்று ஆகிவிடாது. எம்மைபப் போலவே கேவலமாய் மற்றயவனும் இருக்கிறான் என்று சுட்டிக்காட்டுவதன் மூலம் எமது கேவலத்தை மறைக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

ஆம் சரிதான் இந்து மதம் போல் அயோக்கியத்தனமாக  மக்களைப் பிரிக்கும்  கொடுமை நீங்கள் கூறியதைப் போல் ஆபிரிக்க நாடுகளில் உள்ளது என்றால் அதுவும் களையப்பவேண்டியது என்று அர்த்தமே தவிர இந்து மதத்தில் அந்தக் கொடுமை இல்லை என்று ஆகிவிடாது. எம்மைபப் போலவே கேவலமாய் மற்றயவனும் இருக்கிறான் என்று சுட்டிக்காட்டுவதன் மூலம் எமது கேவலத்தை மறைக்க முடியாது. 

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் சாதி விடயத்தில் திருந்தவில்லை என்று குறிப்பிட்டதற்கு....அதற்கும் இந்துக்கள் தான் காரணம் என்று குறிப்பிட்ட உங்களுடன் கருத்தெழுதுவது வீண். 

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் சாதி விடயத்தில் திருந்தவில்லை என்று குறிப்பிட்டதற்கு....அதற்கும் இந்துக்கள் தான் காரணம் என்று குறிப்பிட்ட உங்களுடன் கருத்தெழுதுவது வீண். 

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எமது இத்து மதத்தில் இருந்து தான் சாதி போனது என்பது யதார்ததமானது. 100 வீத உண்மையும் கூட. நீங்கள் இருக்கும் ஜேர்மனியில் வாழும் கிறிஸ்தவர்களிடம் சாதி இருந்திருந்தால் அது  ஜெரூசலத்தில் இருந்து அல்லது பைபிளில் இருந்து போனது எனலாம். ஆனால் இங்கு இல்லையே!  நீங்கள் கூறியது போல  ஊரில் தானே இருக்கிறது. அப்படியானால் அது எம்மில் இருந்து தானே போயிருக்க வேண்டும்.  மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எப்படித் திருந்துவார்கள் அவர்கள் ஒரு முட்டாள்த்தனத்தில் இருந்து விலகி மற்றைய முட்டாள்த்தனத்தை ஏற்றுக்கொண்டவர்களாச்சே. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

ஒருவர் தானாக விரும்பி ஒரு மதத்தைத் தெரிவு செய்வதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது. இதில் வேறு கருத்தில்லை. 

ஆனால், இன்று வீதியில் நின்று போதிப்பதாலோ அல்லது பிரசங்கம் செய்வதாலோதான் மதமாற்றம் நிகழ்கிறது என்கிறீர்களா? இல்லையே? வீடுவீடாகச் சென்று சலுகைகள் அழுத்தங்கள் என்று கொடுக்கப்படுகின்றனவே? உங்களின் மதம் தவறானது, மோட்சத்திற்குப் போகமாட்டீர்கள், எங்களின் மதத்திற்கு வாருங்கள் என்று பயங்காட்டல் நடக்கின்றதே? 

நான் இருக்கும் மதத்தில் எனக்கு உரிமைகள் இல்லையென்றால், நான் மதம் மாறுவதுதான் தீர்வா? இந்துக்களாக இருந்த பலர் முன்னர் கிறீஸ்த்தவர்களாக மதம் மாறினார்கள். இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சாதிக்கொடுமை ஒரு காரணம் என்று கொள்ளலாமா? ஆனால், கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

ஒருவன் தனது இனத்திற்காக, மொழிக்காக, மதத்திற்காக, கலாசாரத்திற்காக போராடுவதென்பது அவை காக்கப்படவேண்டும் என்று விரும்புவதோ பிழையென்றால், நாம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். இல்லாதொழிக்கப்படும் உரிமைகளை மீண்டும் கேட்கக் கூடாது, எமது அடையாளங்களை இழந்து சிங்கள் மொழியுடனும், பெளத்த மதத்துடனும் கலந்து ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாம் அவற்றைச் செய்யவில்லை, மாறாக அவற்றைக் காக்க வேண்டுமென்று போராடுகிறோம். இனம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் மதம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?   

இன்று சுதந்திரமாக, பிறர் அழுத்தமின்றி மதம் மாறுவோர் என்று எவருமில்லை. திருமணத்திற்காக, பணத்திற்காக, தமது இருப்பிற்காத்தான் இது நடக்கிறது. மதம் மாறாவிட்டால் பெண்வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ தம்மை திருமணம் முடிக்க விடமாட்டார்கள் என்கிற அழுத்தம், மதம் மாறாவிட்டால் எமக்கு வசதிகள் வாய்ப்புகள் கிடைக்காதென்கிற அழுத்தம், பணமில்லாவிட்டால் வாழ முடியாதென்கிற அழுத்தம் என்பனவே மதத்தை மாறப்பண்ணுகின்றன. வெளித்தூண்டல் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை, மதம் உற்பட. 

மனிதன் வாழப்போவது கொஞ்சக்காலம்தான், அதற்குள்ளும் பலர் அவனை மதம் மாற்றப் பார்க்கிறார்கள்.

நான் கேட்பதெல்லாம், ஒருவன் தன் துன்பங்களுக்குத் தீர்வு மதம் மாறுவதால் கிடைக்கும் என்று நினைத்தால், அதைக் கேட்க நீங்கள் யார் என்பதே! நீங்கள் சவூதி, ஈரான் மலேசியாவில் இருப்பது போன்ற கலாச்சார/மத காப்புப் படையா? வன்முறை மாற்றம் பற்றி நான் எதிர்ப்பை ஏற்கனவே சொல்லி விட்டேன். மறு கருத்தில்லாமல் அது தவறு. ஆனால், மென்முறையில் ஒருவன் மாற்றப் பட்டால், அவன் பொருளுக்காக மாறினால் என்ன, ஒன்றுமில்லாததற்காக மாறினால் என்ன? அவன் வாழ்வு, அவன் விருப்பம்! இந்த மாதிரியான ஒரு சுதந்திரத்திற்காக அல்லவா நாம் புலம் பெயர்ந்து தனி மனித சுதந்திரத்தை மதிக்கும் மேற்கு நாடுகளுக்கு வந்தோம்? நாம் ஏன் இந்தியாவிலோ, மதத்தை அனுமதிக்காத வடகொரியாவிலோ, அல்லது மத்திய கிழக்கிலோ தங்க முனையவில்லை?

என்னுடைய கருத்து பிரபலமாக இல்லாதிருக்கலாம், ஆனால் அது என்னுடைய சுதந்திரத்திற்கான என் ஸ்ராண்டர்ட்! சாதியைப் பற்றி நான் இங்கு பேசவேயில்லை. அது யாருக்காவது சுட்டு அவர்கள் அதை இழுத்தால் அது அவர்கள் பிரச்சினை!

1 hour ago, tulpen said:

மனிதன் வாழ்வதற்கு மதம் என்பது தேவையற்றது. மனிதனின்  பலவீனமே மதத்தை உருவாக்கியது. உலகின் முதலில்  உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே மதம் ஆகும். எல்லா  மதங்களுமே முட்டாளத்தனத்தை தான் மக்களுக்கு போதிக்கின்றன. ஒரு முட்டாள்த்தனத்தில்  இருந்து விலகி மற்றய முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்வது தான்  மத மாற்றம். 

ஒன்றிணைந்த யூகோஸலாவிய குடியரசின் முன்னாள் அதிபர் மார்ஷல் டிட்டோவின் மதம் தொடரபான கொள்கை சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

எந்த மதத்தையும் பின்பற்றும் வணங்கும் உரிமை எலோருக்கும் உண்டு. அது மக்களுடைய தனிப்பட்ட உரிமை.  ஆனால் அதை உங்கள் வீட்டுக்குள் அல்லது மத ஸ்தாபனங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் . வெளியே பொது இடத்திற்கு வந்தால் மதம் பற்றிய பேச்சோ மத சின்னங்களோ இருக்கக் கூடாது. பொது இடங்களில்( பாடசாலைகள், வேலைத்தலங்கள் உட்பட)  மனிதர்களாக நாட்டின் பிரஜைகளாக  உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்”. 

இதை பற்றி யாழ்கள உறுப்பினர்கள்என்னநினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். 

நூறு வீதம்! மதத்தை வீட்டிலேயே விட்டு வந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, tulpen said:

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எமது இத்து மதத்தில் இருந்து தான் சாதி போனது என்பது யதார்ததமானது. 100 வீத உண்மையும் கூட. நீங்கள் இருக்கும் ஜேர்மனியில் வாழும் கிறிஸ்தவர்களிடம் சாதி இருந்திருந்தால் அது  ஜெரூசலத்தில் இருந்து அல்லது பைபிளில் இருந்து போனது எனலாம். ஆனால் இங்கு இல்லையே!  நீங்கள் கூறியது போல  ஊரில் தானே இருக்கிறது. அப்படியானால் அது எம்மில் இருந்து தானே போயிருக்க வேண்டும்.  மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எப்படித் திருந்துவார்கள் அவர்கள் ஒரு முட்டாள்த்தனத்தில் இருந்து விலகி மற்றைய முட்டாள்த்தனத்தை ஏற்றுக்கொண்டவர்களாச்சே. 😀

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை பாதிரியார் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். அவர் வத்திக்கான் வந்து பரிசுத்தம் பெற்ற பின்னரே பாதிரியாராக ஊரில் சேவகம் செய்கின்றார். எல்லாம் தெரிந்த அந்த ஃபாதர் ஏன் எல்லோரையும் அப்பம் வாங்குவதற்கு சரி சமமாக அழைக்கவில்லை.

ஜேர்மனியிலும் சாதி தவிர்த்து ஆனால் அதே போல் பல பிரச்சனைகள் மக்களிடையே இருக்கின்றது. வேறு எங்கேயவது அதைப்பற்றி கதைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை பாதிரியார் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். அவர் வத்திக்கான் வந்து பரிசுத்தம் பெற்ற பின்னரே பாதிரியாராக ஊரில் சேவகம் செய்கின்றார். எல்லாம் தெரிந்த அந்த ஃபாதர் ஏன் எல்லோரையும் அப்பம் வாங்குவதற்கு சரி சமமாக அழைக்கவில்லை.

ஜேர்மனியிலும் சாதி தவிர்த்து ஆனால் அதே போல் பல பிரச்சனைகள் மக்களிடையே இருக்கின்றது. வேறு எங்கேயவது அதைப்பற்றி கதைக்கலாம்.

கு.சா, எங்கே போய் எதைப் பார்த்து விட்டுப் பேசுகிறீர்கள் என்று விளங்கவில்லை! அப்பம் வாங்க வரிசையில் தான் இப்போது போகிறார்கள்! இது தான் தாயகத்திலும். இங்கே இரு அங்கே இரு என்று யாரையும் யாரும் ஒதுக்கி வைத்ததாக நான் இலங்கையில் வடக்கிலும் மத்தியிலும் மேற்கிலும் சென்ற எந்த ஆலயத்திலும் காணவில்லை!இது 2002 வரையில் தெரிந்தது. ஒருவர் ஆலயத்தில் எங்கிருக்கிறாரோ அதன் படி தான் அவர் அப்பம் வைன் வாங்க வரிசையில் இடம் எடுப்பார்! இதென்ன புதுக் கதை? இந்த சாதி மேட்டரில் எனக்கு ஆர்வம் இல்லை! ஆனால் எந்த இடம் எந்தக் கோவில் என்றாவது சொல்லுங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ஒன்றிணைந்த யூகோஸலாவிய குடியரசின் முன்னாள் அதிபர் மார்ஷல் டிட்டோவின் மதம் தொடரபான கொள்கை சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

எந்த மதத்தையும் பின்பற்றும் வணங்கும் உரிமை எலோருக்கும் உண்டு. அது மக்களுடைய தனிப்பட்ட உரிமை.  ஆனால் அதை உங்கள் வீட்டுக்குள் அல்லது மத ஸ்தாபனங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் . வெளியே பொது இடத்திற்கு வந்தால் மதம் பற்றிய பேச்சோ மத சின்னங்களோ இருக்கக் கூடாது. பொது இடங்களில்( பாடசாலைகள், வேலைத்தலங்கள் உட்பட)  மனிதர்களாக நாட்டின் பிரஜைகளாக  உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்”. 

இதை பற்றி யாழ்கள உறுப்பினர்கள்என்னநினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். 

ஒன்றிணைந்த அந்த யூகோஸ்லாவியா பல மகாணங்களாக பிரிந்து போக காரணம் மதமும் இனமுமே. தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற வைராக்கியமும்.

5 minutes ago, Justin said:

ஒருவர் ஆலயத்தில் எங்கிருக்கிறாரோ அதன் படி தான் அவர் அப்பம் வைன் வாங்க வரிசையில் இடம் எடுப்பார்!

அவர்கள் இருப்பது பின் வரிசை அல்லவா! 
இத்துடன் இந்த திரிக்கு வரமாட்டேன். நன்றி.

8 minutes ago, Justin said:

கு.சா, எங்கே போய் எதைப் பார்த்து விட்டுப் பேசுகிறீர்கள் என்று விளங்கவில்லை! அப்பம் வாங்க வரிசையில் தான் இப்போது போகிறார்கள்! இது தான் தாயகத்திலும். இங்கே இரு அங்கே இரு என்று யாரையும் யாரும் ஒதுக்கி வைத்ததாக நான் இலங்கையில் வடக்கிலும் மத்தியிலும் மேற்கிலும் சென்ற எந்த ஆலயத்திலும் காணவில்லை!இது 2002 வரையில் தெரிந்தது. ஒருவர் ஆலயத்தில் எங்கிருக்கிறாரோ அதன் படி தான் அவர் அப்பம் வைன் வாங்க வரிசையில் இடம் எடுப்பார்! இதென்ன புதுக் கதை? இந்த சாதி மேட்டரில் எனக்கு ஆர்வம் இல்லை! ஆனால் எந்த இடம் எந்தக் கோவில் என்றாவது சொல்லுங்கள்?

அவர்கள் இருப்பது பின் வரிசை அல்லவா! 
இத்துடன் இந்த திரிக்கு வரமாட்டேன். நன்றி.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை பாதிரியார் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். அவர் வத்திக்கான் வந்து பரிசுத்தம் பெற்ற பின்னரே பாதிரியாராக ஊரில் சேவகம் செய்கின்றார். எல்லாம் தெரிந்த அந்த ஃபாதர் ஏன் எல்லோரையும் அப்பம் வாங்குவதற்கு சரி சமமாக அழைக்கவில்லை.

ஜேர்மனியிலும் சாதி தவிர்த்து ஆனால் அதே போல் பல பிரச்சனைகள் மக்களிடையே இருக்கின்றது. வேறு எங்கேயவது அதைப்பற்றி கதைக்கலாம்.

அப்படி அவர் செய்திருந்தால் அது தவறு. கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால அந்த சாதி நோய் அவருக்கு வந்தது அவரது தாய் மதமான எமது இந்துமதத துல் இருந்து தான். அது மறுக்கவோ மறைக கவோ முடியாத உண்மை. 

 

59 minutes ago, குமாரசாமி said:

ஒன்றிணைந்த அந்த யூகோஸ்லாவியா பல மகாணங்களாக பிரிந்து போக காரணம் மதமும் இனமுமே. தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற வைராக்கியமும்.

அவர்கள் பிரிந்து போக காரணம் அந்  நாடுகள் சுயநிர்ணய உரமை  உள்ள தேசங்களாஎ ஏற்கனவே யூகோஸ்லாவிய குடியரசில்  இணைந்திருந்ததே. தங்களை தாமே ஆளவேண்டும் என்ற வைராக்கியம் தவறானதல்ல. நாமும் அதையே விரும்பினோம்.  யூகோஸிலாவிய குடியரசு உடைந்து  மத அடிப்படையில் எந்த நாடு உருவாகியது  என்பதை அறிய ஆவலாய் உள்ளேன். தயவு செய்து அதை மட்டும் கூறிவிட்டு திரியில் இருந்து விடை பெறவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூகொஸ்லாவியா பிரிந்தபோது உருவாகிய செர்பியா, குரோஷியா மற்றும் பொஸ்னியா ஹெர்ஸகோவினா ஆகிய நாடுகளில் பொஸ்னியா பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்டது. குரோஷியா கத்தோலிக்கர்களையும், சேர்பியா பழமைவாத கிறீஸ்த்தவர்களையும் கொண்டது. 

பார்க்கபோனால், ஓரளவிற்கு மத அடிப்படையில்த்தான் பிரிந்து இவை உருவாகின என்று நான் நினைக்கிறேன்.

20 ஆம் நூற்றாண்டில், யூதர்களுக்குப் பின்னர் இனவழிப்பிற்குள் அகப்பட்ட இனம் என்றால்  அது பொஸ்னிய முஸ்லீம்களாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.