Jump to content

தகிக்கும் கொழும்பு அரசியல் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வழி இன்றி ரணிலை மீண்டும் பிரதமராகிய மைத்திரி, மகிந்தவின்  வழிகாட்டுதலில் ரணிலுக்கு பல வழிகளில் நிறைவேற்று அதிகாரம் மூலம் ஆப்படிப்பதன் மூலம் வேறு வழி இன்றி தேர்தலுக்கு இணங்க வைக்க முயல்கின்றார். மாகாண ஆளுனர்களை மாத்தியது, அமைச்சு செயலாளர்களை, அமைச்சர்கள் கோரிக்கைக்கு அமையாது, தான் விரும்பியவர்களை மட்டும் நியமித்தது, அமைச்சர்களுக்கு, வேண்டுமென்றே, திணைக்களங்களை மாறி கொடுத்தது போன்ற பல ஆப்புக்கள்

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்ததும், 30 அமைச்சர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதும் ஒரு வகை ஆப்பு தான்.

இதன் முதல் படியாக தான் சார்ந்த ஐக்கிய ஜனநாய முன்னணியினையும் தேசிய அரசில் இருந்து விலக செய்து, தனது சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்துடன் சேர கூடாது என்று தடை போட்டு விட்டார்.  

இவரது சுஜ நல நோக்கமான, மகிந்தவின் ஆதரவுடன், மீண்டும் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுவதே, இவரது இந்த ஆப்புகளுக்கு காரணம்.

ஆனால் , அவர் நினைத்ததுக்கு  மாறாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர், மகிந்தவின் புதிய தாமரைக் கட்சி யுடன் சேரந்து இயங்க விருப்பம் தெரிவிக்க வில்லை. மாறாக தம்மை ரணில் அரசுடன் சேர கட்சி தலைவர் என்ற ரீதியில்  அனுமதிக்குமாறு கோரினர்.  

மறுத்த மைத்திரி, சுதந்திரக்  கட்சி அலுவலகத்துக்கு பூட்டு  போட்டு விட்டு தாய்லாந்து போனார்.

காரணம் என்ன என்று இப்போது தெரிந்து விட்டது.

சந்திரிகா களத்தில் இறங்கி  விட்டார். தனது தந்தை ஆரம்பித்து, தாயாரால், தன்னால் வளர்க்கப் பட்ட சுதந்திரக் கட்சி, மைத்திரியினால், மகிந்தவிடம் அடகு, வைக்கப்பட்டு, அழிக்கப் பட விட முடியாது என அவர் களத்தில் இறங்கி உள்ளார் என்பதே வெளியில் சொல்லப் படும் காரணம்.

ஆனாலும் உண்மையான விடயம் அதுவல்ல.

அவர் பின்னால், 20 தொடக்கம் 30 வரையான சுதந்திரக் கட்சி எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் துணையுடன் 150 பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி, புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றி, ஜனாதிபதி முறையினை ஒழிப்பது, அல்லது மைத்திரியினை (IMPEACHMENT) வீட்டுக்கு அனுப்பி, ரணிலை ஜனாதிபதி ஆக்கி, ஐதேக, சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தினை அமைப்பது, ஆதரவு தந்த சுதந்திரக் கட்சி எம்பிக்கள் அமைச்சர்கள் ஆவது.

சந்திரிகாவின் இந்த முயல்வுக்கு வெளிநாடுகள் சில ஆதரவினை வழங்குகின்றன எனவும் தெரிய வருகின்றது.

இதன் காரணமாகவே, சம்பந்தர் எதிர்கட்சிதலைவர் பதவி குறித்து, சபாநாயகர் அலட்டிக் கொள்ளவில்லை என தெரிகிறது. ஏனெனில், IMPEACHMENT வெற்றி , தோல்வி என்பது சபாநாயகர் கையில் தான் உள்ளது.

ஆகவே.... கொழும்பு அரசியல் இன்னமும் தகித்துக் கொண்டு தான் உள்ளது.

** சுஜ ஆக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள குறிப்பு நான் எழுதிய பின்னே, இந்த வீடியோ வந்தது. நான் இதை வைத்து சொல்லவில்லை எனது சொந்த அபிப்பிராயமே எழுதினேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2019 at 2:35 PM, Nathamuni said:

வேறு வழி இன்றி ரணிலை மீண்டும் பிரதமராகிய மைத்திரி, மகிந்தவின்  வழிகாட்டுதலில் ரணிலுக்கு பல வழிகளில் நிறைவேற்று அதிகாரம் மூலம் ஆப்படிப்பதன் மூலம் வேறு வழி இன்றி தேர்தலுக்கு இணங்க வைக்க முயல்கின்றார். மாகாண ஆளுனர்களை மாத்தியது, அமைச்சு செயலாளர்களை, அமைச்சர்கள் கோரிக்கைக்கு அமையாது, தான் விரும்பியவர்களை மட்டும் நியமித்தது, அமைச்சர்களுக்கு, வேண்டுமென்றே, திணைக்களங்களை மாறி கொடுத்தது போன்ற பல ஆப்புக்கள்

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்ததும், 30 அமைச்சர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதும் ஒரு வகை ஆப்பு தான்.

இதன் முதல் படியாக தான் சார்ந்த ஐக்கிய ஜனநாய முன்னணியினையும் தேசிய அரசில் இருந்து விலக செய்து, தனது சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்துடன் சேர கூடாது என்று தடை போட்டு விட்டார்.  

இவரது சுஜ நல நோக்கமான, மகிந்தவின் ஆதரவுடன், மீண்டும் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுவதே, இவரது இந்த ஆப்புகளுக்கு காரணம்.

ஆனால் , அவர் நினைத்ததுக்கு  மாறாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர், மகிந்தவின் புதிய தாமரைக் கட்சி யுடன் சேரந்து இயங்க விருப்பம் தெரிவிக்க வில்லை. மாறாக தம்மை ரணில் அரசுடன் சேர கட்சி தலைவர் என்ற ரீதியில்  அனுமதிக்குமாறு கோரினர்.  

மறுத்த மைத்திரி, சுதந்திரக்  கட்சி அலுவலகத்துக்கு பூட்டு  போட்டு விட்டு தாய்லாந்து போனார்.

காரணம் என்ன என்று இப்போது தெரிந்து விட்டது.

சந்திரிகா களத்தில் இறங்கி  விட்டார். தனது தந்தை ஆரம்பித்து, தாயாரால், தன்னால் வளர்க்கப் பட்ட சுதந்திரக் கட்சி, மைத்திரியினால், மகிந்தவிடம் அடகு, வைக்கப்பட்டு, அழிக்கப் பட விட முடியாது என அவர் களத்தில் இறங்கி உள்ளார் என்பதே வெளியில் சொல்லப் படும் காரணம்.

ஆனாலும் உண்மையான விடயம் அதுவல்ல.

அவர் பின்னால், 20 தொடக்கம் 30 வரையான சுதந்திரக் கட்சி எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் துணையுடன் 150 பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி, புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றி, ஜனாதிபதி முறையினை ஒழிப்பது, அல்லது மைத்திரியினை (IMPEACHMENT) வீட்டுக்கு அனுப்பி, ரணிலை ஜனாதிபதி ஆக்கி, ஐதேக, சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தினை அமைப்பது, ஆதரவு தந்த சுதந்திரக் கட்சி எம்பிக்கள் அமைச்சர்கள் ஆவது.

சந்திரிகாவின் இந்த முயல்வுக்கு வெளிநாடுகள் சில ஆதரவினை வழங்குகின்றன எனவும் தெரிய வருகின்றது.

இதன் காரணமாகவே, சம்பந்தர் எதிர்கட்சிதலைவர் பதவி குறித்து, சபாநாயகர் அலட்டிக் கொள்ளவில்லை என தெரிகிறது. ஏனெனில், IMPEACHMENT வெற்றி , தோல்வி என்பது சபாநாயகர் கையில் தான் உள்ளது.

ஆகவே.... கொழும்பு அரசியல் இன்னமும் தகித்துக் கொண்டு தான் உள்ளது.

** சுஜ ஆக்கம்.

உங்கள் சுய ஆய்வுக்கட்டுரைக்கு நன்றி. மேலும் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.