Jump to content

தேவதைகளின் குசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேவதைகளின் குசு

by கங்காதுரை • January 1, 2019

6103380-288-k100822

எதேச்சையாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. தனியார் அலைவரிசையில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளியேறிக்கொண்டிருந்தது. வாண்டுகள் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் சில கன்றாவிகளை செய்தனர். அதில் ஒன்று, பெண் தொகுப்பாளினி கீழே குனியும்போது குசு விடும் சத்தத்தை ஒலிக்கச் செய்து அரங்கில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கப் போராடினார்கள். எனக்கு இது என் பல்கலைக்கழக காலத்தை நினைவுப்படுத்தியது.

பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் அது. ஓர் இரவு நேரத்தில் பொது அமர்வு இடத்தில் சீனியர்களும் ஜூனியர்களுமாக பேசிக்கொண்டிருந்தோம். பரக்கென்று சத்தம் கேட்க ஒரு சிலர் வேகமாக எழுந்து சென்றனர். சிலர் கண்களை ஆந்தைப்போல விரித்தப்படி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.  சிலர் கண்களாலேயே சிரிப்பைப் பறிமாறிக்கொண்டனர். ஜூனியர் ஒருத்தி மட்டும் ஏதும் நடக்காததுபோல மெல்ல எழுந்து அவ்விடத்தை விட்டு அகன்றாள். அறைக்கு திரும்பியபோது, அவள் குசு விட்டதை சீனியர் ஒருவர் மற்றவர்களுக்கு  அடக்கமுடியாத சிரிப்புடன் நடித்துக்காட்டினார். இது சில நாட்களுக்கு அந்தப்பெண்ணைக் கேலி செய்ய பலருக்கும் சாத்தியங்களை உருவாக்கிக்கொடுத்தது. எனக்கும் அப்போது சிரிப்பு வந்தது. ஆனால் அச்சிரிப்பின் குரூரத்தை சுட்டிக்காட்டியது  ஒரு குழந்தைதான்.

ஒரு திருமண விருந்தில் கலந்துகொண்டபோது பெண் குழந்தைக்குத் தேவதை கவுன் அணிவித்து அசத்தியிருந்தார்கள். அவள் ஒரு மந்திரக்கோளை சுழற்றியபடி விருந்து மண்டபம் முழுவது வளம் வந்தாள். திடீரென ஒரு பெண் அப்பெண்ணை அடிக்க ஆரம்பித்தார். “வந்தா சொல்ல தெரியாதா?” எனக்கடிந்துகொண்டார். அவர் அக்குழந்தையின் அம்மாவாக இருக்க வேண்டும். பின்னர்தான் அக்குழந்தை தேவதையின் உடையுடன் மலம் கழித்துவிட்டது புரிந்தது. அக்குழந்தை தனக்கு என்ன நிகழ்கிறது எனத் தெரியாமலேயே அடிவாங்கிக்கொண்டு அழுதது.

MASQUE-LOUPE-2

சிறுவயதில் நமக்கு சொல்லப்பட்ட கதைகளில் வாயிலாக நமக்கு அறிமுகமான தேவதைகள் அதிகம். துரதிஷ்டவசமாக நமக்கு சொல்லப்பட்ட தேவதைகள் எல்லாம் ஒரே ரகம்தான். தேவதை என்பவள் யார்? எப்படிப்பட்டவள்? நாம் பார்த்திராத தேவதை பார்ப்பதற்கு எப்படி இருப்பாள்?  தேவதைக்குச், சில இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவ்விலக்கணத்திற்குள் அடங்காத சில தேவதைகள் வேறு சில பெயர்ப்பட்டியலில் பிடாரியாகவோ அல்லது ரத்தக்கட்டேரியாகவோ வகைப்படுத்தப்படும். நமக்கு சொல்லப்பட்ட தேவதைகள் தெய்வகணம் பொருந்தியவர்கள். அவர்கள் அன்பானவர்கள். அன்பைப் போற்றுபவர்கள். சாந்தசொரூபமாக இருப்பவர்கள். அழகு நிறைந்தவர்கள். யாரையும் வசீகரிக்கக்கூடிய வாசமிக்கவர்கள். நம் கஷ்டங்களை போக்கக்கூடியவர்கள் என  இப்படியாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

நமக்கு சொல்லப்பட்ட, நாம் சொல்லக்கூடிய தேவதைகள் எல்லாம் நம் சமூகத்தில் நம்மோடு வாழும் பெண்கள் மீதான கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்றே அந்தக் குழந்தையைப் பார்த்தபோது தோன்றியது. பெண்கள் தேவதைகள். அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் எனச் சொல்லிச்சொல்லி பெண் குழந்தைகள் வளர்க்கப்படுபவர்கள். பெண்கள் தங்களை தேவதையாக நினைக்கத் தொடங்கும் இடம்தான் அவர்கள் பல சங்கதிகளை தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் இடமாகவும் இருக்கின்றது.

பெண்கள் தேவதைகள் என கூறும் இச்சமூகம் அவர்களிடம் இறக்கைகளையும் எதிர்ப்பார்க்கிறது. ஆனால் அந்த இறக்கைகள் பறக்கக்கூடாது. அவை தடிமனாக அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த இறக்கைகளைச் சுமப்பதுபோல சுமந்துகொண்டு அவர்கள் குடும்பங்களில் வளம்வர வேண்டும். பல பெண்களுக்கு அவை இறைக்கைகள் அல்ல சிலுவைகள் எனப் புரிவதே இல்லை. அந்த இறக்கைகளைச் சுமக்கும் காரணத்தினாலேயே அவர்கள் தங்கள் அற்புதமான கணங்களை மட்டும் பொதுவில் காட்டவேண்டும் என வற்புறுத்தப்படுகிறாள்.

இந்தச் சமூகம், பெண்களை எப்போதும் தன் உபாதைகளை மறைத்துக்கொண்டும் இயற்கைக்கு எதிராக வாழவும் பழக்கிவிட்டுள்ளது. பெண்ணுக்கென்று இங்கு எழுதப்படாத விதிகளும் நாகரீகமும் அவளை வேறொன்றாக காட்ட முற்படுகிறது. பெண்ணும் அதை ஏற்றுக்கொள்வதுபோல கண்புருவத்தை சீரமைத்து கால்களிலுள்ள மயிர்களை மழித்து தான் தேவதை என கற்பனையில் வாழ்கிறாள். முகப்பருக்கள் கூட அவளை பெரும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. அவள் கடைசிவரை மனிதனாக வாழ முயன்றதே இல்லை. விருந்தில் நான் பார்த்த குழந்தைகள்போலத்தான் இன்று பெண்களும் வாழப்பழகியுள்ளனர்.

இவ்வாறு இது இன்னும் தொடர நம்மைச் சுற்றி உள்ள நுகர்பொருள் கலாச்சாரமும் காரணமாக உள்ளது. அக்கலாச்சாரத்தை வலுப்படுத்த பெரும் வணிகர்கள் விளம்பரங்களின் மூலம் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.  இதன் வழி செயற்கையான அழகை உருவாக்கித்தரும் அழகு சாதன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களாகின்றனர். நன்கு கவனித்தால் நமது சிற்றூரில் இதுதான் பெண்களுக்கான அழகின் அடையாளம் என நம்பப்படும் ஒன்று உலகில் எங்கோ ஒரு பெருநிறுவன குழுமத்தின் கற்பனையாகவே இருக்கும். அவர்கள் அந்தக் கற்பனையை நம்மிடம் விற்கின்றனர்.

உடல் உபாதைகள் இயற்கையானது. ஆனால் அது ஆணுக்கு மட்டும் இயற்கையானதாகவும் பெண்ணுக்கு புதுமையானதாகவும் பார்க்கப்படுவது எவ்வளவு கொடுமையானது. உடலில் உள்ள வாயு குசுவாக வெளியேறுவது இயற்கையானது. அதை உடலிலிருந்து வெளியேற்றாமல் அடக்க முயற்சிப்பதே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. ஆனால் இந்த ஆண் சமூகம், பெண்கள் எதிர்கொள்ளும் உடல் சார்ந்த உபாதைகளை எப்போதும் கவனத்தில் கொள்வது கிடையாது.  ஆண்கள் அதை வெளியேற்றும்போது அலட்டிக்கொள்ளாமல் கடந்துபோவதும், பெண்ணுக்கு வெளியேறும்போது அதை இயற்கைக்கு அநீதி இழைத்துவிட்டதுபோலவும் அல்லது செய்யக்கூடாத காரியத்தை செய்துவிட்டதுபோலவும் காட்டுவது கொரூரமானதுதானே! அந்தக் கொரூரத்தை நகைச்சுவை பொருளாக காட்டுவது இன்னும் எவ்வளவு கொடுமையானது?

 

http://vallinam.com.my/version2/?p=5903

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயிறு கொஞ்சம் கொள கொள எண்டு சத்தம் போட்டாலே ...... அந்த குளிசை விக்குதெல்லே அதை வாங்கி போட்டால் இப்பிடியான சத்தம் ஒண்டும் வராது சொல்லுற சனம் எக்கச்சக்கம். அதிலை குசு எண்டால் சொல்லவே தேவையில்லை..
நான் ஒருக்கால் அன்றைய யூகோஸ்லாவியாவுக்கு போயிருந்த பொது.....குசு என்பதை சர்வசாதாரணமாகவே பார்க்கின்றார்கள்.

இஞ்சை சத்தம் போட்டு தும்மினாலே அவமானம். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2019 at 4:39 AM, குமாரசாமி said:

வயிறு கொஞ்சம் கொள கொள எண்டு சத்தம் போட்டாலே ...... அந்த குளிசை விக்குதெல்லே அதை வாங்கி போட்டால் இப்பிடியான சத்தம் ஒண்டும் வராது சொல்லுற சனம் எக்கச்சக்கம். அதிலை குசு எண்டால் சொல்லவே தேவையில்லை..
நான் ஒருக்கால் அன்றைய யூகோஸ்லாவியாவுக்கு போயிருந்த பொது.....குசு என்பதை சர்வசாதாரணமாகவே பார்க்கின்றார்கள்.

இஞ்சை சத்தம் போட்டு தும்மினாலே அவமானம். :cool:

குண்டு போட்டத்தை கூட ஒத்துக்கொள்வானுகளாம் ஆனால் குசு போட்டதை ஒத்துக்கொள்ளவே மாட்டானுகளாம் 

நீங்கள் வெள்ளைப்பூண்டை அவித்து சாப்பிடுவது நல்லது சாமி  சத்தமில்லாமல் சரக்கெண்டு ஓடிடும் போயிடும் :unsure::27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

குண்டு போட்டத்தை கூட ஒத்துக்கொள்வானுகளாம் ஆனால் குசு போட்டதை ஒத்துக்கொள்ளவே மாட்டானுகளாம் 

நீங்கள் வெள்ளைப்பூண்டை அவித்து சாப்பிடுவது நல்லது சாமி  சத்தமில்லாமல் சரக்கெண்டு ஓடிடும் போயிடும் :unsure::27_sunglasses:

உள்ளி இப்ப பாவிக்கிறதில்லை. அதுக்கு பதிலாய் டாக்குத்தர்மார் குளிசை கண்டுபுடிச்சு விக்கினம் ராசன்! :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.