Jump to content

இரவில் படுக்கும் முன் பற்களை துலக்கினால் என்னவாகும் தெரியுமா?


Recommended Posts

இரவில் படுக்கும் முன் பற்களை துலக்கினால் என்னவாகும் தெரியுமா?

 

%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-294x191.jpg

 

பொது மருத்துவம்:காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்குவோம். ஆனால் எத்தனை பேர் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவார்கள்?

இரவில் பற்களைத் துலக்குவோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். இங்கு இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமானால், இரவிலும் பற்களைத் துலக்குங்கள்.

தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும் போது, பற்காறைகள் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். இவை அனைத்திற்கும் உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்திருப்பது தான். எனவே தவறாமல் பற்களைத் துலக்குங்கள்.

படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், ப்ளேக் உருவாக்கத்திற்கு காரணமான பாக்டீரியாக்கள் இரத்த நாளங்களில் நுழைந்து, தமனிகளை பாதிக்கும். இதன் முடிவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும்.

https://www.todayjaffna.com/135171

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் பற்பசையை எடுப்பதையோ பல் துலக்குவதையோ எண்ணிப் பார்க்கவே முடியவில்லை என்னால். பிள்ளைகளும் கணவருக்கும் இரவிலும் தீட்டாமல் தூங்குவதில்லை.

 

Link to comment
Share on other sites

21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மாலையில் பற்பசையை எடுப்பதையோ பல் துலக்குவதையோ எண்ணிப் பார்க்கவே முடியவில்லை என்னால். பிள்ளைகளும் கணவருக்கும் இரவிலும் தீட்டாமல் தூங்குவதில்லை.

 

பல் ஈறுகளுக்கு மத்தியில் உங்களுடன் உறங்கப் போகும் பக்டேரியாக்கள் இதய நோயை கொண்டுவரும் சாத்தியம் அதிகம்.

பல் துலக்குவதற்கும் மேலாக பல் ஈறுகளை விசை நீர் கொண்டு கழுவி, அல்கஹோல் உள்ள லிஸ்டரின் மூலம் கொப்புளித்து துப்பரவாக்குவதே பாதுகாப்பானது. லிஸ்டரின் விலையானது. உப்பு தண்ணீர் சிறந்த மாற்றீடாகும்.

 

8dbd93da-c6f9-47fb-a8b8-9572efea6b07_1.5

விசை நீர் கழுவி

27e5f829-3256-42d6-98ec-8ca9c42d36d8_1.a

லிஸ்டரின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மாலையில் பற்பசையை எடுப்பதையோ பல் துலக்குவதையோ எண்ணிப் பார்க்கவே முடியவில்லை என்னால். பிள்ளைகளும் கணவருக்கும் இரவிலும் தீட்டாமல் தூங்குவதில்லை.

 

கூட்டிக்கழிச்சு பாத்தால்........

வீட்டு வேலை  எண்டு பாக்கேக்கை கிச்சின்.... பாத்ரூம்   கிளீன் பண்ணுறது...அங்காலை இஞ்சாலை தூசு தட்டுறது....பூக்கண்டுக்கு தண்ணி ஊத்துறது ...உடுப்புகள் தோய்ச்சு காயப்போடுறது  எல்லாம் கொத்தார் போலை கிடக்கு...:(
தெய்வமே நீயுமா? 🍻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

பல் ஈறுகளுக்கு மத்தியில் உங்களுடன் உறங்கப் போகும் பக்டேரியாக்கள் இதய நோயை கொண்டுவரும் சாத்தியம் அதிகம்.

பல் துலக்குவதற்கும் மேலாக பல் ஈறுகளை விசை நீர் கொண்டு கழுவி, அல்கஹோல் உள்ள லிஸ்டரின் மூலம் கொப்புளித்து துப்பரவாக்குவதே பாதுகாப்பானது. லிஸ்டரின் விலையானது. உப்பு தண்ணீர் சிறந்த மாற்றீடாகும்.

 

8dbd93da-c6f9-47fb-a8b8-9572efea6b07_1.5

விசை நீர் கழுவி

27e5f829-3256-42d6-98ec-8ca9c42d36d8_1.a

லிஸ்டரின்

 

7 hours ago, குமாரசாமி said:

கூட்டிக்கழிச்சு பாத்தால்........

வீட்டு வேலை  எண்டு பாக்கேக்கை கிச்சின்.... பாத்ரூம்   கிளீன் பண்ணுறது...அங்காலை இஞ்சாலை தூசு தட்டுறது....பூக்கண்டுக்கு தண்ணி ஊத்துறது ...உடுப்புகள் தோய்ச்சு காயப்போடுறது  எல்லாம் கொத்தார் போலை கிடக்கு...:(
தெய்வமே நீயுமா? 🍻

என் மூக்கு மணங்களைக் கிரகித்துக்கொள்வது அதீதமானது. நல்ல மணங்களைத் தாங்கும். பற்பசை, டொய்லெட் கழுவும் திரவங்களையும் விசைநீர் கழுவி போன்றவற்றின் மனத்தையும் ஏற்றுக்கொள்ளாது குமட்டிக்கொண்டு வரும்.

அதனாலதான் இரவில் பல் விளக்குவதில்லை.

அதுக்காக அத்தார் தான் எல்லா வேலையும் எண்டுறது கொஞ்சம் ஓவர் குசா.

அல்ககோல் தண்ணீர் கலந்து கொப்புளித்தால் போதும் என்றால் அதைச் செய்யலாம்.😄😄

Link to comment
Share on other sites

30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

என் மூக்கு மணங்களைக் கிரகித்துக்கொள்வது அதீதமானது. நல்ல மணங்களைத் தாங்கும். பற்பசை, டொய்லெட் கழுவும் திரவங்களையும் விசைநீர் கழுவி போன்றவற்றின் மனத்தையும் ஏற்றுக்கொள்ளாது குமட்டிக்கொண்டு வரும்.

அதனாலதான் இரவில் பல் விளக்குவதில்லை.

அதுக்காக அத்தார் தான் எல்லா வேலையும் எண்டுறது கொஞ்சம் ஓவர் குசா.

அல்ககோல் தண்ணீர் கலந்து கொப்புளித்தால் போதும் என்றால் அதைச் செய்யலாம்.😄😄

குறைந்தது உப்பு தண்ணீரில் கொப்புளியுங்கள் - மிகுந்த பயன் தரும். விசை நீர் கழுவி சாதரண தண்ணீருடன்  பல் ஈறுகளை கழுவ கூடியது. இதில் மணம் ஒன்றும் வராது. பயன் படுத்திய பின் நீரை அகற்றி வைத்தால் மோல்ட் என்ற பக்டேரியா போன்ற மற்ற நுண்னுயிர் அதில் வளராது. முக்கியமாக இதனை பயன் படுத்தும் போது நீர் முரசுகளை தொடாதவாறு பற்களை மட்டும் கழுவுமாறு பயன் படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

என் மூக்கு மணங்களைக் கிரகித்துக்கொள்வது அதீதமானது. நல்ல மணங்களைத் தாங்கும். பற்பசை, டொய்லெட் கழுவும் திரவங்களையும் விசைநீர் கழுவி போன்றவற்றின் மனத்தையும் ஏற்றுக்கொள்ளாது குமட்டிக்கொண்டு வரும்.

அதனாலதான் இரவில் பல் விளக்குவதில்லை.

அதுக்காக அத்தார் தான் எல்லா வேலையும் எண்டுறது கொஞ்சம் ஓவர் குசா.

அல்ககோல் தண்ணீர் கலந்து கொப்புளித்தால் போதும் என்றால் அதைச் செய்யலாம்.😄😄

நான் நினைச்சன் நீங்கள் சோம்பல் தனத்தாலை பல்லுத்தீட்ட பஞ்சிப்படுறீங்களாக்குமெண்டு.....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரவு சாப்பிடவுடன் பல் தீட்டினால் சத்தி வரும்...பல்லுக்கும்,இதயத்திற்கும் சம்மந்தம் இருக்குது என்று கேள்விப்பட்டு இருக்கேன்..ஜூட் எழுதினதை வாசிக்க இன்னும் பயமாய் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கு இரவு சாப்பிடவுடன் பல் தீட்டினால் சத்தி வரும்...பல்லுக்கும்,இதயத்திற்கும் சம்மந்தம் இருக்குது என்று கேள்விப்பட்டு இருக்கேன்..ஜூட் எழுதினதை வாசிக்க இன்னும் பயமாய் இருக்கு 

இரவில் பல் துலக்காவிட்டாலும் புளோஸ் Floos குபண்ண வேண்டும் என்கிறார்கள்.இல்லாவிட்டால் வாய் மணக்குமாம்.

16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதனாலதான் இரவில் பல் விளக்குவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரும்பாலும் வீட்டில் பற்பொடிதான் (vicco) பாவிப்பது. போற இடங்களில் பேஸ்ட் பாவிப்பது. காலையில் மட்டும்தான் பல் விளக்குவது.இரவில் சாதாரணமாய் வாய் அலசி கொப்பளித்து விட்டு படுப்பது. இப்ப புதிதாய் எனக்கொரு பிரச்சினை. சமீபத்தில் புழுக்கொடியல் சாப்பிடும்போது கொடுப்புப் பல்  பாதி உடைந்து விட்டது. இனி என்னசெய்வது என்று எனக்கு கவலையாகி விட்டது. அது பொறுக்க முடியாமல் மனிசி உடனே எழுந்துபோய் உரல் எடுத்து வந்து மிச்ச புழுக்கொடியல இடித்துத்தர சாப்பிட்டு முடிச்சன்....! 😁

  (மணமானவர்களும் ,லிவிங் டூ கெதர் ஆக வாழ்பவர்களும் இரவில் பல் விளக்குவது அவசியமா). 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

  (மணமானவர்களும் ,லிவிங் டூ கெதர் ஆக வாழ்பவர்களும் இரவில் பல் விளக்குவது அவசியமா). 🙂

ஒருவரை ஒருவர் நெருங்கும்போது இருவரின் உடல்களிலும் உருவாகும் ஹோர்மோன்கள் மணங்களை நுகரும் உணர்வைக் குறைக்குமாம்.😬

பல்லை விளக்காமல் பக்கத்தில் போனால் தள்ளிக் கலைத்துவிட்டால் “மூட்” இல்லை என்று விலகுவது மேல்😁

Link to comment
Share on other sites

8 hours ago, suvy said:

நான் பெரும்பாலும் வீட்டில் பற்பொடிதான் (vicco) பாவிப்பது. போற இடங்களில் பேஸ்ட் பாவிப்பது. காலையில் மட்டும்தான் பல் விளக்குவது.இரவில் சாதாரணமாய் வாய் அலசி கொப்பளித்து விட்டு படுப்பது. இப்ப புதிதாய் எனக்கொரு பிரச்சினை. சமீபத்தில் புழுக்கொடியல் சாப்பிடும்போது கொடுப்புப் பல்  பாதி உடைந்து விட்டது. இனி என்னசெய்வது என்று எனக்கு கவலையாகி விட்டது. அது பொறுக்க முடியாமல் மனிசி உடனே எழுந்துபோய் உரல் எடுத்து வந்து மிச்ச புழுக்கொடியல இடித்துத்தர சாப்பிட்டு முடிச்சன்....! 😁



15 வருடங்களுக்கு மேலாக நான் இரவில் பல்லுத்தீட்டி விட்டுத்தான் படுக்கின்றேன். ஒரு நாள் தவறினாலும் படுக்கும் போது ஒரு மாதிரி இருக்கும். ஆனாலும் என்ன பயன்...?, போன மாதம் தீடீர் என்று ஒரு வலது பக்க கீழ் தாடையில் இருக்கும் கொடுப்பு பல்லில் கடுமையான வலி வர முதலில் என்ன பிரச்சனை என்று பல் மருத்துவரும் கண்டு பிடிக்க முடியாமல் திணறி கடைசியில் பல்லில் சிறு வெடிப்பு (crack) இருக்கு, பல்லை புடுங்குவதை தவிர வேறு வழி இல்லை சொல்ல புடுங்க வேண்டியதாகி போச்சு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

நான் பெரும்பாலும் வீட்டில் பற்பொடிதான் (vicco) பாவிப்பது. போற இடங்களில் பேஸ்ட் பாவிப்பது. காலையில் மட்டும்தான் பல் விளக்குவது.இரவில் சாதாரணமாய் வாய் அலசி கொப்பளித்து விட்டு படுப்பது. இப்ப புதிதாய் எனக்கொரு பிரச்சினை. சமீபத்தில் புழுக்கொடியல் சாப்பிடும்போது கொடுப்புப் பல்  பாதி உடைந்து விட்டது. இனி என்னசெய்வது என்று எனக்கு கவலையாகி விட்டது. அது பொறுக்க முடியாமல் மனிசி உடனே எழுந்துபோய் உரல் எடுத்து வந்து மிச்ச புழுக்கொடியல இடித்துத்தர சாப்பிட்டு முடிச்சன்....! 😁

  (மணமானவர்களும் ,லிவிங் டூ கெதர் ஆக வாழ்பவர்களும் இரவில் பல் விளக்குவது அவசியமா). 🙂

நீங்கள் என்னத்தாலை பல்லு தீட்டி அக மகிழ்ந்தாலும்  ஒரு வயது வரேக்கை  பல்லவராயர்  பலமிழந்து போவார்.:grin:
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

 (மணமானவர்களும் ,லிவிங் டூ கெதர் ஆக வாழ்பவர்களும் இரவில் பல் விளக்குவது அவசியமா). 🙂

mouth spray gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

விதம் விதமான வாசனையிலை ஸ்பிறே விக்கிறாங்கள்...ஒண்டை வாங்கி ஸ்க்....ஸ்க் எண்டு அடிச்சுப்போட்டு கிட்டப்போய் ஒரு பெருமூச்சு விட்டுப்பாருங்கோ......அண்டைக்கு சிவராத்திரிதான்... :127_older_man:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு வைத்தியம்ம் சொல்லுறாங்கள் கனநேரம் துலக்கினால் பல்லும் தேய்ந்து போகுமாம் என்று ஒரு வைத்தியர் சொன்னார்

 

இரவில் துலக்காமல் கொஞ்சம் உப்புத்தண்ணியை பயன்படுத்தினால் நல்லம் போல எனக்கு தெரிகிறது  அந்த காலத்தில் சுருட்டு , பீடி,  பிடிச்சுக்கொண்டு 10 பிள்ளைகள் பெற்ற ஆட்களும் உண்டு அவங்களுக்கு எப்படி மூட் வந்திருக்கும் :unsure::27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆளாளுக்கு வைத்தியம்ம் சொல்லுறாங்கள் கனநேரம் துலக்கினால் பல்லும் தேய்ந்து போகுமாம் என்று ஒரு வைத்தியர் சொன்னார்

அது உண்மையாய் இருக்கும்....சட்டி பானை தேய்க்கிற மாதிரி தேய்ச்சால் பல்லு அவ்வளவுதான்......ஆகக்கூடினது 3 நிமிசம் எண்டு எங்கையோ கேள்விப்பட்ட ஞாபகம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.