Jump to content

முல்லைத்தீவு எனும் போராட்ட பூமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு எனும் போராட்ட பூமி

Editorial / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 04:11

image_8aeb272963.jpg

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இலங்கையின் வடக்குப் பகுதி, பல்வேறு விடயங்களுக்காகப் பெயர்போனது. ஒரு காலத்தில், அறிவியலாளர்களைத் தோற்றுவித்த பகுதியாகவும், தமிழர் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னின்ற பகுதியாகவும், வடக்குக் காணப்பட்டது. ஆனால், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த அவலங்கள், அதன் பின்னரான பொருளாதாரப் பிரச்சினைகள், நுண்கடன் பிரச்சினைகள், கடும் வரட்சி என, அவல பூமியாக வடக்கு மாறியிருப்பதாகவே தெரிகிறது. இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவில்லை என்பதைப் போலத் தான், வடக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் அமைந்திருக்கிறது.

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைப் பிரதானமாகவும், யாழ்ப்பாணத்தின் மருதங்கேணியையும், மன்னாரில் சில பகுதிகளையும் பாதித்த வெள்ளப்பெருக்கு, மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கடந்த டிசெம்பர் 21ஆம் திகதி ஆரம்பித்த திடீர் வெள்ளம் காரணமாக, கிட்டத்தட்ட 40,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 125,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தமிழ் மிரர், டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், விமானப்படை ஆகியவற்றுடன் இணைந்து, உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன், மருத்துவ முகாம்களை, கடந்த வாரத்தில் நடத்தியிருந்தன. மக்களின் அவசர தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாம்கள், முல்லைத்தீவின் சில பகுதிகளில், மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியிருந்தன. அதன்போது கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் மூலமாகவும் அப்பகுதி மக்களுடனான உரையாடல்களின் மூலமாகவும் கிடைக்கப்பெற்ற தகவல்கள், வடக்கின் அவல நிலையை வெளிக்காட்டுவனவாக அமைந்திருந்தன.

ஒழுங்குசெய்யப்பட்ட மருத்துவ முகாமும் ஏனைய உதவி வழங்கலும், முல்லைத்தீவு மாவட்டத்தையே மய்யப்படுத்தியிருந்த நிலையில், இக்கட்டுரை, முல்லைத்தீவை மாத்திரம் பிரதானமாகக் கொள்கிறது. ஆனால், கிளிநொச்சி மாவட்டத்திலும், இதே மாதிரியான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்த வெள்ளப்பெருக்கு மோசமாக அமைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக (இல்லாவிடின், சிறந்த முன்னாயத்தங்களின் காரணமாக அல்லது மக்களின் தயார்நிலை காரணமாக), பெருமளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால், உயிரிழப்புகள் பெரிதளவில் ஏற்படவில்லை என்பது மாத்திரம், மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டியதா என்பது, இன்னொரு கேள்வியாக இருக்கிறது. பல இடங்களில், மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன; பயிர்ச்செய்கை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து, பயிர்ச்செய்கைகள் முற்றிலும் அழிந்த பகுதிகள் உள்ளன; கால்நடைகளுக்கும் ஏராளமான அழிவுகள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் ஏற்பட்ட அழிவுகள், எதிர்பார்க்கப்பட முடியாத அளவில் உள்ளன. அவற்றிலிருந்து மீள்வது, எப்படிச் சாத்தியமென்ற கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளன.

இருபத்து ஓராம் (21) திகதி இரவிலிருந்து, சுமார் 4 தொடக்கம் 5 மணித்தியாலங்களில் பெய்த மழை, யாருமே எதிர்பார்க்கப்படாத அளவில் காணப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தரவுகளின்படி, முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஆண்டுக்கான சராசரி மழைவீழ்ச்சி, சுமார் 1,500 மில்லிமீற்றர் ஆகும். ஆனால், டிசெம்பர் 21ஆம் திகதி பின்னிரவு ஆரம்பித்து, வெறுமனே 4 அல்லது 5 மணித்தியாலங்களில், சுமார் 301 மில்லிமீற்றர் மழை பெய்திருந்தது என, முல்லைத்தீவின் நீர்ப்பாசனத் திணைக்களத்தைச் சேர்ந்த உயரதிகாரியொருவர் தெரிவித்தார். அதாவது, அம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெறப்படும் சராசரி மழைவீழ்ச்சியில் 20 சதவீதத்துக்கும் (கால்வாசி) அதிகமான மழைவீழ்ச்சி, வெறுமனே 4, 5 மணித்தியாலங்களில் கிடைத்திருந்தது. இதனால் தான், தங்களால் எதையும் செய்ய முடிந்திருக்கவில்லை என, அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

சில பிரதேசங்களில், 6 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் ஏற்பட்டது என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஓரளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காணப்பட்டதால், பாரிய அழிவுகளைச் சந்திக்காத போதிலும், இரவு நேரத்தில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது பெய்த கடும் மழை காரணமாக, பலரின் சொத்துகளுக்கு, ஏற்கெனவே சேதம் ஏற்பட்டிருந்தது.

image_8dd4c457b9.jpgமுல்லைத்தீவின் முத்துஐயன்கட்டுப் பகுதியில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக ஆராயச் சென்றபோது, அப்பகுதியின் விவசாயிகள் சங்கத் தலைவர் மார்க்கண்டு யோகராசா தெரிவித்த கருத்துகள், அம்மாவட்டத்திலும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட அழிவின் வீரியத்தைக் காட்டுகின்றன. “இரவு தான் தண்ணி வந்தது. ஒரு குறிப்பிட்ட 4, 5 மணித்தியாலத்துக்குள்ள தான் அந்தத் தண்ணி வந்தது. அது பெரிய அழிவக் கொண்டு வந்திட்டு. ஏனென்டால், எல்லா இடத்திலயும் தேக்கமான நிலைமை வந்திற்று” என்கிறார் அவர்.

முத்துஐயன்கட்டுப் பகுதி, மிகச்சிறிய பகுதி தான். ஆனால், அப்பகுதியில் வாழுகின்ற சுமார் 2,000 விவசாயிகளுக்கு, இந்த மண்ணும் இந்த விவசாயமும் தான் உயிர். நெல், நிலக்கடலை, உழுந்து என்பன, இப்பகுதியில் அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுப் பயிரிடப்படும் பயிர்களாக உள்ளன.

யோகராசாவின் கருத்தின்படி, முத்துஐயன்கட்டுப் பகுதியின் 75 சதவீதமான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளன. ஒரு பகுதியின் 75 சதவீதமான நெற்பயிர்ச்செய்கைகள் அழிவடைவதென்பது, சாதாரணமானது கிடையாது. அதிலும், விவசாயிகள் சங்கத் தலைவராக இருக்கும் போது, இதன் அழுத்தங்கள் அதிகமாகவே இருக்கும். ஆனால், பயிர்ச்செய்கைகளின் அழிவுகள் பற்றிய கவலைகளை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவது தொடர்பில் ஏற்பாடு செய்பவராக, யோகராசா முன்னின்று செயற்படுகிறார். கிட்டத்தட்ட, அப்பகுதியின் கிராமத் தலைவர் போலச் செயற்படும் அவர், பொறுப்புடனே கருத்துகளை வெளியிடுகிறார்.

image_d7aa06e09e.jpg

குறிப்பாக, ஒட்டுசுட்டான் பகுதி மக்களைச் சந்தித்தபோது, அப்பகுதி மக்களின் குறிப்பிட்ட ஒரு பிரிவினர், “மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட, குளங்களிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வந்த பாதிப்புகளே அதிகம்” என்ற கருத்தைத் திரும்பத் திரும்ப முன்வைத்திருந்தனர். ஆனால் யோகராசாவோ, அக்குற்றச்சாட்டை முன்வைக்கத் தயங்குகிறார். விவசாயிகளாக இருக்கும் போது, குளமென்பது தங்களுக்கு அவசியமானது எனத் தெரிவிக்கும் அவர், குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுத் தண்ணீர் வெளியேற்றப்பட்டதை மிகப்பெரிய பிரச்சினையாக முன்வைக்க மறுக்கிறார். மாறாக, குளங்களை ஆழப்படுத்தவும் அவற்றின் அணைகளை மேலும் பலப்படுத்தவும் வேண்டுமென, அவர் கோருகிறார். அவருடைய பிரதான கோரிக்கையாகவும் கவனமாகவும், தட்டையன்மலைக் குளம் தான் காணப்படுகிறது.

“தட்டையன்மலைக் குளம், ஒரு சிறு குளம். அதுக்கு, பாதுகாப்பான அணைக்கட்டில்ல. சிறிய அணைக்கட்டு [தான் உள்ளது]. 14 அடி கொள்ளளவு. அந்தக் கட்டைப் பலப்படுத்திறதோட, குளத்தை ஆழப்படுத்திறது முக்கியம். இரண்டையும் செய்தா, அனர்த்தம் கொஞ்சம் குறைவா இருக்கும்” என்று அவர் தெரிவிக்கிறார்.

குளங்களின் பராமரிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகள், சமூக ஊடக வலையமைப்புகளிலும் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தன. முன்வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளாக, வான்கதவுகள் எதற்காகத் திடீரெனத் திறந்துவைக்கப்பட்டன, கடைசி நேரம் வரை எதற்காகக் காத்திருந்தார்கள், பொதுமக்களுக்குப் போதிய எச்சரிக்கைகள் வழங்கப்படவில்லை, வானிலையைக் கணிக்கத் தவறிவிட்டார்கள் ஆகியன காணப்படுகின்றன. ஆனால், நீர்ப்பாசனத் திணைக்களத்தோடு சம்பந்தப்பட்ட தரப்புகளும் ஏனைய செயற்பாட்டாளர்களும், இக்குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள். களத்திலுள்ள வேறு சிலரோடு உரையாடிய சந்தர்ப்பங்களிலும், குளப் பராமரிப்புத் தொடர்பில் ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை.

டிசெம்பர் மாதமென்பது, வடக்கின் பெரும்பாலான பகுதிகளுக்கு, மாரி காலமாகும். எனவே, இரணைமடு, முத்துஐயன்கட்டு உள்ளிட்ட ஏராளமான குளங்களின் நீரை, மழைக்காலத்துக்கு ஏற்றவாறு முகாமை செய்திருக்க வேண்டுமென்பது, இவ்விமர்சனங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட ஒரு விமர்சனமாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, வரட்சி நிலையே அப்பகுதிகளில் காணப்பட்ட நிலையில், இவ்வளவு அதிகமான மழையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுவும், மழை பெய்யாத காலங்களில், குளங்களில் இருக்கும் தண்ணீரைப் பயனின்றி வெளியேற்றினால், பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீர் போதாமல் போகுமென்பதும், நியாயமான கருத்துகளாகும். முல்லைத்தீவில் கலந்துரையாடிய விவசாயப் பிரதிநிதிகளும், இக்கருத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

image_0598757b8d.jpgமக்கள் சந்தித்த பிரச்சினைகள் தொடர்பாக, முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழாசிரியரும் இந்த வெள்ள அனர்த்தங்களில் மீட்புப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவருமான வே.முல்லைத்தீபனைச் சந்தித்து உரையாடக் கிடைத்தது. மக்களோடு இணைந்து பணியாற்றும் அவர், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விவரித்தபோது, “இரவிரவா மழை பெய்தது. ஒரு மணி, 2 மணிக்குப் பிறகு பெய்ய வெளிக்கிட்டது. சனம் விடிய எழும்பிப் பார்த்தால், வீடு முழுக்கத் தண்ணி. வீட்டச் சுத்தியெல்லாம் தண்ணி” என்றார்.

காலையில் எழுந்த மக்களை, இராணுவத்தினரின் துணையோடு, படகுகளிலேயே மீட்கக்கூடியதாக அமைந்தது எனத் தெரிவித்த அவர், நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் காணப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு அவர்களை மீட்டிருக்காவிட்டால், மாபெரும் அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என, நிம்மதியுடன் கூறுகிறார்.

இந்த அனர்த்தங்களுக்கான தீர்வு, இதைப் போன்ற அனர்த்தங்களைத் தடுப்பது எவ்வாறென்று கேட்டால், யாரிடமும் தெளிவான பதிலில்லை. இயற்கை, தனது கோரத்தைக் காட்டியதன் விளைவாக ஏற்பட்ட அனர்த்தம் என்பதை, மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்; அதிகாரிகளும் அக்காரணத்தையே முன்வைக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதையும் பாதித்துவரும் காலநிலை மாற்றம், இலங்கையில் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், இதே நிலையைத் தொடர்ந்து நீடிக்க விடுவதும் சரியானதல்ல. எனவே, இப்பிரச்சினைக்கான தீர்வுகளையும் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இது தொடர்பாக, யோகராசா முன்வைத்த கோரிக்கைகள் முக்கியமானவை. குளங்களின் அணைக்கட்டுகளைப் பலப்படுத்துவது, குளங்களை ஆழப்படுத்துவது என்பதோடு, எச்சரிக்கைக்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டுமென அவர் கோருகிறார். கடும் மழை, கடும் காற்று என, மோசமான வானிலை ஏற்படும் போது, அப்பகுதி மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, எச்சரிக்கை வழங்குவதற்காக, அப்படியான கட்டமைப்பு அவசியமென அவர் கோருகிறார். அதேபோல், இடி, மின்னல் போன்றவற்றின் தாக்கங்கள், தங்கள் பகுதிகளில் அடிக்கடி ஏற்படுவதாகத் தெரிவிக்கும் அவர், அதற்கான தீர்வொன்றையும் கோருகிறார். அவருடைய கோரிக்கைகள், அவரால் மாத்திரமன்றி, உரையாட வாய்ப்புக் கிடைத்த ஏனைய விவசாயிகளில் பலரின் கருத்தாகவும் இருக்கிறது.

இப்பத்திரிகையோடு உரையாடிய நீர்வழங்கல் திணைக்கள உயரதிகாரி தெரிவித்த கருத்தோடு, இவ்விவசாயிகளின் கருத்தும் ஒத்துப் போகிறது. நள்ளிரவுக்குப் பின்னர் பெய்த கடும் மழை காரணமாக, குளங்களில் நீர் நிரம்பிய போதிலும், வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன என்பதை மக்களுக்கு அறிவித்து, அதன் பின்னர் வான் கதவுகள், படிப்படியாக கிட்டத்தட்ட நண்பகல் வேளை முதலே திறக்கப்பட்டன என அவர் கூறியிருந்தார். எனவே, எச்சரிக்கைக் கட்டமைப்பொன்று காணப்படுமாயின், இந்தத் தாமதத்தைக் குறைக்க முடியுமாக இருக்கும். தாமதத்தைக் குறைப்பதால், அனர்த்தங்களை முழுமையாக இல்லாது செய்ய முடியாது போகிலும், பாதிப்பின் அளவைக் குறைக்க முடியுமென்பது தெளிவு. எனவே, இவ்விடயத்தில் கவனஞ்செலுத்துவது பொருத்தமாக இருக்கும்.

image_c4d6445eeb.jpg

அதேபோல், திட்டமிட்ட அபிவிருத்திகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென, அப்பகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளரொருவர், தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாமல் கருத்துத் தெரிவித்தார். குறிப்பாக, முல்லைத்தீவின் பல பகுதிகளில், அண்மைக்காலத்தின் வீதி, தண்டவாளம் ஆகியவற்றின் புனரமைப்பின் போது, வீதிகளும் தண்டவாளங்களும் மிகவும் உயரமான முறையில் நிர்மாணிக்கப்பட்டமை, நீரின் போக்குவரத்துப் பாதையைப் பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை, அவர் முன்வைத்திருந்தார்.

இவையெல்லாம் இவ்வாறிருக்க, அண்மைய ஆண்டுகளாக, போராட்டமே வாழ்வாகிப் போன முல்லைத்தீவு மக்களுக்கு, இந்த அனர்த்தமும் மிகப்பெரிய போராட்டமாகிப் போனது.

ஆனால், இறுதிக்கட்டப் போர் எனும் மாபெரும் அனர்த்தம், அம்மக்களில் குறிப்பிட்ட சதவீதமானோரைக் கொன்று, அவர்களில் அநேகமானோரின் சொத்துகள் அனைத்தையும் அழித்து, அவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரைப் போரின் வடுக்களைச் சுமக்க வைத்தமைக்கு மத்தியிலும், வெளியிலிருந்து பார்க்கும் போது, போரின் பாதிப்பை அங்கு காண முடியாது. மக்களின் மனங்களுக்குள் இருக்கும் வலிகள், அவர்களைப் புரிந்துகொள்வோரால் மாத்திரமே கண்டுகொள்ளப்படக் கூடியன. இதற்குக் காரணம், வன்னி மக்களின் போராட்டக் குணமும் மீள்திறனும் தான். இத்தனை பாதிப்புகளுக்கு மத்தியில் அம்மக்கள், நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்வதற்கு, அவர்கள் மாத்திரமே காரணமானவர்கள்.

எனவே தான், வெள்ளத்தின் பாதிப்பு ஏற்பட்டவுடன், வடக்கைச் சேர்ந்த இளைஞர்கள் பலரின் உதவிகள், ஏனைய பகுதிகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க உதவிகள், பாதுகாப்புப் படைகளின் ஆரம்பகட்ட உதவிகள் என்று கிடைக்கப்பெற்றாலும், இந்த அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு, வன்னிக்குள் இருந்த மக்கள் தான், பிரதான பங்களிப்பை ஆற்றியிருந்தனர். போரின் அழிவுகள், அவர்களை மேலும் ஒன்றுபடுத்தியிருக்கின்றன; அவர்களை மேலும் உறுதியாக்கியிருக்கின்றன; போராட்டத்தின் பலத்தை உலகுக்கே காட்டிய மண்ணில், போராட்டத் திறனை அதிகரித்திருக்கின்றன. எனவே, அழிவுகள் ஒரு பக்கமாகவிருக்க, மக்களின் போராட்டத் திறன் மாத்திரம் இன்னமும் மங்கிவிடவில்லை என்பதை, இந்த அனர்த்தம் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.

(இவ்விஜயத்தின் போது, மருத்துவ முகாமில் பெறப்பட்ட தகவல்கள், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் மருத்துவச் சிக்கல்கள், வெள்ளத்தைத் தாண்டி அவர்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகள், இன்னும் பல விடயங்கள், அடுத்த வாரம் (09) வெளியாகும் கட்டுரையில் இடம்பெறும்)

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முல்லைத்தீவு-எனும்-போராட்ட-பூமி/91-227374

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.