Jump to content

ஒருவரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரை சில மணிநேரம் ஏமாற்றலாம்


Recommended Posts

 

Image may contain: one or more people and people standing
 
 

ஒருவரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரை சில மணிநேரம் ஏமாற்றலாம் ஆனால் தமிழனை பல தசாப்தங்கள் ஏமாற்றும் ஒரே கட்சி தமிழரசுக்கட்சியே.

புரட்சி வெடிக்கும் என்பார்கள் அவர்களால் பலூன் கூட வெடிக்காது.

மீண்டும் வன்முறை தலைதூக்கும் என்பார்
அலரி மாளிகைக்கு அழைத்து சோமபாணம் வழங்கி கௌரவித்தால் தூக்கின தலையை தாழ்த்தி பவ்வியமாக நடந்து கொள்வார்கள்.

இரு பெரும்பாண்மை கட்சிகள் இனைந்திருப்பது வரலாற்றின் அருமையான திருப்பம் ஆதரிக்கவேண்டும் என்பார் இதுவே நல்லாட்சி என்பார். செப்பிய அந்த வாயே மறுபடி நல்லாட்சி மோசம் என்பார்.

சர்வதேசத்தின் ஆலோசனைபடி செயல்படுகிறம் என்பார். அவர்கள் கைவிடும் போது நமது பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பார்.

சட்டத்தரணிகளை சாமத்தியசாலிகள் என நினைத்து தமிழ் மக்கள் இன்று வரை பாராளுமன்றம் என்ற நீதிபதி அரங்குக்குள் காலகாலமாக பாமரன் முதல் படித்தவன் வரை வாக்களித்து அனுப்பிகொண்டுதான் இருக்கிறான். எழுபது வருடத்துக்கு மேல் ஏமாந்த வரலாறே தொடர்கிறது.

இதிலிருந்து தெரிவது என்ன பாராளுமன்றம் எமது பிரச்சனையை தீர்க்கும் நீதிமன்றம் கிடையாது. வாதாட அனுப்புவர்களும் எமக்காக செயல்படமுடிவதில்லை ஆனால் ஏதாவது டொபிக்கை வைத்து இரு சாரரும் மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள். கடந்து போன அறுபது வருடத்தில் சில முக்கியமான ஏமாற்றல் நாடகங்கள் சில

(1) டட்லி செல்வா ஒப்பந்தம்

(2) பண்டா செல்வா ஒப்பந்தம்

(3) வட்டமேசை மாநாடு சதிரமேசை மாநாடு

(4) மங்கள முனசிங்க தலைமையிலான ஆணைக்குழு

(5) திஸ்ச விதாரன ஆணைக்குழு

இவை அனைத்தும் கடந்தகாலத்தில் எம்மை ஏமாற்ற மிதவாதிகள் என கூறும் தமிழரசுக் கட்சியினரை ஏமாற்ற பெரும்பாண்மை அரசுகள் விதித்த சதிவலைகள். இவ்வாறான சதிவலைகளில் விடுதலைபுலிகளும் சிக்கினர்.பிற ஆயுதம் தாங்கிய அமைப்புகளும் சிக்கினர் ஆனால் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில்.

விடுதலை புலிகள் தமது இலக்கு தமிழீழம் ஓன்றை தவிர வேறு எதையும் அவர்கள் சிந்திக்கவில்லை. அவர்கள் அவ்வாறு கீழ் இறங்கிவர முடியாத சூழ்நிலையை அவர்களே உருவாக்கி கொண்டனர். முக்கியமாக அவர்களின் கொள்கையை பின்பற்றி தற்கொடை புரிந்த அனைத்து போராளிகளுக்கும் தலைவர் கூறிய வார்த்தை எம் கொள்கையில் நான் சறுக்கினால் நீங்கள் என்னை கொல்லவேண்டும் என்பதே,,,,

அவ்வாறான ஒருவரால் பேச்சுவார்த்தை நடத்தமுடியும் தீர்வு என்ற இலக்கை எய்யமுடியாது. எனவே அவர்கள் தமிழ் மக்களின் முழுமையான விடிவை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் கொண்ட கொள்கையே அவர்களின் முடிவை எழுதிக்கொண்டது.

இலங்கையின் அமைவிடம் இங்கு இரு தேசம் உருவாக ஒருபோதும் உலகம் அனுமதிக்காது. ஆசியாவின் பாதுகாப்பு கேந்திரநிலைக்குள் இலங்கை அடக்கியுள்ளது. பிரியும் நிலை உருவாகுமானால் அது பிராந்திய நாடுகளின் போட்டிச்சூழலே நாம் பிரிந்து செல்ல வழிவகுக்கும். நவீன பொருளாதார சுறண்டல் வர்த்தகம் இதற்கும் இடம் கொடுக்காது.

எனவே மாறிவரும் உலகச்சூழல் சிங்கள மிதவாதிகள் மத்தியில் தொடர் நெருக்கடிகள் வழங்கும் போது ஒருநாள் அவர்கள் மனக்கதவை தட்டும் இந்த பிரச்சனையை ஏதோ வகையில் தீர்த்துக்கொள்ள....! அதுவரைக்கும் எமது உரிமைசார் போராட்டத்தை வலு இழப்பதற்கான எந்த விட்டுக்கொடுப்புக்கும் இணங்கி செயல்படல் ஆகாது.

ஆனால் தற்போது அரசியல் அமைப்பு சபை ஊடாக முன்னேடுக்கும் விடயம் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனுப்பியவர்களே அரசுடன் இனைந்து தமிழர் நலனை புறந்தள்ளி அரசு விரும்பும் தீர்வை பெற்று தமிழர் தலையில் கட்டியடிக்கும் வேலையை நகர்த்துகிறார்கள். அதற்கு ஒத்து ஊதுபவர்களாக முன்னாள் போராட்ட அமைப்புகளின் தலைமைகளும் சேர்ந்து இயங்குவது வியப்பை தருகிறது.

தமிழர் தீர்வு விடயத்தில் விடுதலை புலிகளோ இதர ஆயுத போராட்ட அமைப்போ என்றைக்கும் மக்களை ஏமாற்றியது 
கிடையாது. விடுதலை சம்பந்தமாக அதை அடைவது சம்மந்தமான காரணிகளே இவர்கள் பிரிந்து தமக்குள் மோதிக்கொண்டனர். ஆனால் இவர்கள் யாவரும் தமது மக்களின் விடுதலை நோக்கியே பயணித்தனர்.

ஆனால் மெத்த படித்த மேதாவிகள் என்றுமே விடுதலை நாமத்தை உச்சரித்து உசுப்பேத்தி சுக போகங்களை அனுபவிப்பதற்கே தமது பதவியை பாவித்துள்ளனர். இவர்களுக்கும் புரட்சிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும். எனவே இனியும் நாம் ஏமாறாமல் இருப்பதற்கு போலிகளை இனங்காண்பது மிகவும் அவசியமாகிறது.

இங்கு நாம் ஒரு தீர்வை அடைவதானால் ஆளும் அரசுகளுடன் ஒட்டி உறவாடி பெறமுடியாது. வெளிநெருக்கடிகளோடு உள்ளிருந்து கொடுக்கப்படும் அழுத்தமும் அதிகரிக்கும் போது நிற்சயம் ஆளும் வர்க்கத்தை கணிசமான தீர்வை வழங்கி எம்முடன் சமரசமாக வழியேற்படும்.

இதற்கு தற்போது இருக்கும் தலைமைகளுக்கு விடை கொடுப்பது அவசியமாகும். தமிழ் மக்களின் தலைவிதியை ஒர் இருவரின் முடிவுகளுக்கு ஏற்ப முன்னேடுப்பது மிகத்தவறான பிரதிபலனையே கிடைக்க வழிகோலும்.

எனவே புதிய மாற்றத்துக்கான தேடலே எமது இலக்கை இலகுவாக்கும்.

அன்புடன் ஸ்ரீரங்கன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.