Jump to content

இறுகும் சுறுக்கு, இறுகுமா இன்னும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுகும் சுறுக்கு, இறுகுமா இன்னும்?

2007ம் ஆண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, சண்டே லீடர் பத்திரிகையில், 'மிக் டீல்' என பின்னாளில் அழைக்கப்பட்ட, ஒரு மோசடி மிக்க  ஆயுத கொள்வனவு குறித்த விபரங்களை வெளியிட்டார். உக்ரைன் நாட்டில், இயக்கமில்லாத நிலையில், வைக்கப் பட்டிருந்த மிக்  விமானங்களை வாங்கிய வகையில், அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸேவின் தொடர்புகள் குறித்து பல விபரங்களை, வெளியிட்டிருந்த  இந்த கட்டுரையினை தொடர்ந்து,  சண்டே லீடர் பத்திரிகை மீது, மான  நஷ்ட வழக்கு ஒன்றினை ஆரம்பித்திருந்தார் அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸே .

லசந்தவின் நண்பர்களும், உறவினர்களும், இந்த கட்டுரைகளும்,வழக்கும், அவரது உயிரினை காவு கொண்டது என நம்புகின்றனர்.

பல வருடங்களுக்கு பின்னர் இப்போது, FCID (Financial Crime Investigation Division) நடாத்தும் இது தொடர்பான விசாரணைகள், அந்த பயமறியா ஊடகவியலாளர் நாட்டின் மிகவும் சக்தி மிக்க நபர் ஒருவர் தொடர்பில் வெளிப்படுத்திய ஒவ்வொரு விடயமும், உண்மையைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

Image result for sri lanka FCID

2000ம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அரசு, இரு டெண்டர்கள் மூலம் 6 மிக் -27 போர் விமானங்களை சிங்கப்பூர் ஆயூத தரகு நிறுவனமான DS Alliance க்கு வழங்கி இருந்தது. இந்த நிறுவனத்தின் நிருவாக இயக்குனர்  ‘T.S. Lee’ என்பவரே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

ஒப்பந்தப்படி, உக்கிரேனின் அரச நிறுவனமான உகிரின்மஸ் இடமிருந்து, ஒவ்வொன்றும் US $ 1.2 மில்லியன் விலையில் இலங்கை விமானப்படைக்கு, DS Alliance வாங்கி தரும் என இணங்கி இருந்தனர்.

இந்த விமானங்களில் மூன்று துர் அதிஸ்டம் கொண்டனவாக இருந்தன. 2007 ஆகஸ்ட் மாதமளவில், ஒரு விமானமானது, கட்டுநாயக்கா விமான தளத்தில் வீழ்ந்து நொறுங்கி, அதில் இருந்த உக்கிரயன் நாட்டு விமான ஓட்டியும் பலியானார். இரண்டாவது விமானம் பழுதாகி ஒருபோதுமே பாவிக்க கூடியதாக இருக்க வில்லை. மூன்றாவது அதே விமானதளத்தில், 2001 புலிகள் தாக்குதலால் அழிந்தது.

ஜனவரி 2006ல் அப்போதைய விமான படைத்தளபதி, டொனால்ட் பெரேரா மிக்-27 விமானங்கள் பாவனையில் இருந்து நீக்கி, அமெரிக்க, இஸ்ரேலிய விமானங்கள் உட்பட வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் பெறப்பட்டு, விமானப்படை நவீன மயப் படுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதே தளபதி, அடுத்த மாதமே, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்த பின்னர், தனது முடிவில் யு டர்ன் அடித்து மாறுபாடான கருத்தினை தெரிவித்து இருந்தார். பெப்ரவரி 6ம் திகதி, பாதுகாப்பு அமைச்சு செயலகத்தில், நால்வருக்கு இடையே சந்திப்பு நிகழ்ந்தது. மூன்றாம், நாலாம் நபர்கள், கோத்தபாயாவின் உறவினர் உதயங்க வீரதுங்கவும், அவரது வியாபார கூட்டாளியான உக்கிரேயின் நாட்டுக் காரரான Dmytro Peregudov (பெருகுடோவ்)ஆவர்.

Image result for udayangaImage result for kothapaya

மச்சான் உதயங்க வீரதுங்க, லசந்த, கோத்தா 

சிங்கப்பூர் நிறுவனம் DS Alliance முன்னர் விநியோகம் செய்த விமானங்கள் தந்த கசப்பான அனுபவங்களை சொல்லிய தளபதி, அதன் காரணமாகவே தான் மிக்-27 விமானங்களை வெறுப்பதாக சொன்னார். வீரதுங்க இம்முறை, DS Alliance இந்த விவகாரத்தில் சம்பந்தப் பட மாட்டாது என்றும், நேரடியாக உக்கிரேன்  அரசுடன், இலங்கை அரசு ஒப்பந்தத்தை நடத்தும் என உறுதி அளித்து, கோத்தபாயாவின் அழுத்தத்தில், வீரதுங்கா - பெருகுடோவ் தந்த வியாபார முனைவை ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டார்.

டெண்டர் கோராமல், அரசு கொள்வனவு செய்ய முடியாது என்பன போன்ற பல விதிகளை, அதிகாரத்தில் இருந்த ராஜபக்சேக்கள், உதாசீனம் செய்து, அரசுடன் - அரசு என்பதால் அது தேவை இல்லை என்பதாக ('?') ஒரு ஒப்பந்தத்தை ஜூன் 2006ல் Ukrinmash நிறுவனத்துக்கும், இலங்கை விமான படைத்துறைக்கும் இடையே கையெழுதியிட்டு முடித்தனர். 

ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கான  தொகை US $15 மில்லியன் பணமானது, முன்பே தெரிவிக்கப்பட்டவாறு அரசுக்கும், அரசுக்கும் அல்லாது,  ‘Bellimissa Holdings Limited’ என்ற லண்டன் முகவரியும், போன் இலக்கமும் மட்டுமே கொண்டிருந்த ஒரு மர்மமான கம்பெனிக்கு அனுப்பப் பட்டு இருந்தது.

டிசம்பர் 2006ல் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையானது,  2000ல் சந்திரிகா அரசினால் US $1.2 மில்லியனுக்கு வாங்கப் பட்ட அதே ரக விமானத்தினை, ராஜபக்சே அரசு, US $2.4 மில்லியனுக்கு ‘Bellimissa Holdings’ நிறுவத்தினூடாக 2006ல் இரட்டிப்பு விலைக்கு  வாங்கியதை அம்பலப்படுத்தியது.

(இதை எழுதிய இக்பால் அத்தாஸ் , பயமுறுத்தல் காரணமாக நாட்டினை விட்டு ஓட்டம் பிடித்தது வேறு கதை)

ஜூலை 2007ல் லசந்த விக்கிரமதுங்கவும், அவரது சண்டே லீடர் பத்திரிகையும் இந்த விடயத்தை கையில் எடுத்து, மேலும் பல விடயங்களை வெளிச்சமாகியது. US $15 மில்லியன் பெற்றுக்  கொண்ட ‘Bellimissa Holdings Limited’ பிரித்தானியாவில் அலுவலகம் எதனையும் கொண்டிராத, மாதம் $10 கட்டணத்துக்கு,  தமது முகவரியினையும், fax இலக்கத்தினையும் வழங்கக் கூடிய  virtual office, எனப்படும் வசதியினை பயன்படுத்திய ஒரு அமைப்பு என்றும், பணத்தினை பெற்றுக்  கொண்டதும், அந்த, முகவரிக்கும், Bellimissa Holdings Limited கும் எதுவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தது. அதாவது இது, ஒரு வசதிக்காக உருவாக்கப் பட்ட கம்பெனி, தேவை முடிந்ததும் கலைக்கப்பட்டு விட்டது என வெளிச்சமாகியது. 

வெகுண்ட கோத்தபாய, இந்த ஒப்பந்தத்தில், மூன்றாவது பார்ட்டியே  இல்லை என்றார். இந்த விமானங்கள் 2000 ஆண்டு வாங்கியவை போலல்லாது, சிறப்பானவை, அதனாலே தான் கூடுதல் விலை கொடுக்கப் பட்டது  என கதை  விட்டார். 

உண்மைகள் ஒவொன்றாக வருவதை கண்ட அவர், மிக்-27 விமானங்கள் வாங்கியதில், தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை, தான் எந்த வித பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என முழுப் பூசணிக் காயினை கோப்பை பால் சோறில் மறைக்க முயன்றார்.

இந்நிலையில் மறுபடியும், செப்டெம்பர் 2007ல் லசந்த விக்கிரமதுங்க தனது பேனா தாக்குதலை தொடர்ந்தார். இம்முறை மிக் டீலில் எஞ்சி இருந்த இடைவெளிகளை வெளிச்சமாக்கி இருந்தார்.

பெப்ரவரி 2006ல் கோத்தபாய ராஜபக்சே தலைமையில் நால்வருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்தும், அப்போது, ராஜபக்சே அரசால், ரஷ்யா மற்றும் உக்கிரேன் தூதரக நியமிக்கப்பட்டிருந்த உதயங்க வீரதுங்காவின் ஈடுபாடு குறித்தும் விலாவாரியாக எழுதி, கோத்தபாயவின் பொய்களை வெளிப்படுத்தி இருந்தார்.

கோத்தபாய 100 கோடி கேட்டு மான நஷட வழக்கு தொடர்ந்தார். எனினும் அந்த வழக்கு விசாரணைக்கு வரமுன்னரே லசந்த விக்கிரமதுங்க 8 ஜனவரி 2008ல்  கொல்லப் பட் டார்.

(இன்று வரை அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இன்று அவர் கொல்லப் பட்ட 11வது ஆண்டு நினைவு நாள்.)

2015 முதல் அரச அமைப்பான FCID விசாரணைகளை நடாத்தி, ‘Bellimissa Holdings’ என்பது, British Virgin Islands இல் இருக்கும், சிங்கப்பூர் DS Alliance cabal கம்பெனியின் உரிமையாளர் ‘T.S. Lee’ சொந்தமானது என கண்டறிந்துள்ளது. (அட பாவிகளா!)

அவர் தான் அதே  சந்திரிகா காலத்து ஆயுத வியாபாரி. இவரை மீண்டும் பயன் படுத்த மாட்டோம் என பொய் உறுதி மொழியினை விமான படைத் தளபதிக்கு வழங்கி இணங்க வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

US $15மில்லியன் பணம் செலுத்தப்பட்ட வங்கிகளினூடாக விசாரணைகளை நடாத்திய FCID, அந்த பணமானது DS Alliance வங்கி கணக்கினையே போய் சேர்ந்திருந்தது எனவும் கண்டு கொண்டது.

அதே வேளை உக்கிரேனிய அரசினால் நடாத்தப்பட் ட விசாரணைகளின் படி, உக்கிரேனியன் அரசு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப் படவே இல்லை என தெரிய வந்துள்ளது. 

உகிரின்மஸ் நிறுவனம் DS Alliance நிறுவனத்துக்கு, ஒரு விமானத்தினை US $1மில்லியனுக்கு விற்பனை செய்துள்ளது. அதே விமானத்தினை, கமிசன் US $1.4 மில்லியன் வைத்து, மொத்தமாக ஒரு விமானம் US $2.4 மில்லியனுக்கு இலங்கை விமானப் படைக்கு கட்டி அடிக்கப் பட்டு  உள்ளது.

FCID யினால் விசாரிக்கப் பட்ட பல விமானப் படை உத்தியோகத்தர்கள், எவ்வளவு தான் மறுத்தாலும், கோத்தபாயவும், அவரது உறவினர் உதயங்க வீரதுங்கா சம்பந்தப் படாமல், மிக் டீல் என்பதே நடந்து இருக்க முடியாது என தெரிவித்து இருந்தனர்.

பல வெளிநாட்டு, அரச அமைப்புகள், இலங்கை CID  யினர், இன்டர்போல் உதவிகளுடன் துபாய் நகரத்துக்கு வெளியே ரகசியமா வாழ்ந்து வந்த உதயங்க வீரதுங்கா கைதாகி, இலங்கை திருப்பி அனுப்பப் படும் நடவடிக்கைகளை எதிர் நோக்கி உள்ளார்.

முன்னாள் தூதுவர் ஒருவர், நாடு கடத்தப் படுவதை எதிர்நோக்கிய நிலையில், FCID வலை இறுகும் நிலையில், இந்த மிக்  டீலினால் பயன் அடைந்தவர்கள் யார், யார் என்பதை நாட்டு மக்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.

FCID  யினரின் திறமையான வேலைகள், பாராட்டப் பட வேண்டிய அதேவேளை, இந்த மிக்  டீல் குறித்து எழுதி கொலையான  லசந்தா  விக்கிரமதுங்க கண்டறிந்து சொல்லிய அனைத்தும் சரியானது என உறுதிப் படுத்தப் பட்டிருக்கின்றன.  

Source: Sunday Observer, Colombo.

Translation for Yarl: Myself.

https://en.wikipedia.org/wiki/Financial_Crimes_Investigation_Division

ராஜபக்சக்கள்  அவசரமாக பதவிக்கு வர முயன்ற காரணம் தெரிந்தா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் மிகவும் ஆச்சரியமான விடயம்.மொழிபெயர்ப்புக்கும் இணைப்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Anti Money Laundering என்பது மிக கடுமையாக மேலை நாடுகளில் பார்க்கப் படுகினறது. அதுவும், ஆயுத கொளவனவுக்காக இது செய்யப்பட்டது மிக, மிக கடுமையாக பார்க்கப் பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நின்று, கயமைத்தனமாக வென்று, இந்த விசாரணைகளை தடுக்க முடியும் என கோத்தபாய நம்பினார்.

எனினும், அமெரிக்கா அரசு தனது பிரஜை என்ற வகையிலும், பிரித்தானிய அரசு தனது மண்ணில் நடந்தது என்ற வகையிலும், இவர்களது அழுத்தத்தில், அமீரக, சிங்கப்பூர் அரசும் இலங்கை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கின்றன.

இலங்கை அரசுக்கும், ராஜபக்ஸே தரப்புக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கு நாடுகளினால் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன.

புலிகள் ஒடுக்கப் பட்ட மைக்கு முக்கிய காரணம் அவர்களது விமானப் படை. அதேபோல் இந்த விசாரணைகளுக்கு காரணம் அதே விமானப் படை விவகாரம்.

இந்த வகையில், அரசுகளின் பெயர்களில், விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, நாசகார நடவடிக்கைகளுக்காக, பயங்கர வாதிகளிடம் செல்ல முடியும் என்பதே மேற்கு நாடுகளினால் கவலை. அதனால் தான் இந்த விசாரணைகளில் பாரிய ஒத்துழைப்பு வழங்கப் படுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்படியே தருகிறேன். மொழி பெயர்க்க இப்போது நேரம் இல்லை.

 

http://www.dailymirror.lk/article/-th-Death-Anniversary-of-Lasantha-Wickrematunge-WHAT-THEY-DID-TO-MY-FATHER-AND-WHY-160794.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுகும் மேலும் ஒரு ராஜபக்ச மோசடி...

http://www.dailymirror.lk/expose/article/Inside-Story-of-the-First-Ever-Foreign-Indictment-of-A-Lankan-Ambassador-160837.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

இலங்கை அரசுக்கும், ராஜபக்ஸே தரப்புக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கு நாடுகளினால் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன.

ராஜபக்சக்களை அரியணை ஏற விடக்கூடாது என்பதே அந்த செய்யின் சாரமாக இருக்கும்.

அப்படி நடந்தால், சொறி லங்கா அரசு இனப்படுகொலை சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ளும். மற்றும் பொருளாதார தடைகளை எதிர் கொள்ளும். 

வேறு எதை அவர்களால் சொல்லமுடியும்.

மேற்கு நாடுகள் தாம் சொல்வதை நிறைவேற்றக்கூடிய நிலையில் இருக்குமா என்பதை கேள்விக்குறியே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.