Jump to content

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஹெலன் பிரிக்ஸ் பிபிசி செய்திகள்
 

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் ரஷ்யாவின் குகையில் இருந்து கிடைத்துள்ளது.

ரஷ்யாபடத்தின் காப்புரிமை Science Photo Library

நீண்ட காலத்திற்கு முன்னர், ரஷ்யாவின் குகை ஒன்றில் இருவேறு இனங்கள் ஜோடி சேர்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஆதாரங்களில் இருந்து அந்த ஜோடிக்கு ஒரு மகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகளின் மரபணுக்களில் இருந்து அந்த பெண் குழந்தையின் தாய் நியாண்டெர்தல் (Neanderthal) என்றும், தந்தை டெனிசோவன் (Denisovan) இனத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

நியாண்டெர்தல் (Neanderthal) மற்றும் டெனிசோவன் (Denisovan) என்ற இனங்கள், மனித இனம் என்றாலும் வேறு உயிரின வகையை சேர்ந்தது. இந்த இனங்கள் தற்போது அழிந்துவிட்டன.

நேச்சர் பத்திரிகையில் இந்த கண்டுபிடிப்பின் மூலம், ஆதிகால மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரிந்துக்கொள்ளலாம். இந்த உயிரினங்களின் வாழ்வு குறித்த புதிய கோணத்தையும் இந்த கண்டுபிடிப்பு வழங்குகிறது.

நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் என்ற இனங்கள் மனித இனத்துடன் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும், வேறு உயிரினங்களே என்று கூறுகிறார் விவியானே ஸ்லோன் என்ற ஆராய்ச்சியாளர்.

ஜெர்மனியை சேர்ந்த பரிணாம ஆய்வினை மேற்கொள்ளும் மேக்ஸ் ப்ளாங்க் நிறுவனத்தில் இவர் பணிபுரிகிறார். "நாங்கள் நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் இனங்கள் எப்போதாவது ஒன்று சேர்ந்ததில், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தது என்பதை முந்தைய ஆய்வுகளின் மூலம் அறிந்திருந்தோம்" என்கிறார் விவியானே ஸ்லோன்.

ரஷ்யாபடத்தின் காப்புரிமை B VIOLA, MPI-EVA Image caption ரஷ்யாவின் டெனிசோவா மலையில் இருவேறு உயிரினங்களின் குழந்தை வசித்தது கண்டறியப்பட்டுள்ளது

"ஆனால் அதை மெய்ப்பிக்கும் உண்மையான தடயத்தை கண்டுபிடித்த நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நம்புகிறேன்" என்று தனது மகிழ்ச்சியை அவர் பகிர்ந்துக் கொள்கிறார்.

இந்த இரு உயிரினங்களும் நவீன மனிதர்களின் நெருங்கிய உறவினர்களாகக் கருதப்படுகின்றன. நவீன மனிதர்கள் ஆரம்ப காலங்களில் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்தபோது இந்த உயிரினங்கள் அழிந்து போயின.

கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் நியாண்டெர்தல் (Neanderthal) இனம் பரவியதாக நம்பப்படுகிறது.

நாம் அனைவரும் குகைப்பெண்ணின் சந்ததிகளா?

இன்றைய மக்களில் ஆப்பிரிக்கர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களின் மரபணுக்களிலும் மிகச்சிறிய விகிதத்தில் நியாண்டெர்தல்களின் மரபணு காணப்படுகிறது.

அதேபோல, ஆஃபிரிக்கர்களை தவிர, வேறு சில நாடுகளில் வசிப்பவர்களும், டெனிசோவன் இனத்தை சேர்ந்தவர்களின் (ஆசிய மக்களின்) மரபணுவின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளனர்.

ரஷ்யாபடத்தின் காப்புரிமை B VIOLA, MPI-EVA

பல தலைமுறைகளாக இந்த குழுக்களிடையே ஏற்பட்ட உறவும், மரபணுவில் ஏற்பட்ட மாறுதல்களும், வெவ்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் இணைந்து குழந்தைகளை பெற்றிருக்கின்றனர்.

இருப்பினும், நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் இனங்களின் புதைபடிவ சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே தளமான சைபீரியாவின் அல்தாய் மலைகளில் டெனிசோவா குகையில் காணப்படுகிறது.

20க்கும் குறைவான பழங்கால மனிதர்களில் அவர்கள் வெவ்வேறு இனங்களின் கலவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

"இரு இனங்களின் கலப்பும் சமமான அளவில் இல்லை என்பது இந்த சான்றுகளில் கூறுகின்றன" என்று டாக்டர் ஸ்லான் பிபிசியிடம் கூறினார்.

பிற ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், "நமது பரிணாம வரலாற்றில் மனிதர்கள் எப்போதுமே வெவ்வேறு இனங்களின் கலப்பாக இருப்பதை நாம் அறியலாம்" என்கிறார் அவர்.

நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் உயிரினங்கள் எங்கு வாழ்ந்தன?

இந்த இரண்டு உயிரினங்களும் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்தனர்; நியாண்டெர்தல் மேற்கிலும், டெனிசோவன் கிழக்கிலும் வசித்தனர்.

நியாண்டெர்தல் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியபோது, டெனிசோவனுடனும், தற்போதைய மனிதர்களின் ஆரம்பக்கால மூதாதையர்களுடனும் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம்.

ரஷ்யாபடத்தின் காப்புரிமை B VIOLA, MPI-EVA

நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் சந்திப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்காது என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் சந்தித்திருந்தால், நாங்கள் முன்னர் நினைத்ததை விடவும் அதிகமாக பல முறை தொடர்பு கொண்டிருப்பார்கள்" என்று நிறுவனத்தின் இயக்குநர் ஸ்வாந்தே பபோ கூறுகிறார்.

மகள் மற்றும் அவருடைய குடும்பம் பற்றி தெரிந்தது என்ன?

ரஷியன் தொல்பொருள் ஆய்வாளர்கள் டெனிசோவா மலைகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எலும்பு துண்டை கண்டறிந்தனர். அந்த எலும்பை ஆய்வு செய்ததில் அது இருவேறு உயிரினங்களின் கலப்பில் பிறந்த குழந்தை என்று தெரியவந்த்து.

பின்னர் அந்த எலும்பு, மரபணு பகுப்பாய்விற்கான லீப்ஸிங்-கிற்கு (Leipzig) கொண்டு வரப்பட்டது.

"அது நீண்ட எலும்பின் ஒரு பகுதியாகும், அந்த எலும்புக்கு உரியவருக்கு தோராயமாக 13 வயது இருக்கும் என்று மதிப்பிடலாம்" என்று சொல்கிறார் டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் பென்ஸ் ஒயோலா கூறுகிறார்.

மேற்கு ஐரோப்பாவில் அந்த பெண்ணின் தாய் வசித்திருக்கலாம் என்பதற்கான மரபணு தடயங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.

மேற்கு ஐரோப்பாவில் வசித்த நியாண்டெர்தல் இனத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், முன்னர் டெனிசோவா குகையில் வசித்த நியாண்டெர்தலின் மரபணுவுக்கு அதிக நெருக்கமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

நியாண்டெர்தல் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியபோது, டெனிசோவனுடன் இணைந்திருக்கலாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, நியாண்டெர்தல் உயிரினங்கள், தங்கள் பிரத்யேக அடையாளத்தை இழப்பதற்கு முன்னர் மேற்கில் இருந்து கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவை நோக்கி முன்னேறியதை இந்த ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

டெனிசோவ் இனங்களின் பாரம்பரியத்தில் குறைந்தபட்சம் ஒரு நியாண்டெர்தல் தடயம் இருப்பதை மரபணு ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

https://www.bbc.com/tamil/science-45302701

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தலைப்போ?

அதற்கான ஆதாரம், இன்றும் வாழும் மக்கள் கூட்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.