Jump to content

எரித்திரியா தேசிய விடுதலை


Recommended Posts

எரித்திரியா தேசிய விடுதலை

 
ethiopia1ethiopia
 
ஆப்பிரிக்க கண்டத்தில், எந்தவொரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. 1896 ம் ஆண்டு, காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், எத்தியோப்பியப் படைகளிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை ஏந்தியிருந்த இத்தாலி இராணுவம், வாள், அம்பு-வில், போன்ற புராதன கருவிகளேந்தி போரிட்ட எத்தியோப்பியர்களிடம் தோல்வியுற்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்த சரித்திர உண்மையை நம்பித் தான் ஆக வேண்டும். இப்போதே உங்களால் நம்ப முடியவில்லை என்றால், அன்று இந்த செய்தி ஐரோப்பாவில் எத்தகைய அதிர்வலைகளை தோற்றுவித்திருக்கும்? ஐரோப்பியர்கள் அந்த காலனியப் போருக்குப் பிறகு தான், “எத்தியோப்பியா நாகரீகமடையாத காட்டுவாசிகளின் தலைவனால் ஆளப்படும் கிராமமல்ல.” என்ற உண்மையை புரிந்து கொண்டார்கள். எத்தியோப்பிய சக்கரவர்த்தி “மெனலிக்”, ஐரோப்பிய அரசர்களுக்கு நிகரானவராக மதிக்கப்பட்டார். போருக்குப் பின்னர், இத்தாலி எத்தியோப்பியாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் செங்கடல் ஓரமாக இருக்கும் எரித்திரியாப் பகுதிகளை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டது. இருப்பினும் கடல் எல்லை பறிபோனது, எத்தியோப்பியாவிற்கு இழப்பு தான். இத்தாலிய காலனிய நிர்வாகத்தின் கீழ் இருந்த எரித்திரியா பிற்காலத்தில் நீண்ட தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டது. இது குறித்து பின்னர் பார்ப்போம்.

udc-gas-masks-4

இத்தாலிய தேசியவாதிகளால் எத்தியோப்பிய தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. பழிக்குப்பழி வாங்க வேண்டும் என கறுவிக் கொண்டனர். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர், இத்தாலியில் தேசியவாதிகள், இனவாதிகளின் ஆதரவுடன் பாஸிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சி ஏற்பட்டது. முசோலினி பழிவாங்கும் படை நடவடிக்கையை எடுத்தார். இம்முறை இத்தாலியப் படைகள் எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தன. அந்த வெற்றி எவ்வாறு சாத்தியமாகியது? உலக வரலாற்றில் முதன் முதலாக போரில் விஷ வாயு பிரயோகிக்கப்பட்டது. லட்சக்கணக்கான எத்தியோப்பிய மக்களை விஷ வாயு மூலம் கொன்று குவித்து, அந்தப் பிணங்களின் மீது தான் இத்தாலி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. மேற்குலக நாடுகள் தமது சரித்திர நூல்களில் மறைக்க விரும்பும் அத்தியாயம் அது. இத்தாலியின் ஆக்கிரமிப்பு அதிக காலம் நீடிக்கவில்லை. விரைவில் இரண்டாம் உலகப் போர் மூண்டு, இத்தாலி ஜெர்மனி பக்கம் சேர்ந்ததால் போரில் தோற்க வேண்டியேற்பட்டது. அப்போது வட ஆப்பிரிக்காவில் களமிறங்கிய பிரிட்டிஷ் படைகள், எரித்திரியாவையும், எத்தியோப்பியாவையும் விடுவித்தன. அப்போது ஒரு சுவையான சம்பவம் இடம்பெற்றது. பிரிட்டிஷ் படைகளை வரவேற்க வீதிகளில் எரித்திரிய மக்கள் குழுமியிருந்தனர். வீதியில் வெற்றிப்பவனி வந்த பிரிட்டிஷ் ஜெனரல் ஒருவரிடம், தம்மை விடுதலை செய்ததற்காக ஒரு எரித்திரியப் பெண்மணி நன்றி தெரிவித்தார். அப்போது அந்த ஜெனரல் இவ்வாறு பதிலளித்தார் : “கறுப்பியே! நான் உன்னை விடுதலை செய்வதற்காக இங்கே வரவில்லை!!”
உலகப்போருக்குப் பின்னர் முன்னாள் இத்தாலிய காலனியான எரித்திரியா, மீண்டும் எத்தியோப்பியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐ.நா. சபை எரித்திரியா தனியான நாடாக இருக்க உரிமை உண்டு என கூறியது. அது நடைமுறைச் சாத்தியமாகாததற்கு, பின்னணியில் பிரிட்டிஷ் அழுத்தம் காரணமாக இருந்திருக்கலாம். 50 ஆண்டு கால காலனிய கலாச்சாரம், ஒன்பது மொழிகள் பேசும் எரித்திரிய மக்கள் மத்தியில் பொதுவான தேசியத்தை உருவாக்கியது. அந்த உணர்வாலேயே பிற எத்தியோப்பியர்களிடமிருந்து தாம் சிறந்தவர்களாக கருதிக் கொண்டனர்.உலகில் பல்வேறு தேசிய விடுதலைப் போராட்டங்கள், ஒரு குறிப்பிட்ட இனத்தை, மொழியை, மதத்தை அடிப்படையாக கொண்டு நடப்பது பலருக்கு தெரியும். ஆனால் முன்னாள் காலனிய பிரதேசம் ஒன்றுக்கு சுயநிர்ணய உரிமை, என்று சொல்கிறது ஐ.நா.மன்றம். அது எப்படி? இங்கே தான் “தேசியம் என்றால் என்ன?” என்று மேலைத்தேய நாடுகள் கொடுக்கும் விளக்கங்கள் நமது புரிதலில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, அன்றைய காலனிய நிர்வாகத்திற்குட்பட்ட பிரதேசம் மட்டுமே தேசியமாக அங்கீகரிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஆயிரக்கணக்கான எத்தியோப்பிய, எரித்திரிய அகதிகள் ஒரே மொழி (அம்ஹாரி) பேசுவதை அவதானித்திருக்கிறேன். கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சேர்ந்தவர்கள் இரண்டு பக்கமும் இருந்தனர். இதனால் எரித்திரிய தேசிய விடுதலைப் போராட்டம் எந்த வேறுபாட்டை அடிப்படையாக கொண்டு நடந்தது என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. இறுதியில் எனது நண்பரான, முன்னை நாள் எரித்திரிய விடுதலைப் போராளி ஒருவரிடமிருந்து பல தகவல்கள் கிடைத்தன. தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பத்தில் இஸ்லாமிய Eritrean Liberation Front (ELF) இனால் முன்னெடுக்கப்பட்டது. மொத்த சனத்தொகையில் கணிசமான அளவு (50%) முஸ்லிம்கள் உள்ளனர். இதனால் லிபியா, சூடான் போன்ற நாடுகளும் ஆதரித்தன. ELF இலிருந்து பிரிந்த, Eritrean People’s Liberation Front (EPLF) ஆரம்பத்தில் மார்க்ஸிஸம் பேசினாலும், அது ஒரு தேசியவாத இயக்கமாகவே இருந்தது. அம்ஹாரி, திக்ரின்யா, அரபு, அபார் ஆகிய மொழிகளை பேசும் பல்வேறு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதே மொழிகளைப் பேசும் மக்கள் எத்தியோப்பியாவிலும் வாழ்கிறார்கள். இருப்பினும் திக்ரின்யா மொழி பேசுபவர்கள் சற்று அதிகம் என்பதால், இன்றைய சுதந்திர எரித்திரியாவில் அதுவே ஆட்சி மொழி.
tegadalit

EPLF இயக்கம் அனேகமாக எந்தவொரு நாட்டிடம் இருந்தும் நிதியுதவி பெற்றதாக குறிப்புகள் இல்லை. எத்தியோப்பியாவுடன் பகைமை பாராட்டிய சோமாலியாவும், சூடானும் உதவி செய்த போதிலும், பெருமளவு நிதி புலம்பெயர்ந்த எரித்திரிய மக்களிடம் இருந்தே கிடைத்து வந்தது. கட்டுப்பாட்டுடன் ஒழுங்கமைக்கப்பட்ட கெரில்லாக்கள், அமெரிக்க உதவி பெற்ற எத்தியோப்பிய மன்னரின் இராணுவத்தை தீரத்துடன் எதிர்த்து போராடி வந்தனர். 1974 ம் ஆண்டு, மன்னராட்சி சதிப்புரட்சி மூலம் தூக்கி எறியப்பட்டு, மார்க்ஸிச இராணுவ அதிகாரிகள் ஆட்சியமைத்தனர். அந்த நேரம் பார்த்து, சோமாலியா எத்தியோப்பியா மீது படையெடுத்தது. எத்தியோப்பியாவின் கிழக்குப்பகுதி மாகாணத்தில் சோமாலி மொழி பேசும் மக்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது. படையெடுப்பாளருக்கு அகண்ட சோமாலியா அமைக்கும் நோக்கம் இருந்திருக்கலாம். புதிய அரசு எவ்வளவு கேட்டும், அமெரிக்க உதவி வழங்க மறுத்தால், சோவியத் யூனியனிடம் உதவி கோரியது. அதுவரை சோமாலியா பக்கம் நின்ற சோவியத் யூனியன், பூகோள அரசியல் நலன் கருதி எத்தியோப்பியாவிற்கு உதவ முன்வந்தது. உடனடியாக கியூபா வீரர்கள் தருவிக்கப்பட்டு, சோவியத் ஆயுதங்களை கொண்டு போரிட்டு, சோமாலிய படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.


1974 ம் ஆண்டிலிருந்து, 1991 ம் ஆண்டு வரை எத்தியோப்பியாவை ஆண்ட மென்கிஸ்டு சோவியத் உதவி தாராளமாக  கிடைத்து வந்ததால், சோஷலிச சீர்திருத்தங்களை  முன்னெடுத்து வந்தாலும், அடக்குமுறையும், கொலைகளும் குறையவில்லை. சோவியத் யூனியனும், கியூபாவும் இது குறித்து தமது அதிருப்தியை தெரிவித்து வந்தாலும், மென்கிஸ்டு எல்லாவற்றையும் சோஷலிசத்தின் பெயரில் ஏமாற்றி வந்தார். எத்தியோப்பியாவின் பிற தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அம்ஹாரி தேசிய மொழியாகியது. எத்தியோப்பியாவின் கடைசி சக்கரவர்த்தி ஹைலெ செலாசி காலத்திலேயே, “அம்ஹாரி மொழி மேலாதிக்கம்” ஆரம்பமாகி விட்டது. அரசாங்க உத்தியோகம் பெற விரும்புவோர் அம்ஹாரி மொழி பேச வேண்டும் என்ற சட்டம் வந்தது. ஹைலெ செலாசியும், மென்கிஸ்டுவும் சிறுபான்மை இனங்களின் எதிர்ப்பியக்கத்தை கொடூரமாக அடக்கினார்கள். பட்டினிச் சாவுகள் ஒரு அடக்குமுறை ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது.
ஆப்பிரிக்கா என்றதும் உணவின்றி வாடும் குழந்தைகளும், பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களும் ஞாபகத்திற்கு வருமளவிற்கு, எத்தியோப்பியாவின் பஞ்சக் காட்சிகளை தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும்  ஒளிபரப்பின. இதனால் எத்தியோப்பியா மக்கள் முழுவதும் ஒரு காலத்தில் உணவின்றி பட்டினியால் செத்து மடிந்ததாக உலகம் நினைத்துக்கொண்டது. அந்த எண்ணம் தவறானது. மொத்த சனத்தொகைக்கும் உணவிட முடியாத அளவிற்கு வளமற்ற நாடல்ல அது. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே, குளங்களை வெட்டி, அணைகளை கட்டி, விவசாய பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக எத்தியோப்பியா விளங்கியது. 1973 ம் ஆண்டு, திக்ரின்யா  மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர். நிலைமையை பார்வையிட சென்ற ஊடகவியலாளர்கள், மன்னரின் ஆடம்பர வாழ்க்கைக்கும், எரித்திரியா மீதான போருக்கும் பெருந்தொகை பணம் செலவாவதை கண்டனர். திக்ரின்யா மக்கள் எரித்திரியாவை சேர்ந்த பிரதேசத்திலும்  வாழ்வது குறிப்பிடத்தக்கது. உண்மையில் அந்த சிறுபான்மை மக்களின் போராட்டத்தை முறியடிக்கவே, அரசு உணவுத்தடையை ஏற்படுத்தி, பஞ்சத்தை பட்டினிச் சாவுகளாக மாற்றி விட்டிருந்தது.
famine

மன்னர் ஹைலெ செலாசியின் வீழ்ச்சிக்கு பஞ்சமும் ஒரு காரணம். சதிப்புரட்சியில் மன்னரை கொன்று, மாளிகையின் உள்ளேயே புதைத்த மென்கிஸ்டுவின் குடியாட்சியிலும் அரசின் கொள்கை மாறவில்லை. 1984-1985 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சம் கூட அரசின் புறக்கணிப்பு காரணமாக உருவானது தான். கிழக்கே சோமாலியா, வடக்கே எரித்திரியா, தெற்கே ஒரோமோ என்று அரசு மும்முனைகளில் போரில் ஈடுபட்டிருந்தது. அதற்காக பெருமளவு பணம் ஆயுதங்களை வாங்க செலவிடப்பட்டது. அதே நேரம் நாட்டின் சில பகுதிகளில் வரட்சி நிலவியது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் யாவும் சிறுபான்மை இனங்களின் வாழ்விடங்கள் எனது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுப் போர்கள் காரணமாக மக்களின் இடப்பெயர்வு நிலைமையை மோசமாக்கியது. தன்னை எதிர்த்து போரிட்ட சிறுபான்மை இன மக்கள் மடிவதைப் பற்றி அரசும் அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட மனிதப் பேரவலத்தால், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தலையிட்டு மக்களை காப்பற்ற வேண்டி ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை தான் தொலைக்காட்சி கமெராக்கள் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன.
oromiaregionmap

சிறுபான்மையின மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்காக, அரசு அவர்களை பட்டினிச் சாவிற்கு தள்ளிய கதையை எனக்கு கூறியவர் ஒரோமோ இனத்தவர் ஒருவர். அவரை நான், காங்கோ நாட்டு நண்பரின் வீட்டு விருந்தின் போது சந்தித்தேன். நான் வழக்கமாக, அவர்  எந்த நாட்டை சேர்ந்தவர் என்று கேட்டதற்கு, ”ஒரோமியா” என்று பதிலளித்தார். உலக வரைபடத்தில் அப்படி ஒரு நாடு இருப்பதாக எனக்கு தெரிந்திருக்கவில்லை. “ஈழத்தமிழர்கள் ஈழம் என்ற தேசியத்தை அடையாளப்படுத்துவது போல, எத்தியோப்பியாவின் ஒரோமோ இனத்தை சேர்ந்த அவர் அப்படி தனது தேசியத்தை அடையாளப்படுத்துகிறார்.” என்று பின்னர் விளக்கம் கூறினார் எனது காங்கோ நண்பர். எத்தியோப்பியாவில் Oromo Liberation Front (OLF) என்ற இயக்கம், “ஒரோமியா” என்ற தனி நாடு கோரிப் போராடி வருகின்றது. எத்தியோப்பியாவின் மொத்த சனத்தொகையில் ஒரோமியர்கள் 40%, அதாவது பெரும்பான்மை இனம். ஆனாலும் அவர்கள் சொத்துகளற்ற, அடக்கப்பட்ட இனமாகவே இருந்து வந்துள்ளனர். அம்ஹாரி, திக்ரின்யா மொழி பேசும் நிலச்சுவான்தார்கள் ஒரோமியரின் நிலங்களை பறித்து சொந்தம் கொண்டாடியதுடன், மண்ணின் மைந்தர்களை பண்ணையடிமைகளாக வேலை வாங்கினார்கள். எத்தியோப்பியாவில் 1974 ம் ஆண்டு ஏற்பட்ட சோஷலிச அரசாங்கம் கொண்டுவந்த நிலச்சீர்திருத்தத்தின் பின்னரே நிலைமை மாற்றமடைந்தது. நிலப்பிரபுக்கள் கைது செய்யப்பட்டு காணாமல்போயினர். அடிமைகள் விடுதலை செய்யப்பட்டனர். நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலப்பிரபுக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பின்னர் தான் ஒரோமோ மக்கள் தலைநிமிர்ந்தனர். இருப்பினும் அடக்கப்பட்ட ஒரோமோக்களின் எழுச்சியானது, குறுந்தேசியவாதப் போராட்டமாகவே உள்ளது. ஏனெனில் முன்பு மேலாண்மை செய்த அம்ஹாரி, திக்ரின்யா மக்கள் தற்போது ஒரோமோ பகுதிகளுக்கு செல்ல அஞ்சுகின்றனர். அந்த அளவிற்கு இனரீதியான வெறுப்பு மேலோங்கி காணப்படுகின்றது.
எத்தியோப்பியாவின் வடக்கே இருக்கும் “அக்சும்” என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு தான் பண்டைய எத்தியோப்பிய இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. இராச்சியத்தை விரிவுபடுத்திய மெனலிக் மன்னன் தான், தெற்கே ஒரோமோக்களின் “Finfinne” என்ற இடத்தில் “அடிஸ் அபேபா” என்ற இன்றுள்ள தலைநகரத்தை உருவாக்கினான். சக்கரவர்த்தியின் தெற்கு நோக்கிய நில விஸ்தரிப்புக் காலத்தில், ஒரோமோ பிரதேசங்களை கைப்பற்றிய போர்வீரர்கள் தம்மால் முடிந்த அளவு கொள்ளையடித்து சென்றனர். தங்கம், யானைத்தந்தம், மற்றும் அகப்பட்ட மக்களை அடிமைகளாகவும் பிடித்துச் சென்றனர். அப்போது தான் “கோப்பி”(Coffie) என்ற புதிய பானம் உலகிற்கு அறிமுகமானது. கோப்பி எத்தியோப்பியாவில் இருந்து தான் உலகின் பிற பகுதிகளுக்கு பரவியது. கோப்பி ஏற்றுமதி இன்றும் எதியோப்பியாவிற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்றது. கோப்பி மட்டுமல்ல, சிறுவர்கள் மெல்லும் “சூயிங் கம்” தயாரிக்க தேவையான மூலப்பொருள் எத்தியோப்பியாவில் வளரும் ஒரு வகை மரத்தில் தான் கிடைக்கிறது. இவ்வளவு பொருளாதார பலன்களையும் அம்ஹாரி நிலப்பிரபுக்களே அனுபவித்தனர். அதற்கு பிரதிபலனாக ஒரோமோ மக்களை அடிமைகளாக நடத்தினர். ஆளும்வர்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அன்றும், இன்றும் பழமைவாத கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான ஒரோமோ மக்கள் இன்று இஸ்லாமிய மதத்தை தழுவி தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அம்பேத்கார் தலைமையில் பௌத்த மதத்தை தழுவியது போன்றதே அதுவும். இன்றைய எத்தியோப்பிய அரசு, ஒரோமோ இளைஞர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளாக மாறி வருவதாக குற்றஞ் சாட்டி வருகின்றது.
2006churchofstgeorge-lalibela

எத்தியோப்பியாவில் (கிரேக்க வழிபாட்டு முறையை பின்பற்றும்) பழமைவாத கிறிஸ்தவம் அரசமதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அக்சும் நகரம் கிறிஸ்தவர்களுக்கு புனிதமான நகரம். அங்கே வேறு எந்த மத வழிபாட்டுத் ஸ்தலங்களும் நிறுவ அனுமதி கிடையாது. அக்சும் நகரில் Unesco வால் பாதுகாக்கப்படும், பாறைகளைக் குடைந்து கட்டப்பட்ட மாபெரும் தேவாலயம் ஒன்றுள்ளது. “லல்லிபெல்லா தேவாலயம்” ஒரு உலக அதிசயம். மேலேயிருந்து பார்க்கும் போது சிலுவை போல தோன்றும் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அக்சும் நகரில் உள்ள சியோன் தேவாலயத்தில் ஓரிடத்தில் ஆண்டாண்டு காலமாக கவனமாக பாதுகாக்கப்படும் இரகசியம் ஒன்றுள்ளது. ஆண்டவர் மோசெசிற்கு அருளிய பத்துக் கட்டளைகள் பொறித்த ஆவணம் அங்கே பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதனை இதுவரை எவரும் பார்த்ததில்லை. அக்சும் இராச்சியத்தை ஸ்தாபித்த முதலாவது மெனலிக் காலத்தில், இடிந்து போன யூதர்களின் ஜெருசலேம் ஆலயத்தில் இருந்து அந்த ஆவணம் எடுத்துவரப்பட்டதாக கதை ஒன்றுண்டு.
அம்ஹாரி மொழியானது அரபு, ஹீபுரூ மொழிகளைப் போல செமிட்டிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், அரேபிய குடாநாட்டிலிருந்து வந்து குடியேறிய மக்கள், ஆப்பிரிக்க இனங்களுடன் கலந்து இன்றுள்ள அம்ஹாரி, திக்ரின்யா இனங்கள் தோன்றியிருக்கலாம். இந்த மொழிகள் தமக்கென தனியான எழுத்து வரிவடிவங்களை கொண்டிருப்பதால், பிற ஆப்பிரிக்க மொழிகளில் இருந்து வேறுபடுகின்றன. எத்தியோப்பியாவின் சரித்திரம் “மக்கெடா” என்ற இராணியின் காலத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. அறிவுக் கூர்மையுடைய பேரழகி மக்கெடா பற்றி யேமன் நாட்டு சரித்திரக் குறிப்புகள் “ஷீபா நாட்டு இராணி” என குறிப்பிடுகின்றன. தற்போதும் யேமனியர்களையும், எத்தியோப்பியர்களையும் உற்று நோக்கினால், அவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தோன்றுவார்கள். இதனால் செங்கடலின் இருமருங்கிலும் ஆதி காலத்தில் ஒரேயின மக்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. தற்போதும் தொடரும் சில கலாச்சாரக் கூறுகளை மேலதிக ஆதாரமாக கொள்ளலாம்.  உதாரணத்திற்கு வெற்றிலை மெல்லும் பழக்கம். ஆனால் அது எமது நாட்டு வெற்றிலையை விட அதிக போதை தரும்.
சாலமன் ஷீபா

பண்டைய இஸ்ரேலிய மன்னன் சாலமன் (972-932) அரண்மனைக்கு, ஷீபா நாட்டு அரசி மக்கெடா விஜயம் செய்த போது, அவளது அறிவிலும், அழகிலும் மயங்கிய சாலமன் அவளை சிறிது காலம் தன்னுடனே தங்கும் படி வேண்டினான். மதிநுட்பம் வாய்ந்த அரசனாக மகிமை பெற்றிருந்த சாலமன், கருநிற பேரழகியின் அணைப்பில் மயங்கிக் கிடந்ததாகவும், இதனால் இராஜ காரியங்களை கவனிக்காமல் விட்டதாகவும் பைபிள் (பழைய ஏற்பாடு) கூறுகின்றது. பைபிள், ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு கறுப்பின பெண்ணை உலகப் பேரழகியாக வர்ணிப்பது, இங்கே குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிறம் மட்டுமே அழகு என்பது பிற்காலத்தில் ஐரோப்பிய இனவாதிகள் பரப்பிய கருத்தியல். சாலமனுடனான உறவில் கர்ப்பமுற்ற ஷீபா அரசி தாய் நாடு திரும்பியதாகவும், அங்கே ஒரு மகனை பெற்றெடுத்ததாகவும் பைபிள் மேலும் குறிப்பிடுகின்றது. எத்தியோப்பியாவில் 14 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, “Kebra Negest” என்ற மன்னர்களின் கதைகளைக் கூறும் நூலிலும் இது குறிப்பிடப்படுகின்றது. சாலமனுக்கும், மக்கெடாவுக்கும் பிறந்த மகன் தான் எத்தியோப்பியாவில் இராசதானியை நிறுவிய (முதலாவது) மெனலிக் அரசன் என்று கூறுகின்றது.
எத்தியோப்பிய கிறிஸ்தவம், எகிப்தின் “கொப்திக்” மதப்பிரிவை சேர்ந்தது. இந்தப் பிரிவின் வழிபாட்டு முறை கிரேக்க முறையில் இருந்து சற்றே வேறுபடுகின்றது. இவையெல்லாம் ஆதிகால கிறிஸ்தவ வழிபாட்டை கொண்டதால், “பழமைவாத கிறிஸ்தவம்” என்றும் அழைக்கப்படுகின்றன. எத்தியோப்பியாவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரியான சடங்குகளை பின்பற்றுகின்றனர். யூதர்களில் இருந்து பிரிந்தவர்களே, கிறிஸ்தவம் என்ற புது மதத்தை தோற்றுவித்தார்கள் என்பது இதிலிருந்து நிரூபணமாகின்றது. ஐரோப்பா கிறிஸ்தவமயமாவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஆப்பிரிக்காவில், அதாவது எத்தியோப்பியாவில், கிறிஸ்தவ மதம் பரவியிருந்ததை முன்னர் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். வத்திக்கானில் லத்தீன் மொழி பைபிள் எழுதப்படுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே, எத்தியோப்பியாவில் எழுதப்பட்ட பைபிள் சுவடிகள் இப்போதும் பாதுகாக்கப்படுகின்றன.
axum_obelisk

1868 ம் ஆண்டு, எத்தியோப்பியாவில் மாபெரும் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. சக்கரவர்த்தியினால் சேவைக்கு அமர்த்தப்பட்ட பிரிட்டிஷ் படைவீரர்கள், சக்கரவர்த்தி மரணமடைந்த குழப்ப சூழ்நிலையை பயன்படுத்தி, விலை மதிப்பற்ற கலைப்பொக்கிஷங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். அரச ஆபரணங்கள், மத சின்னங்கள், இவற்றுடன் சுவடிகளையும் அள்ளிச் சென்றனர். கையால் எழுதப்பட்டிருந்த பைபிள் பிரதிகள், மற்றும் Kebra Negest வரலாற்று சுவடிகள் ஆகியன பின்னர் லண்டன் தெருக்களில் ஏலம் விடப்பட்டன. பிரிட்டிஷ் மியூசியம் 350 சுவடிகளை வாங்கியது. விக்டோரியா இராணி எட்டு சுவடிகளை தனது பிரத்தியேக நூலகத்திற்கென பெற்றுக் கொண்டார். அரச ஆபரணங்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றன என்று தெரியாத அளவிற்கு மறைந்து போயின. இன்றைய எத்தியோப்பிய அரசு பல தடவை முயற்சித்தும், குறிப்பிட்ட அளவு திருட்டு பொருட்கள் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளன. என்ன இருந்தாலும், இத்தாலியர்களின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது. அக்சும் நகர மத்தியில், 30 மீட்டர் உயரமும், நூறு தொன் எடையும் உள்ள கல் தூண் (Obelisk) ஒன்று நின்றது. 1937 ல் எத்தியோப்பியாவை ஆக்கிரமித்த முசோலினியின் படையினர், அந்த கல் தூணை துண்டுகளாக்கி இத்தாலி கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். 2004 ம் ஆண்டு தான் இத்தாலி அதனை திருப்பிக் கொடுக்க முன்வந்தது.
எத்தியோப்பியா ஒரு கிறிஸ்தவ நாடு என்று அறியப்பட்டாலும், அங்கேயும் எரித்திரியாவிலும் மொத்த சனத்தொகையில் அரைவாசிப்பேர் முஸ்லிம்கள். செங்கடலைத் தாண்டினால் இஸ்லாமியரின் புனிதஸ்தலமான மெக்கா மிக அருகாமையில் தான் உள்ளது. இருப்பினும் இவ்விரண்டு நாடுகளிலும் கிறிஸ்தவரும், முஸ்லிம்களும் எந்தப் பிரச்சினையுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிசயப்படத் தக்கதாக உலகின் பிற நாடுகளில் மத, இன, மொழி அடையாளங்கள் மக்களிடையே பிரிவினையை தூண்டுவது போல எத்தியோப்பியாவில் நடக்கவில்லை. அதற்கு மாறாக பலவிதமான பொருளாதாரக் காரணிகள் இன அடிப்படையிலான போர்களை ஊக்குவிக்கின்றன. உலகில் சுதந்திரம் கோரி போராடும் எத்தனையோ தேசிய இனங்களுக்கு, தனி நாடு அமைப்பது இலகுவில் நடைமுறைச் சாத்தியமாவதில்லை. இருப்பினும் 30 வருட ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, எந்த வல்லரசின் துணையுமின்றி, எரித்திரியா எவ்வாறு சுதந்திரமடைந்தது என்று பார்ப்போம்.
எரித்திரியாவிற்கு எதிரான போரில் ஈடுபட்ட எத்தியோப்பிய இராணுவத்திற்கு, மன்னராட்சிக் காலத்தில் அமெரிக்க உதவியும், மார்க்ஸிச ஆட்சிக்காலத்தில் சோவியத் உதவியும் கிடைத்து வந்தது. அதே நேரம் எரித்திரிய விடுதலைக்காக போராடிய EPLF இயக்கத்திற்கு புலம்பெயர்ந்த எரித்திரியர்களின் நிதி உதவி மட்டுமே கிடைத்து வந்தது. 1991 ம் ஆண்டு, சோவியத் யூனியன் மறைந்து போனதால், எத்தியோப்பிய இராணுவமும் பலமிழந்து போனது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரச எதிர்ப்பு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்ற விரைந்தன. ஏற்கனவே களத்தில் ஓரளவு வெற்றி பெற்று பல இடங்களை விடுவித்திருந்த EPLF எரித்திரிய தலைநகர் அஸ்மாராவை கைப்பற்றியது. EPLF உடன் Tigray People’s Liberation Front (TPLF) ஒரு ஐக்கிய முன்னணியை கட்டியிருந்தது. எத்தியோப்பியாவில் மொத்த சனத்தொகையில் 15 வீதமான திக்ரின்யா மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய TPLF ஆட்சியை கைப்பற்றியது. எரித்திரியாவிலும் திக்ரின்யா மக்கள் கணிசமான அளவில் வாழ்வதால், இவ்விரு இயக்கங்களுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் முதன் முதலாக அம்ஹாரி மக்களின் அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்து, திக்ரின்யா மக்கள் (இரு நாடுகளிலும்) அதிகாரத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போதும் பெருமளவு அம்ஹாரி மக்கள், ஒரு திக்ரின்யா அரசின் கீழ் வாழ்வதை விரும்பவில்லை என்பதுடன், எரித்திரிய பிரிவினையையும் ஜீரணிக்க கஷ்டப்படுகின்றனர்.
ctc_02_img0372

எரித்திரியாவிலும், எத்தியோப்பியாவிலும் ஒரே மொழி பேசுபவர்கள் ஆட்சியில் இருந்தால், அவர்களுக்கிடையே பிரச்சினை வராது என்று அர்த்தமல்ல. செங்கடலோர பிரதேசம் முழுவதையும் கொண்டுள்ள எரித்திரிய நாட்டின் துறைமுகங்களை, எத்தியோப்பியா தாரளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தம் போட்டதால் தான், ஐ.நா. வாக்கெடுப்பின் மூலம் எரித்திரியா சுதந்திர நாடாவதற்கு புதிய எத்தியோப்பிய அரசு சம்மதித்தது. 1997 ம் ஆண்டு, எரித்திரியா தனக்கென புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியதால், டாலரில் வர்த்தகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எரித்திரியர்கள் தமது நாணயத்தின் பெறுமதியை செயற்கையாக கூட்டி வைத்திருந்தனர். இது எத்தியோப்பியாவிற்கு பாதகமாக அமைந்தது.  வேறு பல பொருளாதாரக் காரணங்களாலும் (எண்ணெய், எரிவாயு அகழ்வாராய்ச்சி) இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதுவரை தீர்க்கப்படாதிருந்த எல்லைக்கோடு பற்றி சர்ச்சை ஏற்பட்டது. முதலில் எரித்திரியப் படைகள் எல்லைப்புற பிரதேசங்களை ஆக்கிரமித்தன. எத்தியோப்பியா வெளிநாடுகளில் ஆயுதங்களை வாங்கிப் போட்டு திருப்பித் தாக்கியது. ஒன்றுமில்லாத வெறும் கட்டாந்தரைக்காக இரண்டு இராணுவங்களும் வருடக்கணக்காக மோதிக் கொண்டதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் உதவி பெறும் “ஆப்பிரிக்க செல்லப்பிள்ளைகள்” என்பதால், அமெரிக்க மத்தியஸ்தத்துடன் போர் முடிவுக்கு வந்தது. தற்போது ஐ.நா.சமாதானப்படை எல்லைக் கோடு நிர்ணயிக்கும், அல்லது பாதுகாக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளது.
இரு நாடுகளிலும், 1991 ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய முன்னாள் போராளிக் குழுக்களின் தலைவர்கள், பல கவர்ச்சிகரமான எதிர்காலத் திட்டங்களை மக்கள் முன்வைத்தார்கள். ஆப்பிரிக்காவில் அதிக சனத்தொகையை கொண்ட மூன்றாவது பெரிய நாடான எத்தியோப்பியா, பிராந்திய வல்லரசாக வருவேன் என்று கனவு கண்டது. உலகிலே சிறிய நாடுகளில் ஒன்றான எரித்திரியா, தாராளவாத பொருளாதாரத் திட்டங்களால் சிங்கபூர் போல வருவேன் என்று கனவு கண்டது. ஆனால் பாரிய பொருள், உயிரிழப்புகளை ஏற்படுத்திய எல்லைப்போர் இந்தக் கனவுகளையெல்லாம் நூறு ஆண்டுகள் பின்தள்ளி விட்டது.

http://mullivaikkalmay18.blogspot.com/2011/02/blog-post_9452.html?m=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி !
எரித்திய விடுதலை என்பது எம்மில் பலருக்கும் 
90களில் ஒரு விடிவெள்ளியாக தெரிந்த ஒன்று.
எமக்கு எப்போதும் எட்டாத விடி வெள்ளியாகியே போய்விட்டது விடுதலை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.