Jump to content

தமிழர்களைத் தலைமைதாங்க விக்னேஸ்வரனே சிறந்த தலைவர்- கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்கு ஆங்கிலம் படிப்பித்து விட்டு வெளிநாட்டு பிரமுகர்களுடன் எப்படி கதைப்பது என்று சொல்லிக் கொடுத்தால் விஷயம் முடிந்தது....கூட்டமைப்பை நம்பும் கூட்டம் இருக்கின்ற மாதிரி சீவியை நம்பவும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கு 😠
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபாதாசன் said:

கண்ட கண்ட தமிழின விரோதிகளை ஆதரிக்கும் உங்களை போன்றவர் அல்ல நான் . ஒரு பெரும் தலைவனை அன்பால் ஆராதிப்பவன் ... கஞ்சா விக்குகின்ற  பொறுக்கிகளை ஆதரிப்பவன் அல்ல

நன்றி! இதன் அர்த்தம் உங்களுக்கும் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு தரும் தகவல்களைக் கண்டறிய முடியவில்லை! காழ்ப்புணர்வு தவிர ஒன்றும் இல்லை! நன்றி எல்லாருக்கும் அறியத் தந்தமைக்கு!

2 hours ago, ragunathan said:

நான் இறுதியாகக் கூறியது இதைத்தான்.

"சுமந்திரனையே சமாளிக்க முடியாத விக்கியர், எப்படிச் சிங்களவரைச் சமாளிக்கப் போகிறார்" எனும் உங்களின் கேள்வியைத்தான்.

இந்தக் கேள்வியில் நீங்கள் யாரைத் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள்? விக்கியருக்குத் தலையிடியைக் கொடுக்கும் சுமந்திரனையா அல்லது அவரைச் சமாளிக்கத் திணறும் விக்கியையா? 

நீங்கள் சுமந்திரனைத்தான் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா? 

இப்போது புரிகிறதா உங்களுக்கு ? 

ரகு, பிரபாதசனிடமும் கேட்டேன், இப்ப உங்களிடம் கேட்கிறேன்! சுமந்திரன் விக்கியருக்குப் போட்ட தடை என்ன? மாகாண சபையை நடத்துவதில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரடியான தடை எதுவும் போட்டதாக நான் அறியவில்லை. மத்திய அரசின் அமைச்சர்களூடாக ஏதும்செய்திருக்கலாம். இதுகூட ஊகம்தான். மற்றும்படி தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்மூலம் விக்கிமீது தொடர்ச்சியான அழுத்தங்களை கூட்டமைப்பின் தலைமை பிரயோகித்தது என்பதை நான் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

சுமந்திரன் விக்கியருக்குப் போட்ட தடை என்ன? மாகாண சபையை நடத்துவதில்?

இதெல்லாம் சொல்லிக்கொண்டா அரசியலில் செய்வார்கள்?

சுமந்திரனுக்கும் விக்கியருக்கும் நடந்த பனிப்போர் யாழ் களத்தில் செய்திகளாக வந்துள்ளன. மாகாண சபையை ஒழுங்காக நடத்தமுடியாமல் தடுக்க மறைமுகமாக எத்தனையோ வழிகளில் இடையூறுகளை விளைவிக்கலாம். 

சுமந்திரன் நழுவல்போக்கு மிக்க அரசியல்வாதி. இவரால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர ஆளுமையாகச் செயற்படமுடியாது. இலண்டனில் ஒரு கூட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஒரு அமைப்பை உருவாக்கமுடியுமா என்று கேட்கப்பட்டபோது ஆளணி இல்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி நழுவினார். 

அதற்காக விக்கியர் திறம் என்று சொல்லவில்லை. மாகாண சபையில் இருந்து குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு முன்னரே எழுதிய அறிக்கைகளை வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இதெல்லாம் சொல்லிக்கொண்டா அரசியலில் செய்வார்கள்?

சுமந்திரனுக்கும் விக்கியருக்கும் நடந்த பனிப்போர் யாழ் களத்தில் செய்திகளாக வந்துள்ளன. மாகாண சபையை ஒழுங்காக நடத்தமுடியாமல் தடுக்க மறைமுகமாக எத்தனையோ வழிகளில் இடையூறுகளை விளைவிக்கலாம். 

சுமந்திரன் நழுவல்போக்கு மிக்க அரசியல்வாதி. இவரால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர ஆளுமையாகச் செயற்படமுடியாது. இலண்டனில் ஒரு கூட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஒரு அமைப்பை உருவாக்கமுடியுமா என்று கேட்கப்பட்டபோது ஆளணி இல்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி நழுவினார். 

அதற்காக விக்கியர் திறம் என்று சொல்லவில்லை. மாகாண சபையில் இருந்து குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு முன்னரே எழுதிய அறிக்கைகளை வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான்!

 

 

ரகு போலவே நீங்களும் நடந்திருக்கலாம், வெளியே தெரியாமல்  என்று தான் சொல்கிறீர்கள்! ஆனால், என் கேள்வி அவர்களிடையேயான பனிப்போரை விட, மத்திய அரசு தடை போடாத நிலையிலும், ஏன் அபிவிருத்தியைக் கூட முன்னெடுக்க இயலவில்லை என்பதே. இதற்கு சும் மட்டுமல்ல, மற்ற பா.உக்களும் ஒன்றும் செய்திருக்க இயலாது என நான் நம்புகிறேன்! விக்கியருக்கு இருந்த பிரச்சினை, தன் வால்கள் தன்னை ஆட்டுவிக்க அனுமதித்தது தான் என நினைக்கிறேன். கூரே, முன்னைய ஆளுனர்கள் போலன்றி நல்ல ஊக்கமாக இருந்த ஒருவர். சிங்கள ரத்தம் என்ற மோட்டுப் பேச்சுகளை புறம் தள்ளி விட்டு அவரோடு நல்லுறவைப் பேணி மாகாணத்தில் இருந்த முன்னாள் போராளிகளுக்காவது ஏதாவது செய்திருக்கலாம்.

மற்றபடி, பனிப்போர் எங்கு தான் இல்லை?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண அரசு ஆரம்பித்தபோது மகிந்த அரசாங்கத்தில் இருந்தார். அனுபவம் இல்லாத  அரச அதிகாரிகள் இருந்தார்கள். அத்துடன் உள்ளுக்குள் குடுமிபிடி சண்டை நடந்தது. இடைநடுவில் கலைக்கப்படாமல் இறுதிவரை “இயங்கியதற்கு” மாகாணசபை உறுப்பினருக்கான பென்சன் எடுக்கவேண்டும் என்ற சுயநலம்தான் உண்மையான காரணம்! எவர்தான் உண்மையான அபிவிருத்தியையோ, கைதிகளின் விடுதலையையோ, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பதில் அக்கறை காட்டி முழுவேகமாக உழைத்தார்கள்?

சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் தலைவராக உள்ளார். சம்பந்தன் பேருக்குத்தான் தலைவராக இருக்கின்றார். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள்கூட சுமந்திரனோடு நல்லுறவுடன் இல்லை. இவையெல்லாம் சொல்லுவது என்ன? சுமந்திரனும் விக்கியர் தலைதூக்க விரும்பவில்லை. அதுதான் இப்போது தமிழ் மக்கள் கூட்டணி என்று கட்சியை தோற்றுவிக்க காரணமானது. ஆனால் தமிழர்கள் உதிரிகளாகப் பிரிந்து எதையும் சாதிக்கப்போவதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

ஆனால், என் கேள்வி அவர்களிடையேயான பனிப்போரை விட, மத்திய அரசு தடை போடாத நிலையிலும், ஏன் அபிவிருத்தியைக் கூட முன்னெடுக்க இயலவில்லை என்பதே.

சொறி இலங்கை தடை போடவில்லை என்பது வெளித்தோற்றமே தவிர உண்மையான நிலை ஒருவ்ருஜ்ஜுமே தெரியாது.

எத்தனையோ விதத்தில் சொறி லங்கா நினைத்தால் தடுக்கமுடியும், ஒரேயொரு வார்த்தை 13ம் திருத்தத்தில், consultation.

அது தவிர, விக்கி அவர்கள் சட்டம் தெரிந்த படியால், ஆளுநரை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்த்து, ஆ கக்குறைந்தது ஒத்துழைக்காமல், அதே நேரத்தில் சட்ட வரம்பையும் மீறாமல், அதிகார பரவலாக்கலை நடைமுறைக்கு கொண்டுவர முயதர்சி செய்தார்.

அதனால், சொறி லங்காவாலும், விக்கியை கையாள முடியாமல் போய்விட்டது.

வேறு யாராயினும்,  சொறி லங்காவிற்க்கு ஆட, சொறி லங்கா அதை காட்டி பிரச்சனையே இல்லை என்று படம் விட்டிருக்கும். 

இது எல்லா அதிகார மட்டங்களிலும் நடைபெறுவது.

நரி அணில், விக்கியின் முதலிமைச்சர் நித்தியத்திற்கு கனடா செல்ல அனுமதித்து ஒத்துழைப்பது போல் நடித்து, அதை கிடப்பில் போட்டது உங்களுக்கு தெரியவில்லை. 

விக்கி அவர்கள் வந்ததும், செய்ததும் காலத்தால் செய்யப்படவேண்டிய சேவை. 

விக்கி அவர்கள் திறந்து வைத்த தமிழ் மரபுரிமை காப்பகம், பிக்கு குரேயால்   மூடப்பட்டதை நீங்கள் அறியவில்லை போலும்.

Link to comment
Share on other sites

On 1/8/2019 at 6:43 PM, Rajesh said:

தமிழ் மக்கள் அவரை விட சிறந்த நிர்வாகி வேறு எவரும் இல்லை என அவர்களை அனுபவத்தில் கண்டுள்ளனர்.

தமிழின படுகொலைகாரர்களுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனையும், நீண்ட அரசியல் அனுபவம் உடைய சம்பந்தனையும் விட பல 1000 மடங்கு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் என்பதை வலுவற்ற மாகாணசபையை மிகத் திறமையாக நிர்வகித்து நிரூபித்துள்ளார்.

போர்குற்றவாளிகளுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனும், சொறிலங்காவின் அரசும், சில மோசமான மதவெறியர்களும் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை பல்வேறு வடிவங்களில் கொடுத்த போதும், அவற்றையெல்லாம் தாண்டி இலட்சியத்தில் மாறாமல் செயற்பட்டு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் தான் என்பதை சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் நிரூபித்துள்ளார்.

இன்று தமிழர்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்றால் அதற்கு மூலகாரணம் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களே.

உண்மையான கருத்து!

விக்னேஸ்வரன் மீது காழ்புணர்ச்சியாலும், பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அவரது தலைமையில் மாகாணசபைகள் செய்த பல்வேறு நலத்திட்டங்கள், முன்னேற்றங்கள், அபிவிருத்திகள், போன்றவற்றை அறியாமையாலும் பலர் இங்கே தவறான கருத்துக்களை விதைக்கின்றனர்.  

ரணில், மைத்திரியுடன் இணைந்து கொண்டு விக்னேஸ்வரனை செயற்படவிடாமல் பல முட்டுக் கட்டைகளை சுமந்திரன், மாவை, சரவணபவன் போன்றவர்களும், ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து கொண்டு சத்தியலிங்கம் தவராசா போன்றவர்களும், சிவஞானம் போன்ற தமிழரசுக் கட்சியினரும், சில மதவெறிக்கும்பல்களும் செயற்பட்டத்தை தெரியாதது போல சிலர் இங்கு நடிக்கின்றனர். இவர்கள் எப்படிப்பட்ட நோக்கங்களையும், யாருடன் செயற்படுபவர்கள் என்பதுவும் பலரும் அறிந்துள்ளதே.  

ஜனநாயகம், ஊடகம், சமத்துவம் என்று அவற்றின் கருத்துக்களை அறியாமல் துள்ளிக் குதிப்பவர்கள் மிக மிக சிறுபிள்ளைத் தனமாக பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஒரு ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் முட்டையில் மயிர் புடுங்குவது போன்று குறைகளை கண்டு பிடிக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் சுயரூபங்கள் தெளிவாக வெளிப்படுகின்றது. 

Link to comment
Share on other sites

சுமந்திரன் எப்படி மாகாணசபையை இயங்க விடாமல் ரணிலின் உதவியுடன் செய்தது இந்த ஊர் அறிந்த விடயம் இதனை பட்டியல் போட தேவை இல்லை . இதனை தெரியாதவர்கள் விக்னேஸ்வரனை விமர்சனம் செய்ய தகுதி அற்றவர்கள் . தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணிலின் உதவியுடன் உடைத்தவர் இந்த விரோதி சுமந்திரன் .
வேறென்ன ஆதாரம் வேண்டும் .

தமிழ் மக்கள் எப்பவுமே இணையக்கூடாது என்பதில் சிங்களம் எப்பவுமே தெளிவாக உள்ளது , இப்ப இதனை நடத்தி முடித்தவர் தான் சுமந்திரன் என்கின்ற துரத்த வேண்டிய அரசியல்வாதி , இதனை ஆதரித்த சம்பந்தர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் .

10 வருடத்தில் சுமந்திரன் செய்ததை விட இனி என்ன செயவர் . எங்களின் கோவணத்தை உருவாததுதான் மிச்சம் .
அடுத்த தமிழ் ஏமாளி பட்டியலில் சேரவேண்டியவர் . இப்ப உள்ள தலைவர்களில் விக்கினேஸ்வரன் மட்டுமே கொஞ்சமாவது செய்ய கூடியவர் .

இப்ப உள்ள மாகாணசபையால் என்னத்த செய்யமுடியும் எது முடியாது , ஆளுநரின் அதிகாரம் எப்படி 13 வது திருத்தத்தில் உள்ளது என்பதை தெளிவாக வெளிக்கொணர்த்தவர் . இதட்கு முதலமைச்சர் நிதியத்தை எவ்வாறு ஆளுநர் தடுத்தார் என்பது எல்லருக்கும் தெரியும் .

1987 சுதுமலையில் வைத்து தேசிய தலைவர் இதனை மக்கள் முன் தெரிவித்து இருந்தார் . அதனை விக்னேஸ்வரன் என்ற சட்ட மேதை தெளிவாக மக்களுக்கு புரிய வைத்தார் செயலில் .

சுமந்திரன் என்கின்ற ******* *******. ஆதரிப்பது எங்களுக்கு நாம் வைக்கும் பொறி .

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரனை பதவியில் இருந்து வெளியேற்ற சுமந்திரன் வெளிப்படையவே செயல்பட்டார் , அது ஏன் என்று கூற முடியுமா ? இதன் பின்னணி ரணில் மைத்திரி . அவர்களை அனுசரித்து போகாத கொள்கை கொண்டதால் .
இப்ப உள்ள தலைமைகளில் சிங்களத்தை வெளிப்படையாகவே எதிர்ப்பது விக்னேசவ்ரன் , கஜேந்திரகுமார் .
அதனால் சிங்களம் இவர்களை எதிர்க்கின்றது .

சிங்களத்துடன் ஒட்டி உறவாடி என்னத்த சாதிக்க முடியும் என்பதை எங்கள் வரலாறு சொல்லும் . இனியும் இது முடியும் என்றால் அதனை விட முட்டாள் வேறு யார் . 

சுமந்திரன் சொன்ன அரசியல் திருத்தம் பாராளுமன்த்தில் நிறைவேற்ற முடியாது , மஹிந்த , மக்கள் முன்னணி இதனை தெளிவாக சொல்லி விடடார்கள் . வேறென்ன வேண்டும் சுமந்திரனின் திறமையை புகழ்வதட்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

பிள்ளையானுக்கு ஆங்கிலம் படிப்பித்து விட்டு வெளிநாட்டு பிரமுகர்களுடன் எப்படி கதைப்பது என்று சொல்லிக் கொடுத்தால் விஷயம் முடிந்தது....கூட்டமைப்பை நம்பும் கூட்டம் இருக்கின்ற மாதிரி சீவியை நம்பவும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கு 😠
 

ஏன் கிழக்கில் செய்ததை வடக்கிலும் செய்வதற்கா?

Link to comment
Share on other sites

On 1/8/2019 at 7:54 PM, நிழலி said:

பல இடங்களில் மக்களால் நிகழ்த்தப்பட்ட தன்னிச்சையான போராட்டங்களும், சர்வதேச அழுத்தங்களும் முக்கியமாக ஜெனிவாவில் இடம்பெறும் /இடம்பெறப் போகும் இலங்கை தொடர்பான மனிதவுரிமை கூட்டங்கள் / பிரேரணைகளும் தான் காணி விடுவிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த காலத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் அரச ரீதியாக ஆதாரங்களுடன் தொகுத்து வழங்கிய சட்ட அந்தஸ்துடைய ஆவணங்களே தலையாய காரணம். இந்த விடயம் நேரடியாக அவரது ஆட்சிப் பகுதியில் நடந்ததால், அவர் சந்தர்ப்பத்தை தவற விடாமல் காரியத்தை சாதித்துக் கொண்டார். அது இல்லை என்றால் மற்ற முயற்சிகளும் பலதை போல  வெறும் பூச்சியங்கள் ஆகியிருக்கும். அந்த பூச்சியங்களின் முன்னர் விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய இலக்கம் தான் பெறுமதியை வலுவுடையதாகியிருந்தது.

அந்தப் பூச்சியங்கள் இல்லையென்றால் விக்னேஸ்வரன் அவர்களின் இலக்கத்தின் பெறுமதி வெகுவாக குறைந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. எனவே இரண்டும் இணைந்தால் தான் தேவையான பெறுமதி கிடைக்கும். அதைவிட்டு பிரித்துப் பார்த்து கதைப்பது அறிவுடைமை இல்லை.

சம்மந்தன், சுமந்திரன் பூச்சியத்தையும் தாண்டி மறை பெறுமானங்கள். இருப்பதையும் இல்லது செய்வது தான் அவர்கள் இதுவரை சாதித்தது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

 நான் பார்ப்பது செய்லபாடுகளை, ஆளையல்ல! பல தடவை சொல்லி விட்டேன்! 

கடந்த பத்து வருடங்களில் சம் சும்மில்  என்ன செயல் திறனை கண்டீர்கள் அவர்களை ஆதரிக்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

பிரபாதாசன், நான் ரகுவுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும். நீங்கள் சொல்லும் சுமந்திரனை கூட சமாளிக்க முடியாமல் மாகாசபையை வினைத்திறன் அறவே அற்ற ஒன்றாக நிர்வகித்த விக்கியர் எப்படி பெளத்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கு எதிராக தமிழர்களுக்கு தலைமை தாங்க முடியும்? சுமந்திரனை சமாளிக்க முடியாமைதான் அவரின் மோசமான வினைத்திறன் அற்ற மாகாசபை ஆட்சிக்கு காரணம் என்று சொல்வதன் மூலம் நீங்களும் அவருக்கு தலைமைத்துவ பண்பும் நிர்வாகத் திறமையும் இல்லாத ஒருவர் என்பதை உறுதி செய்கின்றீர்கள்.

முன்னாள் நிற்கும் எதிரியைவிட கூடவே இருந்து குழி பறிக்கும் துரோகிகளை சமாளிப்பது மிகக்கடினம் என்று உங்களுக்கு தெரியாதா? கூடவே அவர் கூட்டமைப்பு தலைவரின் வலது கை  அத்துடன் கூத்தமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும்கூட. சொல்லவா வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, MEERA said:

ஏன் கிழக்கில் செய்ததை வடக்கிலும் செய்வதற்கா?

கிழக்கு பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது எப்படி இருந்தது தெரியாதா?...சீ வி என்னத்தை கிழிச்சார்?...கேட்டால் சுமத்திரன் அதை செய்ய விடேல்ல,இதை செய்ய விடேல்ல என்று நொண்டி சாட்டு சொல்லிக் கொண்டு...சீ வி பென்சன் எடுத்துப் போட்டு பொழுது போக அரசியலுக்கு வந்தவர். அவர் அப்படித் தான் இருப்பார் அவர் வளர்ந்த விதம் அப்படி 

  

Link to comment
Share on other sites

On 1/9/2019 at 11:38 PM, விசுகு said:

நான்

மாவையா  விக்கியரா என்ற  நிலை  வந்தபோது

விக்கியரையே  விரும்பினேன்

அவரிடம்  எதிர்பார்த்தது

வடகிழக்கு  அபிவிருத்தி

தாயகம்  புலத்துக்கிடையிலான ஒன்றிணைந்த பலத்தை கட்டியெழுப்புதல்

சிறீலங்காவுடன் மோதல் தவிர்ப்பு..

இதைத்தவிர மாவீரருக்கான அஞ்சலியைக்கூட நான்  அவரிடம்  எதிர்பார்க்கவில்லை

ஆனால் .......????

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.

ஒவொரு மாகாண சபையையும், சொறி இலங்கை தான் விரும்பியவாறு நடத்தலாம். 

நியாயமான முறையில் நடத்துவதான தோற்றப்பாட்டுடன் முடக்கலாம்.

கிழக்கு  முஸ்லிம்களின் அல்லது பிள்ளையானின் காலத்தில் நன்றாக நடத்தப்பட்டததிற்கான காரணம்,

சொறி இலங்கை கிழக்கில் முஸ்லீம் பெரும்பான்மையை ஏற்றப்படுத்த  ஏதுவாக இருப்பதால், அதாவது இயற்கையாக முஸ்லீம் சனத்தொகை வளரும்வந்து என்ற தோற்றப்பாடுடன்.

பிள்ளையான் தனிப்பட்ட அபிவிருத்தியை சொறி லங்கா கொடுத்தது. அப்படி இல்லாவிட்டாலும் விக்கியை மாதிரி ஒரு போதுமே பிள்ளையானால் செயற்றப்படமுடியது.

சொறி லங்காவை பொறுத்தவரை, பிள்ளையான், கருணா அந்தந்த சொறி லங்கா  அரசாங்களின்  காலத்தில் சட்டவிலக்கு அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அல்லது கூலிப்படை. அதுவும் அரசாங்கம் விரும்பும் வரைக்கும்.

சொறி லங்கா அரசை பொறுத்தவரை, பிள்ளையான், கருணா எப்போதுமே பயங்கரவாதிகள் அல்லது கூலிப்படை.

அதனால், சொறி லங்கா அரசாங்களின் விருப்பமே  பிள்ளையான், கருணா வின் தலைவிதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

கிழக்கு பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது எப்படி இருந்தது தெரியாதா?...சீ வி என்னத்தை கிழிச்சார்?...கேட்டால் சுமத்திரன் அதை செய்ய விடேல்ல,இதை செய்ய விடேல்ல என்று நொண்டி சாட்டு சொல்லிக் கொண்டு...சீ வி பென்சன் எடுத்துப் போட்டு பொழுது போக அரசியலுக்கு வந்தவர். அவர் அப்படித் தான் இருப்பார் அவர் வளர்ந்த விதம் அப்படி 

  

பிள்ளையான் கிழக்கு முதலமைச்சராக இருந்த போது எப்படி இருந்தது????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, போல் said:

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

நன்றி  சகோ

இதுக்கு மேல  நான் உங்களுக்கு  எழுதினால் .......???

நன்றி  வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, போல் said:

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

மாவையோ அல்லது டக்ளசோ முதலமைச்சராய் வந்து இப்படித் தான் சீவி மாதிரி டம்மியாய் இருந்திட்டுப் போவினம்...தப்பித் தவறி இதே யாழில் வந்து அவர்கள் அது செய்யவில்லை,இது செய்யவில்லை என்று புலம்பித் தள்ளாதீங்கோ சரியா?...அவர்களையும் அரசு இப்படித் தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்…

ஏன் சம்மந்தரும்,சுமத்திரனும்  மக்களுக்கு ஒன்றுமே செய்யாதற்கும் இந்த அரசு தான் காரணம் இல்லையா போல் அவர்களே 😖
 

12 hours ago, MEERA said:

பிள்ளையான் கிழக்கு முதலமைச்சராக இருந்த போது எப்படி இருந்தது????

விதண்டாவாதம் செய்யிறதை விட்டுட்டு மன சாட்சியின் படி எழுதுங்கோ.
 

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

ஏன் சம்மந்தரும்,சுமத்திரனும்  மக்களுக்கு ஒன்றுமே செய்யாதற்கும் இந்த அரசு தான் காரணம் இல்லையா போல் அவர்களே 😖

உங்கள அரசியல் அறிவு சுத்த சூனியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்!

அதற்குள் விதண்டாவாதமும் தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

 

விதண்டாவாதம் செய்யிறதை விட்டுட்டு மன சாட்சியின் படி எழுதுங்கோ.
 

2010 வரை திருகோணமலை நகராட்சியின் கீழ் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்று பறி போனது... பிள்ளையான் முதலமைச்சர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, போல் said:

உங்கள அரசியல் அறிவு சுத்த சூனியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்!

அதற்குள் விதண்டாவாதமும் தேவையா?

நான் அரசியலில் சுத்த சூனியமாய் இருந்திட்டுப் போறேன்...நீங்கள் கணக்க குனியாதீங்கோ...பிறகு எழும்பேலாமல் போய் விடும்...சீ விக்கு ஒரு நியாயம் சுமத்திரனுக்கு ஒரு நியாயம் 
 

19 hours ago, MEERA said:

2010 வரை திருகோணமலை நகராட்சியின் கீழ் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்று பறி போனது... பிள்ளையான் முதலமைச்சர்.

மீரா ,எனக்கு உண்மையிலேயே வருஷங்கள் பெரிதாய் ஞபாகம் இல்லை...ஆனால் நான் நினைக்கிறேன் பிள்ளையான் முதலமைச்சராய் வரு முன்னரே இது முக்கால் வாசி பறி போயிட்டுது என்று 😟

Link to comment
Share on other sites

இப்போதெல்லாம் , இந்த இணையத்தமிழ் வந்த பின் .. எம்மவர்கள் தமிழில் புகுந்து விளையாடுகின்றனர், ... வினைத்திறன், அது இது என்று!!!... அந்த மனுசன் வந்து இருந்து நாலு வருசம் இல்லை! அதுக்குள் சம்சும் பாட்டி, அவன் இவனை கொண்டு அந்தாளை போட்டு திப்பிலி அடித்தது உலகே அறியும்!!! 

முதலில், நீங்கள் வெள்ளைக்காரன் வெளிக்கிட்டு இன்று வரை 40 வருசம், 50 வருசம், 60 வருடம்??? செய்தவைகளை பட்டியல் இடுங்கள், அதன் பின் அந்த விக்கியரின் வினைத்திறனை விவாதிப்போம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மீரா ,எனக்கு உண்மையிலேயே வருஷங்கள் பெரிதாய் ஞபாகம் இல்லை...ஆனால் நான் நினைக்கிறேன் பிள்ளையான் முதலமைச்சராய் வரு முன்னரே இது முக்கால் வாசி பறி போயிட்டுது என்று 😟

அக்கா, 2010 இல் போன போது நகராட்சி வசமிருந்தது, 2012 இல் சிங்களவரின் அடாத்து அதிகரித்திருந்தது (பிக்கு ஒருவர் ஒலி பெரிக்கியினூடாக ஓதிக் கொண்டிருந்தார்) 2014 இல் முழுதும் அவர்களிடம்.

முதலமைச்சர் சந்திரகாந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.