Jump to content

தமிழர்களைத் தலைமைதாங்க விக்னேஸ்வரனே சிறந்த தலைவர்- கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்கு ஆங்கிலம் படிப்பித்து விட்டு வெளிநாட்டு பிரமுகர்களுடன் எப்படி கதைப்பது என்று சொல்லிக் கொடுத்தால் விஷயம் முடிந்தது....கூட்டமைப்பை நம்பும் கூட்டம் இருக்கின்ற மாதிரி சீவியை நம்பவும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கு 😠
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபாதாசன் said:

கண்ட கண்ட தமிழின விரோதிகளை ஆதரிக்கும் உங்களை போன்றவர் அல்ல நான் . ஒரு பெரும் தலைவனை அன்பால் ஆராதிப்பவன் ... கஞ்சா விக்குகின்ற  பொறுக்கிகளை ஆதரிப்பவன் அல்ல

நன்றி! இதன் அர்த்தம் உங்களுக்கும் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு தரும் தகவல்களைக் கண்டறிய முடியவில்லை! காழ்ப்புணர்வு தவிர ஒன்றும் இல்லை! நன்றி எல்லாருக்கும் அறியத் தந்தமைக்கு!

2 hours ago, ragunathan said:

நான் இறுதியாகக் கூறியது இதைத்தான்.

"சுமந்திரனையே சமாளிக்க முடியாத விக்கியர், எப்படிச் சிங்களவரைச் சமாளிக்கப் போகிறார்" எனும் உங்களின் கேள்வியைத்தான்.

இந்தக் கேள்வியில் நீங்கள் யாரைத் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள்? விக்கியருக்குத் தலையிடியைக் கொடுக்கும் சுமந்திரனையா அல்லது அவரைச் சமாளிக்கத் திணறும் விக்கியையா? 

நீங்கள் சுமந்திரனைத்தான் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா? 

இப்போது புரிகிறதா உங்களுக்கு ? 

ரகு, பிரபாதசனிடமும் கேட்டேன், இப்ப உங்களிடம் கேட்கிறேன்! சுமந்திரன் விக்கியருக்குப் போட்ட தடை என்ன? மாகாண சபையை நடத்துவதில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரடியான தடை எதுவும் போட்டதாக நான் அறியவில்லை. மத்திய அரசின் அமைச்சர்களூடாக ஏதும்செய்திருக்கலாம். இதுகூட ஊகம்தான். மற்றும்படி தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்மூலம் விக்கிமீது தொடர்ச்சியான அழுத்தங்களை கூட்டமைப்பின் தலைமை பிரயோகித்தது என்பதை நான் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

சுமந்திரன் விக்கியருக்குப் போட்ட தடை என்ன? மாகாண சபையை நடத்துவதில்?

இதெல்லாம் சொல்லிக்கொண்டா அரசியலில் செய்வார்கள்?

சுமந்திரனுக்கும் விக்கியருக்கும் நடந்த பனிப்போர் யாழ் களத்தில் செய்திகளாக வந்துள்ளன. மாகாண சபையை ஒழுங்காக நடத்தமுடியாமல் தடுக்க மறைமுகமாக எத்தனையோ வழிகளில் இடையூறுகளை விளைவிக்கலாம். 

சுமந்திரன் நழுவல்போக்கு மிக்க அரசியல்வாதி. இவரால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர ஆளுமையாகச் செயற்படமுடியாது. இலண்டனில் ஒரு கூட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஒரு அமைப்பை உருவாக்கமுடியுமா என்று கேட்கப்பட்டபோது ஆளணி இல்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி நழுவினார். 

அதற்காக விக்கியர் திறம் என்று சொல்லவில்லை. மாகாண சபையில் இருந்து குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு முன்னரே எழுதிய அறிக்கைகளை வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இதெல்லாம் சொல்லிக்கொண்டா அரசியலில் செய்வார்கள்?

சுமந்திரனுக்கும் விக்கியருக்கும் நடந்த பனிப்போர் யாழ் களத்தில் செய்திகளாக வந்துள்ளன. மாகாண சபையை ஒழுங்காக நடத்தமுடியாமல் தடுக்க மறைமுகமாக எத்தனையோ வழிகளில் இடையூறுகளை விளைவிக்கலாம். 

சுமந்திரன் நழுவல்போக்கு மிக்க அரசியல்வாதி. இவரால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர ஆளுமையாகச் செயற்படமுடியாது. இலண்டனில் ஒரு கூட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஒரு அமைப்பை உருவாக்கமுடியுமா என்று கேட்கப்பட்டபோது ஆளணி இல்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி நழுவினார். 

அதற்காக விக்கியர் திறம் என்று சொல்லவில்லை. மாகாண சபையில் இருந்து குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு முன்னரே எழுதிய அறிக்கைகளை வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான்!

 

 

ரகு போலவே நீங்களும் நடந்திருக்கலாம், வெளியே தெரியாமல்  என்று தான் சொல்கிறீர்கள்! ஆனால், என் கேள்வி அவர்களிடையேயான பனிப்போரை விட, மத்திய அரசு தடை போடாத நிலையிலும், ஏன் அபிவிருத்தியைக் கூட முன்னெடுக்க இயலவில்லை என்பதே. இதற்கு சும் மட்டுமல்ல, மற்ற பா.உக்களும் ஒன்றும் செய்திருக்க இயலாது என நான் நம்புகிறேன்! விக்கியருக்கு இருந்த பிரச்சினை, தன் வால்கள் தன்னை ஆட்டுவிக்க அனுமதித்தது தான் என நினைக்கிறேன். கூரே, முன்னைய ஆளுனர்கள் போலன்றி நல்ல ஊக்கமாக இருந்த ஒருவர். சிங்கள ரத்தம் என்ற மோட்டுப் பேச்சுகளை புறம் தள்ளி விட்டு அவரோடு நல்லுறவைப் பேணி மாகாணத்தில் இருந்த முன்னாள் போராளிகளுக்காவது ஏதாவது செய்திருக்கலாம்.

மற்றபடி, பனிப்போர் எங்கு தான் இல்லை?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண அரசு ஆரம்பித்தபோது மகிந்த அரசாங்கத்தில் இருந்தார். அனுபவம் இல்லாத  அரச அதிகாரிகள் இருந்தார்கள். அத்துடன் உள்ளுக்குள் குடுமிபிடி சண்டை நடந்தது. இடைநடுவில் கலைக்கப்படாமல் இறுதிவரை “இயங்கியதற்கு” மாகாணசபை உறுப்பினருக்கான பென்சன் எடுக்கவேண்டும் என்ற சுயநலம்தான் உண்மையான காரணம்! எவர்தான் உண்மையான அபிவிருத்தியையோ, கைதிகளின் விடுதலையையோ, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பதில் அக்கறை காட்டி முழுவேகமாக உழைத்தார்கள்?

சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் தலைவராக உள்ளார். சம்பந்தன் பேருக்குத்தான் தலைவராக இருக்கின்றார். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள்கூட சுமந்திரனோடு நல்லுறவுடன் இல்லை. இவையெல்லாம் சொல்லுவது என்ன? சுமந்திரனும் விக்கியர் தலைதூக்க விரும்பவில்லை. அதுதான் இப்போது தமிழ் மக்கள் கூட்டணி என்று கட்சியை தோற்றுவிக்க காரணமானது. ஆனால் தமிழர்கள் உதிரிகளாகப் பிரிந்து எதையும் சாதிக்கப்போவதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

ஆனால், என் கேள்வி அவர்களிடையேயான பனிப்போரை விட, மத்திய அரசு தடை போடாத நிலையிலும், ஏன் அபிவிருத்தியைக் கூட முன்னெடுக்க இயலவில்லை என்பதே.

சொறி இலங்கை தடை போடவில்லை என்பது வெளித்தோற்றமே தவிர உண்மையான நிலை ஒருவ்ருஜ்ஜுமே தெரியாது.

எத்தனையோ விதத்தில் சொறி லங்கா நினைத்தால் தடுக்கமுடியும், ஒரேயொரு வார்த்தை 13ம் திருத்தத்தில், consultation.

அது தவிர, விக்கி அவர்கள் சட்டம் தெரிந்த படியால், ஆளுநரை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்த்து, ஆ கக்குறைந்தது ஒத்துழைக்காமல், அதே நேரத்தில் சட்ட வரம்பையும் மீறாமல், அதிகார பரவலாக்கலை நடைமுறைக்கு கொண்டுவர முயதர்சி செய்தார்.

அதனால், சொறி லங்காவாலும், விக்கியை கையாள முடியாமல் போய்விட்டது.

வேறு யாராயினும்,  சொறி லங்காவிற்க்கு ஆட, சொறி லங்கா அதை காட்டி பிரச்சனையே இல்லை என்று படம் விட்டிருக்கும். 

இது எல்லா அதிகார மட்டங்களிலும் நடைபெறுவது.

நரி அணில், விக்கியின் முதலிமைச்சர் நித்தியத்திற்கு கனடா செல்ல அனுமதித்து ஒத்துழைப்பது போல் நடித்து, அதை கிடப்பில் போட்டது உங்களுக்கு தெரியவில்லை. 

விக்கி அவர்கள் வந்ததும், செய்ததும் காலத்தால் செய்யப்படவேண்டிய சேவை. 

விக்கி அவர்கள் திறந்து வைத்த தமிழ் மரபுரிமை காப்பகம், பிக்கு குரேயால்   மூடப்பட்டதை நீங்கள் அறியவில்லை போலும்.

Link to comment
Share on other sites

On 1/8/2019 at 6:43 PM, Rajesh said:

தமிழ் மக்கள் அவரை விட சிறந்த நிர்வாகி வேறு எவரும் இல்லை என அவர்களை அனுபவத்தில் கண்டுள்ளனர்.

தமிழின படுகொலைகாரர்களுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனையும், நீண்ட அரசியல் அனுபவம் உடைய சம்பந்தனையும் விட பல 1000 மடங்கு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் என்பதை வலுவற்ற மாகாணசபையை மிகத் திறமையாக நிர்வகித்து நிரூபித்துள்ளார்.

போர்குற்றவாளிகளுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனும், சொறிலங்காவின் அரசும், சில மோசமான மதவெறியர்களும் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை பல்வேறு வடிவங்களில் கொடுத்த போதும், அவற்றையெல்லாம் தாண்டி இலட்சியத்தில் மாறாமல் செயற்பட்டு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் தான் என்பதை சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் நிரூபித்துள்ளார்.

இன்று தமிழர்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்றால் அதற்கு மூலகாரணம் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களே.

உண்மையான கருத்து!

விக்னேஸ்வரன் மீது காழ்புணர்ச்சியாலும், பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அவரது தலைமையில் மாகாணசபைகள் செய்த பல்வேறு நலத்திட்டங்கள், முன்னேற்றங்கள், அபிவிருத்திகள், போன்றவற்றை அறியாமையாலும் பலர் இங்கே தவறான கருத்துக்களை விதைக்கின்றனர்.  

ரணில், மைத்திரியுடன் இணைந்து கொண்டு விக்னேஸ்வரனை செயற்படவிடாமல் பல முட்டுக் கட்டைகளை சுமந்திரன், மாவை, சரவணபவன் போன்றவர்களும், ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து கொண்டு சத்தியலிங்கம் தவராசா போன்றவர்களும், சிவஞானம் போன்ற தமிழரசுக் கட்சியினரும், சில மதவெறிக்கும்பல்களும் செயற்பட்டத்தை தெரியாதது போல சிலர் இங்கு நடிக்கின்றனர். இவர்கள் எப்படிப்பட்ட நோக்கங்களையும், யாருடன் செயற்படுபவர்கள் என்பதுவும் பலரும் அறிந்துள்ளதே.  

ஜனநாயகம், ஊடகம், சமத்துவம் என்று அவற்றின் கருத்துக்களை அறியாமல் துள்ளிக் குதிப்பவர்கள் மிக மிக சிறுபிள்ளைத் தனமாக பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஒரு ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் முட்டையில் மயிர் புடுங்குவது போன்று குறைகளை கண்டு பிடிக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் சுயரூபங்கள் தெளிவாக வெளிப்படுகின்றது. 

Link to comment
Share on other sites

சுமந்திரன் எப்படி மாகாணசபையை இயங்க விடாமல் ரணிலின் உதவியுடன் செய்தது இந்த ஊர் அறிந்த விடயம் இதனை பட்டியல் போட தேவை இல்லை . இதனை தெரியாதவர்கள் விக்னேஸ்வரனை விமர்சனம் செய்ய தகுதி அற்றவர்கள் . தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணிலின் உதவியுடன் உடைத்தவர் இந்த விரோதி சுமந்திரன் .
வேறென்ன ஆதாரம் வேண்டும் .

தமிழ் மக்கள் எப்பவுமே இணையக்கூடாது என்பதில் சிங்களம் எப்பவுமே தெளிவாக உள்ளது , இப்ப இதனை நடத்தி முடித்தவர் தான் சுமந்திரன் என்கின்ற துரத்த வேண்டிய அரசியல்வாதி , இதனை ஆதரித்த சம்பந்தர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் .

10 வருடத்தில் சுமந்திரன் செய்ததை விட இனி என்ன செயவர் . எங்களின் கோவணத்தை உருவாததுதான் மிச்சம் .
அடுத்த தமிழ் ஏமாளி பட்டியலில் சேரவேண்டியவர் . இப்ப உள்ள தலைவர்களில் விக்கினேஸ்வரன் மட்டுமே கொஞ்சமாவது செய்ய கூடியவர் .

இப்ப உள்ள மாகாணசபையால் என்னத்த செய்யமுடியும் எது முடியாது , ஆளுநரின் அதிகாரம் எப்படி 13 வது திருத்தத்தில் உள்ளது என்பதை தெளிவாக வெளிக்கொணர்த்தவர் . இதட்கு முதலமைச்சர் நிதியத்தை எவ்வாறு ஆளுநர் தடுத்தார் என்பது எல்லருக்கும் தெரியும் .

1987 சுதுமலையில் வைத்து தேசிய தலைவர் இதனை மக்கள் முன் தெரிவித்து இருந்தார் . அதனை விக்னேஸ்வரன் என்ற சட்ட மேதை தெளிவாக மக்களுக்கு புரிய வைத்தார் செயலில் .

சுமந்திரன் என்கின்ற ******* *******. ஆதரிப்பது எங்களுக்கு நாம் வைக்கும் பொறி .

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரனை பதவியில் இருந்து வெளியேற்ற சுமந்திரன் வெளிப்படையவே செயல்பட்டார் , அது ஏன் என்று கூற முடியுமா ? இதன் பின்னணி ரணில் மைத்திரி . அவர்களை அனுசரித்து போகாத கொள்கை கொண்டதால் .
இப்ப உள்ள தலைமைகளில் சிங்களத்தை வெளிப்படையாகவே எதிர்ப்பது விக்னேசவ்ரன் , கஜேந்திரகுமார் .
அதனால் சிங்களம் இவர்களை எதிர்க்கின்றது .

சிங்களத்துடன் ஒட்டி உறவாடி என்னத்த சாதிக்க முடியும் என்பதை எங்கள் வரலாறு சொல்லும் . இனியும் இது முடியும் என்றால் அதனை விட முட்டாள் வேறு யார் . 

சுமந்திரன் சொன்ன அரசியல் திருத்தம் பாராளுமன்த்தில் நிறைவேற்ற முடியாது , மஹிந்த , மக்கள் முன்னணி இதனை தெளிவாக சொல்லி விடடார்கள் . வேறென்ன வேண்டும் சுமந்திரனின் திறமையை புகழ்வதட்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

பிள்ளையானுக்கு ஆங்கிலம் படிப்பித்து விட்டு வெளிநாட்டு பிரமுகர்களுடன் எப்படி கதைப்பது என்று சொல்லிக் கொடுத்தால் விஷயம் முடிந்தது....கூட்டமைப்பை நம்பும் கூட்டம் இருக்கின்ற மாதிரி சீவியை நம்பவும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கு 😠
 

ஏன் கிழக்கில் செய்ததை வடக்கிலும் செய்வதற்கா?

Link to comment
Share on other sites

On 1/8/2019 at 7:54 PM, நிழலி said:

பல இடங்களில் மக்களால் நிகழ்த்தப்பட்ட தன்னிச்சையான போராட்டங்களும், சர்வதேச அழுத்தங்களும் முக்கியமாக ஜெனிவாவில் இடம்பெறும் /இடம்பெறப் போகும் இலங்கை தொடர்பான மனிதவுரிமை கூட்டங்கள் / பிரேரணைகளும் தான் காணி விடுவிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த காலத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் அரச ரீதியாக ஆதாரங்களுடன் தொகுத்து வழங்கிய சட்ட அந்தஸ்துடைய ஆவணங்களே தலையாய காரணம். இந்த விடயம் நேரடியாக அவரது ஆட்சிப் பகுதியில் நடந்ததால், அவர் சந்தர்ப்பத்தை தவற விடாமல் காரியத்தை சாதித்துக் கொண்டார். அது இல்லை என்றால் மற்ற முயற்சிகளும் பலதை போல  வெறும் பூச்சியங்கள் ஆகியிருக்கும். அந்த பூச்சியங்களின் முன்னர் விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய இலக்கம் தான் பெறுமதியை வலுவுடையதாகியிருந்தது.

அந்தப் பூச்சியங்கள் இல்லையென்றால் விக்னேஸ்வரன் அவர்களின் இலக்கத்தின் பெறுமதி வெகுவாக குறைந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. எனவே இரண்டும் இணைந்தால் தான் தேவையான பெறுமதி கிடைக்கும். அதைவிட்டு பிரித்துப் பார்த்து கதைப்பது அறிவுடைமை இல்லை.

சம்மந்தன், சுமந்திரன் பூச்சியத்தையும் தாண்டி மறை பெறுமானங்கள். இருப்பதையும் இல்லது செய்வது தான் அவர்கள் இதுவரை சாதித்தது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

 நான் பார்ப்பது செய்லபாடுகளை, ஆளையல்ல! பல தடவை சொல்லி விட்டேன்! 

கடந்த பத்து வருடங்களில் சம் சும்மில்  என்ன செயல் திறனை கண்டீர்கள் அவர்களை ஆதரிக்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

பிரபாதாசன், நான் ரகுவுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும். நீங்கள் சொல்லும் சுமந்திரனை கூட சமாளிக்க முடியாமல் மாகாசபையை வினைத்திறன் அறவே அற்ற ஒன்றாக நிர்வகித்த விக்கியர் எப்படி பெளத்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கு எதிராக தமிழர்களுக்கு தலைமை தாங்க முடியும்? சுமந்திரனை சமாளிக்க முடியாமைதான் அவரின் மோசமான வினைத்திறன் அற்ற மாகாசபை ஆட்சிக்கு காரணம் என்று சொல்வதன் மூலம் நீங்களும் அவருக்கு தலைமைத்துவ பண்பும் நிர்வாகத் திறமையும் இல்லாத ஒருவர் என்பதை உறுதி செய்கின்றீர்கள்.

முன்னாள் நிற்கும் எதிரியைவிட கூடவே இருந்து குழி பறிக்கும் துரோகிகளை சமாளிப்பது மிகக்கடினம் என்று உங்களுக்கு தெரியாதா? கூடவே அவர் கூட்டமைப்பு தலைவரின் வலது கை  அத்துடன் கூத்தமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும்கூட. சொல்லவா வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, MEERA said:

ஏன் கிழக்கில் செய்ததை வடக்கிலும் செய்வதற்கா?

கிழக்கு பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது எப்படி இருந்தது தெரியாதா?...சீ வி என்னத்தை கிழிச்சார்?...கேட்டால் சுமத்திரன் அதை செய்ய விடேல்ல,இதை செய்ய விடேல்ல என்று நொண்டி சாட்டு சொல்லிக் கொண்டு...சீ வி பென்சன் எடுத்துப் போட்டு பொழுது போக அரசியலுக்கு வந்தவர். அவர் அப்படித் தான் இருப்பார் அவர் வளர்ந்த விதம் அப்படி 

  

Link to comment
Share on other sites

On 1/9/2019 at 11:38 PM, விசுகு said:

நான்

மாவையா  விக்கியரா என்ற  நிலை  வந்தபோது

விக்கியரையே  விரும்பினேன்

அவரிடம்  எதிர்பார்த்தது

வடகிழக்கு  அபிவிருத்தி

தாயகம்  புலத்துக்கிடையிலான ஒன்றிணைந்த பலத்தை கட்டியெழுப்புதல்

சிறீலங்காவுடன் மோதல் தவிர்ப்பு..

இதைத்தவிர மாவீரருக்கான அஞ்சலியைக்கூட நான்  அவரிடம்  எதிர்பார்க்கவில்லை

ஆனால் .......????

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.

ஒவொரு மாகாண சபையையும், சொறி இலங்கை தான் விரும்பியவாறு நடத்தலாம். 

நியாயமான முறையில் நடத்துவதான தோற்றப்பாட்டுடன் முடக்கலாம்.

கிழக்கு  முஸ்லிம்களின் அல்லது பிள்ளையானின் காலத்தில் நன்றாக நடத்தப்பட்டததிற்கான காரணம்,

சொறி இலங்கை கிழக்கில் முஸ்லீம் பெரும்பான்மையை ஏற்றப்படுத்த  ஏதுவாக இருப்பதால், அதாவது இயற்கையாக முஸ்லீம் சனத்தொகை வளரும்வந்து என்ற தோற்றப்பாடுடன்.

பிள்ளையான் தனிப்பட்ட அபிவிருத்தியை சொறி லங்கா கொடுத்தது. அப்படி இல்லாவிட்டாலும் விக்கியை மாதிரி ஒரு போதுமே பிள்ளையானால் செயற்றப்படமுடியது.

சொறி லங்காவை பொறுத்தவரை, பிள்ளையான், கருணா அந்தந்த சொறி லங்கா  அரசாங்களின்  காலத்தில் சட்டவிலக்கு அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அல்லது கூலிப்படை. அதுவும் அரசாங்கம் விரும்பும் வரைக்கும்.

சொறி லங்கா அரசை பொறுத்தவரை, பிள்ளையான், கருணா எப்போதுமே பயங்கரவாதிகள் அல்லது கூலிப்படை.

அதனால், சொறி லங்கா அரசாங்களின் விருப்பமே  பிள்ளையான், கருணா வின் தலைவிதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

கிழக்கு பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது எப்படி இருந்தது தெரியாதா?...சீ வி என்னத்தை கிழிச்சார்?...கேட்டால் சுமத்திரன் அதை செய்ய விடேல்ல,இதை செய்ய விடேல்ல என்று நொண்டி சாட்டு சொல்லிக் கொண்டு...சீ வி பென்சன் எடுத்துப் போட்டு பொழுது போக அரசியலுக்கு வந்தவர். அவர் அப்படித் தான் இருப்பார் அவர் வளர்ந்த விதம் அப்படி 

  

பிள்ளையான் கிழக்கு முதலமைச்சராக இருந்த போது எப்படி இருந்தது????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, போல் said:

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

நன்றி  சகோ

இதுக்கு மேல  நான் உங்களுக்கு  எழுதினால் .......???

நன்றி  வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, போல் said:

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

மாவையோ அல்லது டக்ளசோ முதலமைச்சராய் வந்து இப்படித் தான் சீவி மாதிரி டம்மியாய் இருந்திட்டுப் போவினம்...தப்பித் தவறி இதே யாழில் வந்து அவர்கள் அது செய்யவில்லை,இது செய்யவில்லை என்று புலம்பித் தள்ளாதீங்கோ சரியா?...அவர்களையும் அரசு இப்படித் தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்…

ஏன் சம்மந்தரும்,சுமத்திரனும்  மக்களுக்கு ஒன்றுமே செய்யாதற்கும் இந்த அரசு தான் காரணம் இல்லையா போல் அவர்களே 😖
 

12 hours ago, MEERA said:

பிள்ளையான் கிழக்கு முதலமைச்சராக இருந்த போது எப்படி இருந்தது????

விதண்டாவாதம் செய்யிறதை விட்டுட்டு மன சாட்சியின் படி எழுதுங்கோ.
 

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

ஏன் சம்மந்தரும்,சுமத்திரனும்  மக்களுக்கு ஒன்றுமே செய்யாதற்கும் இந்த அரசு தான் காரணம் இல்லையா போல் அவர்களே 😖

உங்கள அரசியல் அறிவு சுத்த சூனியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்!

அதற்குள் விதண்டாவாதமும் தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

 

விதண்டாவாதம் செய்யிறதை விட்டுட்டு மன சாட்சியின் படி எழுதுங்கோ.
 

2010 வரை திருகோணமலை நகராட்சியின் கீழ் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்று பறி போனது... பிள்ளையான் முதலமைச்சர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, போல் said:

உங்கள அரசியல் அறிவு சுத்த சூனியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்!

அதற்குள் விதண்டாவாதமும் தேவையா?

நான் அரசியலில் சுத்த சூனியமாய் இருந்திட்டுப் போறேன்...நீங்கள் கணக்க குனியாதீங்கோ...பிறகு எழும்பேலாமல் போய் விடும்...சீ விக்கு ஒரு நியாயம் சுமத்திரனுக்கு ஒரு நியாயம் 
 

19 hours ago, MEERA said:

2010 வரை திருகோணமலை நகராட்சியின் கீழ் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்று பறி போனது... பிள்ளையான் முதலமைச்சர்.

மீரா ,எனக்கு உண்மையிலேயே வருஷங்கள் பெரிதாய் ஞபாகம் இல்லை...ஆனால் நான் நினைக்கிறேன் பிள்ளையான் முதலமைச்சராய் வரு முன்னரே இது முக்கால் வாசி பறி போயிட்டுது என்று 😟

Link to comment
Share on other sites

இப்போதெல்லாம் , இந்த இணையத்தமிழ் வந்த பின் .. எம்மவர்கள் தமிழில் புகுந்து விளையாடுகின்றனர், ... வினைத்திறன், அது இது என்று!!!... அந்த மனுசன் வந்து இருந்து நாலு வருசம் இல்லை! அதுக்குள் சம்சும் பாட்டி, அவன் இவனை கொண்டு அந்தாளை போட்டு திப்பிலி அடித்தது உலகே அறியும்!!! 

முதலில், நீங்கள் வெள்ளைக்காரன் வெளிக்கிட்டு இன்று வரை 40 வருசம், 50 வருசம், 60 வருடம்??? செய்தவைகளை பட்டியல் இடுங்கள், அதன் பின் அந்த விக்கியரின் வினைத்திறனை விவாதிப்போம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மீரா ,எனக்கு உண்மையிலேயே வருஷங்கள் பெரிதாய் ஞபாகம் இல்லை...ஆனால் நான் நினைக்கிறேன் பிள்ளையான் முதலமைச்சராய் வரு முன்னரே இது முக்கால் வாசி பறி போயிட்டுது என்று 😟

அக்கா, 2010 இல் போன போது நகராட்சி வசமிருந்தது, 2012 இல் சிங்களவரின் அடாத்து அதிகரித்திருந்தது (பிக்கு ஒருவர் ஒலி பெரிக்கியினூடாக ஓதிக் கொண்டிருந்தார்) 2014 இல் முழுதும் அவர்களிடம்.

முதலமைச்சர் சந்திரகாந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.