Jump to content

இரண்டாம் கட்ட ஆட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் கட்ட ஆட்டம்

முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 01 செவ்வாய்க்கிழமை, மு.ப. 08:14

image_5d6ffb1267.jpg

அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம் கட்ட ஆட்டம்’ ஆரம்பித்திருக்கிறது. 

ஜனாதிபதியிடம் இருந்த சில அதிகாரங்களை, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் கழற்றி எடுத்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக, ஜனாதிபதிக்கு இனி ‘எதுவும் முடியாது’ என்று நினைப்பது அப்பிராணித்தனமாகும். 

ஜனாதிபதி, இன்னும் நிறைவேற்றதிகாரம் கொண்டவராகவே இருக்கின்றார். எனவே, அந்த அதிகாரத்தின் முன்னால், சிலவேளைகளில் தவிர்க்க முடியாமல் மண்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.

டிசெம்பர் 20ஆம் திகதி, அமைச்சரவை நியமிக்கப்பட்டது. ஆனால், 28ஆம் திகதி நள்ளிரவு வரை, தத்தமது கடமைகளைச் செய்வதில் அமைச்சர்கள் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார்கள். காரணம், அமைச்சர்களுக்கான பொறுப்புகள், விடயதானங்கள், அமைச்சுகளின் கீழ் வரும் நிறுவனங்கள் எவை எனத் தெரியப்படுத்தப்படவில்லை. 

வர்த்தமானி அறிவித்தல் மூலம், ஜனாதிபதிதான் அவற்றை அறிவிக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல், தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு ஜனாதிபதி சுற்றுலா  சென்றிருந்தார்.

அமைச்சரவை நியமனத்தின் போதும், தனது நிறைவேற்றதிகாரத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருந்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு, பிரதமர் ரணில் கோரிக்கை விடுத்திருந்தும், ஜனாதிபதி அதைத் தட்டிக்கழித்தார். 

“அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென்றால், தன்னிடம் சரத் பொன்சேகா மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று, ஜனாதிபதி நிபந்தனை விதித்தார். சரத் பொன்சேகாவே அதை உறுதிப்படுத்தியும் இருந்தார். அரசியல் நெருக்கடியின் இரண்டாம் கட்ட ஆட்டம் அங்கிருந்துதான் ஆரம்பமானது.

ஓர் அலுவலகத்தின் தலைமைப் பதவியில் உள்ளவருடன் முரண்பட்டுக் கொண்டு, அங்கிருக்கும் ஊழியர்கள் நிம்மதியாகவும் பிரச்சினைகள் இன்றியும் கடமை செய்வதென்பதே முடியாத காரியமாக இருக்கும் போது, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைப் பகைத்துக் கொண்டு, அமைச்சர்கள் தமது நடவடிக்கைகளை இடையூறுகளின்றி,  மேற்கொள்ள முடியும் என்று, எப்படி நம்பபுவது? இத்தனைக்கும், ஜனாதிபதிதான் அமைச்சரவையின் தலைவர் என்பதையும் மறந்து விடலாகாது. 

அமைச்சர்களுக்கான பொறுப்புகள், விடயதானங்கள்,  அமைச்சுகளின் கீழ் வரும் நிறுவனங்கள் போன்றவற்றை அறிவிக்கும் வர்த்தமானியை உடனடியாக வெளியிடாமல், ஒன்பது நாள்களாக இழுத்தடித்து வந்த பிறகுதான், 28ஆம் திகதி நள்ளிரவு, அதை ஜனாதிபதி வெளியிட்டார். அதுவே, இன்னுமொரு பிரச்சினையை உருவாக்கி விட்டுள்ளது.

ஒவ்வோர் அமைச்சின் கீழும், எந்தெந்த நிறுவனங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை, ஜனாதிபதியே தீர்மானிப்பார். அதற்கிணங்க, 28ஆம் திகதி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம், சில அமைச்சர்கள் வசமுள்ள அமைச்சுகளின் கீழ், மிகக் குறைந்தளவு நிறுவனங்களே கொண்டுவரப்பட்டன. 

உதாரணமாக, அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளின் கீழ், மிகச் சில நிறுவனங்களையே ஜனாதிபதி கொண்டு வந்துள்ளார். இதனால், மேற்படி அமைச்சர்கள் இருவரும், ஏமாற்றமடைந்துள்ளனர் என்று, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சின் கீழ் இருந்த அரச வங்கியை, வர்த்தமானி அறிவித்தல் மூலம், நிதியமைச்சின் கீழ் ஜனாதிபதி கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக பெரிதும் ஏமாற்றமடைந்துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்வதற்குத் தயாராகி வருவதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னொருபுறம், ஐக்கிய தேசிய முன்னணி தனித்து ஆட்சியமைத்திருப்பதால், அதன் அரசாங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் 30 பேர் வரையில்தான் அங்கம் வகிக்க முடியும். இந்த வரையறையையும் அரசமைப்பின் 19ஆவது திருத்தம்தான் செய்து வைத்திருக்கிறது. 

இந்த நிலைவரமானது, ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, குழப்பகரமான அரசியல் நிலைமைகளின்போது, தனக்கு ஆதரவளித்தால் அமைச்சுப் பதவி வழங்குவதாகப் பலரிடம் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியிருந்தார் எனத் தெரியவருகிறது. ஆனாலும், அதை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. 

இதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தும், அதன் கூட்டணிக் கட்சிகள் இடமிருந்தும் பெரும் நெருக்கடியை, ரணில் விக்கிரமசிங்க சந்திக்கத் தொடங்கியுள்ளார்.

அரசியல் குழப்ப நிலையின் போது, தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்றை வழங்குவதாக, ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கி இருந்ததாக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால், அவருக்கு இன்னும், அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. “அமைச்சுப் பதவி கிடைக்காது விட்டால், அதிரடியான தீர்மானம் ஒன்றை எடுப்பேன்” என்றும், இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இன்னொருபுறமாக, தன்னுடன் சேர்த்து ஐ.தே.கட்சியின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸ விதானகே தெரிவித்திருக்கிறார். இந்தக் ‘குடைச்சல்’ எதிர்பாராததாகும்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியின் பக்கம் மாறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஐ.தே.கட்சியின் பக்கமாக, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவுவதற்குத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழப்பகரமான நிலைவரத்துக்குள் இருந்து கொண்டு, அரசாங்கத்தை இழுத்துச் செல்வதென்பது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலகுவாக இருக்கப் போவதில்லை. ஒரு கட்டத்தில், ‘நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவோம்’ என்கிற முடிவுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டம் வெற்றிகரமாக அமையும் போது, மேற்படி நிலைவரம் உருவாகக் கூடும்.

‘முள்ளை முள்ளால் எடுத்தல்’ என்பது அரசியலில் மிகப்பெரும் இராஜதந்திரமாகும். ஆனால், கடந்த அரசியல் நெருக்கடியில் அந்தத் தந்திரத்தைக் கையாள்வதற்கு ஜனாதிபதி தவறிவிட்டார் என்கிற விமர்சனமும் உள்ளது. 

அதனால்தான், கடந்த 51 நாள் அரசியல் நெருக்கடியின்போது, சில விடயங்களில் ஜனாதிபதி தோற்றுப் போக நேர்ந்திருக்கலாம். அதை ஜனாபதிபதியும் உணராமல் இருந்திருக்க மாட்டார். ஆகவேதான், இப்போது அவரின் வியூகம் மாறியிருப்பது போல் தெரிகிறது.

அரசாங்கம் ஒன்றை, ஐக்கிய தேசியக் கட்சியினர் உருவாக்கியுள்ள போதும், அதைக் கொண்டு, உருப்படியாக எதையும் செய்ய முடியாததொரு நிலைவரம் ஏற்படுமாயின், அந்தக் கட்சியினருக்கு அது பெரும் தோல்வியாகவே அமையும். 

ஐக்கிய தேசியக் கட்சினருக்கு, அவ்வாறானதொரு தோல்வியை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே, ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டத்தைக் காண முடிகிறது.

 மக்கள் எதிர்பார்ப்பவற்றை அரசாங்கம் நிறைவேற்றாமல் போகுமானால், அரசாங்கத்தைக் கொண்டு செல்லும் அரசியல் கட்சியின் மீதுதான், பொதுமக்களின் கோபம் திரும்பும்.
இதேவேளை, நாட்டில் தேர்தலொன்று விரைவில் நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடப்பதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ளது போல் தெரிகிறது. எனவே, தமது பலத்தை நிரூபிப்பதற்கான களமாக, எதிர்வரும் தேர்தலை, ஒவ்வொரு தரப்பும் பயன்படுத்தத் தொடங்கும்.

ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவும் கூட்டமைத்து, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறிகள் அதிகம் தெரிகின்றன. அப்படியொரு கூட்டணியை எதிர்கொள்வதென்பது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் சவாலாகவே அமையும். 

இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், பொதுஜன பெரமுன கட்சிதான் அதிக உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இன்னொருபுறமாக, மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் போது, தமக்குச் சாதகமானதொரு சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு, அனைத்து மாகாணங்களின் ஆளுநர் பதவிகளிலும் மாற்றங்களைச் செய்து, தனக்குச் சார்பானவர்களை ஆளுநர்களாக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கிறார் போல் தெரிகிறது. அனைத்து மாகாண ஆளுநர்களையும் இராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளையும் இந்தக் கட்டுரை எழுதப்படும்போது, வடக்கு மாகாண ஆளுநர், தனது பதவியை இராஜிநாமா செய்தமையையும் மேற்சொன்ன அனுமானங்களுடன் இணைத்துப் பார்த்தல் பொருத்தமாகும்.

நடந்து முடிந்த 51 நாள் அரசியல் நெருக்கடியின் போது, ஜனாதிபதி வகுத்த வியூகங்கள் பிழைத்துப் போனமையால் ஏற்பட்ட தோல்விகளை வைத்துக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரியின், ஒட்டுமொத்த ஆளுமையையும் அந்தத் தோல்விகளுடன் பொருத்திப் பார்த்து மதிப்பிடுதல் சரியானதல்ல. 

ஆனால், ஜனாதிபதிக்கு எதிரானவர்களில் அதிகமானோர், அவரின் ஆளுமையைக் குறைத்து மதிப்பீடு செய்வதையே காண முடிகின்றது. எதிராளியின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுதல் மிகவும் ஆபத்தானதாகும். 

கடந்த 51 நாள் அரசியல் நெருக்கடியின் போது, ஜனநாயகத்துக்காக போராடியதாகக் கூறிக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமாகச் சார்ந்திருந்தவர்கள் பலரின் உண்மை முகம் எதுவெனத் தெரியத் தொடங்கியுள்ளது. 

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே, ஜனநாயகத்தை முகமூடியாகப் பலர் அணிந்து கொண்ட அவலம், இப்போது அம்பலமாகியுள்ளது. இவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லையாயின், ரணிலுக்கு எதிரான முகாம்களுக்குச் செல்லவும் தயங்க மாடார்கள். 

அவ்வாறானவர்களை, வளைத்துப் பிடிக்கும் முயற்சிகளில் ஜனாதிபதி இறங்கினால், நாடாளுமன்றில் பெரும்பான்மையை இழக்கும் ஆபத்தை, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்ள நேரிடும் நிலை உருவாகலாம்.

இன்னொருபுறம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதியின் அணியிலிருந்து யாரும் தாவுவார்களா என்கிற கேள்வியும் உள்ளது. ஏனெனில், எந்தவித இலாபமும் இன்றி, யாரும் கட்சி தாவுவதற்கு முயல மாட்டார்கள். குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தாவ விரும்புவோர், அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டும் என்றுதான் அநேகமாக நிபந்தனை விதிப்பார்கள்.

ஆனால், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே நிரப்பப்பட்டு விட்டது. மறுபுறம், சுதந்திரக் கட்சியிலிருந்து அணி மாறுவோருக்கு, அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என்றும், ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அப்படிப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம், தாவுகின்றவர்களுக்கு எந்தவோர் அமைச்சுப் பதவியும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி வாய்ப்பற்ற ஒரு பக்கத்துக்கு யாரும் தாவிச்  செல்வார்களா என்கிற கேள்வியும் இங்கு உள்ளது.

கூட்டிக்கழித்துப் பார்க்கையில், அரசியல் நெருக்கடி இன்னும் முடியவில்லை என்பது புரிகிறது. அதன் முதல் கட்டம் முடிந்து, இரண்டாம் கட்டம் ஆரம்பித்திருக்கிறது. 

ஜனாதிபதி மைத்திரி,  இரண்டாம் கட்டத்தை ஆடத் தொடங்கி, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகி விட்டன.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இரண்டாம்-கட்ட-ஆட்டம்/91-227337

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.