Jump to content

சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை

ஆர்.மணி  மூத்த பத்திரிகையாளர் 
புத்தக கண்காட்சிThe India Today Group

(இக்கட்டுரையில்  இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர்  )

சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி இன்று வெள்ளிக் கிழமை, ஜனவரி 4ம் தேதி தொடங்கி விட்டது. இது '42 வது சென்னை புத்தக கண்காட்சியாகும். சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சி திறந்தவெளி விளையாட்டரங்கில் புத்தக கண்காட்சி நடக்கிறது. ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் இந்த கண்காட்சி நடக்கிறது. 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், Booksellers and Publishers Association of South India (BAPASI) புத்தக கண்காட்சியை நடத்துகிறது. வழக்கமாக 13 அல்லது 14 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சி முதன் முறையாக இந்த ஆண்டு 17 நாட்கள் நடக்கவிருக்கிறது. 

இந்தாண்டு 500 பதிப்பாளர்கள் தங்கள் கடைகளை விரித்துள்ளனர். 800 க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, இந்தியாவின் பெரும்பாலான பிராந்திய மொழிகளின் புத்கங்களும் கண்காட்சியில் இருக்கின்றன. இந்த மொழிகளின் பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. 

வழக்கம் போலவே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் இந்த புத்தக கண்காட்சி குறித்து ஏராளமான தகவல்களை தொடர்ந்து கேட்டு வருவதாகவும், ஆண்டு தோறும் சென்னை வரும் சில ஆயிரம் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களது பயணத் திட்டங்களை இந்த புத்தக கண்காட்சியை ஒட்டி அமைத்துக் கொண்டுள்ளதாகவும் என்னிடம் கூறினார் BAPASI நிருவாகி ஒருவர். 2018 ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சிக்கு 12 லட்சம் பேர் வருகை புரிந்த தாகவும், இந்தாண்டு குறைந்தது 20 லட்சம் பேராவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

முதல் சென்னை புத்தக கண்காட்சி டிசம்பர் 14, 1977 ல் நடந்த து. பபாசி அமைப்புதான் இந்த கண்காட்சியை துவக்கியது. பதினோரு நாட்கள், டிசம்பர் 24 வரையில் இந்த கண்காட்சி நடந்தது. 22 புத்தக அரங்கங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரிஸே - ஏ - ஆஸம் பள்ளியில்தான் கண்காட்சி நடந்தது. அடுத்த சில ஆண்டுகள் கழித்து, புத்தக கண்காட்சி இப் பள்ளியை அடுத்து அமைந்துள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரிக்கு இடம் பெயர்ந்தது. டிசம்பர் 1989 - ஜனவரி 1990 நடந்த 12 வது சென்னை புத்தக கண்காட்சி முக்கியமானது. 

இந்த கண்காட்சியில் உலக சுகாதார நிறுவனம், (World Health Organization or WHO) வெளியிட்ட புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வைக்கப்பட்டன. தன்னுடைய வெள்ளி விழாவை 2002 ம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி கொண்டாடியது. 2007 ம் ஆண்டு எண்ணிக்கை பெருகி வந்த புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் புத்தக கண்காட்சியை காயிதே மில்லத் கல்லூரியிலிருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு உந்தி தள்ளினர். காரணம் அலை, அலையாய் வரத் துவங்கிய மனிதர்களும், பல்கிப் பெருகி படையெடுத்த வாகனங்களும். இடப்பற்றாக் குறையால் புத்தக கண்காட்சி இடம் மாறியது. 

2009 ம் ஆண்டு கண்காட்சி வரலாற்றில் முக்கியமான மைல் கல். புத்தகங்களை பார்க்கவும், வாங்கவும் வந்தவர்களின் எண்ணிக்கை முதன் முறையாக பத்து லட்சத்தை தாண்டியது. 2013 ம் ஆண்டு இப் பள்ளியின் அருகில் தோண்டப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கங்களினால் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கிற்கு மாற்றப்பட்டது. 

புத்தக கண்காட்சிThe India Today Group

பிறகு மீண்டும் ஜார்ஜ் பள்ளிக்கு வந்தது. இந்தாண்டு மீண்டும் புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ திறந்த வெளி அரங்கிற்கு சென்று விட்டது. முதலில் சென்னையில் மட்டுமே நடத்தப் பட்ட BAPASI யின் இந்த புத்தக கண்காடசி பின்னர் திருச்சி, உதகமண்டலம், புதுச்சேரி, திருவனந்தபுரம் என்று சீரான இடைவெளியில் விரிவடைய ஆரம்பித்து, ஆண்டு தோறும் தற்போது மேலே குறிப்பிட்ட நகரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. 

இதுதான் சென்னை புத்தக கண்காட்சியின் சுருக்கமான வரலாறு. இது கடந்து போன காலத்தின், ஓரளவு நாம் பெருமை பட்டுக் கொள்ளக் கூடிய வரலாறு தான். சந்தேகமில்லை. இருநூறு ஆண்டு கால அடிமை இந்தியாவின் கல்வி அறிவையும், நாடு விடுதலை அடைந்த கடந்த 70 ஆண்டுகாலத்தில் இந்தியாவும் குறிப்பாக தமிழகமும் பெற்றிருக்கும் கல்வி அறிவின் அளவு கோல்களின்படி பார்த்தால் இது நாம் மார்தட்டிக் கொள்ளக் கூடிய சாதனையாக இல்லாவிட்டாலும், ஒதுக்கித் தள்ள முடியாத சாதனைதான். 

இந்தியாவின் பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் கல்வி அறிவின் பின் புலத்தில் பார்த்தால், சென்னை புத்தக கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை கிட்டத் தட்ட இன்று 20 லட்சத்தை தொட்டுக் கொண்டிருப்பது நம்பிக்கை தரும் முன்னேற்றம்தான். .

சென்னை புத்தக கண்காட்சியின் மறக்க முடியாத என்னுடைய சில நினைவுகளில் முக்கியமானது 1994 ம் ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சி தீக்கிரையானது. ஆம். அந்தாண்டு காயிதே மில்லத் கல்லுரியில் நடந்த புத்தக கண்காட்சி திடீரென்று ஏற்பட்ட தீயினால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது இரவு நிகழ்ந்தது. அதற்கு சில மணி நேரங்கள் முன்பு மாலையில் நான் அங்கு சுற்றிக் கொண்டிருந்தேன். காலையில் 'தினமணி' செய்தி தாளை பார்த்த போது இரவு புத்தக கண்காட்சி தீக்கிரையான செய்தி அறிந்தேன். அப்போது நான் 'மாலைக் கதிர்' என்ற மாலை நாளேட்டில் முழு நேர நிருபராக இருந்தேன். 

காலை பத்து மணிக்கு காயிதே மில்லத் கல்லூரிக்கு மற்ற சில பத்திரிகையாளர்களுடன் செய்தி சேகரிக்க சென்றேன். கண்ணீரும், கம்பலையுமாக, எல்லாவற்றையும் இழந்து நின்ற பல பதிப்பகத்தாரை பார்த்தேன். அப்போது என்னுள் நான் உடைந்து போனேன். ஆனால் அடுத்த ஆண்டே அந்த பதிப்பகத்தார் வீறு கொண்டு எழுந்து நின்று, போராடி, மீண்டும் வெற்றிப் பாதையில் செல்லத் துவங்கியதை என் அனுபவத்தில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். 1994 ஜனவரி வரையில் புத்தக கண்காட்சியில் தீயணைப்பு வாகனங்கள் இல்லை. 

அதற்கு பிறகுதான் தீயணைப்பு வாகனங்கள் வந்தன. அன்று மட்டும் தீயணைப்பு வாகனங்கள் இருந்திருந்தால், பல பதிப்பகத்தார்கள் அன்றைய நஷ்டத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். ''பெரிய, பெரிய தவறுகளை செய்த பிறகுதான், சிறிய, சிறிய உண்மைகள் வாழ்கையில் தெரிய வருகின்றன'' என்ற பாரதி யின் வரிகள் தான் எனக்கு அப்போதும், இப்போதும் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது. 

1984 ம் ஆண்டு முதல் சென்னை புத்தக கண்காட்சிக்கு நான் போய்க் கொண்டிருக்கிறேன். கண்காட்சியின் வளர்ச்சியை கடந்த 34 ஆண்டுகாலமாக அங்குலம், அங்குலமாக நான் பார்த்து வருகிறேன். 1988 ம் ஆண்டு பத்திரிகையாளனாக மாறிய பின்னர், இந்த புத்தக கண்காட்சியின் பல புதிய பரிமாணங்கள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. ஒரு புத்தகம் எப்படி தயாராகிறது, அதனது அடக்க விலை, விற்பனை விலை, எழுத்தாளருக்கு கொடுக்கப்படும் ராயல்டி என்று பல விஷயங்கள் எனக்கு தெரிய வந்தன. 

கடந்த 34 ஆண்டுகளிலும் ஒவ்வோர் முறையும் புத்தக கண்காட்சிக்கு குறைந்தது நான்கு முறையாவது போய் வந்ததில் பல புதிய நண்பர்களை பெற்றிருக்கிறேன். அவர்களது தொடர்பால், வாழ்க்கையின் பல புதிய விஷயங்களை கற்றிருக்கிறேன். கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவு என்பதை ஆண்டுதோறும் அறிந்து கொள்ள இந்த புத்தக கண்காட்சியும், அதில் கிடைக்கும் புதிய மனித உறவுகளும் எனக்கு உதவிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழ் பதிப்பாளர்களை பற்றிப் பேசும் போது தமிழகத்தின் நூலகங்களை பற்றி பேசாமல் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவின் நூலக இயக்கங்களில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தமிழக அரசு சாமானிய மனிதர்களிடம் இருந்தும் ஆண்டுதோறும் வசூலிக்கும் வரியில் நூலக வரி என்ற ஒன்றும் இருக்கிறது. 

வசூலிக்கும் வரிக்கு ஏற்ப தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்குகிறதா என்று கேட்டால் அது வேறு விவகாரம். ஆனால் கணிசமான அளவுக்கு 2011 ம் ஆண்டு வரையில் தமிழ் பதிப்பகத்தாரிடம் இருந்து புத்தகங்கள் நூலகங்களுக்கு வாங்கப் பட்டிருக்கின்றன. 2011 லிருந்து இதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த எட்டாண்டுகளாக இந்த தொய்வு தொடருகிறது. 

நடுவில் இரண்டாண்டுகள் ஓரளவுக்கு புத்தகங்கள் வாங்கப் பட்டன. ஆனால் பின்னர் நிலைமை மீண்டும் 2011 ம் ஆண்டு காலகட்டத்திற்கே சென்று விட்டது. இன்று சிறு மற்றும் நடுத்தர தமிழ் பதிப்பகத்தாரின் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இது இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை விரைவில் களையப்படுவது தமிழ்ப் பதிப்புலகை மட்டுமல்ல, தமிழகத்தின் அரசு நூலகங்களையும் வலுப்படுத்தும்.

இனி அடுத்து என்ன என்பதுதான் நாம் முக்கியமாக யோசிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது என்றே கருதுகிறேன். சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக பதிப்பாளரும், BAPASI யின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவருமான ஜி.ஒளிவண்ண்னிடம் பேசிக் கொண்டிருந்தேன். 

அவர் சில ஆச்சரியமான விஷயங்களை சொன்னார். அதில் முக்கியமானது தமிழ் புத்தகங்களுக்கு சர்வதேச அளவில் விரிவடைய காத்திருக்கும் சந்தை. அவருடைய மொழியிலேயே இங்கே அதனை சொல்லுவது பொருத்தம் என நினைக்கிறேன். ''ஜெர்மனியின் ஃப்ராங்ஃபட் நகரில் நடைபெற்ற 2016 புத்தக கண்காட்சி மற்றும் 2017 ல் லண்டனில் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளுக்கு போயிருந்தேன். இரண்டிலும் உலகின் பல நாடுகளிலிருந்தும், பல மொழி பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த 'பதிப்புரிமை பொறுப்பாளர்களிடம் (Rights Agents) பேசிக் கொண்டிருந்தேன். ரைட்ஸ் ஏஜெண்ட்ஸ் எனப்படும் உரிமை முகவர்கள் யாரென்றால், பெரும்பாலான வெளிநாடுகளில் ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தை விற்பனை செய்ய நேரடியாக பதிப்பகத்தாரிடம் போக மாட்டார். 

புத்தக கண்காட்சிThe India Today Group

இந்த உரிமை முகவர்கள்தான் சரியான, பொருத்தமான பதிப்பகத்தாரிடம் எழுத்தாளரளின் படைப்புகளை கொண்டு போய் பதிப்பிக்கச் செய்வார்கள். இந்தியாவில் இதுவரையில் அந்த நிலைமை இல்லை. நேரடியாகவேதான் ஒவ்வோர் எழுத்தாளரும் பதிப்பகத்தாரிடம் தொடர்பில் இருக்கிறார். உரிமை முகவர் என்னிடம் ஆர்வமாக கேட்டது பெண்ணியம் சம்மந்தப்பட்ட நாவல்கள், வரலாறு, இடங்கள், இந்திய கலாச்சாரம் (இதில் இந்தியாவில் உள்ள வெவ்வேறு கலாச்சாரங்களும் அடங்கும்), வரலாறு, கட்டடக்கலை சம்பந்தமான நூல்கள் தமிழில் இருக்கின்றனவா என்பதுதான். மேலே குறிப்பிட்ட விஷயங்களில் பல நாடுகளில், குறிப்பாக, மேலை உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று அப்போது நான் புரிந்து கொண்டேன்'' என்று கூறினார்.

தொடர்ந்து வேறு சில முக்கியமான விஷயங்களையும் அவர் சொன்னார்; ''தமிழ் பதிப்புலகம் இந்த சந்தையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் அதற்கு அவர்கள் முதலில் செய்ய வேண்டியது தாங்கள் பதிப்பிக்கும் முக்கியமான புத்தகங்களின் ஆங்கிலப் பதிப்பை உடனடியாக் கொண்டு வர வேண்டும். 

ஏனெனில் அப்போதுதான் உரிமை முகவர்கள் அதனது விற்பனை வல்லமையை உணர்ந்து சர்வதேச அளவில் உள்ள பதிப்பகத்தாரிடம் கொண்டு போவார்கள். பிறகு ஆங்கிலத்திலிருந்து இந்த புத்தகங்கள் உலகின் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்படும். இன்று தமிழகத்தின் சில பதிப்பகத்தாரிடமும், எழுத்தாளர்களிடமும் இந்த செய்தியை சொல்லி, அவர்களை தங்களது புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்பை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வருமாறு உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறேன்'' என்றும் கூறினார்.

''Authorz" என்ற பெயரில் இதற்கான ஒரு செயலி (app) யை ஒளிவண்ணனும அவரது சில நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது விரைவில் செயற்பாட்டுக்கு வரவிருக்கிறது. ஒரு பதிப்பக உரிமையாளர் தன்னுடைய ஒரு புத்தகத்தை சர்வதேச சந்தைக்கு கொண்டு போக விரும்பினால், இந்த செயலியில் தன்னுடைய புத்தகத்தை, தமிழிலேயே ஏற்றம் (upload) செய்து விடலாம். துருவக் கண்ணாடி கொண்டு சதா சர்வ காலமும் உலகின் பல மொழி புதிய புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கும் உரிமை முகவர்கள் இதனை, அவர்களுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் கூட, கண்டு பிடித்து விடுகிறார்கள். 

அதற்கான பல மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள். குறிப்பிட்ட புத்தகம் சர்வதேச விற்பனை சந்தையில் விலை போகும் என்று அவர்கள் உணர்ந்து விட்டால், உடனடியாக சம்மந்தப்பட்ட தமிழ்ப் பதிப்பாளரை நாடி வேற்று மொழி பதிப்புக்கான ஒப்பந்தங்களை போட்டு விடுகிறார்கள். இது தமிழ் பதிப்பகத்தாருக்கு கிடைக்க இருக்கும் பெரு வாய்ப்பாகவே விவரம் அறிந்தவர்களால் தற்போது பார்க்கப் படுகிறது. இதனை எந்தளவுக்கு தமிழ்ப் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனை தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் பட்சத்தில் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றே தற்போதைக்கு தெரிகிறது.

''தொழில் நுட்ப வளர்ச்சி என்ற சுனாமி தமிழ் பதிப்புலகை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது. தங்களை எந்தளவுக்கு இத்தகைய தொழில் நுட்பங்களுக்கு தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளுகிறதோ அதற்கேற்பவே அவர்களது இருப்பு இந்த துறையில் உறுதி செய்யப் படும். அதற்காகத்தான் என்னுடைய பதிப்பக நண்பர்களிடம் பேசும் போதெல்லாம், ''சர்வதேச அளவில் சிந்தியுங்கள்'' என்று நான் சொல்லி வருகிறேன்'' என்கிறார் ஒளிவண்ணன். 

''Authorz" என்ற பெயரில் இதற்கான ஒரு செயலி வந்தாலும், உடனுக்குடன் ஆங்கில மொழி பெயர்ப்புகளை, குறைந்தபட்சம் முக்கியமான புத்தகங்களையாவது, ஆங்கிலத்தில் கொண்டு வருவது, தமிழ் பதிப்பாளர்களுக்கு பெரும் நன்மை பயக்கும் தன்மை கொண்டதாகவே பார்க்கப் படுகிறது. ஆகவே இந்த இரண்டுக்கும், அதாவது ''Authorz" என்ற செயலிக்கும், ஆங்கில மொழி பெயர்ப்புக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்றே புரிந்து கொள்ளலாம்.

இதனை செய்ய தமிழ் பதிப்புலகம் தவறினால் வரக் காத்திருக்கும் ஆபத்து, வெளி நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள் நேரடியாகவே எழுத்தாளர்களிடம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் மொழியில் இந்த புத்தகங்களை மொழி பெயர்த்து பதிப்பித்து விடுவார்கள். இது எங்கே போய் முடியும் என்பதை அறிய தமிழ் பதிப்பாளர்கள் விஞ்ஞானிகளாய் இருக்க வேண்டிய அவசியமில்லைதான்.

இவற்றையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில், அதாவது புத்தகங்களின் மேன்மையை உரக்க சொல்லும் இந்த சமயத்தில் புத்தகங்களை பற்றிய வேறு சில கருத்துக்களையும் பதிவிடாமல் இருக்க முடியவில்லை. புத்தகங்களின் மேன்மையை பற்றி ஒருவர் தொடர்ந்து பேசும் போது ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி இப்படி சொன்னாராம், ''புத்தகம் என்பது கடந்த காலத்தின் கரிய நிழல். மனிதனே அதனினும் மகத்தானவன்''. இதனது பொருளாக கார்க்கி சொல்லுவது, நீங்கள் பல புத்தகங்களை படித்து அறிவதை விட, ஒரு மனிதனை ஆழமாக பார்ப்பதன் மூலம் அறிவது அதிகம் என்பதுதான்.

இதனை ஜவஹர்லால் நேரு தன்னுடைய சுயசரிதையில் இப்படி சொல்லுவார்; ''புத்தகங்களை படிப்பது நல்லதுதான். ஆனால் புத்தகங்களை படிப்பது என்பது அதனளவிலேயே அதாவது வெறுமனே படிப்பது என்பதில் மட்டுமே பெருமைப்பட ஏதுமில்லை. இரண்டாவதாக நீங்கள் எவ்வளவு புத்தகங்களை படித்தீர்கள் என்பது அல்ல முக்கியம். எத்தகைய தரமான புத்தகங்களை படித்தீர்கள் என்பதுதான் முக்கியம். 17ம் நூற்றாண்டின் டட்ச் மொழி தத்துவஞானி பரூச் ஸ்பினோசா (Baruch Spinoza) தன்னுடைய நூலகத்தில் வெறும் 60 புத்தகங்களைத்தான் வைத்திருந்தார்'' என்றார் நேரு.

எவ்வளவு புத்தகங்களை படித்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம், வாழ்கிறோம் என்பதுதானே முக்கியம் … அந்த விதத்தில், இந்த எளிய உண்மையை உணர்த்திய மக்சிம் கார்கிக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் நன்றி.

 

https://www.bbc.com/tamil/india-46752333

 

Link to comment
Share on other sites

_105059026_img_0229.jpg

சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி இன்று வெள்ளிக் கிழமை, ஜனவரி 4ம் தேதி தொடங்கி விட்டது. இது '42 வது சென்னை புத்தக கண்காட்சியாகும். சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சி திறந்தவெளி விளையாட்டரங்கில் புத்தக கண்காட்சி நடக்கிறது. ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் இந்த கண்காட்சி நடக்கிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், Booksellers and Publishers Association of South India (BAPASI) புத்தக கண்காட்சியை நடத்துகிறது. வழக்கமாக 13 அல்லது 14 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சி முதன் முறையாக இந்த ஆண்டு 17 நாட்கள் நடக்கவிருக்கிறது.

இந்தாண்டு 500 பதிப்பாளர்கள் தங்கள் கடைகளை விரித்துள்ளனர். 800 க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, இந்தியாவின் பெரும்பாலான பிராந்திய மொழிகளின் புத்கங்களும் கண்காட்சியில் இருக்கின்றன. இந்த மொழிகளின் பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.

வழக்கம் போலவே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் இந்த புத்தக கண்காட்சி குறித்து ஏராளமான தகவல்களை தொடர்ந்து கேட்டு வருவதாகவும், ஆண்டு தோறும் சென்னை வரும் சில ஆயிரம் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களது பயணத் திட்டங்களை இந்த புத்தக கண்காட்சியை ஒட்டி அமைத்துக் கொண்டுள்ளதாகவும் என்னிடம் கூறினார் BAPASI நிருவாகி ஒருவர். 2018 ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சிக்கு 12 லட்சம் பேர் வருகை புரிந்த தாகவும், இந்தாண்டு குறைந்தது 20 லட்சம் பேராவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

_105059308_img_0200.jpg

முதல் சென்னை புத்தக கண்காட்சி டிசம்பர் 14, 1977 ல் நடந்த து. பபாசி அமைப்புதான் இந்த கண்காட்சியை துவக்கியது. பதினோரு நாட்கள், டிசம்பர் 24 வரையில் இந்த கண்காட்சி நடந்தது. 22 புத்தக அரங்கங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரிஸே - ஏ - ஆஸம் பள்ளியில்தான் கண்காட்சி நடந்தது. அடுத்த சில ஆண்டுகள் கழித்து, புத்தக கண்காட்சி இப் பள்ளியை அடுத்து அமைந்துள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரிக்கு இடம் பெயர்ந்தது. டிசம்பர் 1989 - ஜனவரி 1990 நடந்த 12 வது சென்னை புத்தக கண்காட்சி முக்கியமானது.

இந்த கண்காட்சியில் உலக சுகாதார நிறுவனம், (World Health Organization or WHO) வெளியிட்ட புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வைக்கப்பட்டன. தன்னுடைய வெள்ளி விழாவை 2002 ம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி கொண்டாடியது. 2007 ம் ஆண்டு எண்ணிக்கை பெருகி வந்த புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் புத்தக கண்காட்சியை காயிதே மில்லத் கல்லூரியிலிருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு உந்தி தள்ளினர். காரணம் அலை, அலையாய் வரத் துவங்கிய மனிதர்களும், பல்கிப் பெருகி படையெடுத்த வாகனங்களும். இடப்பற்றாக் குறையால் புத்தக கண்காட்சி இடம் மாறியது.

2009 ம் ஆண்டு கண்காட்சி வரலாற்றில் முக்கியமான மைல் கல். புத்தகங்களை பார்க்கவும், வாங்கவும் வந்தவர்களின் எண்ணிக்கை முதன் முறையாக பத்து லட்சத்தை தாண்டியது. 2013 ம் ஆண்டு இப் பள்ளியின் அருகில் தோண்டப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கங்களினால் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கிற்கு மாற்றப்பட்டது.

_105051850_chennaibook2.jpg

பிறகு மீண்டும் ஜார்ஜ் பள்ளிக்கு வந்தது. இந்தாண்டு மீண்டும் புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ திறந்த வெளி அரங்கிற்கு சென்று விட்டது. முதலில் சென்னையில் மட்டுமே நடத்தப் பட்ட BAPASI யின் இந்த புத்தக கண்காடசி பின்னர் திருச்சி, உதகமண்டலம், புதுச்சேரி, திருவனந்தபுரம் என்று சீரான இடைவெளியில் விரிவடைய ஆரம்பித்து, ஆண்டு தோறும் தற்போது மேலே குறிப்பிட்ட நகரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.

இதுதான் சென்னை புத்தக கண்காட்சியின் சுருக்கமான வரலாறு. இது கடந்து போன காலத்தின், ஓரளவு நாம் பெருமை பட்டுக் கொள்ளக் கூடிய வரலாறு தான். சந்தேகமில்லை. இருநூறு ஆண்டு கால அடிமை இந்தியாவின் கல்வி அறிவையும், நாடு விடுதலை அடைந்த கடந்த 70 ஆண்டுகாலத்தில் இந்தியாவும் குறிப்பாக தமிழகமும் பெற்றிருக்கும் கல்வி அறிவின் அளவு கோல்களின்படி பார்த்தால் இது நாம் மார்தட்டிக் கொள்ளக் கூடிய சாதனையாக இல்லாவிட்டாலும், ஒதுக்கித் தள்ள முடியாத சாதனைதான்.

இந்தியாவின் பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் கல்வி அறிவின் பின் புலத்தில் பார்த்தால், சென்னை புத்தக கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை கிட்டத் தட்ட இன்று 20 லட்சத்தை தொட்டுக் கொண்டிருப்பது நம்பிக்கை தரும் முன்னேற்றம்தான். .

சென்னை புத்தக கண்காட்சியின் மறக்க முடியாத என்னுடைய சில நினைவுகளில் முக்கியமானது 1994 ம் ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சி தீக்கிரையானது. ஆம். அந்தாண்டு காயிதே மில்லத் கல்லுரியில் நடந்த புத்தக கண்காட்சி திடீரென்று ஏற்பட்ட தீயினால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது இரவு நிகழ்ந்தது. அதற்கு சில மணி நேரங்கள் முன்பு மாலையில் நான் அங்கு சுற்றிக் கொண்டிருந்தேன். காலையில் 'தினமணி' செய்தி தாளை பார்த்த போது இரவு புத்தக கண்காட்சி தீக்கிரையான செய்தி அறிந்தேன். அப்போது நான் 'மாலைக் கதிர்' என்ற மாலை நாளேட்டில் முழு நேர நிருபராக இருந்தேன்.

காலை பத்து மணிக்கு காயிதே மில்லத் கல்லூரிக்கு மற்ற சில பத்திரிகையாளர்களுடன் செய்தி சேகரிக்க சென்றேன். கண்ணீரும், கம்பலையுமாக, எல்லாவற்றையும் இழந்து நின்ற பல பதிப்பகத்தாரை பார்த்தேன். அப்போது என்னுள் நான் உடைந்து போனேன். ஆனால் அடுத்த ஆண்டே அந்த பதிப்பகத்தார் வீறு கொண்டு எழுந்து நின்று, போராடி, மீண்டும் வெற்றிப் பாதையில் செல்லத் துவங்கியதை என் அனுபவத்தில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். 1994 ஜனவரி வரையில் புத்தக கண்காட்சியில் தீயணைப்பு வாகனங்கள் இல்லை.

_105059310_img_0231.jpg

அதற்கு பிறகுதான் தீயணைப்பு வாகனங்கள் வந்தன. அன்று மட்டும் தீயணைப்பு வாகனங்கள் இருந்திருந்தால், பல பதிப்பகத்தார்கள் அன்றைய நஷ்டத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். ''பெரிய, பெரிய தவறுகளை செய்த பிறகுதான், சிறிய, சிறிய உண்மைகள் வாழ்கையில் தெரிய வருகின்றன'' என்ற பாரதி யின் வரிகள் தான் எனக்கு அப்போதும், இப்போதும் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது.

1984 ம் ஆண்டு முதல் சென்னை புத்தக கண்காட்சிக்கு நான் போய்க் கொண்டிருக்கிறேன். கண்காட்சியின் வளர்ச்சியை கடந்த 34 ஆண்டுகாலமாக அங்குலம், அங்குலமாக நான் பார்த்து வருகிறேன். 1988 ம் ஆண்டு பத்திரிகையாளனாக மாறிய பின்னர், இந்த புத்தக கண்காட்சியின் பல புதிய பரிமாணங்கள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. ஒரு புத்தகம் எப்படி தயாராகிறது, அதனது அடக்க விலை, விற்பனை விலை, எழுத்தாளருக்கு கொடுக்கப்படும் ராயல்டி என்று பல விஷயங்கள் எனக்கு தெரிய வந்தன.

கடந்த 34 ஆண்டுகளிலும் ஒவ்வோர் முறையும் புத்தக கண்காட்சிக்கு குறைந்தது நான்கு முறையாவது போய் வந்ததில் பல புதிய நண்பர்களை பெற்றிருக்கிறேன். அவர்களது தொடர்பால், வாழ்க்கையின் பல புதிய விஷயங்களை கற்றிருக்கிறேன். கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவு என்பதை ஆண்டுதோறும் அறிந்து கொள்ள இந்த புத்தக கண்காட்சியும், அதில் கிடைக்கும் புதிய மனித உறவுகளும் எனக்கு உதவிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழ் பதிப்பாளர்களை பற்றிப் பேசும் போது தமிழகத்தின் நூலகங்களை பற்றி பேசாமல் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவின் நூலக இயக்கங்களில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தமிழக அரசு சாமானிய மனிதர்களிடம் இருந்தும் ஆண்டுதோறும் வசூலிக்கும் வரியில் நூலக வரி என்ற ஒன்றும் இருக்கிறது.

வசூலிக்கும் வரிக்கு ஏற்ப தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்குகிறதா என்று கேட்டால் அது வேறு விவகாரம். ஆனால் கணிசமான அளவுக்கு 2011 ம் ஆண்டு வரையில் தமிழ் பதிப்பகத்தாரிடம் இருந்து புத்தகங்கள் நூலகங்களுக்கு வாங்கப் பட்டிருக்கின்றன. 2011 லிருந்து இதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த எட்டாண்டுகளாக இந்த தொய்வு தொடருகிறது.

நடுவில் இரண்டாண்டுகள் ஓரளவுக்கு புத்தகங்கள் வாங்கப் பட்டன. ஆனால் பின்னர் நிலைமை மீண்டும் 2011 ம் ஆண்டு காலகட்டத்திற்கே சென்று விட்டது. இன்று சிறு மற்றும் நடுத்தர தமிழ் பதிப்பகத்தாரின் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இது இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை விரைவில் களையப்படுவது தமிழ்ப் பதிப்புலகை மட்டுமல்ல, தமிழகத்தின் அரசு நூலகங்களையும் வலுப்படுத்தும்.

இனி அடுத்து என்ன என்பதுதான் நாம் முக்கியமாக யோசிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது என்றே கருதுகிறேன். சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக பதிப்பாளரும், BAPASI யின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவருமான ஜி.ஒளிவண்ண்னிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

_105059314_img_0226.jpg

 

அவர் சில ஆச்சரியமான விஷயங்களை சொன்னார். அதில் முக்கியமானது தமிழ் புத்தகங்களுக்கு சர்வதேச அளவில் விரிவடைய காத்திருக்கும் சந்தை. அவருடைய மொழியிலேயே இங்கே அதனை சொல்லுவது பொருத்தம் என நினைக்கிறேன். ''ஜெர்மனியின் ஃப்ராங்ஃபட் நகரில் நடைபெற்ற 2016 புத்தக கண்காட்சி மற்றும் 2017 ல் லண்டனில் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளுக்கு போயிருந்தேன். இரண்டிலும் உலகின் பல நாடுகளிலிருந்தும், பல மொழி பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த 'பதிப்புரிமை பொறுப்பாளர்களிடம் (Rights Agents) பேசிக் கொண்டிருந்தேன். ரைட்ஸ் ஏஜெண்ட்ஸ் எனப்படும் உரிமை முகவர்கள் யாரென்றால், பெரும்பாலான வெளிநாடுகளில் ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தை விற்பனை செய்ய நேரடியாக பதிப்பகத்தாரிடம் போக மாட்டார்.

இந்த உரிமை முகவர்கள்தான் சரியான, பொருத்தமான பதிப்பகத்தாரிடம் எழுத்தாளரளின் படைப்புகளை கொண்டு போய் பதிப்பிக்கச் செய்வார்கள். இந்தியாவில் இதுவரையில் அந்த நிலைமை இல்லை. நேரடியாகவேதான் ஒவ்வோர் எழுத்தாளரும் பதிப்பகத்தாரிடம் தொடர்பில் இருக்கிறார். உரிமை முகவர் என்னிடம் ஆர்வமாக கேட்டது பெண்ணியம் சம்மந்தப்பட்ட நாவல்கள், வரலாறு, இடங்கள், இந்திய கலாச்சாரம் (இதில் இந்தியாவில் உள்ள வெவ்வேறு கலாச்சாரங்களும் அடங்கும்), வரலாறு, கட்டடக்கலை சம்பந்தமான நூல்கள் தமிழில் இருக்கின்றனவா என்பதுதான். மேலே குறிப்பிட்ட விஷயங்களில் பல நாடுகளில், குறிப்பாக, மேலை உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று அப்போது நான் புரிந்து கொண்டேன்'' என்று கூறினார்.

_105051852_chennaibook3.jpg

தொடர்ந்து வேறு சில முக்கியமான விஷயங்களையும் அவர் சொன்னார்; ''தமிழ் பதிப்புலகம் இந்த சந்தையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் அதற்கு அவர்கள் முதலில் செய்ய வேண்டியது தாங்கள் பதிப்பிக்கும் முக்கியமான புத்தகங்களின் ஆங்கிலப் பதிப்பை உடனடியாக் கொண்டு வர வேண்டும்.

ஏனெனில் அப்போதுதான் உரிமை முகவர்கள் அதனது விற்பனை வல்லமையை உணர்ந்து சர்வதேச அளவில் உள்ள பதிப்பகத்தாரிடம் கொண்டு போவார்கள். பிறகு ஆங்கிலத்திலிருந்து இந்த புத்தகங்கள் உலகின் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்படும். இன்று தமிழகத்தின் சில பதிப்பகத்தாரிடமும், எழுத்தாளர்களிடமும் இந்த செய்தியை சொல்லி, அவர்களை தங்களது புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்பை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வருமாறு உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறேன்'' என்றும் கூறினார்.

''Authorz" என்ற பெயரில் இதற்கான ஒரு செயலி (app) யை ஒளிவண்ணனும அவரது சில நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது விரைவில் செயற்பாட்டுக்கு வரவிருக்கிறது. ஒரு பதிப்பக உரிமையாளர் தன்னுடைய ஒரு புத்தகத்தை சர்வதேச சந்தைக்கு கொண்டு போக விரும்பினால், இந்த செயலியில் தன்னுடைய புத்தகத்தை, தமிழிலேயே ஏற்றம் (upload) செய்து விடலாம். துருவக் கண்ணாடி கொண்டு சதா சர்வ காலமும் உலகின் பல மொழி புதிய புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கும் உரிமை முகவர்கள் இதனை, அவர்களுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் கூட, கண்டு பிடித்து விடுகிறார்கள்.

அதற்கான பல மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள். குறிப்பிட்ட புத்தகம் சர்வதேச விற்பனை சந்தையில் விலை போகும் என்று அவர்கள் உணர்ந்து விட்டால், உடனடியாக சம்மந்தப்பட்ட தமிழ்ப் பதிப்பாளரை நாடி வேற்று மொழி பதிப்புக்கான ஒப்பந்தங்களை போட்டு விடுகிறார்கள். இது தமிழ் பதிப்பகத்தாருக்கு கிடைக்க இருக்கும் பெரு வாய்ப்பாகவே விவரம் அறிந்தவர்களால் தற்போது பார்க்கப் படுகிறது. இதனை எந்தளவுக்கு தமிழ்ப் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனை தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் பட்சத்தில் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றே தற்போதைக்கு தெரிகிறது.

''தொழில் நுட்ப வளர்ச்சி என்ற சுனாமி தமிழ் பதிப்புலகை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது. தங்களை எந்தளவுக்கு இத்தகைய தொழில் நுட்பங்களுக்கு தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளுகிறதோ அதற்கேற்பவே அவர்களது இருப்பு இந்த துறையில் உறுதி செய்யப் படும். அதற்காகத்தான் என்னுடைய பதிப்பக நண்பர்களிடம் பேசும் போதெல்லாம், ''சர்வதேச அளவில் சிந்தியுங்கள்'' என்று நான் சொல்லி வருகிறேன்'' என்கிறார் ஒளிவண்ணன்.

''Authorz" என்ற பெயரில் இதற்கான ஒரு செயலி வந்தாலும், உடனுக்குடன் ஆங்கில மொழி பெயர்ப்புகளை, குறைந்தபட்சம் முக்கியமான புத்தகங்களையாவது, ஆங்கிலத்தில் கொண்டு வருவது, தமிழ் பதிப்பாளர்களுக்கு பெரும் நன்மை பயக்கும் தன்மை கொண்டதாகவே பார்க்கப் படுகிறது. ஆகவே இந்த இரண்டுக்கும், அதாவது ''Authorz" என்ற செயலிக்கும், ஆங்கில மொழி பெயர்ப்புக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்றே புரிந்து கொள்ளலாம்.

_105059312_img_0216.jpg

இதனை செய்ய தமிழ் பதிப்புலகம் தவறினால் வரக் காத்திருக்கும் ஆபத்து, வெளி நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள் நேரடியாகவே எழுத்தாளர்களிடம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் மொழியில் இந்த புத்தகங்களை மொழி பெயர்த்து பதிப்பித்து விடுவார்கள். இது எங்கே போய் முடியும் என்பதை அறிய தமிழ் பதிப்பாளர்கள் விஞ்ஞானிகளாய் இருக்க வேண்டிய அவசியமில்லைதான்.

இவற்றையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில், அதாவது புத்தகங்களின் மேன்மையை உரக்க சொல்லும் இந்த சமயத்தில் புத்தகங்களை பற்றிய வேறு சில கருத்துக்களையும் பதிவிடாமல் இருக்க முடியவில்லை. புத்தகங்களின் மேன்மையை பற்றி ஒருவர் தொடர்ந்து பேசும் போது ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி இப்படி சொன்னாராம், ''புத்தகம் என்பது கடந்த காலத்தின் கரிய நிழல். மனிதனே அதனினும் மகத்தானவன்''. இதனது பொருளாக கார்க்கி சொல்லுவது, நீங்கள் பல புத்தகங்களை படித்து அறிவதை விட, ஒரு மனிதனை ஆழமாக பார்ப்பதன் மூலம் அறிவது அதிகம் என்பதுதான்.

இதனை ஜவஹர்லால் நேரு தன்னுடைய சுயசரிதையில் இப்படி சொல்லுவார்; ''புத்தகங்களை படிப்பது நல்லதுதான். ஆனால் புத்தகங்களை படிப்பது என்பது அதனளவிலேயே அதாவது வெறுமனே படிப்பது என்பதில் மட்டுமே பெருமைப்பட ஏதுமில்லை. இரண்டாவதாக நீங்கள் எவ்வளவு புத்தகங்களை படித்தீர்கள் என்பது அல்ல முக்கியம். எத்தகைய தரமான புத்தகங்களை படித்தீர்கள் என்பதுதான் முக்கியம். 17ம் நூற்றாண்டின் டட்ச் மொழி தத்துவஞானி பரூச் ஸ்பினோசா (Baruch Spinoza) தன்னுடைய நூலகத்தில் வெறும் 60 புத்தகங்களைத்தான் வைத்திருந்தார்'' என்றார் நேரு.

எவ்வளவு புத்தகங்களை படித்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம், வாழ்கிறோம் என்பதுதானே முக்கியம் … அந்த விதத்தில், இந்த எளிய உண்மையை உணர்த்திய மக்சிம் கார்கிக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் நன்றி.

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் )

https://www.bbc.com/tamil/india-46752333

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு போல் .

 

17 minutes ago, போல் said:

நீங்கள் எவ்வளவு புத்தகங்களை படித்தீர்கள் என்பது அல்ல முக்கியம். எத்தகைய தரமான புத்தகங்களை படித்தீர்கள் என்பதுதான் முக்கியம்

இதுதான் முக்கியம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.