Jump to content

இரவில் படுக்கும் முன் பற்களை துலக்கினால் என்னவாகும் தெரியுமா?


Recommended Posts

இரவில் படுக்கும் முன் பற்களை துலக்கினால் என்னவாகும் தெரியுமா?

 

%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-294x191.jpg

 

பொது மருத்துவம்:காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்குவோம். ஆனால் எத்தனை பேர் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவார்கள்?

இரவில் பற்களைத் துலக்குவோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். இங்கு இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமானால், இரவிலும் பற்களைத் துலக்குங்கள்.

தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும் போது, பற்காறைகள் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். இவை அனைத்திற்கும் உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்திருப்பது தான். எனவே தவறாமல் பற்களைத் துலக்குங்கள்.

படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், ப்ளேக் உருவாக்கத்திற்கு காரணமான பாக்டீரியாக்கள் இரத்த நாளங்களில் நுழைந்து, தமனிகளை பாதிக்கும். இதன் முடிவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும்.

https://www.todayjaffna.com/135171

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் பற்பசையை எடுப்பதையோ பல் துலக்குவதையோ எண்ணிப் பார்க்கவே முடியவில்லை என்னால். பிள்ளைகளும் கணவருக்கும் இரவிலும் தீட்டாமல் தூங்குவதில்லை.

 

Link to comment
Share on other sites

21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மாலையில் பற்பசையை எடுப்பதையோ பல் துலக்குவதையோ எண்ணிப் பார்க்கவே முடியவில்லை என்னால். பிள்ளைகளும் கணவருக்கும் இரவிலும் தீட்டாமல் தூங்குவதில்லை.

 

பல் ஈறுகளுக்கு மத்தியில் உங்களுடன் உறங்கப் போகும் பக்டேரியாக்கள் இதய நோயை கொண்டுவரும் சாத்தியம் அதிகம்.

பல் துலக்குவதற்கும் மேலாக பல் ஈறுகளை விசை நீர் கொண்டு கழுவி, அல்கஹோல் உள்ள லிஸ்டரின் மூலம் கொப்புளித்து துப்பரவாக்குவதே பாதுகாப்பானது. லிஸ்டரின் விலையானது. உப்பு தண்ணீர் சிறந்த மாற்றீடாகும்.

 

8dbd93da-c6f9-47fb-a8b8-9572efea6b07_1.5

விசை நீர் கழுவி

27e5f829-3256-42d6-98ec-8ca9c42d36d8_1.a

லிஸ்டரின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மாலையில் பற்பசையை எடுப்பதையோ பல் துலக்குவதையோ எண்ணிப் பார்க்கவே முடியவில்லை என்னால். பிள்ளைகளும் கணவருக்கும் இரவிலும் தீட்டாமல் தூங்குவதில்லை.

 

கூட்டிக்கழிச்சு பாத்தால்........

வீட்டு வேலை  எண்டு பாக்கேக்கை கிச்சின்.... பாத்ரூம்   கிளீன் பண்ணுறது...அங்காலை இஞ்சாலை தூசு தட்டுறது....பூக்கண்டுக்கு தண்ணி ஊத்துறது ...உடுப்புகள் தோய்ச்சு காயப்போடுறது  எல்லாம் கொத்தார் போலை கிடக்கு...:(
தெய்வமே நீயுமா? 🍻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

பல் ஈறுகளுக்கு மத்தியில் உங்களுடன் உறங்கப் போகும் பக்டேரியாக்கள் இதய நோயை கொண்டுவரும் சாத்தியம் அதிகம்.

பல் துலக்குவதற்கும் மேலாக பல் ஈறுகளை விசை நீர் கொண்டு கழுவி, அல்கஹோல் உள்ள லிஸ்டரின் மூலம் கொப்புளித்து துப்பரவாக்குவதே பாதுகாப்பானது. லிஸ்டரின் விலையானது. உப்பு தண்ணீர் சிறந்த மாற்றீடாகும்.

 

8dbd93da-c6f9-47fb-a8b8-9572efea6b07_1.5

விசை நீர் கழுவி

27e5f829-3256-42d6-98ec-8ca9c42d36d8_1.a

லிஸ்டரின்

 

7 hours ago, குமாரசாமி said:

கூட்டிக்கழிச்சு பாத்தால்........

வீட்டு வேலை  எண்டு பாக்கேக்கை கிச்சின்.... பாத்ரூம்   கிளீன் பண்ணுறது...அங்காலை இஞ்சாலை தூசு தட்டுறது....பூக்கண்டுக்கு தண்ணி ஊத்துறது ...உடுப்புகள் தோய்ச்சு காயப்போடுறது  எல்லாம் கொத்தார் போலை கிடக்கு...:(
தெய்வமே நீயுமா? 🍻

என் மூக்கு மணங்களைக் கிரகித்துக்கொள்வது அதீதமானது. நல்ல மணங்களைத் தாங்கும். பற்பசை, டொய்லெட் கழுவும் திரவங்களையும் விசைநீர் கழுவி போன்றவற்றின் மனத்தையும் ஏற்றுக்கொள்ளாது குமட்டிக்கொண்டு வரும்.

அதனாலதான் இரவில் பல் விளக்குவதில்லை.

அதுக்காக அத்தார் தான் எல்லா வேலையும் எண்டுறது கொஞ்சம் ஓவர் குசா.

அல்ககோல் தண்ணீர் கலந்து கொப்புளித்தால் போதும் என்றால் அதைச் செய்யலாம்.😄😄

Link to comment
Share on other sites

30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

என் மூக்கு மணங்களைக் கிரகித்துக்கொள்வது அதீதமானது. நல்ல மணங்களைத் தாங்கும். பற்பசை, டொய்லெட் கழுவும் திரவங்களையும் விசைநீர் கழுவி போன்றவற்றின் மனத்தையும் ஏற்றுக்கொள்ளாது குமட்டிக்கொண்டு வரும்.

அதனாலதான் இரவில் பல் விளக்குவதில்லை.

அதுக்காக அத்தார் தான் எல்லா வேலையும் எண்டுறது கொஞ்சம் ஓவர் குசா.

அல்ககோல் தண்ணீர் கலந்து கொப்புளித்தால் போதும் என்றால் அதைச் செய்யலாம்.😄😄

குறைந்தது உப்பு தண்ணீரில் கொப்புளியுங்கள் - மிகுந்த பயன் தரும். விசை நீர் கழுவி சாதரண தண்ணீருடன்  பல் ஈறுகளை கழுவ கூடியது. இதில் மணம் ஒன்றும் வராது. பயன் படுத்திய பின் நீரை அகற்றி வைத்தால் மோல்ட் என்ற பக்டேரியா போன்ற மற்ற நுண்னுயிர் அதில் வளராது. முக்கியமாக இதனை பயன் படுத்தும் போது நீர் முரசுகளை தொடாதவாறு பற்களை மட்டும் கழுவுமாறு பயன் படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

என் மூக்கு மணங்களைக் கிரகித்துக்கொள்வது அதீதமானது. நல்ல மணங்களைத் தாங்கும். பற்பசை, டொய்லெட் கழுவும் திரவங்களையும் விசைநீர் கழுவி போன்றவற்றின் மனத்தையும் ஏற்றுக்கொள்ளாது குமட்டிக்கொண்டு வரும்.

அதனாலதான் இரவில் பல் விளக்குவதில்லை.

அதுக்காக அத்தார் தான் எல்லா வேலையும் எண்டுறது கொஞ்சம் ஓவர் குசா.

அல்ககோல் தண்ணீர் கலந்து கொப்புளித்தால் போதும் என்றால் அதைச் செய்யலாம்.😄😄

நான் நினைச்சன் நீங்கள் சோம்பல் தனத்தாலை பல்லுத்தீட்ட பஞ்சிப்படுறீங்களாக்குமெண்டு.....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரவு சாப்பிடவுடன் பல் தீட்டினால் சத்தி வரும்...பல்லுக்கும்,இதயத்திற்கும் சம்மந்தம் இருக்குது என்று கேள்விப்பட்டு இருக்கேன்..ஜூட் எழுதினதை வாசிக்க இன்னும் பயமாய் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கு இரவு சாப்பிடவுடன் பல் தீட்டினால் சத்தி வரும்...பல்லுக்கும்,இதயத்திற்கும் சம்மந்தம் இருக்குது என்று கேள்விப்பட்டு இருக்கேன்..ஜூட் எழுதினதை வாசிக்க இன்னும் பயமாய் இருக்கு 

இரவில் பல் துலக்காவிட்டாலும் புளோஸ் Floos குபண்ண வேண்டும் என்கிறார்கள்.இல்லாவிட்டால் வாய் மணக்குமாம்.

16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதனாலதான் இரவில் பல் விளக்குவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரும்பாலும் வீட்டில் பற்பொடிதான் (vicco) பாவிப்பது. போற இடங்களில் பேஸ்ட் பாவிப்பது. காலையில் மட்டும்தான் பல் விளக்குவது.இரவில் சாதாரணமாய் வாய் அலசி கொப்பளித்து விட்டு படுப்பது. இப்ப புதிதாய் எனக்கொரு பிரச்சினை. சமீபத்தில் புழுக்கொடியல் சாப்பிடும்போது கொடுப்புப் பல்  பாதி உடைந்து விட்டது. இனி என்னசெய்வது என்று எனக்கு கவலையாகி விட்டது. அது பொறுக்க முடியாமல் மனிசி உடனே எழுந்துபோய் உரல் எடுத்து வந்து மிச்ச புழுக்கொடியல இடித்துத்தர சாப்பிட்டு முடிச்சன்....! 😁

  (மணமானவர்களும் ,லிவிங் டூ கெதர் ஆக வாழ்பவர்களும் இரவில் பல் விளக்குவது அவசியமா). 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

  (மணமானவர்களும் ,லிவிங் டூ கெதர் ஆக வாழ்பவர்களும் இரவில் பல் விளக்குவது அவசியமா). 🙂

ஒருவரை ஒருவர் நெருங்கும்போது இருவரின் உடல்களிலும் உருவாகும் ஹோர்மோன்கள் மணங்களை நுகரும் உணர்வைக் குறைக்குமாம்.😬

பல்லை விளக்காமல் பக்கத்தில் போனால் தள்ளிக் கலைத்துவிட்டால் “மூட்” இல்லை என்று விலகுவது மேல்😁

Link to comment
Share on other sites

8 hours ago, suvy said:

நான் பெரும்பாலும் வீட்டில் பற்பொடிதான் (vicco) பாவிப்பது. போற இடங்களில் பேஸ்ட் பாவிப்பது. காலையில் மட்டும்தான் பல் விளக்குவது.இரவில் சாதாரணமாய் வாய் அலசி கொப்பளித்து விட்டு படுப்பது. இப்ப புதிதாய் எனக்கொரு பிரச்சினை. சமீபத்தில் புழுக்கொடியல் சாப்பிடும்போது கொடுப்புப் பல்  பாதி உடைந்து விட்டது. இனி என்னசெய்வது என்று எனக்கு கவலையாகி விட்டது. அது பொறுக்க முடியாமல் மனிசி உடனே எழுந்துபோய் உரல் எடுத்து வந்து மிச்ச புழுக்கொடியல இடித்துத்தர சாப்பிட்டு முடிச்சன்....! 😁



15 வருடங்களுக்கு மேலாக நான் இரவில் பல்லுத்தீட்டி விட்டுத்தான் படுக்கின்றேன். ஒரு நாள் தவறினாலும் படுக்கும் போது ஒரு மாதிரி இருக்கும். ஆனாலும் என்ன பயன்...?, போன மாதம் தீடீர் என்று ஒரு வலது பக்க கீழ் தாடையில் இருக்கும் கொடுப்பு பல்லில் கடுமையான வலி வர முதலில் என்ன பிரச்சனை என்று பல் மருத்துவரும் கண்டு பிடிக்க முடியாமல் திணறி கடைசியில் பல்லில் சிறு வெடிப்பு (crack) இருக்கு, பல்லை புடுங்குவதை தவிர வேறு வழி இல்லை சொல்ல புடுங்க வேண்டியதாகி போச்சு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

நான் பெரும்பாலும் வீட்டில் பற்பொடிதான் (vicco) பாவிப்பது. போற இடங்களில் பேஸ்ட் பாவிப்பது. காலையில் மட்டும்தான் பல் விளக்குவது.இரவில் சாதாரணமாய் வாய் அலசி கொப்பளித்து விட்டு படுப்பது. இப்ப புதிதாய் எனக்கொரு பிரச்சினை. சமீபத்தில் புழுக்கொடியல் சாப்பிடும்போது கொடுப்புப் பல்  பாதி உடைந்து விட்டது. இனி என்னசெய்வது என்று எனக்கு கவலையாகி விட்டது. அது பொறுக்க முடியாமல் மனிசி உடனே எழுந்துபோய் உரல் எடுத்து வந்து மிச்ச புழுக்கொடியல இடித்துத்தர சாப்பிட்டு முடிச்சன்....! 😁

  (மணமானவர்களும் ,லிவிங் டூ கெதர் ஆக வாழ்பவர்களும் இரவில் பல் விளக்குவது அவசியமா). 🙂

நீங்கள் என்னத்தாலை பல்லு தீட்டி அக மகிழ்ந்தாலும்  ஒரு வயது வரேக்கை  பல்லவராயர்  பலமிழந்து போவார்.:grin:
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

 (மணமானவர்களும் ,லிவிங் டூ கெதர் ஆக வாழ்பவர்களும் இரவில் பல் விளக்குவது அவசியமா). 🙂

mouth spray gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

விதம் விதமான வாசனையிலை ஸ்பிறே விக்கிறாங்கள்...ஒண்டை வாங்கி ஸ்க்....ஸ்க் எண்டு அடிச்சுப்போட்டு கிட்டப்போய் ஒரு பெருமூச்சு விட்டுப்பாருங்கோ......அண்டைக்கு சிவராத்திரிதான்... :127_older_man:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு வைத்தியம்ம் சொல்லுறாங்கள் கனநேரம் துலக்கினால் பல்லும் தேய்ந்து போகுமாம் என்று ஒரு வைத்தியர் சொன்னார்

 

இரவில் துலக்காமல் கொஞ்சம் உப்புத்தண்ணியை பயன்படுத்தினால் நல்லம் போல எனக்கு தெரிகிறது  அந்த காலத்தில் சுருட்டு , பீடி,  பிடிச்சுக்கொண்டு 10 பிள்ளைகள் பெற்ற ஆட்களும் உண்டு அவங்களுக்கு எப்படி மூட் வந்திருக்கும் :unsure::27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆளாளுக்கு வைத்தியம்ம் சொல்லுறாங்கள் கனநேரம் துலக்கினால் பல்லும் தேய்ந்து போகுமாம் என்று ஒரு வைத்தியர் சொன்னார்

அது உண்மையாய் இருக்கும்....சட்டி பானை தேய்க்கிற மாதிரி தேய்ச்சால் பல்லு அவ்வளவுதான்......ஆகக்கூடினது 3 நிமிசம் எண்டு எங்கையோ கேள்விப்பட்ட ஞாபகம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.