Jump to content

ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 10% சரிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 10% சரிவு

ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு ஒரே நாளில் 10% சரிவுAFP

சீனாவில் ஆப்பிள் அலைபேசிகளின் விற்பனை குறைந்ததே நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சிக்கு காரணமென்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்ததையடுத்து வியாழக்கிழமை அன்று ஆப்பிளின் பங்குகள் சுமார் 10 சவீத வீழ்ச்சியை கண்டுள்ளன. 

கடந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஆப்பிளின் வருவாய் 86 பில்லியன் டாலர்களாக இருக்குமென்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஐந்து பில்லியன் டாலர்கள் குறைவான வருவாய் கிடைத்துள்ளதாக கடந்த புதன்கிழமையன்று அந்நிறுவனத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, சீன சந்தைகளை அதிகளவு சார்ந்து செயல்படும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பர்பெர்ரி, எல்விஎம்எச், ஹெர்மஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பும் வீழ்ச்சியை கண்டன. 

மற்ற நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களை போன்று ஆப்பிள் நிறுவனத்துக்கும் வருடத்தின் இறுதிப்பகுதியில் வரும் விழாக்கால விற்பனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆப்பிளுக்கு கிடைத்துள்ள வருவாய் அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலாண்டில் கிடைத்துள்ள வருவாயை விட ஐந்து சதவீதம் குறைவாகும். 

அதுமட்டுமின்றி, கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்யும் முதல் காலாண்டு வருவாய் வீழ்ச்சி இதுவாகும்.

இந்த வீழ்ச்சிக்கு முன்னர்வரை அமெரிக்காவின் மிகப் பெரிய தனிப்பெரும் நிறுவனமாக விளங்கிய ஆப்பிளின் மதிப்பு தற்போது மைக்ரோசாப்ட், அமேசான், கூகுளின் தாயக நிறுவனமான ஆல்பாபெட் ஆகியவற்றைவிட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சொன்னார் டிம் குக்?

ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் நிலவரம் குறித்து அதன் முதலீட்டாளர்களுக்கு கடந்த புதன்கிழமையன்று டிம் குக் எழுதிய கடிதத்தில், சீனாவில் குறிப்பாக ஹாங்காங், தைவான் பிராந்தியத்தில் ஏற்பட்ட விற்பனை குறைவே அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் இழப்பில் முக்கிய இடத்தை வகிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

டிம் குக்Getty Images டிம் குக்

"வளர்ந்து வரும் சந்தைகளில் எங்களுக்கு முன்னுள்ள சவால்கள் குறித்து நாங்கள் முன்னரே கணித்திருந்தாலும், சீனாவின் இந்த குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து நாங்கள் முன்னறிந்திருக்கவில்லை" என்று டிம் குக் தெரிவித்திருந்தார்.

அதேவேளையில், வளர்ந்த சந்தைகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்த எண்ணிக்கையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலைபேசியை வாங்கியதாக டிம் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, அதிக விலை உள்ளிட்ட காரணங்களினால் ஆப்பிள் ஐபோன்களின் புதிய பதிப்புகள் பயன்பாட்டாளர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பை பெறாததால் அதன் தயாரிப்பு குறைக்கப்பட்டதாக கவலைகள் எழுந்தன. 

 

 

https://www.bbc.com/tamil/business-46756149

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.