Jump to content

இறுகும் சுறுக்கு, இறுகுமா இன்னும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுகும் சுறுக்கு, இறுகுமா இன்னும்?

2007ம் ஆண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, சண்டே லீடர் பத்திரிகையில், 'மிக் டீல்' என பின்னாளில் அழைக்கப்பட்ட, ஒரு மோசடி மிக்க  ஆயுத கொள்வனவு குறித்த விபரங்களை வெளியிட்டார். உக்ரைன் நாட்டில், இயக்கமில்லாத நிலையில், வைக்கப் பட்டிருந்த மிக்  விமானங்களை வாங்கிய வகையில், அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸேவின் தொடர்புகள் குறித்து பல விபரங்களை, வெளியிட்டிருந்த  இந்த கட்டுரையினை தொடர்ந்து,  சண்டே லீடர் பத்திரிகை மீது, மான  நஷ்ட வழக்கு ஒன்றினை ஆரம்பித்திருந்தார் அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸே .

லசந்தவின் நண்பர்களும், உறவினர்களும், இந்த கட்டுரைகளும்,வழக்கும், அவரது உயிரினை காவு கொண்டது என நம்புகின்றனர்.

பல வருடங்களுக்கு பின்னர் இப்போது, FCID (Financial Crime Investigation Division) நடாத்தும் இது தொடர்பான விசாரணைகள், அந்த பயமறியா ஊடகவியலாளர் நாட்டின் மிகவும் சக்தி மிக்க நபர் ஒருவர் தொடர்பில் வெளிப்படுத்திய ஒவ்வொரு விடயமும், உண்மையைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

Image result for sri lanka FCID

2000ம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அரசு, இரு டெண்டர்கள் மூலம் 6 மிக் -27 போர் விமானங்களை சிங்கப்பூர் ஆயூத தரகு நிறுவனமான DS Alliance க்கு வழங்கி இருந்தது. இந்த நிறுவனத்தின் நிருவாக இயக்குனர்  ‘T.S. Lee’ என்பவரே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

ஒப்பந்தப்படி, உக்கிரேனின் அரச நிறுவனமான உகிரின்மஸ் இடமிருந்து, ஒவ்வொன்றும் US $ 1.2 மில்லியன் விலையில் இலங்கை விமானப்படைக்கு, DS Alliance வாங்கி தரும் என இணங்கி இருந்தனர்.

இந்த விமானங்களில் மூன்று துர் அதிஸ்டம் கொண்டனவாக இருந்தன. 2007 ஆகஸ்ட் மாதமளவில், ஒரு விமானமானது, கட்டுநாயக்கா விமான தளத்தில் வீழ்ந்து நொறுங்கி, அதில் இருந்த உக்கிரயன் நாட்டு விமான ஓட்டியும் பலியானார். இரண்டாவது விமானம் பழுதாகி ஒருபோதுமே பாவிக்க கூடியதாக இருக்க வில்லை. மூன்றாவது அதே விமானதளத்தில், 2001 புலிகள் தாக்குதலால் அழிந்தது.

ஜனவரி 2006ல் அப்போதைய விமான படைத்தளபதி, டொனால்ட் பெரேரா மிக்-27 விமானங்கள் பாவனையில் இருந்து நீக்கி, அமெரிக்க, இஸ்ரேலிய விமானங்கள் உட்பட வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் பெறப்பட்டு, விமானப்படை நவீன மயப் படுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதே தளபதி, அடுத்த மாதமே, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்த பின்னர், தனது முடிவில் யு டர்ன் அடித்து மாறுபாடான கருத்தினை தெரிவித்து இருந்தார். பெப்ரவரி 6ம் திகதி, பாதுகாப்பு அமைச்சு செயலகத்தில், நால்வருக்கு இடையே சந்திப்பு நிகழ்ந்தது. மூன்றாம், நாலாம் நபர்கள், கோத்தபாயாவின் உறவினர் உதயங்க வீரதுங்கவும், அவரது வியாபார கூட்டாளியான உக்கிரேயின் நாட்டுக் காரரான Dmytro Peregudov (பெருகுடோவ்)ஆவர்.

Image result for udayangaImage result for kothapaya

மச்சான் உதயங்க வீரதுங்க, லசந்த, கோத்தா 

சிங்கப்பூர் நிறுவனம் DS Alliance முன்னர் விநியோகம் செய்த விமானங்கள் தந்த கசப்பான அனுபவங்களை சொல்லிய தளபதி, அதன் காரணமாகவே தான் மிக்-27 விமானங்களை வெறுப்பதாக சொன்னார். வீரதுங்க இம்முறை, DS Alliance இந்த விவகாரத்தில் சம்பந்தப் பட மாட்டாது என்றும், நேரடியாக உக்கிரேன்  அரசுடன், இலங்கை அரசு ஒப்பந்தத்தை நடத்தும் என உறுதி அளித்து, கோத்தபாயாவின் அழுத்தத்தில், வீரதுங்கா - பெருகுடோவ் தந்த வியாபார முனைவை ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டார்.

டெண்டர் கோராமல், அரசு கொள்வனவு செய்ய முடியாது என்பன போன்ற பல விதிகளை, அதிகாரத்தில் இருந்த ராஜபக்சேக்கள், உதாசீனம் செய்து, அரசுடன் - அரசு என்பதால் அது தேவை இல்லை என்பதாக ('?') ஒரு ஒப்பந்தத்தை ஜூன் 2006ல் Ukrinmash நிறுவனத்துக்கும், இலங்கை விமான படைத்துறைக்கும் இடையே கையெழுதியிட்டு முடித்தனர். 

ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கான  தொகை US $15 மில்லியன் பணமானது, முன்பே தெரிவிக்கப்பட்டவாறு அரசுக்கும், அரசுக்கும் அல்லாது,  ‘Bellimissa Holdings Limited’ என்ற லண்டன் முகவரியும், போன் இலக்கமும் மட்டுமே கொண்டிருந்த ஒரு மர்மமான கம்பெனிக்கு அனுப்பப் பட்டு இருந்தது.

டிசம்பர் 2006ல் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையானது,  2000ல் சந்திரிகா அரசினால் US $1.2 மில்லியனுக்கு வாங்கப் பட்ட அதே ரக விமானத்தினை, ராஜபக்சே அரசு, US $2.4 மில்லியனுக்கு ‘Bellimissa Holdings’ நிறுவத்தினூடாக 2006ல் இரட்டிப்பு விலைக்கு  வாங்கியதை அம்பலப்படுத்தியது.

(இதை எழுதிய இக்பால் அத்தாஸ் , பயமுறுத்தல் காரணமாக நாட்டினை விட்டு ஓட்டம் பிடித்தது வேறு கதை)

ஜூலை 2007ல் லசந்த விக்கிரமதுங்கவும், அவரது சண்டே லீடர் பத்திரிகையும் இந்த விடயத்தை கையில் எடுத்து, மேலும் பல விடயங்களை வெளிச்சமாகியது. US $15 மில்லியன் பெற்றுக்  கொண்ட ‘Bellimissa Holdings Limited’ பிரித்தானியாவில் அலுவலகம் எதனையும் கொண்டிராத, மாதம் $10 கட்டணத்துக்கு,  தமது முகவரியினையும், fax இலக்கத்தினையும் வழங்கக் கூடிய  virtual office, எனப்படும் வசதியினை பயன்படுத்திய ஒரு அமைப்பு என்றும், பணத்தினை பெற்றுக்  கொண்டதும், அந்த, முகவரிக்கும், Bellimissa Holdings Limited கும் எதுவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தது. அதாவது இது, ஒரு வசதிக்காக உருவாக்கப் பட்ட கம்பெனி, தேவை முடிந்ததும் கலைக்கப்பட்டு விட்டது என வெளிச்சமாகியது. 

வெகுண்ட கோத்தபாய, இந்த ஒப்பந்தத்தில், மூன்றாவது பார்ட்டியே  இல்லை என்றார். இந்த விமானங்கள் 2000 ஆண்டு வாங்கியவை போலல்லாது, சிறப்பானவை, அதனாலே தான் கூடுதல் விலை கொடுக்கப் பட்டது  என கதை  விட்டார். 

உண்மைகள் ஒவொன்றாக வருவதை கண்ட அவர், மிக்-27 விமானங்கள் வாங்கியதில், தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை, தான் எந்த வித பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என முழுப் பூசணிக் காயினை கோப்பை பால் சோறில் மறைக்க முயன்றார்.

இந்நிலையில் மறுபடியும், செப்டெம்பர் 2007ல் லசந்த விக்கிரமதுங்க தனது பேனா தாக்குதலை தொடர்ந்தார். இம்முறை மிக் டீலில் எஞ்சி இருந்த இடைவெளிகளை வெளிச்சமாக்கி இருந்தார்.

பெப்ரவரி 2006ல் கோத்தபாய ராஜபக்சே தலைமையில் நால்வருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்தும், அப்போது, ராஜபக்சே அரசால், ரஷ்யா மற்றும் உக்கிரேன் தூதரக நியமிக்கப்பட்டிருந்த உதயங்க வீரதுங்காவின் ஈடுபாடு குறித்தும் விலாவாரியாக எழுதி, கோத்தபாயவின் பொய்களை வெளிப்படுத்தி இருந்தார்.

கோத்தபாய 100 கோடி கேட்டு மான நஷட வழக்கு தொடர்ந்தார். எனினும் அந்த வழக்கு விசாரணைக்கு வரமுன்னரே லசந்த விக்கிரமதுங்க 8 ஜனவரி 2008ல்  கொல்லப் பட் டார்.

(இன்று வரை அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இன்று அவர் கொல்லப் பட்ட 11வது ஆண்டு நினைவு நாள்.)

2015 முதல் அரச அமைப்பான FCID விசாரணைகளை நடாத்தி, ‘Bellimissa Holdings’ என்பது, British Virgin Islands இல் இருக்கும், சிங்கப்பூர் DS Alliance cabal கம்பெனியின் உரிமையாளர் ‘T.S. Lee’ சொந்தமானது என கண்டறிந்துள்ளது. (அட பாவிகளா!)

அவர் தான் அதே  சந்திரிகா காலத்து ஆயுத வியாபாரி. இவரை மீண்டும் பயன் படுத்த மாட்டோம் என பொய் உறுதி மொழியினை விமான படைத் தளபதிக்கு வழங்கி இணங்க வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

US $15மில்லியன் பணம் செலுத்தப்பட்ட வங்கிகளினூடாக விசாரணைகளை நடாத்திய FCID, அந்த பணமானது DS Alliance வங்கி கணக்கினையே போய் சேர்ந்திருந்தது எனவும் கண்டு கொண்டது.

அதே வேளை உக்கிரேனிய அரசினால் நடாத்தப்பட் ட விசாரணைகளின் படி, உக்கிரேனியன் அரசு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப் படவே இல்லை என தெரிய வந்துள்ளது. 

உகிரின்மஸ் நிறுவனம் DS Alliance நிறுவனத்துக்கு, ஒரு விமானத்தினை US $1மில்லியனுக்கு விற்பனை செய்துள்ளது. அதே விமானத்தினை, கமிசன் US $1.4 மில்லியன் வைத்து, மொத்தமாக ஒரு விமானம் US $2.4 மில்லியனுக்கு இலங்கை விமானப் படைக்கு கட்டி அடிக்கப் பட்டு  உள்ளது.

FCID யினால் விசாரிக்கப் பட்ட பல விமானப் படை உத்தியோகத்தர்கள், எவ்வளவு தான் மறுத்தாலும், கோத்தபாயவும், அவரது உறவினர் உதயங்க வீரதுங்கா சம்பந்தப் படாமல், மிக் டீல் என்பதே நடந்து இருக்க முடியாது என தெரிவித்து இருந்தனர்.

பல வெளிநாட்டு, அரச அமைப்புகள், இலங்கை CID  யினர், இன்டர்போல் உதவிகளுடன் துபாய் நகரத்துக்கு வெளியே ரகசியமா வாழ்ந்து வந்த உதயங்க வீரதுங்கா கைதாகி, இலங்கை திருப்பி அனுப்பப் படும் நடவடிக்கைகளை எதிர் நோக்கி உள்ளார்.

முன்னாள் தூதுவர் ஒருவர், நாடு கடத்தப் படுவதை எதிர்நோக்கிய நிலையில், FCID வலை இறுகும் நிலையில், இந்த மிக்  டீலினால் பயன் அடைந்தவர்கள் யார், யார் என்பதை நாட்டு மக்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.

FCID  யினரின் திறமையான வேலைகள், பாராட்டப் பட வேண்டிய அதேவேளை, இந்த மிக்  டீல் குறித்து எழுதி கொலையான  லசந்தா  விக்கிரமதுங்க கண்டறிந்து சொல்லிய அனைத்தும் சரியானது என உறுதிப் படுத்தப் பட்டிருக்கின்றன.  

Source: Sunday Observer, Colombo.

Translation for Yarl: Myself.

https://en.wikipedia.org/wiki/Financial_Crimes_Investigation_Division

ராஜபக்சக்கள்  அவசரமாக பதவிக்கு வர முயன்ற காரணம் தெரிந்தா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் மிகவும் ஆச்சரியமான விடயம்.மொழிபெயர்ப்புக்கும் இணைப்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Anti Money Laundering என்பது மிக கடுமையாக மேலை நாடுகளில் பார்க்கப் படுகினறது. அதுவும், ஆயுத கொளவனவுக்காக இது செய்யப்பட்டது மிக, மிக கடுமையாக பார்க்கப் பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நின்று, கயமைத்தனமாக வென்று, இந்த விசாரணைகளை தடுக்க முடியும் என கோத்தபாய நம்பினார்.

எனினும், அமெரிக்கா அரசு தனது பிரஜை என்ற வகையிலும், பிரித்தானிய அரசு தனது மண்ணில் நடந்தது என்ற வகையிலும், இவர்களது அழுத்தத்தில், அமீரக, சிங்கப்பூர் அரசும் இலங்கை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கின்றன.

இலங்கை அரசுக்கும், ராஜபக்ஸே தரப்புக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கு நாடுகளினால் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன.

புலிகள் ஒடுக்கப் பட்ட மைக்கு முக்கிய காரணம் அவர்களது விமானப் படை. அதேபோல் இந்த விசாரணைகளுக்கு காரணம் அதே விமானப் படை விவகாரம்.

இந்த வகையில், அரசுகளின் பெயர்களில், விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, நாசகார நடவடிக்கைகளுக்காக, பயங்கர வாதிகளிடம் செல்ல முடியும் என்பதே மேற்கு நாடுகளினால் கவலை. அதனால் தான் இந்த விசாரணைகளில் பாரிய ஒத்துழைப்பு வழங்கப் படுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்படியே தருகிறேன். மொழி பெயர்க்க இப்போது நேரம் இல்லை.

 

http://www.dailymirror.lk/article/-th-Death-Anniversary-of-Lasantha-Wickrematunge-WHAT-THEY-DID-TO-MY-FATHER-AND-WHY-160794.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுகும் மேலும் ஒரு ராஜபக்ச மோசடி...

http://www.dailymirror.lk/expose/article/Inside-Story-of-the-First-Ever-Foreign-Indictment-of-A-Lankan-Ambassador-160837.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

இலங்கை அரசுக்கும், ராஜபக்ஸே தரப்புக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கு நாடுகளினால் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன.

ராஜபக்சக்களை அரியணை ஏற விடக்கூடாது என்பதே அந்த செய்யின் சாரமாக இருக்கும்.

அப்படி நடந்தால், சொறி லங்கா அரசு இனப்படுகொலை சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ளும். மற்றும் பொருளாதார தடைகளை எதிர் கொள்ளும். 

வேறு எதை அவர்களால் சொல்லமுடியும்.

மேற்கு நாடுகள் தாம் சொல்வதை நிறைவேற்றக்கூடிய நிலையில் இருக்குமா என்பதை கேள்விக்குறியே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.