Jump to content

ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கலாம் : மீண்டும் கூட்டரசு மஹிந்த - மைத்திரி இணைந்தால்.. : - பாலிதவின் அதிரடி கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கலாம் : மீண்டும் கூட்டரசு மஹிந்த - மைத்திரி இணைந்தால்.. :  - பாலிதவின் அதிரடி கருத்து

 

எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்க முடியும். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டிணைவார்களானால் மீண்டும் மஹிந்தவின் குடும்பத்தவர்களின் அதிகாரமே வலுக்கும். 

range.jpg

2015 இல் மக்கள் கூட்டு அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை உயிர்ப்புடன் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கூட்டு அரசாங்கம் முன்னெடுக்கப்படும் என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவிபரம் வருமாறு,

கேள்வி:- தாங்கள் இன்னமும் அமைச்சுப்பதவியை எதிர்பார்த்துள்ளீர்களா?

பதில்:- ஆம், நான் 18 வருடங்களாக மக்கள் பிரதிநிதியாகவுள்ளேன். ஏன்மீது ஊழல்மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இல்லை. ஏனக்கு அளித்த பதவிகளை சரியாக செயற்படுத்தியுள்ளேன். ஆட்சிக்கு எதிராக செயற்படவில்லை. கட்சிக்காக உழைத்திருக்கின்றேன். அதடினப்படையில் எனது மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அமைச்சுபதவியொன்றை எதிர்பார்த்துள்ளேன்.

கேள்வி:- தங்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி வழங்கப்படாமைக்கான காரணம் என்ன?

பதில்:- அமைச்சரவை நியமிக்கப்படுகின்றபோது 28பேரை மட்டுமே நியமிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார். அந்த தீர்மானத்திற்கு அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அனுப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான பெயர்பட்டியலில் எனது பெயர் உள்ளடங்கலாக ஏழுவரின் பெயர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதனால் தான் முதற்சுற்று அமைச்சரவை நியமனத்தில் எனது பெயர் உள்ளடங்கியிருக்கவில்லை.

கேள்வி:- தாங்கள் கட்சி மற்றும் கட்சித்தலைமையை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் பங்கெடுத்திருந்த போதும் முதற்சுற்றுக்குள் உங்களது பெயர் உள்ளடக்கப்படவில்லையே?

பதில்:- நான் ஆற்றிய பணிகளுக்காக கட்சியால் எனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆந்த விடயத்தில் கட்சி சரியான செயற்பாட்டினையே மேற்கொண்டிருந்தது. எனினும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 28 ஆக வரையறுக்கப்படுவதாக ஜனாதிபதியின் பணிப்புரை விடுத்ததால் அதற்கமைவாக ஜனாதிபதி செயலகத்தால் எமது பட்டியலை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளது.

கேள்வி:- அமைச்சரவைக்கான பெயர் பட்டியலில் தங்கள் பெயர் தவிர்ந்த வேறு நபர்களின் பெயர்களை தானே ஜனாதிபதி மைத்திரிபால நீக்கியிருந்தார்?

பதில்:- ஆம், நீங்கள் கூறுவது சரி. ஆனால் எனது பெயரை ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ நீக்கவில்லை. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதால் இங்கு தொழில்நுட்ப பிரச்சினையொன்றே ஏற்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்க்க முடியும். எதிர்காலத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

கேள்வி;:- 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தனிக்கட்சியொன்று ஆட்சியமைக்குமானால் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஆக அமைய வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் கூறியதன் பிரகாரம் அமைச்சவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதென்றால் மீண்டும் கூட்டு அரசாங்கம் அமைக்கப்படுமா?

பதில்:- ஆம், 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு நாம் முகங்கொடுக்கின்ற போது எமது கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் மிகத்தெளிவாக எமது நிலைப்பாட்டினை குறிப்பிட்டிருந்தனர். அதாவது, எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கான மக்கள் ஆணை கிடைத்தாலும் இணைந்து பயணிக்கவிரும்பும் அரசியல் தரப்புக்களையும் இணைத்துக்கொண்டு தான் ஆட்சியை முன்னெடுப்போம் என்று கூறியிருக்கின்றோம்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதாக இருந்தால் அனைத்து தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆதற்காகவே தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அமைந்தாலும் ஏனையவர்களையும் இணைத்து ஆட்சியை முன்னெடுப்போம் என்று கூறியிருந்தோம். அந்த இலக்கிற்கே மக்கள் தமது பெரும்பான்மையான ஆணையை வழங்கியுள்ளார்கள். அந்த ஆணையுடன் தான் நாம் இன்னமும் இருக்கின்றோம். ஆகவே கூட்டு அரசாங்கத்தினை முன்னெடுப்பத்தில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை.

கேள்வி:-கூட்டு அரசாங்கத்தினை அமைப்பது குறித்து உங்களுடைய கட்சி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றதா?

பதில்:- தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன எமது அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளன. ஆகவே இவ்வாறான இரு தரப்பினருடனும் நாம் இணைந்து கூட்டு அரசாங்கத்தினை முன்னெடுக்க முடியும். அதற்கான பாராளுமன்ற அனுமதியை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வோம்.

கேள்வி:- கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எழுத்து மூலமாக அறிவித்துள்ள நிலையில் தனிநபர்கள் அல்லது குழுவாக வரும் அத்தரப்பு உறுப்பினர்களை இணைத்து கூட்டு அரசாங்கமாக பிரகடனப்படுத்த முடியுமா?

பதில்:- மக்களின் ஆணை நடைமுறைப்படுத்தப்படும் இடம் தான் பாராளுமன்றம். ஆகவே கூட்டு அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை தற்போதும் உள்ள நிலையில் பாராளுமன்றமே அதனைத் தீர்மானிக்க வேண்டும். கூட்டு அரசாங்கம் அமைப்பது குறித்த பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்மொழிகின்றபோது அது வெற்றி பெறுவதா இல்லை தோல்வியடைவதா என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி:- அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை இணைத்து கூட்டு அரசாங்கம் அமைக்கப்படுமென நீங்கள் கூறுகின்றீர்கள் ஆனால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளாரல்லவா?

பதில்:- பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இருப்பினும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு உட்பட்டு அந்த நியமனத்தினை வழங்க வேண்டிய சூழ்நிலையொன்று ஏற்பட்டிருந்த அனுபவம் எம்முன்னே உள்ளது.

அதுபோன்று தான் கூட்டு அரசாங்கம் அமைக்கப்படுவது குறித்த பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் முறையாகக் கிடைக்கின்றபோது அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமை அரசாங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு ஏற்படும். தனிப்பட்ட ரீதியான நிலைப்பாடுகள் எவ்வாறாக இருப்பினும் சம்பிரதாயங்களுக்கும், அரசியலமைப்புச் சட்டங்களுக்கு அனைவரும் உட்பட்டே செயற்பட வேண்டும். ஆகவே கூட்டு அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்மானத்தினை பாராளுமன்றம் எடுக்குமாயின் அதற்கு ஜனாதிபதியும் மதிப்பளித்தாக வேண்டும்.

கேள்வி:- ஒருகட்சியில் அரசாங்கம் அமைகின்றபோது எதிர்க்கட்சியிலிருந்து பதவிகளை பேரம்பேசி கட்சி தாவுகின்ற நிலைமைகள் இலங்கை அரசியலில் சர்வசதாரணமாகியுள்ள நிலையில் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் ஐ.தே.க.வுடன் எந்த எதிர்பார்ப்புடன் இணையவுள்ளனர்?

பதில்:- 2015 ஆம் ஆண்டுக்கு முன்னதாக நாட்டின் நிலைமைகள் மோசமாக இருந்தன. குறிப்பாக ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், தனிநபர்களின் பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகியிருந்தன. நீதித்துறை, சட்டம் ஒழுங்கு என்பன மிகமோசமான நிலைமையில் இருந்தன. அவ்வாறான நிலையில் நாட்டின் மீண்டும் ஜனநாயக ஆட்சியை நிலைப்படுத்துவதற்கு பிரதான கட்சிகள் இணைந்து கொண்டமையினால் தான் அதனை சாத்தியமாக்க முடிந்தது. தற்போது, சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுகின்றன.

நீதித்துறை, சட்டம் ஒழுங்கு என்பன தலையீடுகளின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுகின்றன. சிவில் சமுகத்தினர், ஊடகத்துறையினர் ஆகிய தரப்புக்கள் வலுவான நிலையை எட்டியுள்ளன. ஆகவே நாட்டில் அமைதியான நிலைமைகள் நீடிப்பதுடன் சுபீட்சமான எதிர்காலம் அமைய வேண்டியது அவசியமாகின்றது. அரசியலுக்கு அப்பால் இந்த யாதார்த்தத்தினை புரிந்து கொண்டவர்கள் ஒன்றுபடவேண்டியுள்ளது. அதனடிப்படையில் மக்களின் ஆணைக்கு உட்பட்டு இவ்வாறான கூட்டிணைவை எதிர்பார்க்கின்றனர்.

கேள்வி:- எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என நீங்கள் குறிப்பிட்டதன் பிரகாரம் எத்தனை பேர் வரையிலானவர்கள் அதற்கு தயாராக உள்ளனர்?

பதில்:- 15 அல்லது 20பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இணைந்து கொள்ளவுள்ளது.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினைச் சேர்ந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமா அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்?

பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான உறுப்பினர்களே அரசாங்கத்துடன் இணையவுள்ளனர். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டிணைவார்களானால் மீண்டும் மஹிந்தவின் குடும்பத்தவர்களின் அதிகாரமே வலுக்கும். இதனை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. மேலும் கடந்த காலத்தில் அவர்களுக்கு ஏற்படிருந்த அனுபவங்கள் என்பனவற்றின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியாதவர்களே எமது அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்.

கேள்வி:- யானைச் சின்னத்தினை கைவிட்டாவது பரந்துபட்ட கூட்டணியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அது தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டதா? அவ்வாறு கலந்துரையாடப்பட்டிருப்பின் கூட்டணி அமைக்கும் பணிகள் எந்த நிலைமையில் உள்ளன?

பதில்:- இவ்விடயம் சம்பந்தமான கலந்துரையாடல்கள் ஆரம்பமாக முன்னெடுக்கப்படுகின்றன. 2010, 2015ஆண்டு தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் தான் கூட்டணி அமைந்திருந்தது.

அப்போது யானைச் சின்னத்தினை பயன்படுத்தியிருக்கவில்லை. இந்நிலையில், பலதரப்புக்களையும் இணைத்து கூட்டணி அமைக்கின்றபோது பொதுசின்னத்திற்குச் செல்வதில் எவ்விதமான பிரச்சினையும் கிடையாது.

மேலும் நாட்டின் எதிர்காலத்திற்கு இவ்வாறான கூட்டணியொன்றை அமைக்கின்றபோது ஐ.தே.க.வுக்கு இவ்வாறான அர்ப்பணிபுக்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியும் ஒன்றிணைகின்றபோது அடுத்து வரும் தேர்தல்கள் ஐ.தே.க தலைமையிலான கூட்டணிக்கு சவாலாகுமா?

பதில்:- ஜனாதிபதி மைத்திரிபால நிறைவேற்று அதிகாரத்தினையும் மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள செல்வாக்கையும் வைத்து எமக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகளை நாம் தோற்கடிக்கச் செய்திருந்தோம்.

அதுவொருபுறமிருக்கையில், சுதந்திரக்கட்சியானது துண்டுகளாக உடைந்துள்ளது. பொதுஜன முன்னணி தரப்பு மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைய வேண்டி ஏற்பட்டுள்ளதால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனைவிட பொதுஜன முன்னணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் நியமித்து நிறைவடைந்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சி அதனுடன் இணைகின்றபோது கட்சியைப்பாதுகாத்து பண்டாரநாயக்கவின் கொள்கைளை பின்பற்றும் தரப்பினர் தேர்தல் காலத்தில் புறந்தள்ளப்படுவார்கள். மேலும் இருதரப்பினரும் இணைகின்றபோது அந்த கூட்டணியின் தலைமைத்துவம் அதிகரம் என்பன ராஜபக்ஷவின் குடும்பத்திற்குள் சென்றுவிடும். அவ்வாறு செல்கின்றபோது ராஜபக்ஷவினர் தமது சீடர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கில்லை. ஆகவே பாதிப்படையப்போகின்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அதனைப் புரிந்துகொண்டு எமது பரந்துபட்ட கூட்டணியில் இணைந்துகொள்வதே சிறந்த தீர்மானமாக அமையும்.

கேள்வி:- 2019 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாகும் என அரசியல் கட்சிகள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் ஐ.தே.க எந்த தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாரகின்றது?

பதில்:- எவ்விதமான பிரச்சினைகளுமின்றி நடத்தப்படக்கூடிய தேர்தலாக ஜனாதிபதித் தேர்தலே காணப்படுகின்றது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்க முடியும். ஜனாதிபதி தேர்லை நடத்துவதற்கு எவ்விதமான சட்டச்சிக்கல்களும் இல்லை. அதேநேரம் நாட்டின் முழுப்பிரஜைகளினதும் நிலைப்பாட்டினை அறிந்து கொள்வதற்கும் அது வழிசமைப்பதாக உள்ளது. ஆகவே தான் ஐ.தே.க ஜனாதிபதி தேர்தலை கோருகின்றது.

கேள்வி:- நீங்கள் கூறுவதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலொன்றுக்கான அறிவிப்பு விடுக்கப்படுமாயின் உங்களுடைய தரப்பு வேட்பாளார் யார்?

பதில்:- தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக வேட்பாளர் யார் என்பதை கூறவேண்டியதில்லை. ஐ.தே.க தலைமையில் அமையும் பரந்துபட்ட கூட்டணியின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல்யமான ஒருவரை வேட்பாளராக களமிறக்குவோம். 

கேள்வி:- 2012ஆம் ஆண்டு கட்சிக்குள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற போராட்டத்தில் தாங்கள் களமிறங்கி பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்திருந்தீர்களே தற்போது உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- அனைத்து எதிர்த்தரப்பு அரசியல் சக்திகளையும் ஒருங்கிணைத்து தலைமைத்துவ சபையொன்றை உருவாக்குவதே எமது இலக்காக இருந்தது. ஆதற்கான அனுமதியை மாநாயக்கர்களிடத்தில் பெற்றுக்கொண்டு அதற்கான தலைமையையும் தெரிவு செய்து கொண்டு தான் ஹைட்பார்க் பேரணியில் 2012 ஒக்டோபர் 18ஆம் திகதி நாம் கலந்து கொண்டோம். ஆனால் எமது நோக்கினை புரிந்துகொள்ளாது கட்சியின் உறுப்புரிமை கூட தடைசெய்யப்பட்டது. பின்னரான காலத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை எமது கட்சிக்கு ஏற்பட்டது. ஆகவே தான் தற்போதும் பரந்துபட்ட கூட்டணியொன்று உருவாக்கப்பட்டு அனைத்துத்தரப்புக்களையும் இணைத்து அவை ஏகோபித்து தீர்மானிக்கும் தலைமைத்துவடன் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி:- உங்களுடைய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அதிருப்தியில் இருக்கின்றதே?

பதில்:- அவ்வாறானவர்கள் தொடர்பில் கட்சியினுள் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை எமது கட்சியின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் அதுதொடர்பில் கலந்துரையாடப்படும். எவ்வாறாயினும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை ஊடகங்கள் ஊடக தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கடந்த மூன்றரை வருடகால அனுபவத்துடன் அவர்களின் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. ஆந்த உறுப்பினர்களின் துணையுடன் தான் தற்போது பிரதமர், அமைச்சர்கள், அரச நிறுவனங்களில் உயர்பதவிகள் ஆகியவற்றை வகிப்பதற்கான வாய்ப்பினை பெற முடிந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி:- அவர்கள் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளதோடு அமைச்சுப்பதவியை எதிர்பார்த்துள்ள உங்களையும் சந்தித்துள்ளார்களே?

பதில்:- நான் விசாரணைக்குச் சென்றபோது அவர்கள் என்னுடன் வருகை தந்திருந்தார்கள். சுயாதீனமாகச் செயற்பட போகின்றார்கள் என்றால் என்னுடன் வருகை தரவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. மேலும் ஒருசில அமைச்சர்கள் மக்களை மையப்படுத்தி தாம் முன்வைக்கும் கோரிக்கைகளை செவிமடுத்துச் செயற்படுவதில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. ஆகவே அவ்வாறான அமைச்சர்கள் தொடர்ந்தும் அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பார்களாயின் வரவு செலவுத்திட்டத்தில் அந்த அமைச்சுக்களுக்கான வாக்கெடுப்பில் எதிராக செயற்பட முனைப்புக் காட்டுவது பற்றியே சிந்திக்கின்றார்கள்.

நேர்காணல்:- ஆர்.ராம்

http://www.virakesari.lk/article/47575

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.