Jump to content

திபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்


Recommended Posts

jvp-ealam.jpg
கடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தையும் முன்னுரிமையையும் எந்தவிதத்திலும் மாற்ற மாட்டோம் என்றார்.
 
ரணில் பௌத்த பிக்குமாரை மதிப்பதில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாகவே இருந்துவந்தது. ஆனால் கடந்த ‘ஒக்டோபர் 26’ சதிகளுக்குப் பின்னர் அவர் சாஷ்டாங்கமாக அவர்களை நமஸ்காரம் செய்கிறார். அடிக்கடி பௌத்த விகாரைகளுக்கும், பௌத்த நிகழ்வுகளுக்கும் செல்வதாகக் காட்டிக்கொள்கிறார். தான் ஏனைய பௌத்தர்களுக்கு சளைத்தவனல்ல என்பதை நிரூபிக்கப் படாது பாடு படுவதைக் காண முடிகிறது. ரணிலின் இத்தகையை போக்கின் ஒரு அங்கம் தான் மேற்படி உத்தரவாதம்.
 

இன்று ஜனாதிபதி திபிடகவை - (திரிபிடகம்) தேசிய மரபுரிமையாக அறிவித்திருக்கிறார். இதற்கான பணிகள் கடந்த செப்டம்பர் மாதமே தொடக்கப்பட்டுவிட்டது. ஆனால் இப்போது அந்தப்பணியை கையிலெடுத்திருப்பவர் ஜனாதிபதி சிறிசேன. ஜனாதிபதி இதனை பிரகடனப்படுத்தும் உத்தியோகபூர்வமான பெரு நிகழ்வை மாத்தளையிலுள்ள அலுவிகாரையில் 2000க்கும் மேற்பட்ட மகாசங்கத்தைச் சேர்ந்த பிக்குமார்களின் முன்னிலையில் நடத்திக் காட்டினர். அன்றைய தினம் இலங்கையிலுள்ள சகல வீடுகளிலும், அரச காரியாலயங்களிலும் பௌத்த  கொடியை ஏற்றும்படி கேட்டுக்கொண்டிருந்தார் புத்தசாசன அமைச்சர் ஜயவிக்கிரம பெரேரா.
 
திபிடக என்றால் என்ன?
“திபிடக” என்பது பௌத்த அறநெறியைப் போற்றும் முதன்மையான பௌத்த பண்பாட்டு இலக்கியக்கங்களின் தொகுப்பாக போற்றப்பட்டு வருகிறது. திபிடக என்கிற  பாலி சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு “முக்கூடைகள்” எனலாம். தேரவாத பௌத்தம் இந்த திபிடகவுக்கு ஊடாகத் தான் உபதேசிக்கப்பட்டு வருகிறது. புத்தர் அருளிய போதனைகள் அடங்கப் பெற்ற மூன்று திருமுறைகளான விநய பிடகம் (ஒழுக்கத்திருமுறை), சுத்த பிடகம் (பேருரைத்திருமுறை), அபிதம்ம பிடகம் (மீயுயர்தம்மத் திருமுறை) ஆகிய பிரதான தலைப்புகளின் கீழ் பௌத்த வேத இலக்கியங்களையும், வரலாறையும், அறநெறிகளையும் புகட்டும் நூற்றுக்கணக்கான பெரிய பெரிய நூல்களை உள்ளடக்கியது இன்றைய திபிடக.
 
புத்தரின் போதனைகளை அவரின் சீடர்களின் மூலம் வழிவழியாக சில தலைமுறைகளுக்கு செவிவழி, வாய்மொழி மரபாகத்தான் கடத்தப்பட்டு வந்தன. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு அசோக சக்கரவர்த்தியின் மகன் மகிந்தனின் வருகைக்கு ஊடாக திபிடக இலங்கைக்கு வந்தது. புத்தர் இறந்து 454 ஆண்டுகளுக்குப் பின் தான் திபிடக எழுத்துருவம் பெற்றது. அதுவும் அது இலங்கையில் தான் நிகழ்ந்தது. திபிடகம் எழுத்துருவில் முதலில் பதிவு பெற்றது இலங்கை என்பதால் இலங்கைக்கு உலக பௌத்த நாடுகள் மத்தியில் உயரிய இடம் உண்டு.
 
“திபிடக” தீபெத்திலும், சீனாவிலும் வித்தியாசமான வடிவங்களில் உள்ளதாக அறியப்படுகிறது. இலங்கையிலும் வெவ்வேறு பௌத்த சங்கங்களாலும், தனி நபர்களாலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உதரணத்திற்கு 1956 புத்தஜயந்தி காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியில் உள்ளவற்றிலிருந்து வேறுப்படும்வகையில் கிரம விமலஜோதி தேரரால் (பொதுபலசெனாவின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் அதன் தலைவராக இருந்தவரும்) நெதிமால பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தொகுதிகளைக் குறிப்படலாம். ஆக இவற்றில் எந்த “திபிடகவை” இப்போது அரசு தேசிய மரபுரிமையாக்கப் போகிறது என்கிற கேள்வி இன்று பரவலாக எழுப்பப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த திபிடக இந்தியாவினுடையது என்றால் அல்லது வேறு நாட்டுடையது என்றால் அது எப்படி இலங்கையின் தேசிய மரபுரிமையாக ஆகமுடியும் என்கிற தர்க்கமும் எழவே செய்கிறது. (குறிப்பாக திபிடகவை போதித்த புத்தர் நேபாளைச் சேர்ந்தவராயின்). இலங்கையின் தேசிய மரபுரிமயாக்கப்பட்டால் (கொபிரைட்) பௌத்த போதனைகளுக்கு இலங்கையிடம் தான் அனுமதி பெறவேண்டுமா?
 
Thripitakaya-02.jpg
வரலாற்றுப் பிழைகளை புனிதப்படுத்துதல்
மாத்தளையிலுள்ள ஆலோக (அலு) விகாரை என்கிற பௌத்த விகாரையில் தான் திபிடகம் பொற்றகட்டில் பாலி மொழியில் எழுதப்பட்டு அவ்விகாரையில் ஒரு கற்பாறையின் கீழ்ச்சேமித்து வைக்கப்பட்டதென்று கூறப்படுகிறது. அந்த விகாரையில் தான் இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வை கோலாகலமாக செய்துமுடித்தார்.

உண்மையில் திபிடக எழுதப்பட்டது மாத்தளையில் உள்ள அலுவிகாரையில் அல்ல என்றும் அது கேகாலையில் உள்ள மாதுல என்கிற இடத்திலேயே எழுதப்பட்டது என்று பல வரலாற்று ஆதாரங்களுடன் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் இந்த நிகழ்வை மாத்தளையில் ஏற்பாடு செய்தததன் மூலம் முக்கிய பிழையொன்று நிகழ்ந்திருக்கிறது என்று மேலும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
 
நூற்றுக்கணக்கான பௌத்த வேத நூல்களுடன் திரிபுபெற்ற பல வரலாற்று இதிகாசக்கதைகளும் இன்றைய திபிடகவில் அடங்குகின்றன. அவையும் புனிதத்துக்குரிய வேத நூல்களாகவே பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன. ஏற்கெனவே மகாவம்ச புரட்டுக்கதைகள் புனித மரபுரிமையாக ஏற்றுக்கொண்டதன் விளைவு தான் மகாவம்ச மனநிலையால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களால் – பௌத்தர்களல்லாத ஏனைய சமூகங்களின் மீது காழ்ப்பையும், வெறுப்பையும், மறுப்பையும், எதிர்ப்பையும் கொண்ட ஒரு சமூகம் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டது.
 
அந்த பிழை சரிபடுத்தபடாத நிலையில் மீண்டும் திபிடக எனும் பேரில் மேலதிக புனைவுகளை இந்த நாடு தாங்குமா? ஒரு பல்லின, பன்மத நாட்டில் அரச மேற்பார்வையில் ஏனைய மதங்களும் இனங்களும் ஓரங்கட்டப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, வரலாற்று அடையாளங்களை திட்டமிட்டு அழித்து, ஒழித்து, ஒளித்து வரும் சூழலில் இந்த திபிடக மரபுரிமையாக்கப்படலை எப்படி எடுத்துக்கொள்வது?
 
tipitaka.jpg
மரபுரிமை அந்தஸ்து
1956 ஆம் ஆண்டு புத்த ஜெயந்தியின் 2500 நிறைவையொட்டி பண்டாரநாயக்கவின் ஆட்சியின் கீழ் திபிடக நூல்கள் பல முறையாக தொகுக்கப்பட்டு சிங்களத்தில் அரச பதிப்பாக அச்சிடப்பட்டன.
 
திபிடக இலங்கையில் பதிவுபெற்ற மிகப்பழைய புராதன வேத நூலாக கருதப்படுவதால் அதை மீள அச்சிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அது தொடர்பில் பிக்குமார்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இழுபறிபட்டே வந்திருக்கிறது. குறிப்பாக பாலியில் இருந்த மூல ஓலைச்சுவடிகளில் இருந்த சில சொற்களை ஒருவருக்கொருவர் பிழையாக வியாக்கியானம் செய்துகொண்டிருந்தனர். இறுதியில் இப்போது அவர்கள் அப்பொறுப்பை அரசிடமே கையளித்துவிட்டார்கள்.
 
மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதன் மூலம் இப்போது திபிடக அரச அந்தஸ்துயர்வு பெற்றிருக்கிறது. அதைப் பேணிப் பாதுகாத்து, பரப்பும் பணி இனி அரசுடையது.
 
இலங்கையில் அரசு மரபுரிமையாக இதுவரை ஏற்றுக்கொண்டவை எவை என்பது பற்றிய பட்டியலை இன்றுவரை அரசு முழுமையாக தயாரித்து முடிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.
 
சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்டல்
பௌத்த வேதநூல்கள் உண்மையில் மானுட உய்வுக்கான அறநெறிகளை உள்ளடக்கிய ஒன்று தான் என்பது உண்மை. அதற்கு உரிய உயரிய  இடத்தைக் கொடுப்பது வரவேற்கத்தக்கதே. மறுபுறம் பௌத்த மதம் சிங்கள இனத்துவத்துடன் இணைக்கப்பட்டு சிங்கள பௌத்தமாக உருபெருப்பித்து மற்றவர்களை அந்நியப்படுத்தும் போக்கை எப்படி கண்டுகொள்ளாமல் விடுவது.
 
ஏற்கெனவே மகாவம்சத்தை மரபுரிமயாக்கி, அதைப் பேணவும், தொடர்ந்து எழுதவும் ஒரு நிரந்தர அரச பொறிமுறையையும் ஏற்படுத்தியிருக்கிறது அரசு. அது சிங்களவர்களுக்கு மட்டும் மட்டுபடுத்தும் வகையில் சிங்களத்திலும் பாலியிலும் மட்டுமே அரசு கிடைக்கச்செய்திருக்கிறது. இப்போது திபிடகவும் அந்த வரிசையில் இணைக்கப்படுகிறது.
15385281_10209822475733267_1923032242062
தமிழர்களுக்கு எதிராக
இரண்டு வருடங்களுக்கு முன்னர் “ஆலோகோ உதபாதி” என்கிற ஒரு சிங்களத் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட் படம் அதுதான். இந்தத் திரைப்படம் பல விருதுகளை பெற்றுக்கொண்டது. ஆலோக (அலு) என்பது திபிடகவை உருவாக்கிய  மகாவம்சம், தீபவம்சம் போன்றவற்றில் காணப்படும் பெயர். திரைப்படத்தின் கதையே திபிடகவை உருவாக்க மன்னர் வலகம்பாவும் பிக்குமாரும் எத்தனை பெரிய விலையைக் கொடுத்தார்கள் என்பது தான். 
 
2100ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.மு 89இல் மன்னர் வலகம்பா அரசாட்சி செய்த சமயத்தில் தென்னிந்தியாவிலிருந்து “தமிழ் – சைவ” சோழர்கள் படையெடுத்து வந்து நாட்டின் சொத்துக்களையும், ஆட்சியையும் கைப்பற்ற போர் நடத்தியதுடன், பௌத்தத்தை அழித்து தமது சமயத்தை நிறுவுவதற்கும் முயற்சித்தார்கள் என்றும், அப்போது ஏராளமான பிக்குகளை தமிழர்கள் கொன்றார்கள் என்றும், பிக்குமார் பலர் காடுகளிலும், குகைகளிலும் மறைந்து வாழ்ந்ததாகவும், 14 ஆண்டு காலம் சோழர்களை எதிர்த்து போராடிய அரசர் வலகம்பா பிக்குமாரை பாதுகாப்பாக இந்த அலுவிகாரைப் பகுதியில் தலைமறைவாக இருத்தச் செய்து திபிடகவை எழுதச் செய்தார் என்பது தான் கதை. ஆயிரக்கணக்கான உண்மையான பிக்குமார் இந்தத் திரைப்படத்தில்  நடிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். 41 நாடுகளில் காண்பிக்கப்பட்டு பல நாடுகளில் சர்வதேச விருதுகளைக் குவித்தது.
 
அரசர் வலகம்பாவுக்கு சோமாதேவி, அனுலாதேவி என இரண்டு மனைவிகள். சோழர்களின் ஆக்கிரமிப்பின் போது பின்வாங்கி ஒரு வண்டிலில் தப்பிச் செல்லும்போது ஐந்துபேர் கொண்ட வண்டி ஒரு கட்டத்தில் பாரம் காரணமாக வேகமாக செல்லாததால் அந்தப் பாரத்தை குறைக்கும் நோக்கத்துடன் சோமாதேவி வண்டிலை விட்டு பாய்ந்து தன்னை அர்ப்பணிக்கிறாள். அனுலா தேவி ஏற்கெனவே கர்ப்பிணியாக இருப்பதாலும், மன்னர் வலகம்பா தப்பினால் தான் இந்தப் போரில் மீண்டும் ஈடுபடமுடியும் என்பதாலும், மற்ற இருவரும் சிறு பிள்ளைகள் என்பதாலும் இந்த முடிவை சோமா தேவி எடுத்தார் என்கின்றன சிங்கள இதிகாசக் கதைகள். வண்டிலை விட்டு பாய்ந்த சோமா தேவி தமிழர்களிடம் அகப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுசெல்லப்படுகிறாள். இன்றளவிலும் சோமா தேவி சிங்கள சமூகத்தில் பெரிய வீராங்கனையாக சித்திரிக்கப்படும் பாத்திரம். தன்னை இழந்து இலங்கை தேசத்தை காப்பாற்றிய தியாகியாக வணங்கப்படுகிறார் சோமாதேவி.
மகாவம்சம் போற்றும் துட்டகைமுனுவின் மரணத்தின் பின்னர் அவரது மகன் சாலியவுக்கு அரச பதவி கிடைக்கவில்லை. சாலிய "தாழ்த்தப்பட்ட" சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததால் தான் சாலியவுக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை என்கிறது சிங்கள வரலாற்று இலக்கியங்கள். ஆகவே துட்டகைமுனுவுக்குப் பின் அரச பதவி அவரின் சகோதரன் சத்தாதிஸ்ஸவுக்கே போனது. சத்தாதிஸ்ஸவின் மரணத்துக்கு பின் அவரது மகன்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் கொலை செய்து மாறி மாறி ஆட்சி செய்தனர். அவர்களில் கடைசி இளைய மகன் தான் வலகம்பா. “வட்டகாமினி” என்கிற பெயராலும் வரலாற்று நூல்களில் அறியப்படுபவர்.
 
இந்தக் கதை மகாவம்சம் உள்ளிட்ட பல இலக்கியங்களில் உள்ளவை தான். திபிடகவிலும் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
16113340_10210435090291647_5548819328771
ஆக அந்நியத் தமிழர்களிடமிருந்து (இந்துக்களிடம் இருந்தும்) சிங்கள பௌத்தர்களை பாதுகாக்க புரியப்பட்ட போர்களாக சித்திரிக்கப்பட்ட இப்பேர்பட்ட கதைகள் தான் இன்றளவிலும் தமிழர்களை கள்ளத்தோணிகளாகவும், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களாகவும், அழித்தொழிப்பாளர்களாகவும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கருத்துருவமாக விதைக்கப்பட்டிருக்கிறது. அப்பேர்பட்ட புனைவின் நீட்சியாகத் தான் இப்போதைய இந்த முயற்சியைக் காண வேண்டியிருக்கிறது.
 
தேரவாதம் அடிப்படைவாதமா? 
இலங்கையில் தேரவாத – மகாயான பௌத்தத்துக்கிடையில் கடும் சண்டைகள் வரலாற்றில் நடந்து பின் தேரவாதம் நிலைபெற்ற வரலாற்றை அறிவோம். தேரவாதத்தின் அடிப்படை வேதநூல் தான் திபிடக. உலகில் தேரவாதத்தை கடைபிடிக்கும் நாடுகளெல்லாம் பௌத்த வன்முறை சார்ந்த தீவிரவாத நாடுகளானது தற்செயலா? திபிடகவை கடைபிடிக்கும் நாடுகள் இப்படி ஆனதன் பின்புலம் தான் என்ன? அகிம்சையை போதிக்கும் பௌத்த வழிகளில் இருந்து இந்த திபிடக வேறுபடுகிறதா என்பது போன்ற கேள்விகள் நமக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தேரவாத பௌத்தத்தின் தலைமையகமாக இலங்கையை அறிவித்துவருகிறார்கள் இலங்கை பௌத்தர்கள்.
 
உலகில் இலங்கை, மியான்மார், தாய்லாந்து ஆகிய தேரவாத பௌத்தத்தைக் கடைபிடிக்கும் நாடுகள் மாத்திரம் மோசமான அந்நிய வெறுப்புணர்ச்சியையும், தீவிர வன்முறையைக் கைகொள்வதன் பின்னணி என்ன என்கிற ஆய்வுகள் சமீப காலமாக  கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது மேலதிக செய்தி. மென்போக்கும் கருணையும் நிறைந்த மஹாயான பௌத்தத்தை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழும் பெரும்பான்மை மக்கள் பின்பற்றுகிறார்கள். தேரவாத நாடுகள் குறைவிருத்தி நாடுகளாக காணப்படுகின்றன. இந்த மஹாயான நாடுகள் தான் செல்வந்த நாடுகளாகவும் உள்ளன. அதுமட்டுமன்றி இலங்கைக்கும் நீண்டகாலமாக பொருளாதார ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளாகவும் திகழ்கின்றன. இவை தற்செயல் தானா?
 
15873419_10209822476573288_9442636741366
தேரவாத சட்டமூலம்
தேரவாத பௌத்த சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்து பிக்குமாரின் மோசமான நடத்தைகளை கட்டுப்படுத்தும் முயற்சி இழுபறி நிலையில் இருக்கிறது. அச்சட்டமூலம் பிக்குமாரின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியது. ஏறத்தாழ அது பௌத்த பிக்குகளுக்கான ஒழுக்கக் கோவை தான். “துறவறம் பூண்ட” பிக்குமார் பலரிடம் இன்று பல கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கின்றன. பணம், காணிகள், வாகனங்கள், வீடுகள், வியாபார நிறுவனங்கள் இருகின்றன. எந்த வரையறையுமில்லாமல் தாம் நினைத்த இடங்களில் விகாரைகளை அமைத்து வருகிறார்கள். பிக்குவாக ஆவதற்கான வயது, தகுதி என்பன மீறப்படுகின்றன. தன்னிச்சையாக கட்டுபாடின்றி இயங்குகின்றார்கள். இவை எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் வகையில் இந்த சட்டம் தயாரிக்கப்பட்டது.
 
இப்படியான ஒரு சட்டக்கோவையின் தேவையை அரச மட்டத்தில் உணர்ந்திருந்தாலும் கூட அதனை முன்னெடுக்கும் துணிச்சல் அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை. ஆனால் 2013ஆம் ஆண்டு மூன்று பிரதான நிக்காயக்களின் மகாநாயக்கர்கள் சேர்ந்து அன்றைய ஜனாதிபதி மகிந்தவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து “தேரவாத சட்டமூலம்” என்கிற ஒன்றைக் கொண்டுவரும்படி வலியுறுத்தினர். அதனை செய்வதாக ஒப்புக்கொண்ட மகிந்த ராஜபக்ஷவால் அவர் பதவி வகித்த 2015வரை அதனைக் கொண்டுவரமுடியவில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு “நல்லாட்சி” என்கிற பேரில் பதவியேற்ற அரசாங்கம் அச்சட்டமூலத்தைகொண்டுவர ஏற்பாடுகளை செய்தது. ஆனால் முக்கிய பிக்குமார்களை இணைத்துக்கொண்டு மகிந்த அந்த சட்டமூலத்தை எதிர்த்து பிரச்சாரங்களைத் தொடங்கினார். அந்த சட்டமூலம் இழுபறி நிலையைத் தொடர்ந்தது.
 
கடந்த 17.05.2018 அன்று கொட்டுகொட தம்மாவாச மகாநாயக்க தேரர் மீண்டும் அந்த சட்டமூலத்தை ஜனாதிபதிக்கு நினைவூட்டி அறிக்கைகளை விடுத்தார். மீண்டும் அச்சட்டமூலத்தை எதிர்த்து மகிந்த பிக்குமார்களுடன் வீதியில் இறங்கினார். இது பௌத்தர்களுக்கு எதிரான நடவடிக்கையாக திரித்து பிரச்சாரங்களை முடுக்கினார். இறுதியில் அரசு பின்வாங்கியது.
 
பொதுபல சேனா உள்ளிட்ட ஆராஜக பௌத்த அமைப்புகளையும், பிக்குமார்களையும் எதிர்த்து நின்ற பல ஜனநாயக சக்திகள் இப்படிப்பட்ட ஒரு சட்டமூலம் அவசியம்தான் என்று காத்திருந்தனர். ஆனால் அது மீண்டும் குப்பைக்கூடைக்குள் போய்விட்டது.
49204997_2123808657641601_60581821656470
பௌத்தர்களை திருப்திபடுத்துவதில் சிறந்தவர் ரணிலா, சிறிசேனவா
இன்று ஜனாதிபதிமுறைக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையில் ஒரு கெடுபிடிப்போர் நிகழ்ந்துகொண்டிருப்பதை நாம் அறிவோம். பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களை திருப்திபடுத்துவதில் அதி சிறந்தவர் ஜனாதிபதியா அல்லது பிரதமரா என்கிற போட்டியும் இதில் உள்ளடங்குகிறது. பிரதமர் ரணில் பௌத்த மதத்துக்கு தொடர்ந்தும் முன்னுரிமை கொடுப்பேன், யாப்பில் அது தொடர்பில் எந்தவித மாற்றத்தையும் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி கொடுக்கையில் மறுபுறம் ஜனாதிபதி தான் திபிடகவை மரபுரிமையாக பிரகடனப்படுத்துவேன் என்கிறார். வேகமாக களத்தில் இறங்கி அதை முடித்தும்விடுகிறார். 
 
இது 1956 நிகழ்வுகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறது. களனி மாநாட்டில் வைத்து சிங்களம் மட்டும் கொள்கையை ஜே.ஆர். பிரகடனப்படுத்தியபோது, பண்டாரநாயக்கா அதற்கு ஒருபடி மேலே போய் நான் மட்டும் சளைத்தவனா என்கிற பாணியில்; தான் ஆட்சியமைத்தால் 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல்படுத்திக்காட்டுவேன் என்று பிரகடனப்படுத்தி சிங்கள ஆதரவு அலையை தன் பக்கம் திருப்பியெடுத்தார். இன்றும் அதே ஐ.தே.க. - அதே சுதந்திரக் கட்சி. தலைவர்கள் மட்டும் தான் வேறுபடுகின்றனர். 60 ஆண்டுகளுக்கும் பின்னர் மாறாத போக்கு.
 
44126484_10156492933466327_2117759025452
2019 தேர்தல் ஆண்டு என்று ஏற்கெனவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெரும்பான்மை வாக்கு வங்கியைக் கைப்பற்றும் போட்டியில்; சிறுபான்மை இனங்களின் அபிலாஷைகளுக்கு எதிரான பணிகள் வேகமாக நடக்கின்றன. தமிழ் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் இவற்றை பொருட்படுத்தாமல் இருக்கின்றன.
 
சிங்கள - பௌத்த பேரினவாத கட்டமைப்பை நிரந்தரமாக பலப்படுத்தும் பணிகளை இரு பிரதான கட்சிகளும் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி வேகமாக மேற்கொண்டு வருகின்றன.
 
தேசிய மரபுரிமைகள் அமைச்சு
இந்த அமைச்சு மகிந்த ஆட்சியினால் 22.11.2010 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் அறிவிக்கப்பட்டு தனி அமைச்சாக உருவாக்கப்பட்டது. அதுவரை கலாசார அமைச்சின் கீழ் ஒரு பகுதியைக் இயங்கிவந்தது.
 
இதன் மூலம் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம், தேசிய நூதனசாலைகள் திணைக்களம், தேசிய சுவடிகள் திணைக்களம் என்பன இந்த அமைச்சீன கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த மூன்று திணைக்களமுமே தமிழர்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்துவருவதையும், திட்டமிட்டு அழித்துவருவதையும், தமிழ் பிரதேசங்களில் உள்ள புராதன இடங்களையெல்லாம் சிங்கள பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்திவருவதையும் நாம் அறிவோம்.
 
இந்த அமைச்சுக்கான நிர்வாக அறிக்கை 2011 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் 31.12.2011 ஆம் திகதி பிரதான பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட 10 பேரின் பெயர் பட்டியலையும் வெளியிட்டிருந்தது. அதில் ஒருவர் கூட சிங்கள பௌத்தர் அல்லாதவர் இல்லை. அந்த வருடம் மாத்திரம் அவ்வமைச்சின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மாத்திரம் 47.5கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சுக்காக மொத்தம் வருடாந்தம் ஏறத்தாழ 1.5 பில்லியன்கள் ஒதுக்கப்படுகின்றன.
 
‘திபிடக’வை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளை ஏற்கெனவே கலாச்சார அமைச்சு முன்னெடுத்து வருகிறது. இதுவரை தமிழில் மொழிபெயர்க்கும் நடவடிக்கைகளை செய்ததில்லை என்று கலாச்சார அமைச்சின் அறிக்கைகளிலிருந்து அறிய முடிகிறது. பௌத்த அலுவல்கள் அமைச்சின் 2015 ஆண்டின் செயற்திட்ட அறிக்கையின்படி ‘திபிடக’ ஆங்கில மொழிபெயர்ப்புக்காக மட்டும் 25 லட்சம் ரூபாய் அவ்வாண்டுக்கு மாத்திரம் செலவிடப்பட்டிருக்கிறது.
 
கலாசார அமைச்சு, மரபுரிமைகள் அமைச்சு, பௌத்த விவகார அமைச்சு போன்ற தேசிய அமைச்சுக்கள் “தனிச் சிங்கள அமைச்சு”க்களாகவே இயங்கி வருகின்றன என்பதற்கு இப்படி நூற்றுக்கணக்கான ஆதாரங்களைக் கூற முடியும். இவ் அமைச்சுக்களின் தனிச்சிங்களப் போக்கை அறிய அவற்றின் இணையத்தளங்களில் வெளியிடப்படும் தனிச்சிங்கள செய்திகளும், விபரங்களும், வெளியீடுகளும் போதும்.
 
இலங்கையின் மரபுரிமை என்பது சிங்களவர்களின் மரபுரிமையாக மட்டும் நம்பவைக்கப்பட்டிருக்கும் தேசத்தில் வேறென்ன நமக்கு மிஞ்சும்.

நன்றி - தினக்குரல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி....நிழலி!

ஒரு காலத்தில் ....பார்ப்பனர்களால்...புத்த மதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்ட்து! ஆனந்தா, நாலந்தா போன்ற பல்கலைக் கழகங்களும் எரியூட்டிடப் பட்டு அழிக்கப்படடன! அப்போது ....திரிப்பிடகங்கள் பலவும் அழிந்து போயின! மிஞ்சிய சில திரிப்பிடகங்கள் மட்டும் ...இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுப் பத்திரப்படுத்தப் படுத்தப் பட்டன! 

பின்னர் இவை தான்....சீன யாத்திரிகர் (இயன் பதூதா என்று நினைவு)  ஒருவரால் ....சீனாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ....சீனாவிலும்...ஆசியாவிலும் ...புத்தமதம் ...அறிமுகப்பட்ட்து! எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்கள்  பலர்....புத்தமதம் வளர உதவி செய்தார்கள்!

இத ஏன் எழுதுகிறேன் எனில்.....இந்தியாவை விடவும்....புத்த மதம் பரவியதில்....இலங்கைக்கே ...அதிக பங்கு உண்டு  என்பதைச் சொல்லவே!

ஆனால் .....எமது துரதிர்ஷ்டம்!!!

இலங்கையிலும்...பர்மாவிலும்...புத்தமதம் ....கொல்லாமையைக் கடைப்பிடிப்பது இல்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.